நாம் உலகில் மாயை என்ற வலையில் விழுந்து தான் வாழ்கிறோம் ,எத்தனைச் சொற்பொழிவுகள் கேட்டாலும் திரும்ப திரும்ப நம்மை ஆக்கிரமிக்கும் அந்தச் சக்தியை
என்ன வென்று சொல்வது நாம் எப்போது உடல் ,,ஆத்மாவைப் பிரித்துப் பார்க்க
ஆரம்பிக்கிறோமோ அப்போது இந்த மாயா என்ற பெண்ணும் நம்மை விட்டு விலகுவாள்
நாம் ஒரு சினிமா பார்க்கச் செல்கிறோம் அங்கு ஒருவரின் வீடு இடிந்து விழுகிறது ,,நாம் உடனே பதறி “ஓ காப்பாத்துங்கள் வீடு இடிந்து விழுகிறது “என்று கத்துவோமா?
இல்லையே எதோ சினிமாவில் ஓடுகிறது என்று பார்ப்போம் ,,இதே போல் ஒருவர் இறந்து
கதாநாயகி அழுதாலும் நாம் உடனே எழுந்து உதவிக்கு போகிறோமா ,,,,அது போல் நாம் நம் வாழ்க்கையில் நம்மைப் பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும் உடலுக்குப் பற்று ,பின் சொந்தப் பந்தத்தில் பற்று என்று இருக்கும் வரை மாயையும் நம்மை விடாது அந்த நிகழ்ச்சி தன் வாழ்வில் நிகழ அவர் நிகழ்ச்சி வேறு தான் வேறு என்று பிரித்துப் பார்ப்பத்தில்லை,எப்போது இந்த உடல் வேறு ஆதமா வேறு என்ற உணர்வு வருகிறதோ
அப்போது அவர் ஞானியாகி விடுகிறார் ,உடல் அழியக்கூடியது ஆனால் ஆத்மாவுக்கு அழிவு இல்லை அந்த ஞானியின் நிலைமைப் பெற ஆத்மாவை அறிய முயல வேண்டும்
அதற்கு முதலாக மனதை அடக்க வேண்டும் அது நம் கட்டுபாட்டுக்குள் வர வேண்டும்
மனம் வசமானால் எல்லாம் மாயை என்பது விளங்கும் பின் எல்லாம் ஆத்மா அந்த ஆத்மாவிற்குள் இறைவன் என்பதும் விளங்கும் இறைச்சக்தியே மெய் மற்றவை எல்லாம் பொய் எனபதும் விளங்கும், பின் எல்லோரும் சமம் என்ற நிலை உண்டாகும் ,,,
அன்புடன் விசாலம்
Tuesday, June 26, 2007
மாயையும் ஆத்மாவும்
Posted by
Meerambikai
at
9:26 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment