Sunday, September 26, 2010

சாம்பலை உடம்பில் பூசி .........

அந்தக்காலத்தில் இருந்த வீரத்தாய்மார்களை இப்போது காணமுடிவதில்லைபள்ளியில் மாணவனைக்கொஞ்சம் கோபித்துக்கொண்டால் போதும் ஆசிரியருடன் சண்டைக்கு வந்துவிடுகிறார்கள் பெற்றோர்கள் செல்லம் அதிகம் கொடுக்கிறார்களோ ? அல்லது அவர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் தங்கள் செல்வங்களுடன் சேர்ந்து இருக்க முடியாத சூழ்நிலையினால்குழந்தைகள் கேட்டது எல்லாம் வாங்கித் தருகின்றனரோ ? தில்லியில் லோகமான்ய திலக் ஜயந்தி ஆகஸ்டு ஒன்றாம் தேதி விமரிசையாக நடக்கும் எல்லா மராட்டியர்களும் அதில் பங்கு ஏற்பார்கள் . அத்துடன் சில மந்திரிகளும் வருவார்கள் நாங்களும் சில மாணவ மாணவிகளை அழைத்துக்கொண்டு காலை 8 மணிக்கு லோகமானயதிலக் அவர்களின் சிலைக்க்குப்போய்மாலை அணிவித்து வணக்கத்துடன் மரியாதை செலுத்துவோம் .குழந்தைகளுக்கு தேசபக்தி வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம் ஆனால் ஒருதடவை மிகவும் வெப்பத்துடன் புழுக்கமும் சேர்ந்துஒரு மாணவன் மயக்கமுற்று கீழே சாய்ந்தான் . அவனை ஓடிப்போய் தாங்கிபின் எலக்ட்ரால் கொடுத்து கொஞ்சம் பிஸ்கட்டுகளும் கொடுக்க அவன்பழைய நிலமைக்கு வந்தான் ஆனாலும் அவன் வீட்டில் இது தெரிய அவனது தாய் "நல்லதேசபக்தி கத்துக்கொடுப்பது ! அந்த திலக்ஜியைப்பற்றித்தெரிந்துகொண்டால் இந்தியா சரியாகிவிடுமா ! எல்லாம் நேரமும் வேஸ்ட் என் குழந்தை மயக்கம் போட்டுவிழுந்தானாம் "என்று கனனாபின்னா என்று பள்ளிக்கு வந்து திட்டினாள் அவள் குழந்தை என்று சொன்னது ஒன்பதாவது படிக்கும் மாணவன் தான் எத்தனை வயதானாலும் தாய்க்கு தன் குஞ்சு பொன்குஞ்சுதானே!. அந்தத்தாய் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர் என்று எனக்கு தெரியுமாதலால் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது தமிழ் நாட்டிலும் தேசப்பற்று மிகுந்துதேசத்திற்காகத் தியாகம் செய்த திருப்பூர் குமரன் .கப்பலோட்டிய தமிழன்திரு வ உ சிதமபரனார் ஆங்கிலேயரை விரட்டிய கட்டபொம்மன் ,,,,,இதுபோல் எத்தனைப்பேர் இருந்தார்கள் , ஆனாலும் சர்தார்ஜி பஞ்சாபிகள் போல் வீரம் தீரம் ஊட்டி வளர்க்கும் தாய் தமிழ்நாட்டில் அத்தனை இல்லையோ என தோன்றுகிறது தீபாவள்யின் போது சர்தார்ஜியின் இரண்டு வயது குழந்தையின்கையில் பட்டாசு இருக்கும் நம்மைப்போல் பார்ப்பவர்களுக்கு மனம் திக்திக் என்று இருக்கும் ஆனால் சர்தார்ஜி குடும்பம் கவலையே படாது. தெருவைத்தாண்டிப்போகும் போதும் தமிழ் அன்னை "கையைப்பிடிச்சுக்கோடா செல்லம் "என்றுஅந்தப்பையனின் கையைப்பிடித்து அழைத்துபோவதைப்பார்த்திருக்கிறேன்ஆனால் பஞ்சாபி குழந்தை கையைப்பிடித்தாலே உதறிவிடும் அத்துடன் அந்தக்குழந்தையின் பெற்றோர்களும் மிகவும் கோழையாக வளர்க்க விரும்பமாட்டார்கள் இதை நினைக்கும் போது எனக்கு ஒரு வீரத்தாயின்கதை ஞாபகம் வருகிறது அந்த வீரத்தாய் தன் மகனின் அஸ்தியை என்ன செய்தாள் தெரியுமா?

ஒருவன் இறந்து விட்டால் அவனுடைய சாம்பல் நல்ல நதியில் தூவப் படுகிறது .சிலர் காசிக்குச் சென்று கங்கையில் கறைப்பார்கள்,அன்னை இந்திரா காந்தி அவர்களின் அஸ்தி இமயமலையிலும் கூட ஹெலிக்காப்டரில் எடுத்துச் சென்று மேலிருந்து தூவினார்கள்,ஆனால் ஒருவனது சாம்பலை அந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு இளம் தாயும் தங்கள் வயிற்றில் அந்தச்சாம்பலைபூசிக்கொண்டார்கள், ஏன் என்றால் தங்களுக்கும் இது போல் ஒரு மகன் பிறக்க வேண்டும் என்பதால் தான் ஆம் அந்த வீர மகன் ,எல்லோராலும் போற்றப்பட்ட மகன் , நாட்டுக்காக தன் உயிரையே கொடுத்தத் தியாகி ,இள்ஞ்சிங்கம் ஸர்தார் பகத் சிங் தான் , 1931ல் மார்ச் 23ந்தேதிபகத் சிங்கைதூக்கிலிட்டு,பின் வெள்ளையர்கள் அவனை எரித்தச் சாம்பலை அவன் தாயிற்கு அனுப்பி வைத்தனர் ,அந்த வீரத்தாயைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் ,தூக்குத்தண்டனையிலிருந்து தப்ப பாவம் அந்தத் தந்தை மனம் சோர்ந்துப்போய் ஒரு கருணை மனு கொடுத்தால் மகனைக் காப்பாற்றலாம் என்று வக்கீல் சொல்லக் கேட்டு ஒரு மனு பத்திரம் வாங்கியும் வந்தார் ,தன் மனைவியைக் கூப்பிட்டார் , "பகத்சிங்கின் தாயே நமக்கு நம் மகன் வேண்டாமா?இந்தக் கருணை மனுவில் ஒரு கையெழுத்துப் போடு நான் போட்டுவிட்டேன் ,நீதான் பாக்கி" என்று அந்தப் பத்திரத்தைக் கொடுத்தார் ,அந்தத் தாய் அதை வாங்கிப்பொருமையாகப்படித்தார்., பின் சுக்குக் சுக்காகக் கிழித்துப்போட்டார் பத்திரத்தை ,,,,,,"மானமில்லையா எனக்கு ? வெள்ளையினிடம் போய் உயிர்ப்பிச்சை கேட்க வேண்டுமா? என் மகன் வெள்ளையனுக்கு எதிராக நின்று ஜயித்து வெள்ளையனை வீழ்த்தினான் என்ற பெருமையிலே அவன் சாவதை நான் விரும்புவேனேத்தவிர கருணை மனுவைப் பெற்று உயிர் வாழ்வதை நான் விரும்ப மாட்டேன் . அவன் கோழையில்லை வீரன், என் மகன் வீரன் . அவன் புகழோடு மடிவதைப் பார்த்தாலும் பார்ப்பேன் வெள்ளையன் தயவில் உயிருடன் அலைவதை ஒருக்காலும் விரும்ப மாட்டேன் " ஆஹா இப்படி ஒரு தாயா ? இரண்டு கரங்களையும் கூப்பி வணங்க தோன்றுகிறது அல்லவா?

முடியிலும் கண்ணன் நாமம்

திரௌபதியின் சபதம் நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் தனக்குக் கௌரவர்கள் செய்த கொடுமைகளை அவளால் தான் மறக்க முடியுமா?
துகிலை உருவும் துச்சாசனன். அதைப்பார்த்து ரசித்து எக்காளமிடும்
சில கௌரவர்கள் ........அங்கு விதுரர் பீஷ்மர் துரோணர் போன்ற மஹான்கள் இருந்தும் ஒன்றும் செய்யமுடியாத நிலை......... அழிவுக்காலம் வந்துவிட்டால் இப்படித்தான் எதாவது நடக்குமோ!

கடைசி வரைப்போரடிய திரௌபதி தன்னால் இனி முடியாது என்ற நிலை வந்ததும் 'கண்ணா காப்பாற்று"

என்று கதற பின் வருகிறான் கண்ணன். சேலை உருவ உருவ வளர்ந்து திரௌபதியின் மானமும் காப்பற்றப்பட்டது . அப்போது அவள் கண்ணனுக்கு நன்றி தெரிவித்தப்பின்
தன் சபதத்தையும் சபை நடுவே சொல்லுகிறாள்

.பாரதியின் பாஞ்சாலி சபதம் படிக்கப்படிக்க திகட்டாது ,
அதில் அவர் இதை வர்ணிக்கிறார் ,

""தேவி திரௌபதி சொல்வாள்--ஓம்

தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்

பாவி துச்சாசனன் செந்நீர் - அந்தப்

பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம் ,

மேவி இரண்டுங்கலந்து - குழல்

மீதினிற் பூசி நறுநெய் குளித்தே

சீவிக்குழல் முடிப்பேன் யான் -இது

செய்யுமுன்னே முடியே" என்றுரைத்தாள்

தன் முடியை பிரித்தபடி வைத்திருக்க பாரதப்போர் முடிந்து தன் சபதத்தை எப்போது நிறைவேற்றப்
போகிறோம் என்று காத்திருக்கிறாள் அவள் .தலைக்குளிக்காமல ஒரே சிக்குப்பிடித்திருந்தது

பாரதப்போர் முடிந்தது ஆவேசத்துடன் ஓடி வந்து தன் சபதத்தை நிரைவேற்றுகிறாள் திரௌபதி
துச்சாசனனனின் இரத்தம் அவள் கூந்தலில் தடவப்பட்டிருந்தது

இதைக்குறித்து ஒருகதை கேள்விப்பட்டேன்

கண்ணனுக்கும் திரௌபதி ஒருதடவை துணியைக்கொடுத்து காப்பாற்றினாளாம்
ஒரு முறை ஆற்றில் நண்பர்களுடன் நீச்சலடித்து விளயாடிக்கொண்டிருக்க வேடிக்கைக்காக
சில குறும்பு நண்பர்கள் கண்ணனின் உடையையும் கௌபீனத்துடன் பறித்து வைத்துக்கொண்டனர்,
எத்தனை நேரம்தான் நீரில் இருப்பது ? அந்தநேரம் அங்கு வந்த திரௌபதி தன் புடவைத்தலைபை
கிழித்து மானம் காத்து உதவினாளாம் இது காதில் விழுந்த செய்தி

சத்தியபாமாவும் ருக்மிணியும் அந்தத் திரௌபதியின் கண்ணன் பக்தியைக்காண அவளிடம் சென்றனர்
திரௌபதி தலையில் இருக்கும் சிக்கையும் இரத்தத்தையும் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தாள்.
அவளுக்கு உதவ இருவரும் அவளை நெருங்கி தாங்களும் அவள் முடியைச்சரிசெய்தனர்
அப்போது ஒரு அதிசயம் நடந்தது ஒவ்வொரு முடியிலிருந்தும் ஒரு ஒலி எழுந்தது அந்த ஒலி என்ன தெரியுமா? அதுதான் " கிருஷணா கிருஷ்ணா!"
பக்தி என்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும்

Saturday, September 25, 2010

மாமரமே உயர்தரமே

மாமரமே மாமரமே
நிழல் கொடுக்கும் மாமரமே
பூஜைகளில் முதலிடம்
உன் இலைகளுக்கே மாமரமே
கலசம் வைக்க உன் இலைகள்
தோரணம் கட்டவும் உன் இலைகள்
மாம்பூவின் வாசனை ஊரைக்கூட்டும்
அது வசந்தத்தின் ஆரம்பத்தைக்காட்டும்
கிளிகள் அமர ஏற்ற இடம்
அவை "கீ கீ"என்று மகிழும் இடம்
பொத்து பொத்தென்று குதிக்கும் அணில்கள்
மாழ்பழம் சுவைக்கும். அருமை காட்சிகள்,
கனத்த காற்றில் கீழே விழும் மாவடுகள்
அதைப்பொருக்கி எடுத்து கடிக்கும் சிறுவர்கள்
துவர்ப்பும் புளிப்பும் ரசிக்கும் அவர்கள்.
மாங்காய் விழ வீசும் க்ற்கள

அம்மா போடும் மாவடின் ருசி
தயிர் சாதத்துடன் வளரும் பசி
மாமரமே !நீ கொடுக்கும் மாங்காயோ!
ஆவக்காய் ரூபத்தில் காட்சியோ!
சிவப்பு வர்ணத்தில் வருகிறாய்
உறைப்பின் உச்சியைத்தொடுகிறாய்
இனிக்கும் மாம்பழங்கள் தருகிறாய்,
பல "விட்டமின்" னும் கொடுக்கிறாய்.
வண்டுகளின் ரீங்காரத்தின் இனிமை
உற்சாகம் தந்து போக்குவது தனிமை

உன் கீழே கட்டிய மேடை
பஞ்சாயத்துக்கு உபயோகும் மேடை.
நிழலுக்கு அமரும் மேடை
களைப்பைப்போக்கும் மேடை
மாமரமே மாமரமே எங்கள் வீட்டு மாமரமே
நீ பலவகையிலும் உயர்தரமே

Friday, September 24, 2010

பலமுக கணபதி

பெங்களூரில் ஒரு பிள்ளையார் கோயில் பார்த்தேன் அவர் வாகனம் மூஞ்சூர் இல்லை ஆனால் சிங்கமாக இருந்தது இவர் ஆசனத்தில் அமராமல் நின்ற
நிலையில் அருள் புரிகிறார், கீழே இருக்கும் சிங்கமோ அவர் கீழ் சுண்டெலி போல் காட்சி தருகிறது அனுமாருக்கு வடை மாலை சார்த்துவது போல் இவருக்குக் குழக்கட்டை மாலை சாத்துகிறார்கள் இதை கடுபு மாலை என்று சொல்கிறார்கள் தினமுமே இவருக்கு "கணேஷ் சதுர்த்தி" போல் கூட்டம் திரளாக வருகிறது. வெண்ணெயும் சிலர் சாத்துகின்றனர் மிகவும் சக்தி வாய்ந்தவர் இவர்.
இதேபோல் பஞ்சமுக கணபதி சென்னையில் சுவாமிநாத கோயில் கந்தாஸ்ரமத்திலும் காணலாம் இங்கு இருக்கும் ஹேரம்ப கண்பதியின் அடி சுமார்12 அடி, பத்து கைகள் அதில் முறையே பாசம், தந்தம, ருத்ராக்ஷம், பரசு, உலக்கை, மோதகம், அருகம்புல் போன்றவைகள் இருக்கின்றன. இது போல் திருவானைக்காலிலும், புதுக்கோட்டை புவனேஸ்வரி கோயிலிலும் காணலாம்.
யானை முகமே இல்லாமல் மனித முகம் போல் இருக்கும் கணபதியை திருசெங்கட்டான்குடியில் காணலாம்.
இரண்டு முகம் கொண்ட கணபதி மஹாராஷ்ட்ராவில் அருள் புரிகிறார்.
இவரது வர்ணம் பச்சையாம்.
இதேபோல் மூன்று முகம் கொண்ட கணபதி சிவப்பு நிறத்தில் இருக்க, பாசம், அங்குசம், அட்சமாலையுடன் அமர்ந்திருக்கிறார். அவரது இருக்கை பொற்றாமரை மலர்.
ஜப்பானில் இந்த மூன்று முகப் பிள்ளையாரைக் காணலாம்.
நாலு முக கணபதி சீனாவில் இருக்கிறாராம்.
திருக்கழுகுன்றில் ஆறுமுக கணபதி அருள் புரிகிறார்.
இவரை ஷண்முக கணபதி என்று அழைக்கிறார்கள்.
நாம் பிடிக்கும் மஞ்சள் பிள்ளையாரில் முகம் இல்லாமல் வெறும் ஒரு கோணம் தான் இருக்கிறது ஆனாலும் அதிலும் அவர் ஜம்மென்று அமர்ந்து அருள் புரிகிறார்.

:ஓம் கணேசாய நம: