குதிராம் போஸ் என்ற வீரச் சிறுவன் நம் நாட்டிற்கென்று நம் நாட்டின் சுதந்திரத்திற்காக
உயிரையும் கொடுத்தான் அவன் பெங்கால் மாகாணத்தைச் சேர்ந்தவன் ,மிட்னாபுர் என்ற
கிராமத்தில் பிறந்தான் .சின்ன வயதிலிருந்தே கீதையைப் படித்து அதன்படி நடக்க முயலுவான் அதன் கொள்கைகளை விரும்பினான் ,ஆங்கிலேயரை நம் நாட்டில் அறவே
வெறுத்தான் ஆங்கிலேய ஆட்சியை முறியடிக்க தானும் ஏதவது வழியில் உதவ வேண்டும் என்ற ஆசை அவனைப் பற்றிக் கொண்டது ,அவனுக்கு வயது அப்போது பதினாறுதான்
ஒரு இயக்கம் ஜுகந்தர் என்ற பெயரில் நடந்து வந்தது அதில் இவனும் சேர்ந்த்துக்கொண்டான் ,
ஆங்கிலேய ஆட்சியை மறைமுகமாக எதிர்த்தான் ,ஆங்கிலேயரின் போலீஸ் ஸ்டேஷன் மற்ற
முக்கிய இடங்களில் குண்டு ஒருவருக்கும் சந்தேகம் வராதபடி வைப்பதில் அதி சமர்த்தன் ,
தன் வேஷம் மாற்றிக்கொண்டு காரியத்தைக் கச்சிதமாக முடித்து விடுவான் ,மூன்று வருடங்கள்
இந்த இயக்கத்தில் இருந்தான் , ஒரு சமயம் அவனுடைய தலைவர் அவனுக்கு இது போல ஒரு காரியம் ஒப்புவித்தார்.அது என்னவென்றால் ஒரு பெரிய ஆங்கிலேய அதிகாரியையும் அவ்ருடன் கல்கத்தாவின் மேஜிஸ்ட்ரேட் ஐயும் அவர் கோச்சு வண்டியில் வரும் போது பாம்
எறிந்து அழிக்க வேண்டும் ,,,குதிராம் மிகவும் மகிழ்ச்சியுடன் நாட்டின் நன்மைக்காக
அதைச் செய்ய விரும்பினான் ஒரு இடத்தில் மாறுவேஷத்துடன் நின்று இருந்தான்
அப்போது கோச்சு வண்டி வர டமால் என்று பாம் வெடிக்க கோச்சும் வெடித்தது ஆனால்
நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று ஆனது ,அந்தக் கோச்சு வண்டியில் இரு ஆங்கிலேயப்
பெண்மணிகள் இருந்தனர் .அவர்கள் குண்டினால் எரிந்துப் போனார்கள்,,போஸ் ஓடுவதற்குள்
பிடிப்பட்டான் அப்போது அவனுக்கு 19 வயதுதான் .அச்சம் என்பது அறவே இல்லை ,
அவனுக்குத் தூக்குத்தண்டனைத் தரப்பட்டது ,தூக்குமேடைக்கு அழைத்துச்சென்றனர் ,சிரித்த
முகத்துடன் சென்றான் "ஜெய் ஹிந்த ,,என்ற வார்த்தை அவனிட்மிருந்து கடைசியாக
வந்தது ,,,,,,,,,அவன் உயிர் பிரிந்தது ,,,,,
அன்புடன் அம்மம்மா
Friday, September 7, 2007
வீர இளைஞன்
Posted by
Meerambikai
at
2:08 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment