Friday, April 3, 2009

இறைவனை நோக்கி ஒரு அடி வைத்தால் ,,

சத்ய சாயி பாபாவைச் சில பக்தர்கள் சந்திக்கச் சென்றனர்அவரது அறையில் சிலருக்கு ஒரு சந்தேகம் கேட்டு அதற்கு பதிலும்தெரிந்துக்கொள்ள ஆவலாக இருந்தது ,பாபா அவர்கள் அவர்களிடம்" ஏதோ கேட்க நினைத்தீர்கள் அல்லவா?தயக்கமில்லாமல் கேளுங்கள்" என்றார்,"சுவாமி துன்பம் எங்களைத் துரத்துகிறது , அந்தத் துன்பத்தைவிட்டுவிலகிப்போக ஏதாவது வழியுண்டா?"" நீங்கள் இப்போது சூரியனை நோக்கி நடந்து பின் வந்த வழியே எதிர்ப்புறமாகத் திரும்பி வாருங்கள்"அவர்களும் எழுந்துச்சென்று பாபா கூறினப்படியே செய்து விட்டுவந்தனர் ,பாபா அவர்களிடம் கேட்டார் ,,,,,," போகும் போது என்ன கவனித்தீர்கள்?பின் வரும்போது என்னகவனித்தீர்கள்?"நாங்கள் ஒன்றும் கவனிக்கவில்லையே!"" சூரியனை நோக்கி நீங்கள் சென்றபோது உங்களுடைய நிழல் உங்களுக்குப்பின்னே போய்விட்டது.சூரியனிடமிருந்து நீங்கள்விலகி வந்த போது உங்களுடைய நிழல் உங்கள் முன்னே சென்று வழிக்காட்டத்தொடங்கியது .இறைவனை நோக்கி நீங்கள்சென்றால் உங்களுடய துன்பம் பின்னே போய்விடும் .இறைவனிடமிருந்து நீங்கள் விலகிச் சென்றால் துன்பம் உங்களுக்குவழிகாட்டத் தொடங்கும் " பக்தர்கள் இந்த விளக்கத்தால் மனம் நிறைந்தனர் .நம்முடைய நிழல் நம்மையே தொடரும் அதைப்பிரிக்க முடியாது அதே போல வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரு பக்கங்கள் ,தவிர்க்க முடியாத ஒன்று இறைவனது நாமத்தால் துன்பம் பின்னேதள்ளப்படுகிறது .நாம் ஒரு அடி இறைவனை நோக்கி முன் வைத்தால் அவர் நம்மைநோக்கி ஆறு அடி முன் வருவாராம் ,துன்பத்தை விலக்குவதும் ,பெற்றுக்கொள்வதும் நம் கையிலேதான்ஒம் சாயி ராம்

சுந்தர காண்ட மகிமை

ராமாயணம் முழுவதும் படிக்கப் படிக்க ஆனந்தம் தான் அதிலும் சுந்தரகாண்டம்படித்தால் சகல கார்ய சித்தி தீராத வியாதிகள்போகல் விவாகம் நடத்தல் தனலாபம் போன்றவைகள் கிடைக்கின்றன , இதைப்படிக்கவும் முறைகள் உண்டுஇது "உமா சம்ஹிதை" யில் பார்வதி பரமேஸ்வர சம்வாதத்தில் சிறப்பாகக் கூறப்பட்டுள்லனதவிர அவரவர் ஜாதக ரீதியாக நடக்கும் தசை தோஷங்கள் போக்க பாராயணம் செய்ய சில ஸ்லோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளனஇதை நான் பின்பற்றி அதன் பலனையும்கண்டிருக்கிறேன் ,பல மருத்தவர்கள் கைவிட்ட தீராதவியாதியும் தீரக் கண்டிருக்கிறேன்மிகவும் எளிது சக்திக்கும் வசதிக்கும் ஏற்ப செய்தால் போதுமானது ஒரு நல்ல நாளில் சங்கல்பம் செய்து கொண்டு ஸ்ரீராமர் சீதை லக்ஷ்மணர்அனுமார் சஹிதமாக பிரதிமையோ போட்டோவோவைத்துக்கொண்டு முறைப்படி பிரதிஷ்டைச் செய்து கொள்ள வேண்டும்பின்சுந்தரகாண்டத்தின் ஸப்த ஸர்க பாராயணம்செய்யவேண்டும் கடைசி நாள் பட்டாபிஷேக சர்க்கத்தையும் படித்துபின் பாராயணத்தைக் கற்பூரம் காட்டி முடிக்க வேண்டும்அவரவருக்குத்தகுந்தாற்போல் நைவேத்தியம் வைக்கலாம் பின் அன்னதானம் ஏழை எளியவர்களுக்குச் செய்யலாம் ,மனோவியாதி பூதபிசாசு பயங்கள் ஹனுமாரின் லங்காவிஜயம் வர்ணிக்கும் மூன்றாவது ஸர்க்கம் மாலையில் முதலில் சர்க்கரான்னம் நைவேத்தியம் செய்து பின் படிக்க வேண்டும் தாரித்திரியத்தைப் போக்க ஹனுமார் லங்கையில் ஸ்ரீசீதாவைக்கண்ட 15 வ்துஸர்க்கம் படிக்க வேண்டும் விட்டுப்பிரிந்த பந்துக்கள் சேர ஸ்ரீ ஹனுமார் சீதாவிற்கு மோதிரம் கொடுத்த36 சர்க்கம் காலையிலும் மாலையிலும் படிக்கவேண்டும் மாம்பழம் பலாப்பழம் நிவேதனம் செய்யவேண்டும் கெட்ட ஸ்வப்பனம் தோஷ சாந்திக்கு திரிஜடை கண்ட கனவை விவரிக்கும்27வது ச்வர்க்கம் படித்து சர்க்கரை நிவேதனம் செய்யவேண்டும் தெரிந்தோ தெரியாமலோ செய்த அபராதங்களைப் போக்க காகாசுரனுக்கு அனுக்கிரஹம்செய்த38 வது ஸ்ர்க்கம் படித்து ஸ்ரீ ராமனை நமஸ்கரிக்கவேண்டும் சந்தர தசை தோஷம் 5வது ஸர்க்கம் படிக்க வேண்டும் செவ்வாய் தோஷம் ,,ஹனுமார் ராவணனுக்கு உபதேசித்த 51ஸர்க்கம் படிக்க வேண்டும் குஜதசையில் சுக்ரபுக்தி கெட 52 ஸர்க்கம் ஹனுமாருக்காக ஸ்ரீதேவி அக்னி யைப் பிராத்திக்கும் ஸ்லோகம் படிக்கவேண்டும் ராஹூதசையில் சுக்ரபுக்தி கெட்டிருந்தால் ஹனுமார் அக்ஷன் எனும் ராக்ஷசனை வதம் செய்த 47 வது ஸர்க்கத்தைப் பாராயணம் செய்யவேண்டும் குருதசை கடுமையாக இருந்தால் சுந்தர காண்டத்தின் முதலாவது ஸர்க்கம் ஸ்ரீஹனுமான் கடலைத் தாண்டியதைப் படித்து பின் பொரியை நிவேதனம்செய்யவேண்டும் குருதசையில் கேது கெட்டிருந்தல் 61 62 ஸர்க்கம் ஹனுமான் மதுவனத்தை அழித்தது படிக்க வேண்டும் சனி தசை தோஷம் ஹனுமார் பிரும்மாஸ்திரத்திலிருந்து விடுப்பட்ட 48 வதுஸர்க்கம் படிக்க வேண்டும் சனி தசையில் சுக்ரபுக்தி கெட்டிருந்தா; ஸ்ரீதேவிக்கு சூடாமணியைத் தந்த 38ஸர்க்கத்தைப் படிக்க வேண்டும்

விழுக்கல்வி

நாம் கல்வியை எடுத்துக்கொண்டால் அதை இரு அம்சங்களாகப் பிரிக்கலாம் ,ஒன்றுபுற உலகை ஒட்டிய கல்வி , இதில் நாம் புத்தகத்தைப் படித்து அறிவைவளர்த்து புற உலகைப் பற்றிய செய்திகள் அறிந்து நமக்கும் பணம் சம்பாதிக்கும் வழியையும் உணர்ந்து திறமைகளை வளர்த்து அதனால் பெரிய இடத்தைப்பிடிக்கவழி வகுக்கிறது ,இரண்டாவது அம்சம் உயிரூட்டும் கல்வி இதை விழுக்கல்விஎன்றும் சொல்லலாம் {educare } மனிதன் தன் வாழ்க்கையை இனிமையாக்க செம்மையாக்க பல பண்புகள் தேவைப் படுகின்றன .இந்தப்பண்புகள் இந்தவிழுக்கல்வியில் கற்றுதரப்படுகின்றன .கிருஸ்தவர் பள்ளியிலும் மாரல் ஸையின்ஸ் என்ற புத்தகம் படிக்க கோர்சில் முன்பு இருந்தது ,கல்வியின் பயன்.... நம் வாழ்க்கைக்குத் தேவையான் அன்பு நன்னடத்தை ,ஒழுக்கம் பணிவு மனித நேயம் என்று பல இதழ்கள் கொண்ட நம் வாழ்க்கை ஒரு மலராக மலர வேண்டும் ,இவைகள்இல்லாத கல்வி நாட்டிற்கும் வீட்டிற்கும் பயனளிப்பது இல்லை ,ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல மனித மேம்பாடுகள் மறைந்திருக்கின்றன ,விழுக்கல்வி நம் மனதில் மறைந்துக்கிடக்கும் ஒளியைத் தேடி எடுத்து அந்தத் தெய்வீகப்பண்புகளை வெளிக்கொணர்ந்து அன்றாட வாழ்க்கையில் உபயோகித்து பலர் பயனடையுமாறு செய்தல் வேண்டும் சுயநலம் , பேராசை பொறாமை அஹங்காரம் அறவே தவிர்க்க வேண்டும் இவைகள் இந்தக்கல்வி படிக்க தடைகள் ஆகின்றன காந்தீஜியின் மூன்று குரங்கு பொம்மைகள் போல் இருத்தல் அவசியம் .நல்லதையே நினை நல்லதையே பேசு நல்லதையே செய் என்ற மனப்பக்குவம் வந்து மேலே ஏறமுயற்சித்தால்மிக எளிதாக வெற்றி பெறலாம்இதற்கு தேவை ஆங்கிலத்தில் ஐந்து டி {D} கடவுள் பக்திமன்க்கட்டுப்பாட்டுடன் ஒழுக்கம் கூர்ந்து நோக்கும் அறிவு கடும் மன உறுதி கடமை அதாவது divinity discipline dedication determination dutyநல்ல எண்ணங்களை விதைப்போம் நல்ல பயிரை வளர்போம் நம் மனம் என்ற நிலத்தில் நல்ல விதைகள் விதைப்பது மிகஅவசியம் நல்ல செயலகள் வளர்ந்து நல்ல பழங்கள் அளிக்கும் அன்புடன் விசாலம்