அவள் பெயர் கமலி அவள் கணவர் பெயர் சபேசன் ஊர் கும்பகோணம் தற்போது இருப்பது சென்னையில்.
கமலி தன் கணவன் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று அடிக்கடி
கற்பனையில் லயித்துவிடுவாள் கற்பனையும் நிஜமும் ஒப்பிட்டு பார்ப்பாள் அவர்கள் வீட்டில்
சென்று நாமும் என்னவென்று பார்ப்போமே...
காட்சி:1
இருவரும் வெளியே கிளம்புகின்றனர்.
(கற்பனை)
"என்ன செல்லம் ! இன்னும் கிளம்பவில்லையா?
எந்த ஸாரீ வேண்டும் நான் எடுத்துக் கொடுக்கவா? பரவாயில்லை டயம் இருக்கு வா!"
(நடந்தது)
"என்னதான் பண்றே இன்னும்? கஷ்டம்...கஷ்டம்..! திருவாரூர் தேர் போல் அசைந்து அசைந்து வரத்துக்குள்ள... சிவசிவா ட்ரெஸ் செய்ய இத்தனை நேரமா?"
கமலி "அஞ்சு நிமிஷம் தானே ஆச்சு"
சபேசன் "வாயை மூடு எதுக்கெடுத்தாலும் ஒரு arguement"
கமலி முகம் வாட கிளம்புகிறாள். சபேசனுக்கு முதல் வெற்றி!
காட்சி:2
ஒரு புடவைக் கடைக்குள் இருவரும் போகிறார்கள்.
(கற்பனை)
"ஏன்னா இத பாருங்கோ! இந்தக் கலர் எடுக்கட்டுமா?"
சபேசன் "உன் உடம்புக்கு எல்லா கலரும் சூட் ஆகும் கமலி, இருந்தாலும் இந்த நீலக் கலர்
எடுத்துக்கோ" புடவையை கமலியின் தோளில் வைத்துப் பார்க்கிறான்
(நடந்தது )
"ஆமாம் பெரிய ஜோதிகா இந்தக் கலர், அந்தக்கலர்னு கேட்க அதான் பீரோ முழுக்க புடவையை அடுக்கி
இருக்கியே... மணிக்கணக்கா புடவையை பொறுக்க வேண்டியது
ஒரு மனுசன் கால் கடுக்க நிக்கறானே தெரியவில்லை சட்டுபுட்டுனு
முடிச்சுண்டு வா!
ஆமாம் இது என்ன வெலை 2000மா உங்கப்பன் பணமா? சரி சரி எடுத்துத் தொலை "
கமலி முகம் வாடியது சபேசனுக்கு வெற்றி!
காட்சி:3
"இத பாருங்கோ எனக்கு கொஞ்சம் தலைவலி
இந்த தட்ட மாத்திரம் சாப்ட எடுத்து வைக்கறேளா
(கற்பனை)
"எப்போலேர்ந்து இந்த தலவலி? கமலி ஏன் எங்கிட்ட சொல்லலே வெளிலேர்ந்து எதாவது வாங்கி
வந்துடறேன் சமக்காதே" கையில் தலைவலி பாம்
கொண்டு வருகிறான் அன்பாக தேய்த்து விடுகிறான் .
(நடந்தது)
"ஒண்ணுமில்லேனு நினச்சுக்கோ
வெளிலசுத்த தலவலி வராது மணிக்கணக்கா
டி வி சீரியல் பாரு தலவலி போயிடும்
நக்கலாக பேசி வெற்றி! கமலி முகம் வாடியது
காட்சி:4
கமலி டி விக்கு முன்னால் ராகம் சங்கீதம் ரசிக்கிறாள்
சபேசன் வருகிறான்
(கற்பனை)
"நீ ராகம் சங்கீதம் பார்க்கறாயா? பாரு எனக்காக
சேனலை மாத்தாதே நானும் உன்னோடு சேர்ந்து பாத்தால்
போச்சு அதுவும் ஒரு ஆனந்தம் தானே !"
(நடந்தது)
"கொண்டா ரிமோட்டை கையிலிருந்து பிடுங்குகிறான். கிரிக்கெட் மேட்சுக்கு மாத்துகிறான்.
"போ போ உள்ளே போய் வேலையைப் பாரு"
(காட்சி:5)
கமலியின் மாமா பெண்ணின் திருமணம்
கமலி:"கல்யாணத்துக்கு கிளம்பறேளா, பாவம் வயதான
மாமாவே வந்து கூப்பிட்டு போனார்"
(கற்பனை)
"ஆமாம் பாவம் வயதானவர் மாப்பிள்ளைனு இன்னிக்கும் மரியாதை நல்லதாக வாங்கி போய் கொடுதுட்டு வரலாம் கிளம்பு!"
(நடந்தது)
சபேசன்:"உங்க மாமாவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் எப்பவோ கல்யாணத்லே பாத்தது
நான் வரலை, நீபோய் பாத்துட்டு வா எனக்கு எதாவது
வயத்துக்கு பண்ணிட்டு போ"
கமலியின் முகம் வாடியது. சபேசனுக்கு வெற்றி!
காட்சி:6
தம்பூரா மீட்டி ராகத்தைப் பாட "ஆடாமல் அசையாமல்
வா கண்ணா" பாட்டு சுருதியுடன் கிளம்புகிறது.
(கற்பனை)
கண்ணை மூடிக்கொண்டு அருகில் அமருகிறான் "பாடு கமலி எனக்கு கண்ணன் வந்தது போல் இருக்கு! என்ன அழகு சாரீரம்? ரேடியோக்கு
அப்ளை செய் நிச்சயம் சான்ஸ் கிடைக்கும்"தோளை
செல்லமாக தட்டி விடுகிறான்.
(நடந்தது)
"கொஞ்சம் உன் பாட்டை நிறுத்தறயா?
பெரிய எம்.எஸ்.னு நினைப்பு முக்கியமான ஆபீஸ்
வேலை செய்யறேன் தெரியலை? accounts tally செய்யறேன்
disturb செய்யாதே கதவை சாத்தித் தொலை"
கமலி முகம் வாடியது. அவனுக்கு வெற்றி!
காட்சி:7
வெள்ளிக்கிழமை! லலிதா சஹஸ்ரநாமம் ஒலிக்கிறது.
கூட அவளும் பாடுகிறாள் கணவன் வெளியிலிருந்து
நுழைகிறான்,
(கற்பனை)
சபேசன்:"ஆஹா என்ன வாசனை ஊதுவத்தியா?
என்ன தெய்வீகம் இந்தா மல்லிகைப்பூ
அம்பாளுக்கு சார்த்தி நீயும் தலேல வச்சுக்கோ!"
(நடந்தது)
சபேசன்:"எனக்கு மேட்ச் பாக்கணும்
பேட்ஸ்மென் அவுட்டா இல்லயா? என்னன்னு தெரிலையே" சஹஸ்ரநாமம் பாதியில் நிறுத்தப் பட்டது
கமலி முகம் வாடியது. சபேசனுக்கு வெற்றி!
பின் குறிப்பு: இது சில உதாரணங்கள்தான் இது போல் நிறைய அடுக்கி கொண்டே போகலாம்
அன்னையே பெண்கள் உணர்வைப் புரிந்து கொள்ள
ஆண்களுக்கு அருள் புரிவாயே..!
இந்த விஷயத்தில் தற்கால இளைஞர்களை நான் மிகவும்
பாராட்டுகிறேன் அதை நாளை சொல்லுகிறேன்.
Saturday, March 31, 2007
கற்பனையும்...நிஜமும்..!
Posted by
Meerambikai
at
10:20 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment