Friday, March 30, 2007

உண்ணாவிரதம்

தன்னலமே இல்லாத உண்ணாவிரதம்,
வெற்றியை வகுத்துக் கொடுக்கும்,
அண்ணல் காந்தி நோத்த நோம்பு,
சாத்வீக குணம் ஒளிர்ந்த நோம்பு,
வெற்றி பாதையில் நடைபோட்டார்,
புகழ் வெற்றியும் தேடி வந்தது
ஆனால்
அண்ணல் போல் பலர்,
நோக்கும் உண்ணாநோம்பை
என்னவென்று சொல்வது?
எப்படிச் சொல்வது?
இது பெரிய இடத்து விவகாரம்
கண்டும் காணமல் செல்லப்பா.
"அண்ணாச்சி
தலைவர் இன்று உண்ணாவிரதம்"
"அப்படியா? கூப்பிடு
புகைப்படக்காரரை"
படங்களும் எடுக்கப்பட்டன,
மாலைகளும் போடப்பட்டன,
கோஷங்களும் எழுந்தன
அடிக்கடி சாத்துக்குடி ஜூஸும் போயிற்று.
அன்புத்தொண்டர்களின் சேவையாம்
வெற்றிகாண சின்ன நிலை எதனால் அப்பா?
"பெருங்காடு தீப்பற்றி எரிந்திட்டாலோ,
பெரும் வைர நிலக்கரி சுரங்கமாகும் ,
சருகான வைக்கல் போர் எரிந்திட்டாலோ.
சாம்பலின்றி வேறு என்ன கிடைக்கும்?"

No comments: