உரையாடல் சமூக, கலை , இலக்கிய அமைப்பு ” நடத்தும்
சிறுகதைப்போட்டி ……..,,,,,,,,,,,,
பசுபதியே நீயே கதி ,,,,,,,,,
காலைப்பொழுது ,,,,பால் ,,என்ற சத்தம் கேட்டு விழித்தேன் ,என்னால் எழுந்திருக்க
முடியவில்லை , சம தலைவலி ,,மண்டைப்பிளக்கும் தலைவலி ,டம்டம் என்று இடித்தது
மழையில் நனைந்ததால் இருக்குமோ ,,,,அல்லது சைனஸ் தொந்தரவோ,,,,துப்பட்டாவை
எடுத்துத் தலையில் முண்டாசுப்போல் கட்டிக்கொண்டேன் ,துப்பட்டா பலருக்கு இப்போதெல்லாம் மூட வேண்டிய இடம் மூடாமல் கழுத்தில் சிவனது பாம்புப்போல் சுருண்டு கிடக்கிறது …..என் கணவரோ ஹிந்து பேப்பரில் மூழ்கி இருந்தார் காலையில் பேப்பர் அவர் கையில் கிடைத்துவிட்டாலோ பூலோகமா ஸ்வர்கமா ஒன்றும் தெரியாது அவருக்கு ,,,,
நல்ல வேளை,காலைக்காப்பி அவரே செய்து குடித்து விடுவதால் நான் தப்பித்தேன் ,
“கமலா கமலா ,,,அடுத்தாத்துப்பாட்டியின் குரல் ,,என் தலை முண்டாசுடன் அவள் முன்
தரிசனம் தந்தேன் ,
“ஐயோ என்ன இது ? தலைவலியா ,,,,மண்டை குத்துகிறதா?”
“ஆமாம் “ தலையை ஆட்டினேன் ,,,,,,
“இரு தலைக்குப்பத்து செஞ்சிண்டு வரேன்…….. அத நெத்திலே தடவிக்கோ சரியாப்போயிடும் ,
பாட்டி தன் வீட்டிற்குப்போய் சுக்கை நன்றாக இழைத்து அத்துடன் மஞ்சள் பொடி மிளகுப்பொடியைக்கலந்து நீருடன் கலக்கி இலுப்பக்கரண்டியில் சுட வைத்தாள்,
அது கொஞ்சம் இளகியதும் என் தலையில் தடவி விட்டார்,தலை விறுவிறுவென்று
இழுத்தது கொஞ்சம் எரிந்தது ஆனால் இதமாக இருந்தது ,மறுநாள் ,,,,,எனக்குத்தலைவலி
குறைந்தது ,, ஆனால் திரும்பவும் அன்றிரவு தலைவலி ஆரம்பித்தது ,
என் தோழி சரோஜா யதேச்சையாக வந்தாள்,
“என்ன கமலா முகமெல்லாம் ரொம்ப வாடி இருக்கு ஏன் இப்படி டல்லாக இருக்கே?”
இல்லடிசரோஜ் தலைவலி பத்துப்போட்டும் போகலைனு கவலை ,,,,,,”
“என்க்குத்தெரிந்த அலோபதி டாக்டர் சூப்பராகப் பார்ப்பார் நல்ல கைராசி .. அட்ரஸ் தரேன்
அங்கு போய் காமி…” ஏதாவது டியூமர் போல் இருக்கபோகிறது ,ரொம்ப ஈசியா எடுத்துக்காதே”
தலை உடலுக்கு மிக முக்கியமானது ஆயிற்றே. “எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் “
என்ற பழமொழியும் உண்டே ! சரோஜா சொன்னது போல் தலையில் எதாவது கட்டி இருந்தால் ,,,,,,மனதில் பயம் வர அவள் சொன்ன டாக்கடரைப்பார்த்து அலோபதிக்கு ஓடினேன் ….அவர் எல்லாம் சரிவரப்பார்த்து ஒரு பேபரில் ஒரு கிறுக்கல் வரைந்தார்
அவைகள் ம்ருந்தின் பெயர்கள் அந்தத்தாளைப்பல பக்கங்கள் திருப்பிப்பார்த்தும் அவர் எழுதியதைப் படிக்கமுடியவில்லை ,அதை மருந்துக்கடையில் கொடுக்க கடைக்காரர்
பல மருந்துகள் கொடுத்தார் ,பிராக்சிவான் என்ற மாத்திரையும் இருந்தது , கடையில் வேறு ஒருவர் நின்றுக்கொண்டிருந்தார் , இந்தப் “பிராக்சிவான்” என்ற மாத்திரையைப்பார்த்து
“அம்மா இந்த மாத்திரையைப் பார்த்துப்போட்டுக்கொள்ளுங்கள் இது ரொம்ப ஸ்ட்ராங்,,,,,,,கிட்னியைப்பாதிக்கும் “……
அவர் சொன்னது மனதிலே குடைய வீட்டிற்குப்போய் ஒரு மாத்திரைப்போட்டுக்கொண்டு
பின் பயத்தில் நிறுத்திவிட்டேன். இரண்டு நாள் பிறகு திரும்பவும் அதே டாக்டரிடம் போனேன் .
“டாக்டர் இன்னும் தலைவலி வருவதும் போவதுமாக இருக்கிறது என்னசெய்வது ?’
அவ்வளவுதான் …ஏண்டாப்பா கேட்டோம் என்று ஆனது ……..அங்கு மாட்டிக்கொண்டேன் ,,ஸ்கேன் ,சுகர் டெஸ்ட் ,என்று பலவித டெஸ்டுகள் பல ஆயிரம் அந்த
ஆஸ்பதிரிக்கு அழுதேன் , ரிசல்ட் எல்லாம்
நார்மல் என்று தான் வந்தது . அலோபதி மருந்து சாப்பிட தலைவலி போகத் திருகுவலி வந்ததே! இல்லை…..
இல்லை ,,, தலைவலிப்போகாமலே திருகுவலி…….மாத்திரைகள் சாப்பிட்டதில் வயிறு எரிச்சலுடன்
நெஞ்சும் எரிந்தது . ”ஐயோ ராமா இது என்ன? வயிறு வலி யும் சேர்ந்துக்கொண்டதே ! “அவர் கைராசி டாக்டர் தான். எனக்குத்தான் ராசி இல்லை போலிருக்கிறது ” என்று நினைத்து வீடு வந்தேன்
மகாகனம் பொருந்திய உமாபதி . அதுதான் என் கணவரின் பெயர் . “என்ன ஆச்சு ?’ என்று கேட்பது போல் முகபாவம் செய்தார் ,
“ஒன்றுமில்லை எல்லாம் நார்மல் தான் ” என்றேன்
என்னைப்பார்த்துக்கிண்டலாக ஒரு சிரிப்ப சிரித்தார் ” உன் உடம்பில் ஒரு கோளாறும் இல்லை, எல்லாம் மனசுதான்
காரணம் ஓடிஓடி ஏதாவது வேலைச்செய் சரியாகிவிடும் “என்றார் . சில
நாட்கள் கழிந்தன ,என் அண்ணனைப்போல் ஒரு நண்பன் வந்தான் ,வந்தால்
சும்மாஇருக்காமல் “என்ன கமலா இப்படி இளைச்சுப் போயிட்டே! என்ன உடம்பு “?என்று கேட்டான் .
ஆரம்பித்தேன் திரும்ப என் இராமாயணம்.
“ஹோமியோபதி “டாக்டர் சிவராமன் ரொம்ப சூப்பரரொம்ப கரெக்ட்டாக மருந்து தருவார் , என் கூட வா அழைத்துப்போகிறேன் “
சரியென்று ஹோமியோபதி டாக்டரைப்பார்க்கக் கிளம்பினேன் ,அங்கு அந்த டாக்டர் ஒரு
கனமானப் புத்தகம் ஒன்றைத்திறந்து ஒவ்வொரு பக்கமாகப் பிரித்துப்பிரித்துப் பார்த்தார் ,
பின் சர்க்கைரைக் கோலிகளில் சில சொட்டு மருந்துகளை விட்டுக் குலுக்கிக் கொடுத்தார்
அங்கு ஒரு ஆயிரம் சிலவாயிற்று.. பணம் போனால் போகட்டும் உடம்பு சரியானால் சரி
என்று என்னைத் தேற்றிக்கொண்டேன் ,டாக்டரிடம் சென்று வந்தப்பின்னர் மருந்துக்கலந்த அந்தச்சர்க்கரை
கோலிகளை ஸ்வாமி படத்தின் முன் வைத்தேன் ,ஒரு தடவை எடுத்துக்கொண்டேன் ,அடுத்தவீட்டுப்பாட்டியின் குட்டிப்பேரன் இதைப்பார்த்தான் , நான் குளிக்கச்சென்றேன்
திரும்பி வந்துப்பர்த்தேன் அந்தச்சின்னப்புட்டியில் ஒரு நாலு கோலிகள் தான் பாக்கி , மருந்துக்கும் எனக்கும் ராசி இல்லைப்போலிருக்கிறது என நினைக்கும் போது அந்தப்பேராண்டி வந்தான் “மாமி நான் அந்தச்சர்க்கரை கோலிகளைத் தின்னுட்டேன் , வந்து மாமி,,,,,,மாமி
ஸ்வாமி பிரசாதம்னு நினைத்தேன் “ …….எனக்குச்சிரிப்புத்தான் வந்தது ..
இப்படியாக ஹோமியோபதியும் பாதியில் நின்றது ,
ஒரு வாரம் சென்றது . மனம் மறுபடியும் குரங்குப்போல்
தாவியது திரும்ப என்ன வைத்தியம் செய்தால் சரியாகும்
என்று குழம்பினேன் ,ஒரு பத்திரிக்கையைத் திருப்பினேன் .கண்ணில் கொட்டையாகத் தெரிந்தது ஒரு விளம்பரம் ,, “இயற்கை வைத்தியம் ” ஆம் இன்னொரு
பதி ,,,அதுதான் ஆங்கிலத்தில் “நேசரோபதி “எல்லாவிதவியாதிகளையும் மூலிகையினாலும் இயற்கை
வைத்தியத்தினாலும் சரியாக்கி விடுகிறோம் குண்டுக்கு
ஒரு சவால் , பீப்பாயாக இருக்கும் இடையாளை
பிடி இடையாளாக ஆக்கிவிடுவோம் ” என்று ஒரு ராமாயணமே எழுதி இருந்தது , என் கண்முன்னே நான்
பிடி இடையாளாக வந்து அழகுப்போட்டியில் கலந்து பரிசு வாங்கும் அருமையானக்காட்சி ,,,,,,,இந்த மாதிரி ,கற்பனைக்காட்சி வந்து
அடிக்கடி என்னை அங்கும் இங்கும் ஓட வைக்கும்
கற்பனையும் நிஜமாகலாமே என்று நினைத்துப் போனை
அடித்தேன் . மேலும் விசாரித்தேன் ,
அங்கு ஒரு பத்துநாட்கள் தங்க வேண்டுமாம், இயற்கைச்சூழலில் வைத்தியமாம்.மூலிகையினால்
வைத்தியமாம், ஒரு பக்க விளைவும் இல்லை ஆனால்
பத்தாயிரம் கட்ட வேண்டுமாம் ,,
ஆஹா அருமைதான் வீட்டைவிட்டு ஹாய்யாக ஒரு பத்து நாள் ,,சமையல் அறைக்கு விடுதலை
“விடுதலை விடுதலை விடுதலை,
சமையலுக்கும் அரைச்சலுக்கும், சப்பாத்திக்கும் விடுதலை”
என்று என் மனம் பாரதியார் என்ற நினனப்பில் பாடியது.
வீட்டைவிட்டு ஒரு பத்துநாள் போனால்தான் கணவருக்கு என் அருமைத் தெரியும் ஆனால் பூனைக்கு மணி எப்படி கட்டுவது ? அதான் ,,அந்தப்பத்தாயிரத்தை எப்படி அவரிடமிருந்துக்கறப்பது? சரி நல்ல மூடில் இருக்கும் போது கிட்டப்போகலாம் என்று நினைத்தேன் ,
கிரிக்கெட் மாட்ச்சில் நம்மவர்கள் சம விளையாட்டு விளையாடி வெற்றி பெரும் நிலை ,, அவருக்கு ஒரே குஷி
இதுதான் சரியான சமயம் என்று விளம்பரத்தைக்
காட்டினேன் , “ஏன்னா இந்த விளம்பரத்தைப்பாத்தேளா?’
“நான் இங்கே போய்ச்சேர்ந்து வைத்தியம் செய்துக்கொள்ளட்டுமா?
” சரி சரி போ போ அதை ஒண்ணு பாக்கி வைப்பானேன் ,’
வழக்கம் போல் பஞ்சாங்கம் பார்ப்பாயே அஷ்டமி நவமி
சந்தராஷ்டமம் என்று ,,,,,” அடுக்கிக்கொண்டே போனார்
கிண்டல்தான் ! என்ன செய்வது ? நான் வளர்ந்த விதம் அப்படி ,,,,ஓடிபோய் பாம்புப்பஞ்சாங்கம் பார்த்து ஒரு நல்ல நாளைதேர்ந்த்டுத்தேன் ஆனால் கடைசியில் சின்ன எழுத்தில் கரி நாள் என்று எழுதியது என் கண்ணிற்குத்
தென்படலையே ,,,,,,,
ஆயிற்று ஒரு வாரத்திற்கு வேண்டிய உடைகளுடன் இயற்கை வைத்தியம் “ அரும்பாக்கத்திற்கு வந்தாயிற்று ,
உள்ளே ஒருவர் என்னை நன்றாகப்பரிசோதித்து
தினமும் செய்யவேண்டிய் அட்டவணையைக்கொடுத்தார்
ஐயோ இதெல்லாம் எப்படி செய்யப்போகிறேன்
காலை 5 மணிக்குள் எழுந்திருந்து ,,,,வேப்பங்குச்சி
அல்லது ஆலங்குச்சியால் பல் தேய்க்க வேண்டும் .தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்இதையாவது செய்துவிடலாம் ஆனால் காப்பி இல்லாமல் வெறும் வயிற்றுடன் ஒரு 10 சுற்று ஓடவேண்டுமே ,,, சீரியல்கள் எல்லாம் பார்க்க முடியாது அதுவே பெரிய தண்டனை ஆயிற்றே!,,
தவிர பிராணாயாமம தேகப்பயிற்சி மாலையில் பஜன் என அட்டவணையைக் கண்டேன் இரவில் டிபன் தான் ,அதுவும் உடலைப்பொருத்தமாதிரிதான் ,,,,,,
மறுநாள் காலை திருப்பள்ளி எழுச்சிப்போல் மணி அடித்து
சுப்ரபாதம் வைக்கப்பட்டது ,காலை சூரியன் இன்னும் உதிக்கவில்லை பிரண்டுப்படுத்தேன் கண்முழித்தால்தானே,,, பலர் எழுந்துவிட்டது நடமாட்டத்தினால் தெரியவந்தது , “சீ வெட்கக்கேடு
இன்னும் படுத்தால் நன்றாக இருக்காது என்று நினைத்து
சுருட்டிக்கொண்டு எழுந்தேன் பல் தேய்த்தேன்
மனம் சுடச்சுட காப்பி காப்பி என் ஜபம் செய்தது ,எத்தனை வருடப் பழக்கங்கள் ?,விட்டுபோகுமா?
ஏதாவது சூடாகக்கிடைக்காதா என்று ஏங்கினேன் ,,வந்தது ஒரு காப்பி ,,சுக்குமல்லிக்காப்பியாம் ,,,அதைச்சாப்பிட என் மூஞ்சி போன போக்கைப்பார்க்கணுமே ,,என்ன செய்வது ?
உரலில் தலையைக்கொடுத்தாச்சு …என் கண் முன் பத்தாயிரம் ரூபாயும் அடிக்கடி வந்து நின்றது , கூடவே கண்வர் உமாபதியின் முகமும் ,,,,,,
பெரிய மைதானத்தில் ரொம்பக்கஷ்டப்பட்டு ஒரு சுற்று முடித்தேன் ,ஆமை முயல் பந்தயம் ஞாபகம் வந்தது ,
மூச்சு இறைக்க நின்று நின்று நடந்தேன் ,
ஆ சொல்ல மறந்தேனே இதற்கென்று ஒரு சல்வார்
கமீஸ் வேறு தைத்துக்கொண்டேன் …அப்பாடி போதும் போதுமென்று ஆகிவிட்டது , அத்துடன் கசப்பு மருந்துகள்
வேறு ,,அதுதான் கஷாயமாமே,,,,,,,பின் சாப்பாடு இருக்கும்
என்று நினைத்தேனே ,,,,வந்தது பூஷிணிக்காய் ஜூஸ் ,,
அதே போல் ஒருநாள் அருகம்புல் ஜூஸ் பின் இளநீர் என்று வந்ததே தவிர சாப்பாட்டைக் கண்ணிலே காட்டவே இல்லை , அட இரண்டு இட்லி சட்னியாவது தரக்கூடாதா ,,,,,,இத்தனைப் பட்னிப்போட்டுத்தான் “பிடி இடையாளாக ஆக்குகிறார்களோ ,,,,
மாலை வந்தது ,, தேகப்பயிற்ச்சி முடிந்து திரும்ப பூஷிணிக்காய் ஜூஸ் ,,,,
இப்படியே இரண்டு நாட்கள் தள்ளிவிட்டேன் என் கண்முன் மிளகாய் பஜ்ஜியும் வெங்காயப் பக்கோடாவும் வந்து நாக்கை ஊற வைத்தன. பின் என்னைப் படுக்க வைத்து நெற்றி மேல் சொட்டு சொட்டாக எணணெய் விட்டார்கள். ஒரு செம்பு துளையுடன் இருக்க அது வழியாக மருந்தெண்ணை
சொட்டுகிறது அசையாமல் படுக்க வேண்டும் ,, இது தான்
எண்ணைய் தாரா வாம் இதில் ஊற சளிப்பிடித்தாற்போல்
பிரமை
முதுகெல்லாம் வலிப்பது போன்ற பிரமை ,ஆடத்
தெரியாதவளுக்கு முற்றம் கோணல் “என்பது போல் எனக்கு ஒன்றுமே ஒத்துவரவில்லை.. மனம் ஒத்துழைத்தால்தானே….
நல்ல வைத்தியம் தான் , இதற்கு திடமன்ம் வேண்டுமே!
மேலும் இதை வளர்த்துவானேன் நாலாவ்து நாள் ….பொறுமை இழந்தேன் . என் வீடே சுவர்க்கமாகத் தெரிந்தது ,
10000த்தில் மூவாயிரம் தான் சிலவானது இன்னும் பாக்கி இருக்கிறது
என் கணவர் உமாபதிக்குப்போன் போட்டேன்
” நான் திரும்பி வந்துவிடுகிறேன் , இங்கு சுக்கு மல்லிக்காப்பி தான் கிடைக்கிறது வீட்டுக்காப்பியைப் பார்த்து பல நாட்கள் ஆனால் போல் இருக்கிறது”
அங்கிருந்து கடுமையானக் குரல் பதிலாக வந்தது .
“வேறு வேலைஎன்ன்?எல்லா இடத்திலும் காலைவைக்க வேண்டியது .அப்பறம் பாதியில் ஓடி வர வேண்டியது ,,
உங்கப்பன் சமபளம் பாரு”! திரும்பம நக்கல் ……
“இல்லேன்னா என்னாலே ஓட முடியல , தவிர தினமும்
பூஷணிக்காய் ஜூஸ் வேறு , உள்ளே இறங்க மாட்டேங்கறது “
“ஆமாம் பெரிய ராணி ,,உனக்கு வாதாங்கீர் கொடுக்க ,, இயற்கை வைத்தியம்னா பஜ்ஜி பகோடாவா கொடுப்பா .
சரி சரி வீட்டிற்கு வா ,இதுதான் கடைசித்தடவை ,,இனிமே அங்கப்போறேன் இங்கப்போறேன்னு சொல்லு ,,,,என்ன செய்யறேன்னு பாரு” பட்டென்று டெலிபோனை வைத்து விட்டார் ,
அப்பாடி …..ஒரு எரிமலை வெடித்து அடங்கியது
உடனே வீடு கிளம்பினேன். எல்லோரும் ஒரு மாதிரியாகப்
பார்த்தனர்
“கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை” என்று என் உள்
மனமும் சொல்லியது .வாயையும் மனத்தையும் கட்டாமல் உடம்பில் தொல்லை என்றுச்சொல்லுவதில்
என்ன பயன் ?பொறுமை வீசை என்ன விலை என்று கேட்கும் எனக்கு என்ன வைத்தியம் ஒத்துப்போகும் ?
அசடு வழிய வீடு வந்தேன் ,,போன மச்சான் திரும்பி வந்தான் “என்பது போல் திரும்பி வந்தேன் க்ட்டியப்பணம்
கோவிந்தா ஆனது , என் கணவர் முகத்தைப்பார்க்கவே
எப்படியோ இருந்தது நல்ல காலம் ,,மாலையில் காலாற
நடக்கப்போயிருந்தார் , சாவியைப்போட்டுத்திறந்தேன்
கிச்சன் என்னை வா வா என்று அழைக்க சூடாகக்
காப்பிப்போட்டுக்குடித்தேன் , சுவாமிக்கு விளக்கு ஏற்றினேன் , “அப்பா ,,பசுபதியே நீயே கதி “
அலோபதி பார்த்தாச்சு ஹோமியோபதி பாத்தாச்சு நேசுரோபதி பாத்தாச்சு இனி என் கணவர் உமாபதியுடன் இந்தப்பசுபதியே கதி ,,,,இனி நீதான் என்னைக் காக்கவேண்டும் பசுபதியே என்று சிவனை வணங்கினேன் ,
திரும்ப ஒரு போன் வந்தது என் மைத்துனர் சபாபதி பேசினார் ,
“மன்னி உங்கள் தலைவலிக்கு அக்குபஞ்சர் அக்குபிரஷர்
வைத்தியம் இருக்கு ஒரு டாக்டர் ரொம்ப நன்னா பாக்கறார் ,,, வரேளா “
“என் தலைவலி போய்விட்டது இனிபசுபதிதான் வைத்தியர் “
போனை வைத்தேன் அப்பாடி இப்போதுதான் மனம் நிம்மதி அடைந்தது , எல்லா வியாதிகளுக்கும் மனமே
காரணம் இல்லையா ?
Wednesday, July 22, 2009
"பசுபதியே நீயே கதி "
Posted by
Meerambikai
at
10:18 AM
1 comments
பண்டரிபுரம்
ஆடி மாதம் { ஜுலை 17-ஆகஸ்டு 17 வரை} வரும் ஏகாதசி மஹராஷ்டரத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள் ,காவடிப் போல் தோளில் இருபக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்து
விட்டு வருவார்கள் ,பண்டரிபுரம் வரை பொடி நடைதான் ,நடு நடுவே சில பிரபுக்கள் அவர்களுக்கு
வயிற்றுக்கு உணவும் பெரிய பந்தல் போட்டு படைப்பார்கள் சிறுவர்களும் இதில் கூட்டம்
கூட்டமாகப் போவார்கள் அவர்கள் வாயில் " பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா "
என்றும் விட்டல் விட்டல் ஜய ஜய விட்டல் என்றும் விடாமல் நாமஜபம் வந்துக் கொண்டிருக்கும் அந்த நாமம் கேட்டாலே உடலெல்லாம் புல்லரிக்கும்
இப்போது அந்த விட்டல் எப்படி வந்தார் என்ற கதையைப் பார்ப்போம்
லோக தண்டம் என்ற காட்டில் ஜன்னு முனிவர் வாழ்ந்து வந்தார் அவர் மனைவியின் பெயர்
சாத்தகி ,அவ்ருக்கு பலவருடங்கள் கழித்து ஒரு மகன் பிறந்தான் அவன் பிறந்தும் ஏன் பிறந்தான் என்று அவர்களுக்கு ஆகிவிட்டது அவன் பெயர் புண்டரீகன் .எதைப் பார்த்தாலும் அழிப்பான் துன்புறுத்துவான் நாய் மேல் கல் வீசுவான் ,முயலின் காதைத் திருகுவான் .இப்படி முரடாகவே வளர்ந்து பெற்றோர் பேச்சைக் கேட்காமல் பதிலுக்கு
எதிர்த்துப் பேசவும் துணிந்தான் ,அவனுக்கு திருமணம் செய்தால் வழிக்கு வருவான் என்று
எண்ணி புண்டரீகனுக்கு அவன் தந்தை ஒரு நல்லப் பெண்ணாகப் பார்த்து திருமணம்
செய்து வைத்தார்.ஆனாலும் அவன் செயலில் மாறுதல் இல்லை ,வீட்டில் மனைவி இருக்கும் போதே வெளியிலேயே இன்பம் தேடினான் ,அவன் தந்தை மனம் ஒடிந்து
வருந்தி அவனுக்குப் புத்தி கூறினார் ,அதற்கு அவன் "அப்பா நான் என் இஷ்டப்படி தான்
இருப்பேன் ,இந்த வீட்டில் எனக்கு சுதந்திரமில்லை ஆகையால் நான் இந்த வீட்டை விட்டுப்
போகிறேன் ,," என்று கத்தி தன் மனைவியுடன் வீட்டைவிட்டு வெளியேறினான் ,அவன்
பெற்றோர் மனமுடைந்துப் போனார்கள் பலநாடகள் பிறகு அவர்கள் ஒரு குழுவுடன்
காசி யாத்திரைக்குக் கிளம்பினார்கள் ஒரே மகன் தனக்கு இருந்தும் இப்படி விதி ஆகி விட்டதே என்று வருந்தி எல்லாம் கடவுளுக்கே அர்ப்பணம் செய்து விட்டார்கள்.
இதே நேரத்தில் தன் தந்தை தாய் காசிக்குக் கிளம்பியதை அறிந்து புண்டரீகனும் ஒரு குதிரையின் மேல் தன் மனைவியுடன் கிளம்பினான் ,வழியில் மனைவி தன் மாமனார் மாமியார் தள்ளாமல்
காலில் செறுப்புமில்லாமல் நடந்து வருவதைக் கவனித்து தன்
கணவரிடம் அவர்களுக்கு உதவும்படிக் கூறினாள் .ஆனால் அவன் "வாயை மூடிக்கொண்டு வா அவர்கள் கிழங்கள் வந்தால் நம்க்குத்தான் கஷ்டம் " என்றான் இரக்கமில்லாமல் ,,
அங்கு ஒரு சத்திரம் தென்பட்டது அங்குப் போய் சிறிது நேரம் களைப்பாறிவிட்டுச செல்லலாம் என்று அங்கு மனைவியுடன் போனான் .அதனருகில் ஒரு முனிவரின் ஆஸ்ரமம் இருந்தது ,
அங்கு குக்கூடக முனிவர் என்று ஒருவர் இருந்தார்,
பொழுது போகாமல் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தான் ஒரு முனிவர்
தென்பட்டார் ,உடனே அவரிடம் போய் " காசி ஷேத்திரம்.எங்கு உள்ளது ?
என்று கேட்டான் "காசியா ?எனக்குத் தெரியாதே ",,,,,,,,
"இது கூடத் தெரியாமல் நீங்கள் என்ன முனிவர்?
"காசி என்ற இடத்திற்கு நல்ல பண்புள்ளவர்கள் தான் போக வேண்டும் ..
நீ போகவேண்டும் என்கிறாயே ,,,"
இதைக் கேட்டு கோபம் கொண்டு திரும்பவும் தன் இடத்திற்கு வந்து விட்டான்
இரவு நேரம் ,,,,தூக்கம் வராமல் வெளியில் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மூன்று பெண்கள் நுழைந்தனர் ,மூன்று பேரும் மிகவும் கருப்பாகவும் அழுக்குடன் கோரமாகவும் இருந்தனர் ,,அந்த ஆஸ்ரமத்தில்
நுழைந்தௌ அவர்கள் பல வேலைகள் செய்தனர் ஒருவள் வீடு கூட்டினாள்
மற்றொருவள் வீடு துப்புறத் துடைத்து அழகான் கோலம் இட்டாள்.பின்
அந்த முனிவரின் பாதத்தை நீரால் கழுவி துடைத்து வணங்கினாள்,பின் அவர்கள் வெளியே வந்தனர் , என்ன ஆச்சரியம் மூன்று பேர்களும் மிகவும் அழகாக லட்சணமாக சுந்தரிகளாக வந்தனர் , "இது என்ன மாயை! போகும்
போது சகிக்க முடியாமல் இருந்தார்கள் .இப்போது எப்படி இது?
வியந்து புண்டரீகன் அவர்களிடம் ஓடினான் "சுந்தரிகளே ,நீங்கள் யார்?
சொல்லுங்கள் " என்றுக் கேட்டபடி ஒருவளது கையைப் பற்றினான் ,
அவள் மிகவும் கோபம் கொண்டு கையை உதறி பின் சொன்னாள்.
"நாங்கள் கங்கை யமனை ,ஸரஸ்வதி நதிகள், தினமும் பலர் குளிப்பதால் பாபம்
சேர்ந்து அந்தப் பாபத்தைக் கழுவ இங்கு வந்து சேவைச் செய்கிறோம் இந்தக்
குக்கூட முனிவருக்குச் சேவைச் செய்து எங்கள் பாபத்தைப் போக்கிக்
கொள்கிறோம் பாபம் எங்களிடம் சேர அவலட்சண்மாக மாறுவோம் இங்கு தினமும் வந்து அதைப் போக்கிக் கொள்கிறோம் போன ஜன்மப்
புண்ணியத்தினால் தான் நீ எங்களைப் பார்த்திருக்கிறாய் ,இனியாவதும்
திருந்தி பெற்ரோருக்கு சேவைச் செய்,,நீ இத்தனை நாடகள் செய்தப்
பாபத்தைப் போக்கிக் கொள் உன் துர்குண்த்தை மாற்றிக் கொள் ,தாய் தந்தைதான் உனக்குத் தெய்வம் அவர்களை வணங்கு"
புண்டரீகன் எதோ மந்திரச் சக்திக்குக் கட்டுப்பட்டது போல் மனம் மாறினான்
தான் செய்தத் தவறுகளுக்கு வருந்தினான் ,பின் கங்கா தேவியிடம் கேட்டான்
"இந்த முனிவர் யார்? இவரைத் தொழுதால் எப்படி பாவங்கள் விலகுகின்றன ?
" அப்பா புண்டரீகா ,இவர் கோவில் போனதில்லை ,யாகம் செய்ததில்லை
தான தருமம் செய்ததில்லை ,ஆனால் விடாமல் பெற்றோருக்குப்
பணிவிடைச் செய்து வருகிறார் அவர்களே அவரின் தெயவம் ,பாபம்
செய்தவர்கள் இவர் பாதத்தைத் தொட்டாலே போதும் .பாபங்கள் கரைந்துப்
போகும் "
" தாயே நான் பெற்றோருக்கு பல அநீதிகளை இழைத்து விட்டேன் , இப்போது
திருந்தி விட்டேன் இதோ இப்போதே போகிறேன் அவ்ருக்கு மனம் உவந்து
சேவைச் செய்வேன் ,"
திரும்பி வந்து படுத்தப்பின் காலையில் குக்கூட முனிவரைத் தரிசித்து அவர் பாதங்களைக் கழுவி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு பல சேவைகள் செய்தான்
ஆசியும் பெற்றான் பின் பெற்றோரைத் தேடி கண்ணிரால் பாதங்களைக்
கழுவினான் அதன் பின் அவன் உலகமே அவன் தாய் தந்தை தான்
வேறு ஒரு சிந்தனையும் இல்லை , இதெல்ல்லாம் பார்த்த கிருஷ்ணர் அவன்
சேவைக்கு மெச்சி அவனைப் பார்க்க பூலோகத்திற்கு வந்தார் , அவன் வீட்டு
வாசலில் வந்து கதவைத் தட்டினார் ,"புண்டரீகா புண்டரீகா ,,,,,
" யார் ,,,,யாராயிருந்தாலும் அங்கேயே நில்லுங்கள் ,நான் பெற்றோரின்
சேவையில் ஈடு பட்டுள்ளேன் " என்று ஒரு செங்கலைக் கதவைத்திறந்து வீசிப்
போட்டான் ,அந்த மாயக் கண்ணன் பக்தனுக்காக அந்தச் செங்கல் மேல் நின்று
இரண்டு கைகளும் இடுப்பில் வைத்துக் கொண்டார் ,, அப்படியே நின்றிருந்தார் ,
வெகு நேரம் கழித்து புண்டரீகன் கதவைத் திறந்தான் பார்த்தான்
கண்ணனை ,,தன்னை மறந்தான் ,அப்படியே சாஷ்டாங்கமாக வணங்கினான்.
"இந்தப் பாபச் செயலுக்கு மன்னியுங்கள் தங்களுக்குப் போய் செங்களைப்
போட்டு அதில் நிற்கவும் சொன்னேனே "
புண்டரீகா உன் சேவைக்கு மெச்சினேன் ,எதாவது வரன் கேள் "
"உங்கள் அருள் இருந்தாலே போதுமானது ஸ்வாமி'
புண்டரீகா உன் சேவையினால் புகழ் பெற்ற இந்த இடம் இனி பண்டரிபுரம் என்று நிலைக்கட்டும் நீ இங்கிருந்து எல்லோருக்கும் ஆசி வழங்கி வருவாய்
உன்னை எல்லோரும் "விட்டல் "என்றும் அழைத்து என்னையே உன்னிடம்
காண்பார்கள் "என்றார்
ஆடிமாதம் இந்த விட்டல் வந்ததால் ஏகாதசி அன்று மிகச் சிறப்பாக விரதம்
இருந்து மராட்டியர்கள் கொண்டாடுகிறார்கள்
Posted by
Meerambikai
at
10:16 AM
0
comments
Monday, June 29, 2009
அன்பே தெய்வம்
June 24, 2009
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு ” நடத்தும் சிறுகதை போட்டி ,,,,……………………
….அன்பே தெய்வம் …
…………….
“ட்ரிங் டிரிங் ” … டெலிபோன் மணி ஒலித்தது ,”இந்தப்போன்
பால் காச்சும் போதுதான் வரும், இரு இரு வரேன்” என்று ஒரு குழந்தைப்போல் சொல்லிக்கொண்டு ராஜம் போனை எடுத்தாள். “ஹலோ ஹலோ யார் பேசறது “?
“நான் தான் சுப்பிரமண்யன்”
“”நமஸ்காரம் இருங்கோ. இதோ எங்காத்து மாமாவைக் கூப்படறேன்”………டெலிபோனைப்பொத்தியபடி, “ஏன்னா இந்தாங்கோ நம்ம சம்பந்தி…. கூப்பிடறார் உடனே வாங்கோ”என்று தன் கணவர் சிவராமனைக் கூப்பிட்டாள் . பாதி ஷவரம் செய்த முகத்துடன் அவரும் வந்தார் “ஹலோ நமஸ்காரம் சௌக்கியமா? எப்போ முகூர்த்தத்தை வச்சுக்கலாம் ?
“அதுதான் சொல்ல வந்தேன். இந்தச்சம்பந்ததம் நடக்காது மன்னிக்கணும் , நீங்கள் நிச்சியதார்த்தம் அன்று போட்ட பொருட்கள் எல்லாம் திருப்பித் தந்துவிடுகிறோம், வந்து எடுத்துங்கோ.
“ஏன் என்ன ஆச்சு ? எல்லாம் நன்னாத்தானே நடந்தது இப்ப என்ன திடீர்னு …”
மேலே ஒண்ணும் சொல்லறதுக்கில்லை வச்சுடறேன்”
ராஜம் கேட்டாள் “என்ன ஆச்சு ?ஏன் இப்படி இடிஞ்சுப்போய் நிக்கறேள் ?
“நம்ம சம்பந்தம் வேண்டாம்னு சொல்றா …. நம்ம பையனுக்கு என்ன குறைச்சல் …ராஜா மாதிரி இருக்கான் சி ஏ வேறு …….கை நிறைய சம்பளம் ….அவாளுக்கு என்ன….. கசக்கறதா?சரி, விடு இந்தப்பெண் இல்லேன்னா எத்தனையோ பெண்கள்……..”ராஜத்திற்கு மனம் உளைச்சல் கண்டது . ஓடிப்போய் தன் தங்கையிடம் போனில் தெரிவித்தாள் பின் திருவாரூரில் இருக்கும் தன் அப்பாவைக்கூப்பிட்டாள்
,ஹலோ ஹலோ ,யாரு அப்பாவா…..’
“ஆமாம் ராஜமா …என்ன மோஹனுக்கு முகூர்த்ததேதி பார்த்தாச்சா”?
அதுதாம்பா சொல்ல வந்தேன் கல்யாணம் நின்னுபோயிடுத்து ,என்னகாரணம்னு தெரிலை நீங்கள் தான் துப்பறியும் சாம்பு போல் கண்டுபிடிக்க வேண்டும் பெண்ணோட தாத்தாவும் திருவாரூர்தானே….”
சரி ராஜம் நான் விஜாரிச்சு பின் சொல்றேன் ,கவலப்படாதே”
.அப்பாடி… இப்போத்தான் ராஜத்திற்கு மூச்சு வந்தது. உள்ளே போனாள்.
,” அப்துல் தும் கஹான் ஹோ?’ {அப்துல் நீ எங்குஇருக்கிறாய் “? என்று இந்தியில் பேச அப்துல் “அபி ஆயா{இதோவந்துவிட்டேன் } என்று பதில் சொன்னான் “சாப்பிட்டாயா …. அப்துல் …..நம்ம மோஹன் கல்யாணம் நின்றுவிட்டது தெரிமா”?
தெரியும் மாஜி ” என்று அவனும் தமிழில் பேச முயன்றான் அவன் கண்கள் கலங்கின.
தில்லியில் ஜனக்புரி என்ற இடத்தில் தான் சிவராமன் குடும்பம் இருந்தது. இரு மகன்கள் …..மூத்தவன் மோஹன்…. தம்பி சுரேஷ் ,,,பின் யார் இந்த அப்துல் “? இது தெரிய பத்து வருடங்களுக்கு முன்னால் நாம் போக வேண்டும். எப்போதும் தனக்கென்று ஒரு ரிக்க்ஷா வாலாவை ராஜம் தன் சிறு பிரயாணத்திற்கு அமர்த்திக்கொள்வாள். ஒருநாள் அவனைக்கூப்பிடப் போன போது ஒரு ஐந்து வயது சிறுவன் அங்கு அழுதுக்கொண்டிருந்தான். அவன் தான் ரிக்க்ஷாக்காரன் சலீமின் குட்டித்தம்பி அப்துல் …..ராஜம் அவன் ஏன் அழுகிறான் என்று கேட்க அவனும் தன் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் இந்தக்குட்டி அப்துலைத் தான் பார்த்துக்கொள்வதாகவும் வேலைக்குப்போக மிக கஷ்டமாக இருப்பதாகவும் கூறினான் தவிர வறுமை வேறு …..ராஜம் இயல்பாகவே இளகிய மனம் படைத்தவள் ஆதலால் அவனிடம் “சலீம் நான் இவனை வளர்த்து படிக்க வைக்கிறேன் அனுப்புகிறாயா ?”என்று கேட்டாள் கரும்பு தின்னக்கூலியா ? உடனேயே அவனை அனுப்பி வைத்தான். அப்துல் வயிறு ஒடுங்கி ஒல்லிக்குச்சியாய் ராஜத்தைத் தொடர்ந்தான். அன்று வந்தவன் தான் அப்துல் “மாஜி மாஜி “என்று அன்பைக்கொட்டினான். ராஜமும் அவனைப்பள்ளிக்கு அனுப்பித்தாள் . தமிழ் கற்றுக்கொடுத்தாள் விதவிதமான உடையும் வாங்கிக்கொடுத்தாள். அவனும் வளர்ந்தான். வீட்டுவேலையும் செய்துபின் படிப்பிலும் கவனம் செலுத்தினான். மொத்தத்தில் ராஜத்தின் வலது கையானான் ராஜத்தின் பிள்ளைகள் ஒரு வேலையும் செய்யாமல் அப்துலை வேலை வாங்குவார்கள். இது ராஜத்திற்கு மிக வருத்தம் உண்டாக்கும். அப்துலுக்கு அந்த வீட்டில் தனிச்சலுகை என்று இரண்டாவது மகன் மனம் வெம்பினான் பொறாமை வேறு அவனை ஆட்கொண்டது ஒருநாள் ராஜம் தலைவலியால் துடித்தாள் .அவள் மகன் சுரேஷ் காலேஜிலிருந்து வந்தான் ,”அம்மா என்ன திங்க வச்சிருக்கே எடுத்துக்கொடு”
“சுரேஷ் கண்ணா எனக்குத் தலைவலிடா….. நீயாகவே உள்ளே போய் தோசை எடுத்துக்கோ”
அப்போது அப்துலும் அங்கு வந்தான்.
“மாஜி என்ன ஆச்சு ?உங்கல்கு ,,,,,தலவலியா? இதோ நானு வரேன் ” என்று தனக்குத்தெரிந்தத்தமிழில் பேசித் தலைவலி பாம் கொண்டு வந்து தடவினான் ,பின் உள்ளே போய் தோசையும் கொண்டு வந்து “மாஜி இந்தா.. வாயைக்காட்டு,, தோசை சாப்பிடு” என்று ஆசையாகச் சொன்னான். ராஜம் மனம் நெகிழ்ந்தாள் அப்படியே அவனை அணைத்துக்கொண்டாள். இதையெல்லாம் பார்த்த சுரேஷுக்குக் கோபம் கோபமாக வந்தது “இந்த அம்மா என்ன இத்தனை மாறி விட்டாள் எப்போ பாத்தாலும் அப்துலையே கொஞ்சறாளே”
“ஏண்டா சுரேஷ் என்ன செய்யறே “என்று கேட்டபடி மோகன் அங்கு வந்தான் “ஒன்றுமில்லை அண்ணா… இந்த அப்துல் அம்மாவை என்ன மக்கன்{வெண்ணெய்} வைத்தானோ நன்னா மயக்கி வைத்திருக்கிறான் .அன்று நான் கிரிக்கெட் பார்க்கும் நேரத்தில் அம்மா அவனுக்காக இராமயணம் சானல் மாற்றினாள்”
ஆமாம் என்னிடமும் அம்மா அன்னிக்கு சொன்னாள் “இந்த அப்துல் எனக்குக்கால் பிடிச்சு விடறான், பாத்திரமும் அலம்பித்தருகிறான், ரொம்ப அன்பாக பழகுகிறான் நீங்கள்வருவதும் தெரிவதில்லை ஆபீஸ் போவதும் தெரிவதில்லை. என்ன பிள்ளைகள்டா நீங்கள் என்றாள்” இப்படிச்சொல்லும்போதே ராஜம் அங்கு வர பேச்சு நின்றுவிட்டது இந்த நிலையில் தான் மூத்தவன் மோஹனுக்கு பெண் பார்த்து அவர்கள் போபாலிலிருந்து வருவதாகச்சொன்னார்கள் அவர்கள்தில்லிக்கு ஒரு கல்யாணத்திற்கு வருவதாகவும் அப்போது பிள்ளையும் பெண்ணும் பார்த்து விடட்டும் ,என்று தீர்மானிக்கப்பட்டது வாசலில் வண்டி வந்து நின்றது “அப்துல் வாசலில் அவர்கள் வந்துவிட்டார்கள் போய் அழைத்துவரலாம் என்று அப்துலையும் அழைத்து வந்தாள் “ஆமாம் யார் இந்தப்பிள்ளை ‘? என்று கேட்டாள் பெண் சுமதியின் தாய் “இவன் தான் அப்துல என் பிள்ளை என்று அவனை அணைத்துக்கொண்டாள் ராஜம். பெண்ணின் தாய் முகம் சுளித்தாள் .பின் ராஜம் அந்த அப்துல் கையில் டிபன் காபி எல்லாம் கொடுத்து அனுப்பினாள் ..பெண்ணின் அம்மா ஆசாரம் இல்லை என்றாலும் அப்துல் பூஜை அறை கிச்சன் என்று நுழைவது அவளுக்குப் பிடிக்கவில்லை. பெண் சுமதியும் மோஹனும் தனியாகப் பேசிக்கொண்டு பின் ஒகே சொல்லி விட்டார்கள் .நிச்சியதார்த்தம் மிக நன்றாக நடந்தது ……………
.”போஸ்ட் என்று தபால்காரன் ஒரு கடிதத்தைப்போட ராஜம் அதை எடுத்துப்படித்தாள். அவள் அப்பா எழுதியிருந்தார்.அதில் அப்துலால் கல்யாணம் நின்றுவிட்டதாகவும் இரு மகன்கள் ராஜாப்போல் இருக்க இந்த அப்துலை ஏன் வளர்க்க வேண்டும் இந்தப்பையனுக்கும் அந்தக்குடுமபத்திற்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா என்ற சந்தேகம் வந்துவிட்டது அவர்களுக்கு என்றும் எழுதியிருந்தார்.
அவசரம் அவசரமாகப்போனை அடித்தாள்தன் அப்பாவுக்கு…….
“அப்பா லெட்டர் வந்தது. என்ன இது இப்படி அபாண்டமாகப்பழி….
,,,”"நீ ஏன் அந்த அப்துல் பயலை வளைய வர விட்டாய் அதுதான்கல்யாணமே நின்று விட்டது இப்போ ..பார்த்தாயா ?அதன் விளைவை ……”
“என்ன அப்பா…நீங்க ! அம்மா அப்பா இல்லாத ஒரு பிள்ளையைவளர்ப்பது தப்பா”?
“அதுசரி ராஜம்…. இப்போ என்ன செய்யப்போறே “?
வேறு வரன் வராமலா போய்விடும்? கடவுள் விட்ட வழி “
பேச்சு முடிந்தது .
,காலம் உருண்டது. வேறு பெண் மோஹனுக்கு நிச்சியம் ஆயிற்று
“சுரேஷ் அந்த அப்துலை என் கல்யாணத்திற்கு அப்புறம் வரசொல்” என்றான் மோஹன் .
“அம்மா அந்த அப்துல் பயலை கிட்நேப் செய்து கல்யாணம் ஆனபின் கொண்டுவிடுகிறேன் “என்று கிண்டல் அடித்தான் சுரேஷ்மோஹனும் சுரேஷும் தமிழர்கள் ஆனாலும் இந்தியில் பேசிக்கொண்டார்கள். ஆனால் அப்துலோ தமிழ் நன்றாகப்பேசினான். கல்யாணம் ஆனவுடனேயே மோஹன் தனிக்குடித்தனம் போய் விட்டான். இரண்டாவது மகனோ பூனாவில் வேலை சேர்ந்து விட்டான். சிவராமனும் ராஜமும் தனித்து விடப்பட்டனர். ஆனால் பிளைக்குப்பிள்ளையாக அப்துல் இருந்து காலேஜையும் முடித்தான்வேலையும் தேடினான் .
கொரியர் சர்விசில் ஒரு நல்ல வேலைக்கிடைத்தது .
அன்று முதல் சம்பளத்தை வாங்கி வீடு வந்து “மா..ஜி ஆசீர்வாதம்செய்யுங்கோ “என்று அவள் காலிலும் சிவராமன் காலிலும் விழுந்தான் தன் சம்பளத்தை அவள் கையில் கொடுத்தான்.
அடுத்த வீட்டிலிருந்து ஒரு இந்திபஜன் கேட்டது
“பிரேம் ஈஸ்வர் ஹை ஈஸ்வர் பிரேம் ஹை” {அன்பே கடவுள் கடவுளே அன்பு },,,,,ராம் ரஹீம் புத்த கரீம் …..கோயீ பி நாம் ஜபோ ரெ மனுவா ஈஸ்வர் ஏக்ஹை {ராம் என்று சொன்னாலும் ரஹீம் புத்தர் கரீம் என்று எந்தப்பெயர் சொன்னாலும் எல்லாமே ஒன்றுதான் ஈஸ்வரன் ஒன்றுதான் ,,,,,,
ராஜம் அப்துலை அணைத்தாள் . சொந்த மகன்கள்
எங்கேயோ இருக்க இந்த வளர்ப்பு மகன்
அதுவும் பீஹாரைச்சேர்ந்த முஸ்லிம் இப்படி அன்பைப்பொழிகிறன் அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது அங்கு அன்பே தெய்வமானது.
அன்புடன் விசாலம்
Posted by
Meerambikai
at
2:33 AM
0
comments
Wednesday, June 10, 2009
எல்லாமே நம்பிக்கைத்தான்
அதோபறக்கிறது மூவர்ணக்கொடி.
வணங்குகிறோம் அதன் புகழைப்பாடி
,பாரத நாட்டிற்கு ஒரு வணக்கம் ,
அங்கே தேசபக்தி மணக்கும் ,
தேசியக்கொடி ஏற்றம்
நம்முன் பாரத அன்னையின் தோற்றம்
,நம்பிக்கைக் கொடுப்பது அன்னையின் உணர்வு
எல்லாமே நம்பிக்கையால் ,,,,,,,,,
,அதோ தாத்தாவின் புகைப்படம்
அதன் முன் இனிப்பு சம்படம்
படையல் படைக்கும் உறவினர்கள்
ஆசிகள் வழங்கும் முன்னோர்கள்.
தாத்தாவைக்கும்பிடு,,எனும் தந்தை
கண் கலங்கி நிற்கும் அவர் சிந்தை
நம்பிக்கையில் தாத்தாவின் உணர்வு
எல்லாமே நம்பிக்கையால்,,,,
,மறைந்தத் தலைவர்கள் சிலையாக ஆட்சி
பிறந்த நாட்களில் மாலைகளுடன் காட்சி
கைக்கூப்பிக் கண் மூடி நினைக்கும் மக்கள்
ஆசிகளை வேண்டி நிற்கும் தொண் டர்கள்
தலைவர்கள் பேசிய பொன்மொழிகள்,
நம்பிக்கையில் தலைவரையே கண்ட உணர்வு
,எல்லாமே நம்பிக்கையால்,,,,,,,,,,
புகைப்படங்களில் தெய்வ உருவம் ,
கடவுளாகத் தோன்றும் அந்த ரூபம்
தீப வடிவில் தேவியின் தரிசனம்
பார்த்தால் பரவசம் ஆகும் சிலர் மனம் ,
கல்லிலும் கடவுளைக் காணும் மனிதன்
சிகரத்திலும் இறைவனை தரிசிக்கும் மனிதன்
நம்பிக்கையில் கடவுளைக் கண்ட உணர்வு
எல்லாமே நம்பிக்கையால் ,,,,,,,
Posted by
Meerambikai
at
3:26 AM
0
comments
யாதகிரி நரசிம்மர்
ஓம் வஜ்ர நகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஷட்ராய தீமஹிதந்நோ நாரசிம்ஹ:ப்ரசோதயாத்....இது நரசிம்ம காயத்ரி இதை நரசிமஹ ஜயந்தி அன்று ஜபிக்க நோய்கள் விலகி எங்கும்ஜயம் தான்*நாம் யாதுகிரி குட்டாவிற்குப்போய் அங்கு இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மரைப்பார்த்து ஆசிகள் பெறலாமா?ஹைதராபாத் லிருந்து சுமார் 69 கிமீதூரத்தில் வாரங்கல்லுக்கு அருகிலும் இந்தலக்ஷ்மிநரசிம்மர் கோயில் இருக்கிறது இது எதனால் விசேஷம் என்றால் இது பஞ்சநரசிம்மக்ஷேத்ரம் ,இங்கு ஒரு குகையில் யது என்ற ரிஷி தவம் இருந்தார் ,இவர்ரிஷிய சிங்கர் சாந்தாதேவி அவர்களது புத்திரர்.இவருக்கு மஹாவிஷ்ணு தரிசனம்தந்து அருள் புரிந்தார் ,ரிஷியும் தான் நரசிம்ஹ மூர்த்தியாக அவரைப்பார்க்கவிரும்பினார்,முதலில் ஜ்வால நரசிம்ஹராக வந்தார் பின்னர் உக்ர நரசிம்மராகத் தோன்றினார்அவர் மிக்வும் உக்ரமாகத் தோன்ற ரிஷியும் அந்தத் தோற்றம் வேண்டாமென்றுகேட்டுக்கொண்டார் ஆகையால் யோக நரசிம்மராகக் காட்சி அளித்தார் அதிலும் திருப்திபடாமல் போனதால் சாந்தமாக ல்க்ஷ்மி நரசிம்மராக தரிசனம் கொடுத்து அருள்புரிந்தார் ,ஆக மொத்தம் பஞ்ச நரசிம்மராகக் காட்சிக்கொடுத்தார் ,என்ன அத்புதம் !இங்குப் போனால் நவகிரஹ தோஷம் போய்விடுகிறது பில்லி சூன்யம் ஏவல் போன்றதும்மறைகின்றன , நாற்பது நாட்கள் தொடர்ந்து பூஜிக்க தீராத வியாதியும் தீருகிறதுஇவர்தான் அங்கு வைத்ய நரசிம்மர் ஆகிறார் ,இங்கு ஆஞ்சநேயரும் இருக்கிறார் தவிரஸ்ரீ ஆண்டாள் நான்கு ஆழ்வார்கள் ராமலிங்கேஸ்வர ஸ்வாமியும் எழுந்தருளிஅருள்பாலிக்கின்றனர் .கர்ப்பக்கிரஹத்தின் மேல் சிகரத்தில் தங்க சுதர்சனச்சக்கரம் உள்ளது முன்பெல்லாம்இந்தச்சக்கரம் பகதர்கள் வரும்போது அந்தப்பக்கம் திரும்பிஒரு காம்பஸ் போல்வழிக்காட்டுமாம்பல ரிஷிகள் இங்கு வந்து தியானம் செய்கிறார்கள் ,இதற்கு ரிஷி ஆராதனா க்ஷேத்ரம்என்றும் பெயர் ,இப்போதும் இங்கு பஞ்ச ராத்ர ஆகமம் நடக்கிறது.ஸ்ரீ வெங்கிபுரம்நரசிமசார்யாலு என்பவர் இந்த நரசிம்ஹரைப்பற்றி சுப்ரபாதம் பின் பலஸ்லோகங்கள் எழுதி இருக்கிறார்சுமார் முன்னூறு அடிக்குமேல் இருக்கும் இந்த பஞ்சநரசிம்மரையும் ரிஷி தவம்செய்த குகையும் பார்த்து ஆசி பெறலாமேஅன்புடன் விசாலம் *
Posted by
Meerambikai
at
3:23 AM
0
comments
அம்மாவென்று அழைக்காத உயிரிலில்லையே
மதர்ஸ் டே அதாவது அன்னையின் தினம் இது இந்தக்காலத்தில் நிச்சியமாகக் கொண்டாடப்படவேண்டிய ஒன்று ஏனென்றால்இந்தக்காலத்தில் அன்னையுடன் சேர்ந்து இருக்கும் வாய்ப்பு இளைஞர்களுக்குமிகவும் குறைவு. கல்விக்காகவும் உத்தியோகத்திற்காகவும் இவர்கள்பெற்றோர்களை விட்டு வெகு தூரம் போக வேண்டி இருக்கிறது. அவர்களுக்குஅன்னையை நினைக்க விரும்பினாலும் வேலையின் பளுவில், காதலில் மற்றபொழுதுபோக்குகளில், அவர்கள் மூழ்கி விடுவதால் அதன் முக்கியத்துவம் ஓரளவுமறைந்துதான் விடுகிறது ,வாரம் ஒரு தடவை போனில் விஜாரிப்பதோடு சரி அல்லது பணம் அனுப்புவதோடு சரி ,,,, முன் காலத்தில் இந்த நிலைமை இல்லை வேதக்காலத்திலேயே முதலில் அன்னைக்குத்தான் சிறந்த இடம் மாத்ரு தேவோ பவ என்று முதலில் அன்னைக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருந்தது முன் காலத்தில் அன்னைதினம் என்று தனித்தினம் தேவையில்லாமல் இருந்தது ஏனென்றால் காலையும் மாலையும் கூட்டுக்குடும்பத்தில் பெற்றோர்களை வணங்கிஆசியும்பெற்றுக்கொள்ளும் வழக்கம் இருந்தது தவிர அன்னையும் வீட்டில் இருந்து தன்மக்களின் நலத்தையே முக்கியமாகக்கொண்டு நல்லவளர்ப்பில் அவர்களைக் கொண்டு வந்தாள். பூணல் போட்டவுடன் முதலில் அன்னையைவணங்கி பவதி பிக்ஷாந்தேஹி என்று அந்த மகன் கேட்டு முதல் அரிசியையும்பருப்பையும் பிக்ஷையாக அன்னையிடமிருந்து வாங்கிக்கொண்டு ஆசி கோருகிறான் அன்னை பத்து மாதங்கள்: சுமந்து பல இன்னல்களுக்கு உடபட்டுஉள்ளிருக்கும் கருவையும் பொத்திப்பொத்திக் காப்பாற்றி அல்லல்பட்டுகுழந்தைப்பிறப்பு என்ற இன்பமான அவஸ்தையும் பட்டு அந்தக்குவா குவாசத்தத்தில் உலகையே மறக்கிறாள்,அன்று ஆரம்பிக்கும் தியாகம் அவள் உயிர் உள்ள வரையிலும்
தொடர்கிறது .கடைசியில் சந்தர்ப்ப வசமாக அவள் முதியோர் இல்லம் போகநேர்ந்தாலும் தன் மக்களை வெறுப்பதில்லை ஆனால்வாழ்த்துகிறாள்,அந்தப்புண்ணியவதியை நினைக்க ஒரு தினம் வேண்டாமா?நல்லவேளையாக் அன்னா ஜார்விஸ் என்பவர் இதை ஆரம்பித்துவைத்தார் அவரை மறக்கவே முடியாது எது இருந்தாலும் வெளி நாடுகளிலிருந்துவந்தால் அதற்கு தனி மவுசுதான் என்று இந்தியர்களின் எண்ணம் இது போல் தான்காதலர்தினமும் வந்ததுஆனால் அது கொடிக்கட்டிப் பறப்பதுப்போல் அன்னைதினம்இல்லை அது சிகரத்தைத் தொட்டுவிட்டது இந்த அன்னையின் தினம் அல்லவோசிகரத்தைத் தொடவேண்டும் ?தாய்க்கு என்ற ஒரு நாளை ஏற்படுத்தியஅன்னாஜார்விஸ் இதை உலகம் முழுவதும் மே மாதம் இரண்டாவதாக வரும் ஞாயிறுஎன்றுநிர்ணயித்து ஒப்புதலையும் பெற்றார் இந்த நாளில் அன்னைக்குத்தகுந்த மரியாதை அளித்து பரிசுகளும் கொடுத்து அன்று முழுவதும் அவர்கள்மகிழ்ச்சிகாக பாடு படவேண்டும் என்றும் சொன்னார் வெளி நாடுகளில் பதினாறுவயது முடிந்தவுடனேயேமகன் மகள் தனித்து வாழ்த்தொடங்கி விடுகின்றனர் ஆகையால்அன்னைக்கு என்று ஒரு தினம் அவர்களுக்கு மிகவும் தேவை ,ஆண்களே ! வருத்தப்படாதீர்கள் அப்பாதினமும் உண்டு ஆனாலும் அந்த அப்பாவைத்தந்ததும் ஒரு அன்னை தானே நேபாலில் இந்த அன்னை தினம் பல்லாண்டுகளுக்கு முன்பாகவேஇருந்ததாம் மாதா தீர்த்த ஔன்சி என்ற பெயராம் , இது வைகாசிஅமாவாசையன்று வருகிறது.மாதா என்றால் அன்னை தீர்த்த என்றால் தீர்த்தயாத்திரை அதாவது நேபாலின் பள்ளத்தாக்கில் புனித நீர் ஓடும் இடத்தில் இந்தயாத்திரை இந்த இடம் வரை நடந்தே வந்து அன்னையை வழிபடுகிறாகள்,பின்வீட்டில் இருக்கும் அன்னைக்க்குப் பரிசுகள் வழங்குகிறார்கள்,ஆசியும்பெறுகிறார்கள்.இதற்கு ஒரு புராணக்கதையும் உண்டு ,கண்ணன தேவகியைப்பிரிந்து பின் ஒருநாள் அவளைத்தேடி வருகிறான் தேவகியைப்பிரிந்த கண்ணனுக்கு பலவிதமான ஆபத்துக்கள் வந்தன,அன்னையைத்தேடித்தேடி பின் அவளை காட்மாண்டு பள்ளத்தாக்கில் ஒரு புனிதஆற்றில் காணுகிறான் தேவகி அன்னை ஸ்னானம் செய்துக்கொண்டிருக்கிறாள் பின்அன்னை கண்ணனை மிகுந்தப்பாசத்துடன் கட்டி அணைக்கிறாள், பின்இந்த இடத்தில் குளித்து அன்னையை நினைப்பவர்களுக்குஎன் பரிபூரண ஆசிகள் உண்டு என்றாளாம்.ஆனால் பின் வந்த சந்ததிகள் அவ்வளவாக இதைச் செய்வதில்லைஎன ஒரு நேபாலி குர்க்கா வருத்தப்பட்டுக்கொண்டான் ,\அன்னையைப்போல் ஒரு தெய்வம் உண்டோ ,,,,என்ற பாடலும்அம்மாவென்று அழைத்தாலே ,,,,,என்ற பாடலும் மனதில்ஞாபகம் வர நானும் மேல் லோகத்தில் இருக்கும் என் அன்னையை நினைத்து வணங்குகிறேன்
Posted by
Meerambikai
at
3:17 AM
0
comments
புத்தம் சரணம் கச்சாமி
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
புத்த பூர்ணிமா ,இந்த புத்தர் என்ற சித்தார்த்தர் பிறந்ததும் விசாகபௌர்ணமி
ஒளிப்பெற்றது விசாக பௌர்ணமி
மோக்ஷநிலை அடைந்ததும் விசாகபௌர்ணமி ,
மனதில் எழுந்தது வில்லுப்பாட்டுக்கேற்ற ஒரு கவிதை
சுத்தோதனின் உத்தம புத்திரன,
அருமை மகன் , அவன் சித்தார்த்தன் ,
கண்ணின் இமைப்போல் காக்கப்பட்டான்
உலகம் தெரியாது வளர்க்கப்பட்டான்
ஜோசியர் சொன்னதில் தந்தைக்குக்குழப்பம்''
பெரிய அரசனாவான் அல்லது யோகியாவான் ''
அரசகுமாரன் ஆக்கும் முயற்சி
கொடுக்கப்பட்டது பல பயிற்சி
தந்தையின் அதிக பராமரிப்பு
தாயின் அதிக ஆதரிப்பு ,கவசமான பெற்றோர்கள்
சூழ்ந்து காக்கும் ரக்ஷகர்கள்
அரண்மணைக்குள் பல வித்தைகள்
விதைக்கப்பட்டன பல கலைகள்
மனம் நிறையவில்லை
,எதிலும் சுவையில்லை
மனதில் தெளிவில்லை
ராஜபோகத்தில் ஈர்ப்புமில்லை
அவனுக்குத் தேவை ஒரு மாற்றம்
அதுவே மாப்பிள்ளைத் தோற்றம்
வந்தாள் கிளிப்போல் ஒரு கன்னி
''யசோதரா'' அவனையே எண்ணி,
ஒரு மகனையும் அளித்தாள்
ராஹுல் என்ற பெயரும் கொடுத்தாள்
ஒரு நாள்,
,அந்த நாள்
யசோதராவிற்கு சோதனை நாள்
உலகத்திற்கு நல்ல நாள்
வெளி வந்தான் சித்தார்த்தன்
தேரிலே பவனி வந்தான்
தேரோட்டியும் உதவினான்
அரண்மணை வெளியே வந்தான்
வாழ்க்கையில் அதுவே திருப்புமுனை
கௌதமபுத்தர் ஆன அரிய சுனை
கண்டான் அங்கு ஒரு தொண்டு கிழவன்
கூனல் முதுகு ,கையில் தடி காலில் நடுக்கம்
மனம் பதைபதைத்தான்சித்தார்த்தன்
இதுவா வாழ்க்கை ?தொடர்ந்தபிரயாணம்
கண்டான் அங்கு ஒரு நோயாளி
உடல் ஆடஉள்ளம் தாக்க
கண்கள் சொருக
மரமாக சாய
ஆ இது என்ன ?இப்ப்டியும் ஒரு பிறப்பா ?
இதுவா வாழ்க்கை ?
மேலும் தொடர்ந்தான்
வந்தது ஒரு சவம்
எங்கும் நிரம்பிய சோகம்
சிவமாய் இருந்த உடல்
இன்று ஏன் சவமானது ?ஒரே குழப்பம் !
மனதிலே கேள்விக்குறி1
விரகித்தியடைந்த மனம்கேட்டது ஒரு வினா
இதுவா வாழ்க்கை?வேண்டாம் வேண்டாம்
ஆடம்பரம் வேண்டாம்
ராஜ போகம் வேண்டாம்
வேண்டும் நிம்மதி
வேண்டும் அமைதி
வேண்டும் ஒரு தேடல்
பிறப்பின் காரணம் தேடல்
படைத்தவனைத்தேடல்
மனம் தத்தளித்தது
வீடு கசந்தது
நல்லிரவு
.மனைவி யசோதராமீது ஒருபார்வை
பிஞ்சு பாலகன் மீது ஒரு பார்வை
வைராக்கியம் புகுந்தது
எல்லாம் உதறினான்
உள்ளோளி தேடினான்
திரும்பிப்பாராமல்வேகமாய் நடைத் தொடர்ந்தது
தேடலும் தொடர்ந்தது
''கயாவில் சென்று நின்றது
தியானத்தில் நிலைத்தது
நீண்ட தியானம்
அரச மரத்தின் கீழ்தன்னை மறந்த நிலை
திடீரென்று ஒரு ஒளி
அவர் அனுபவித்த பரமானந்தநிலை
உள்ளே ஒளி தெரிந்தது
ஞானோதயம் பிறந்தது
''கௌதமபுத்தர் '' ஆனார்
எட்டடி பாதைகள்."பிறப்பு
புத்தமதத்தின் சிறப்பு
ஆயிரம் பிறையும் கண்டார்
''ஆசியாவின் ஒளி''யும் ஆனார்
Posted by
Meerambikai
at
3:05 AM
0
comments

