Monday, July 21, 2014

புலிக்கொடியின் மாட்சி

முன்னுரை   --  என் பூர்வீகம் தஞ்சாவூர். நான் அங்கு அடிக்கடி போய் அமரும் இடம்   தஞ்சை  பெரிய கோயில்.   அருள் மிகு பிரகதீஸ்வரர் கோயில்  . கல்லிலே கலை வண்ணம் கண்டேன்  என் மனதில் அழியா இடம் பெற்ற பேரரசர் திரு ராஜராஜ  சோழன்  . அவர்து சரித்திரத்தை
ஒரு கவிதைப்போல் எழுத வேண்டும் என்ற ஆவலால் இதை எழுதினேன் . எழுதும் போது என் கண் முன் அந்த மன்னரையே கண்டேன் அவர் பின்னால் தஞ்சைப்பெரிய கோயிலும் கம்பீரமாக நின்றது   கவிதை  கொஞ்சம் பெரிதாக இருந்தாலும் டெலிட் செய்யாமல் படிப்பீர்கள் இல்லையா?


அது  ஒரு பொற்காலம் ,,,,,,
சோழ வள நாடாம், அதில் உயர் தஞ்சைக் கண்டு,
தூயத்தமிழ் நாட்டின் தலைமை அதைக் கொண்டு,
புகழ்  உச்சி  ஏணியில்  புலிக் கொடி நாட்டி,
"அருள் மொழி வர்மனாம்  " அருளைக் காட்டி,
சிவனுடைய அருள் முழுமை பெற்று,
  ஒவ்வொரு மூச்சிலும்  சிவனே நின்று,
கண்டறியாத அற்புதமாய்  நின்றது தஞ்சைக்  கோவில்
ஆயிரம் வருடங்கள் ஆனாலும் அழியாத கற்கோவில்,
 
கலை நுட்பம் சிறந்த அழகுத்திருகோயில் ,
கண்டவர் பரவசம், காண்பவர் வியக்கும் கோவில்
பிரும்மாண்ட சிவலிங்கம் அருள்  புரியும் கோயில்
அவனைப்பார்க்கும்  நந்தியோ ,மனதை அள்ளும் கோயில்
 
மலர் மணக்கும் கோவில்கள்
மா பெரும்  விழாக்கள்.
 ஒன்றுபட்ட மனத்தாலே உழைத்திடும்  கரங்கள்,
 சாலை இரு புறமும் நிழல் கொடுக்கும் மரங்கள்.
 
அது ஒரு பொற்காலம்,
மக்கள் மகிழ்காலம்
அருள்மொழிவர்மன் திரு ராஜராஜன்
வாழியவே
 
 
 
ராஜகேசரி வர்மன்   நீதானே
மும்முடி சோழன்  நீதானே,
சிவபாத சேகரா நீதானே
ஸ்ரீ ராஜராஜனும்  நீதானே
சிவனருள் பெற்றவன்  நீதானே
தமிழ் நாட்டின்  பெருமையும் நீதானே
அது ஒரு பொற்காலம் மக்கள் மகிழ் காலம்
அருள் மொழி வர்மன்  திரு ராஜராஜன்  வாழ்கவே!
எங்கும்  புலிக்கொடியின்  மாட்சி கொடிக்கட்டி பறந்தது ஆட்சி
அருளோங்க, ஒளியோங்க   மகிழ்வோங்க, வாழ்வோங்க
பொருள் வளம் ஓங்க, புலமை எழில்  ஓங்க  சிவ நாமம்  ஓங்க
மாவீரன் எனப் பெயரோங்க சோழவளநாடு புகழோங்க
நாற்றிசையும்  வெற்றிப் பேரிகையும்  ஓங்க சீரும் சிறப்புமோங்க,
சொற்சுவையும் பொருட்சுவையும்  ஒருங்கே ஓங்க
அயல்  நாட்டிலும் செந்தமிழ்   ஓங்க,
வேற்றுமை நீங்கி  ஒற்றுமை  ஓங்க  
கலைகளும் சுடர் விட  காவியமும்  பெருகிட,
தாயின் அன்பில் கோவிலும் எழும்பிட,
அரசில் புதுமைகள்  தின்ந்தோரும் தோன்றிட,
வைணவமும்  மதித்து  திருமால் கோவிலும் எழுப்பிட,
'சூடாமணிவிஹாரா" என்ற புத்தக் கோவிலும்  வந்திட,
கங்கைக் கொண்ட சோழபுரமாம் வானளாவ
அது ஒரு பொற்காலம் மக்கள்  மகிழ்ந்தக்  காலம் 
அருள்மொழி வர்மன்  திரு ராஜ ராஜன் வாழியவே !
 
 
தஞ்சை திருச்சி  முதல் ஆட்சி ,
வட ஆற்காட்டிலும் புலிக்கொடி மாட்சி,
பாஸ்கரவர்மனும்  தோல்வி கண்டான்,
அமரபுஜங்கனும்  மாட்டிக் கொண்டான்,
கண்டலூரிலும் புலிக்கொடி பறக்க
கப்பற்படைகள்   தோல்வி அடிக்க,
வில்லினம்  துறைமுகம்  சோழன்  கையில் 
எல்லா துறைமுகம்  அவன்  வசத்தில்
கங்குவர்  நொலம்பர்   யாவரும்  பணிய,
வேங்கி, குடகு  எல்லாம்  அவன்  கீழ்,
தக்கினதிலும் "சாலுக்யா
தோல்வி் கண்டான்  "சத்யஸ்ரயா '
சேர பாண்டியன்  உடன்படிக்கை,
இலங்கை  அரசனுக்கு உதவும் கை,
சீறி எழுந்தது புலிக்கொடி
எங்கும்  பறந்தது  வீரக்கொடி ,
அரசன் மஹீந்தரன்  தோல்வி,
சோழனின்   கொடிக்கு வெற்றி
அது ஒரு  பொற்காலம்
மக்கள் மகிழ்ந்திடும் காலம்
அருள்மொழிவர்மன் "ராஜராஜன்"வாழியவே
 
 
 

மகளிர் தினம்

ஒரு சம்பாஷணை 
வயதான தம்பதியர்.

"என்ன கமலா  பெரியவா சீரியல் ஆரம்பிச்சுடுத்தா?'
"ஆமாம் இப்பதான் ஆரம்பிச்சுது. அதான் பாக்கறேன்'


"சரி   ஏந்துபோய் சூடா காப்பி கலந்துண்டு வா,"

" சத்த இருங்கோ இப்பத்தானே விளக்கேத்திட்டு உட்க்காந்தேன்'

" என்ன பதில் பேசறே . போய் எடுத்துண்டு வாங்கறேன்'

"இன்னிக்கு மகளிர் தினம் தினமலர்ல பாத்தேன் . இன்னிக்காவது எங்கிட்ட கத்தாம கோச்சுக்காம இருக்கப்டாதா? எனக்குன்னு என்னிக்குத்தான் சுதந்தரம் கிடைக்குமோ? உம் ராமா ராமா "
"என்ன முணுமுணுக்கறே . மகளிர் தினம்னா ஆத்துகாரர் சொன்னத கேக்கப்டாதுன்னு சொல்லியிருக்கா.அதான் சுதந்திரம் கொடுத்து கொடுத்து நாடு கெட்டுப்போச்சே .நெத்தில பொட்டு இல்ல . தல விரிச்ச கோலம்தான் எப்போதும் .வெளில சொல்லுவானேன் நம்மாத்லேயே தான் எல்லாம் பாக்கறோமே!"

"அட சும்மா இருங்கோ , ஏதோ வருஷத்ல ஒரு தடவ நம்பள பார்க்க புள்ளையும் மாட்டுப்பொண்ணும் வரா. அப்ப போய் இது சரியில்ல அது சரியில்லன்னு சொல்லி சண்டை மூட்டணுமா?ஏதோ அவா சந்தோஷமா இருக்க வரா  நீங்க சும்மா இருந்தாலே போதும் .'

"இந்தக்கண்ராவியெல்லாம்  பாக்காம இருக்கத்தான் நான் நியூயார்க்குக்கு போன வருஷம் வல்லன்னு சொல்லிட்டேன் '

"சும்மா இருங்கோ அந்தப்பொண்ணு ரொம்ப நல்ல பொண்னுதான் ட்ரெஸ்ல என்ன வந்தது?குணம்தானே முக்கியம் "

"எல்லாம் இடம் கொடுத்து கெட்டுபோயிடுத்துகள் . உனக்கு உம் புள்ளைட்ட போய் இருக்கணும்னா நீ போய் இருந்துக்கோ . பெரிய மகளிர்தினமாம் 
அடக்கம் ஒடுக்கமெல்லாம் இல்லாம போயிடுத்து. சரிசரி  எதுத்து பேசாதே  போய் காப்பி கொண்டு வா"

"ஈஸ்வரா இந்த வயசிலும் இப்படி நடுங்கித்தொலைக்கறேனே . இந்த கால பெண்கள் போல எப்பத்தான் தைரியம் வருமோ? என்னதான் இருந்தாலும் அந்தக்கால மனுஷா மாறபோறதில்லை.அதுவும் கும்பகோணம்னா கேட்கவே வேண்டாம் . உம் என் காலம் முடிஞ்சுப்போச்சு.. இனி போற வழிக்கு புண்ணியம் தேடணும் அதான் " 

"என்னடி எதோ முணுமுணுத்துண்டு போறே.நீ முன்னமாரி இப்போ இல்லை.உனக்கும் திமிர் வந்துடுத்து. உன் இஷ்டப்படி நாலு மாமிகளோட வெளில கிளம்பிடறே.  வீட்ல புருஷன் என்ன சாப்பிடுவான் ? அவனுக்கு எதாவது செஞ்சு வைச்சோமா  ஊஹும்  ஒரு நினைப்புமில்லை"

"என்னன்னா என்னிக்கோ திருவேற்காடு கோவிலுக்குப்போனத பத்து தடவ சொல்லிக்காட்டறேளே.இன்னிக்கு எனக்கு சந்த்ராஷடமம் போல இருக்கு. எழுந்த நேரமே சரியில்லை.போதாததுக்கு இன்னிக்கி  "மகளிர் தினமாம் " ரொம்ப அழகுதான் .ஒரு ஆம்பளையும் மாறப்போற்தில்லை."

"சரி சரி வாசல்ல யாரோ வந்திருக்கா கதவ திற"

"ஆஹா நம்ம பொண்னு சுசீ வாம்மா சுசீ  சௌக்கியமா? மாப்பிள்ளை வரலையா?"

இல்லப்பா  நான் மட்டும் தான் வந்தேன் இன்னிக்கி மகளிர்தினத்துக்கு ஒரு ஸ்பீச்  கொடுக்கணும் அதனாலெ சுரேஷ் "நான் சமைக்கறேன்.நீ போய்ட்டு வா"ன்னு சொல்லிட்டார்

"அப்போ சுமிக்குட்டி கூட வரலையா உன்னோட வரேன்னு அது அழலையா?"

"இல்லையம்மா அதுக்கு கொஞ்சம் சுரம் அதனாலே வீட்டில விட்டுட்டு வந்துட்டேன் . மாப்பில்ளை நன்னா  பாத்துப்பார்.கவலப்படாதே."

"ஏண்டி இப்படி பொறுப்பில்லாம !  மாப்பிள்ளை சமையலும் செஞ்சு குழந்தையும் கவனிச்சுண்டு . உன் மனசுல நீ என்ன நினைச்சுண்டிருக்கே பெரிசா மகளிர் தினத்தைப் பத்தி பேச வந்துட்டே'

" அம்மா எங்க  காலமே தனி தான் .ஒருத்தர்க்கொருத்தர் விட்டுக்கொடுத்துப்போம் . உணர்ச்சியை மதிக்க கத்துப்போம் . என்னை ஒரு அடிமைப்போல் அவரும் நடத்த மாட்டார். நானும் சுரேஷுக்கு ரொம்ப ரெஸ்பெக்ட் கொடுப்பேன்.எங்களுக்கு இதெல்லாம் சகஜம் அம்மா. .ரெண்டு பேரும் வேலைக்குப்போறோமே. இது போல  வோர்க் க ஷேர் செஞ்சாதான் முடியும் .என்ன சொல்றே. சரி விஷ் செய்ய மறந்தே போயிட்டேன் 
அம்மா உலக மகளிர் தின நல் வாழ்த்துகள் . இன்னிக்காவது நிம்மதியா உன்னிஷ்டப்படி இரு . என்னப்பா .நான் சொல்றது சரிதானே "

" பாவம்டி அப்பா அவர் பாட்டுக்கு தேமேன்னு பேப்பர் படிச்சுண்டிருக்கார்.. அவர ஒண்ணும் சொல்லாதே உனக்கும் மகளிர் தின வாழ்த்துகள் .மேடைல நன்னா பேசிட்டு வா'

"  இரு சுசீ ஒரு நிமிஷம்   உங்கம்மா இங்க உட்க்கார்ந்து என்ன செய்யப்போறா அவளையும் உங்கூட அழைச்சுண்டு போ நான் என் வேலைய பாத்துக்கறேன் " 

"ஆ அப்பா  இதைத்தான்   இதத்தான்   நான் எதிர்ப்பார்த்தேன் ரொம்ப தேங்க்ஸ் அப்பா "