Friday, September 7, 2007

பாவாஜி

திருப்பதி ஏழுமலையான் மீது அளவிலாத பக்தி கொண்டு ,,,அந்தப் பெருமானே பக்தியில்
மகிழ்ந்து தரிசனமும் தந்திருக்கிறார் ஒரு பக்தருக்கு,,,அவர் பெயர் பாபாஜி ,வடநாட்டில் இருந்தவர் ,சிறு வயதிலிருந்தே பாலாஜியின் படத்தை வைத்து பூஜை செய்து அதிலே
லயித்து தன்னை மறந்து போய்விடுவார். பல நாட்களாக அவருக்கு திருப்பதி போக
ஆசை இருந்தது ,சந்தர்ப்பம் கிடைக்கவில்லை ,,பலதடவை அவரிடம் முறையிட்டு கடைசியில் ஒரு வாய்ப்பும் கிட்டியது ,அங்கு கோவிந்தாவைப் பார்த்து பின் திருப்பதியைவிட்டு நகர மனமில்லாமல் அங்கேயே ஒரு சின்ன இடத்தில் குடி வந்து விட்டார் ,அங்கு பூஜை அறையில் ஒரு பெரிய பாலாஜியின் படம்வைத்து அத்னுடன் தொழனுடன் பேசுவது போல் பேசுவார் பூஜை செய்து பிரசாதம் தருவார் ,ஒரு நாள்
அவர் பாலாஜியிடம் :அப்பா ந்ண்பா ,,இன்று என்னுடன் தாயம் விளையாட வாயேன் ,
உன்னுடன் விளையாட ஆசையாய் இருக்கிறது, நீ எதிரில் வரவில்லை என்றாலும்
நீயும் விளையாடுவதுப் போல் எண்ணி நான் விளையாடுகிறேன் "என்று தாயக்க்ட்டை
உருட்டலானார் ,திடீரென்று ஒரு குரல் கேட்டது,,,"நண்பா பக்தா நான் இதோ விளையாட
வந்துவிட்டேன் "
"பாலாஜி ..நீயா ! நிஜம்தானா அல்லது கனவா? ஆஹா என்ன பாக்கியம் செய்தேன் உன் தரிசனம் கிடைதிருக்கிறதே என்னால் நம்பவேமுடியவில்லையே!
"ஆடுவோமா? இது பகவானின் குரல்
ஆட்டம் தொடங்கியது இருவரும் ஆட திடீரென்று பகவான் "அப்பா பகதா ! நான் தோற்று
விட்டேன் உன்க்கு வேண்டும் வரம் தருகிறேன் ,,,,
"பகவானே எனக்கு உங்கள் தரிசனம் கிடைத்தால் போதும் "என்றார்
ஒரே ஒளி வெள்ளத்துடன் சங்கு சகரதாரியாக நெற்றியில் திரும்ண் , காதில்
குண்டலத்துடன் அருமையான காட்சி கொடுத்தார் ,அநதப் பாவாஜி மெய்மறந்து நிறகையிலே பகவான் தன் கழுத்திலிருந்த
வைரமாலையைக் கழட்டிப் போட்டுவிட்டு மறைந்து விடுகிறார் பாவாஜி அந்த வைர
மாலையைப் பார்த்து பதறிப் போனார் ,ஐயோ இது என்ன சோதனை ,,,ஆட்டத்த்ல்
தோல்வி அடைந்ததற்கு இது என்ன பரிசா ?இதைவைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன்?சரி கோவிலுக்குப் போய் கொடுத்து விடுகிறேன் " என்று நேரே கோவில் பக்கம் ஓடினார்,இதற்குள் கோவிலில் ஸ்வாமியின் இரத்தின மாலைக் காணாமல் ஒரே அமளி ,,ஏற்பட்டது பெரிய அதிகாரியெல்லாம்
வந்துவிட்டனர் அந்த நேரம் பார்த்து பாவாஜி அங்கு நுழைந்தார் ,கையில் வைர
மாலையுடன் ,,,
"பிடியுங்கள் பிடியுங்கள் இவன் தான் திருடன் என்று இவரைப் பிடித்துக்கொண்டனர்
பாவாஜி சொன்னார் "நான் திருடனில்லை என்னுடன் பாலாஜி தாயம் விளையாடித்தோற்று
இதைப் போட்டுவிட்டு போய்விட்டார் ,அதைக் கொடுக்கவே நான் இங்கு வந்தேன்"
எல்லோரும் சிரித்தனர் "ஆண்டவன் வந்தாராம் ,தாயம் விளையாடினராம் ,,பேஷ் நல்லக்கதை,,,இது,,,,
ஆனாலும் பலதடவை சத்தியம் செய்து இதைச் சொல்ல அவருக்கு ஒரு பரீட்சை வைத்தனர் " நிலவறையில் ஒரு வண்டிக் க்ரும்பை வைப்போம் அதை இரவுக்குள்
எல்லாம் திங்க வேண்டும் " இதுதான் நீ குற்றம் செய்யவில்லை என்ற அத்தாட்சி
"நான் ஒரு வண்டி கரும்பை எப்படி த்ங்கமுடியும்?பாலாஜி காப்பாற்றப்பா,,,,,,,கதறினார்
பாவாஜி வண்டி நிறைய கரும்புகள் வந்து அறையில் நிரப்பப்பட்டன
திருப்பதி ஆண்டவர் யானை உருவில் வந்தார் கரும்பெல்லாம் சில நொடிகளிலேயே காலியானது ,,பொழுதுவிடிந்ததும் அந்த அறைக்கதவை அதிகாரிகள் திறக்க அழகான யானை வெளியில் வர எல்லோரும் வியப்படைந்து வாயடைத்து போய் நின்றுவிட்ட்னர்
பின் பாவாஜியின் காலில் விழுந்து "நீங்கள் பரம பக்தன் இதை நன்கு உணர்ந்து
கொண்டோம் இன்று முதல் திருப்பதிக்கு நீங்கள் தான் தலைமை அதிகாரி "என்றனர்
அன்றிலிருந்து அங்கேயே தொண்டில் ஈடுபட்டு பின் சித்தி அடைந்தி விட்டார்
இவருக்கு திருப்பதி கோவிலின் தெற்கு பக்கத்தில் " பாவாஜி மண்டபம் " இருக்கிறது
அன்பு குழந்தைகளே கடவுள் உண்மையான பக்திக்கு தானே நேரில் வ்ருகிறார்
இல்லையா ?

அன்புடன் அம்ம்ம்மா

No comments: