நாம் என்ன கற்காலம் போய்விட்டோமோ என்று இருந்தது இந்தச்சம்பவம் ,ஒரு தங்கச்
சங்கிலியை ஒரு மாதுவின் கழுத்திலிருந்து அறுத்துப் பிடுங்கிக் கொண்டு ஓடினான் பகல்பூரைச்சேர்ந்த ஒரு திருடன் ,பெயர் சலிம் ஔரங்கசீப் நிச்சியமாக இது பீஹாராகத்
தான் இருக்கவேண்டும் ,கிரிமினலுக்கு பெயர் போன மாகாணம் ,இந்தச் செய்கை நடந்த்தவுடன் அந்தப் பெண்மணி "திருடன் திருடன் "என்று குரல் கொடுத்தாள் பலர் அவன் பின்னாடி ஓடி அவன் காலரைப் பிடித்து இழுத்து வந்தனர் அவ்வளவுதான் மாறி மாறி உதையும் அடியும் நிற்காமல் பொழிந்தன ,அதிலேயே அவன் சாகும் நிலையை எட்டிவிட்டான் ,சினிமாவில் வருவது போல் கடைசியாக போலீஸ் வந்தனர் அவர்கள்
பங்குக்கு பெல்ட்டைகழட்டிக் கொண்டு அதனால் அடித்தனர் ,அதனாலும் திருப்தி
அடையாமல் அவன் கைகளைக் க்ட்டிவிட்டு அவனைத் தன் மோட்டர் பைக்கில் கட்டி
எல் பி ச்ங் ,,,ராமசந்திர ராய் இருவரும் 20 வயதே ஆன அந்தப் பையனை இழுத்துச்
சென்றனர் அவ்ன் உடல் கீழே தேய்ந்து சிறிது நேரத்தில் மயக்கம் ஆனான் ,இப்போது
மிகவும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் இருக்கிறான் ,முன்பே இதுப்போல்
பகல்புர் ப்ளைண்டிங் கேஸ் அதாவது மொத்தமாக பல விசாரணைக் கைதிகளின்
கண்களில் ரசாயனம் கொட்டி குருடாக்கினார்கள்{1980} நாட்டைக் காக்கும் மக்களை
ரட்சிக்கும் போலீஸே இது போல் செய்தால் ,,இதற்கு என்ன சொல்வது ?
கற்கால மனிதர்கள் திரும்ப வந்து விட்டார்களோ ?
மனம் மிகவும் வருந்துகிறது ,,,,
அன்புடன் விசாலம்
Reply
Friday, September 7, 2007
கற்காலம்
Posted by
Meerambikai
at
2:01 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment