Monday, April 2, 2007

என்னைப்பற்றி


அன்பு குழுவினரே என்னைப் பற்றி நீங்கள் நம்பிக்கை மூலமாகத் தெரிந்து கொண்டிருபீர்கள் இருப்பினும் முத்தமிழில் சேர்ந்த பின் திரும்பவும் எழுதுகிறேன் நான் பிறந்ததிலிருந்து பம்பாய் வாசி. திருமணம் ஆன பின் தில்லிவாசி. நான் கற்றுக்கொண்ட கலை, பாட்டு வயலின் ஹார்மோனியம். சிறிதுகாலம் நாட்டியம் பாட்டிலும் வயலினிலும் முன்னுக்கு வந்து என் அக்கா கலயாணி பாலகிருஷ்ணா பாட என் வயலின் கச்சேரி எப்போதும் இருக்கும் மற்ற கலைகள்,படங்கள் வரைவது,நாடகங்களில் நடிப்பது. சிறு வயதிலிருந்தே தமிழ் மீது மிகவும் ஈடுபாடு ஆனதால் எப்படி தேர்ச்சி பெறலாம் என்று யோசித்து பம்பாய் தமிழ் சங்கத்திலும் பாரதி கலாமன்றத்திலும்அங்கத்தினர் ஆனேன் நிறையப்புத்தகங்கள் படித்து கொஞசம் அறிவுவந்தது. ஏதோ சிறு அணிலும் அணைக்கட்ட ராமருக்கு உதவியதுபோல், எழுத்தின் மேல் ஆர்வம். பல கவிதைகள் ஆத்ம திருப்திக்கு எழுத ஆரம்பித்தேன்.ஆங்கிலத்திலும்,ஹிந்தியிலும் எழுதினேன் பரிசுகள்... பேச்சுப்போட்டி எழுத்துப்போட்டியில் நிறைய வந்துள்ளன. பாராட்டியவர்கள்...திரு.கி.வாஜகன்னாதன்,திரு.கி.ஆ.பெ.விசுவநாதம்,
திரு.நாடோடி,திரு.கல்கி, திருமதி.ஆனந்தி ராமசந்திரன்,திரு.சுபஸ்ரீ முதலியவர்கள் என்னை ஊக்குவித்து வெற்றிப் படிகளில் ஏற வைத்தவர் இது போல் பல பேர்கள். அவர்களை நான் இன்றும் வணங்குகிறேன். நாடகம் என்றால் எனக்கு உயிர்.பல நாடகங்கள் லேடீஸ் கிளப் வழியாக நடித்திருக்கிறேன் ஹிந்தி மொழியில் ஆர்வம் கொண்டு,ராஷ்ட்ர பாஷா ரத்னா வரை படித்து மஹாராஷ்ட்ராவிலேயே இரண்டாவது இடம் வந்து மெடலும் புத்தகப்பரிசும் வாங்கின நாள் எனக்கு இன்றும் பசுமையாக இருக்கிறது என் ஆசிரியர் தொழில் ஆரம்பித்தது என் 16 வயதில் அது தான் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டது அது தான் என் golden period. மற்ற hobby: austrology, numerology,palmistry,namalogy and vastu என் அப்பா தான் என் குரு என் 45 வயதிலிருந்து கற்றுக்கொண்டவை...reiki grandmaster.pranik healing, magnified healing,gayatri healing, siddha sakthi alpha mind power ....art of living ..isha yoga mnavalakalai ...flower therapy homeopatiy and sujok therapy {accupressure}தற்போது ரேக்கி க்ளினிக்கில் ஹீலிங் செய்து வருகிறேன் ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு, சமூக சேவையும் முடிந்த வரை செய்கிறேன் அன்னையும் பாபாவும் என் மூச்சில் எப்போதும் இருக்கிறார்கள் என் வாழ்க்கை முழுதும் நிறைய miracles.அந்த இறைசக்தியால் தான் எனக்கு எல்லாமே நடந்து வருகிறது நான் அன்பினால் அன்புக்காக அன்புடன் வாழ்கிறேன் அன்பே கடவுள்!அன்பையே அள்ளித்தருவோம் வாருங்கள் அன்புடன் விசாலம்.

No comments: