Thursday, March 29, 2007

தியானம் 3

அடுத்ததாக நான் கற்றுக்கொண்டது ஈசா த்யானம். இது ஸ்ரீ ஜக்கிவாசுதேவ்ஜி என்பவரால்
நடத்தப்படுகிறது. ஈசா என்றால் ஒரு ஆளும் சக்தி எனலாம். அதற்கு உருவமில்லை.
ஆனால் கடவுள் தன்மை உண்டு. அதற்கு உருவம் கொடுத்தால் ஈச்வரன் ஆகிறான்.
ஜகதீசா என்றும் ஜகதீச்வரன் என்றும் நாம் கூப்பிடுகிறோம். ஈசா த்யானத்தில் நாம்
தீக்ஷை எடுத்து கொள்ள வேண்டும். அங்கு சூன்ய தியானம் கற்றுக் கொடுக்கிறார்கள்.
சூன்யம் என்றாலே ஏதும் அற்ற நிலை. அதை வேறு ஒன்றிடம் ஒப்பிடமுடியாது.
மனதை ஒருமைப்படுத்தி எண்ணங்கள் வந்தாலும் வலிய தடுக்காமல் ஓடவிட்டு பின் ஒரு எண்ணமும் இல்லாமல் இருக்கும் போது சூன்யதியானத்தில் ஈடுபடவேண்டும்.
எல்லா தியானத்திற்கும் முடிவு ஒன்றுதான். எப்படி பல நதிகளின் நீளம் திசைகள்
மாறி இருந்தாலும் முடிவில் கலப்பது கடலில்தான். சில நதிகள் சுலபமாக கலக்கிறது.
சிலமேடு பள்ளம் ஏறி வந்து பின் கலக்கிறது.
நாம் குண்டலினி தியானத்தை எடுத்துக் கொண்டால்... ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள உயிர் சக்தி குண்டலினி தான். அதைப் பாம்புடன் ஒப்பிடுகிறார்கள்.
பாம்பு அசையாமல் இருக்கும் போது நமக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் கொஞ்சம் நகர ஆரம்பிக்கும் போது
தான் பாம்பு இருப்பதே நினைவுக்கு வரும். அதே போல் குண்டலினி அசையும் போதுதான் நாம் அந்த சக்தியை
உணரமுடியும். அது நம் ஏழு சக்ரங்களைத் தாண்டி கடைசியில் ஸஹஸ்ராரா சக்ராவைத் தாண்டும்போது
தான் பேரானந்தம் கிடைக்கிறது. அந்த குண்டலினி சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக அசைய வைத்து
மேலே ஏற்றுவது ஒருவிதமான யோகம் வேதாத்திரி
மஹராஜ் "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்த நம் பாபங்கள்
விலகி தியானம் விரைவில் சித்திக்கும் என்கிறார். அங்கு குருவே குண்டலினியை எழுப்பி விடுகிறார்கள்
குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அவர்கள் பயிற்சியில்
ஸோஹம் என்ற சொல்லை ஜபித்து நம்மை தயார்
ஆக்குகிறார். ஸோஹம் என்றால் நான்தான் அது”
என்று அர்த்தம் என நினைக்கிறேன் அதாவது நான் தான்
ப்ரும்மம் “என்று சொல்லப்படுகிறது அதை சுதர்சனக்ரியாஎன்கிறர்கள். உள்மூச்சு,வெளிமூச்சு என்று மாறி மாறி விட்டுக்கொண்டே பயிற்சி செய்ய
வியாதிகளே அண்டுவதில்லை. இதை ஆத்ம க்யான யோகா என்கிறர்கள்.
ஆல்ஃபா த்யானம் மிக எளிமையான ஒன்று. அதை நடத்துபவர் டாக்டர் விஜயலக்ஷ்மி …கையில் ஆல்பா முத்திரை எடுத்து, தியானம் செய்ய வாழ்க்கையில் அடையாதது ஒன்றுமில்லை. தியானத்தின் போது பிரபஞ்சத்தின் சக்தியை
ஒளியை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை பரவவிட்டு நம்மை சுற்றி சக்தி காப்பு போட்டுகொண்டு தியானம் ஆரம்பிக்க வேண்டும்
ஆழ்மனசக்திதான் மிகப்பெரிய சக்தி. அதை உணர்ந்து அதை திறக்கும் வழிதான் ஆல்பா தியானம். அப்படி திறந்து விட்டால்
டால் வெற்றி, தெளிந்த சிந்தனை, நிம்மதி எல்லாம் கிடைக்கும்.
அடுத்தது பிரமிட் தியானம் நம் மூக்கை பிரமிட் போல பாவித்து
கைகளைக்கோர்த்து கால்களை ஒன்றன் மேல் வைத்து நம் மூச்சில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் உள்மூச்சு வெளிமூச்சு விடுவதை கவனமாக அனுபவித்து நம்மால் முடியும் வரை செய்யலாம் இதை
ந்டத்துபவர் டாக்டர் பத்ரிஜி .பிரமிட்குள் நிறைய விஷயங்
கள் உள்ளன பின்னால் அதை பற்றிச்சொல்லுகிறேன்
இதே போல் மஹெஷ் யோகி நடத்தும் தியானமும்
சிறப்பாக உள்ளது இன்னும் பல வகை தியானம் இருக்கின்றன. விபாசனா தியானம், காயத்திரி தியானம் சித்த சக்தியின் த்யானம் போன்றவைகள். எழத ஆரம்பித்தால் ப்ட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.
எல்லாவற்றிலும் சுலபமான தியானம் என்னவென்றால் நாமஸ்மரணம் கடவுக்காகவே பாடும் இசை.
மும்மூர்திகளான தியாகராஜர், தீக்ஷதர், ச்யாமா
சாஸ்திரிகள் தங்கள் பாட்டுக்களினாலேயே கடவுளை
கண்டனர். சங்கீதத்தையே தியானம் ஆக்கினார்கள்
மீராபாய் க்ருஷ்ண்ரிடமே கலந்து விட்டாள்
வள்ளலார் ஜோதியிலேயே சக்தியைக் கண்டார்.
முழு சமர்ப்பணத்துடன் செய்யும் தொழில், எல்லாவேலைகளிலும் கடவுளைக் காண்பது என்பது எல்லாமே த்யானம்தான்.
கவிஞர் பாரதி சொல்கிறார்
"எண்ண்மிட்டாலே போதும்…………..
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதைவுள்ளுவதே போதுமடா
காவித்துணி வேண்டா, கற்றை சடை வேண்டா
பாவித்தல் போதும் பரமனை எய்வதற்கு,
சிவமென்றேயுள்ளதெனச் சிந்தை செய்தால்
போதுமடா"
நித்தசிவ வெள்ளமென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை ஒன்றே
போறுமடா.”
பகவான் பாபா சொல்கிறார் " எப்போது நீ அதிக அன்பு செலுத்த ஆரம்பித்து விட்டாயோ, அதிக பேச்சைக் குறைத்துக்கொண்டாயோ, அதிக சேவையில் மனம் ஈடுபட்டதோ அப்போது உனக்கு த்யானம் நன்றாக வந்து விட்டது என்று பொருள் கொள்"
முடிவாக நான் சொல்வது

அன்பு உயர பண்பு உயரும்.

பண்பு உயர ஒழுக்கம் உயரும்

ஒழுக்கம் உயர,தியானம் வளரும்

தியானம் வளர ஒளி மிளிரும்,

ஒளி மிளிர வாழ்வு ஓங்கும் .

வாழ்வு ஓங்க.சாதனை ஓங்கும்

சாதனை ஓங்க இலட்சியப்பூர்த்தி………………

விசாலம்

No comments: