Thursday, September 29, 2011

சுயம்வரம்

பழைய ' பாஞ்சால தேசம்" இன்று குஜரத் மாநிலத்தில் சௌராஷ்ட்ரா என்ற
பிரிவில் 'டார்னேடார்" என்ற இடமாக உள்ளது இந்த இடம் எதற்கு விசேஷம் என்றால் இந்த இடத்தில் தான் மஹாபாரதத்தில் வரும் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனை திரௌபதி சுயம்வரமாக திருமணம் செய்து கொண்டாள்.

சுயம்வரத்தின் போட்டி மிகவும் கடினமான ஒன்று. சுற்றிக்கொண்டிருக்கும்
சக்கரத்தில் ஒரு மீன் ..அதுவும் தலைக்குமேலே சுழலும் . கீழே ஒரு நீர்த்தொட்டி. அதில் சுழலும் மீனின் பிம்பம் தெரியும் நீரில் தெரியும் மீனின் பிம்பத்தைப்பார்த்து
மேலே கட்டப்பட்டிருக்கும் மீனை அம்பால் குறிவைத்து எய்ய வேண்டும்.
அப்பா! இது என்ன ! சாமானமான காரியமா ? ஒரு இடத்திலேயே நிற்கும் மீனை
அடித்துவிடலாம் ஆனால் சுழலும் மீனை அதுவும் கீழே பிம்பம் பார்த்து
அடிக்க வேண்டுமென்றால் அர்சுனன் இந்தக்கலையில் எத்தனை மேதையாக
இருந்திருப்பான் .மீனை அடித்து வெற்றிக்கண்ட அர்சுனனை திரௌபதி
மிக மகிழ்ச்சியுடன் மணக்கிறாள்,

இந்த சுயம்வரம் நடந்து அர்சுனன வெற்றிப்பெற்ற இடம் தான் 'டார்னேடார்'
இன்றும் இந்த நாளை ஒரு திருவிழாவாக இங்கிருக்கும் மக்கள் கொண்டாடுகின்றனர் .இங்கிருக்கும் 'திருநேத்ரேஸ்வரர் ' என்ற கோயிலில்
முதல் நாள் கொடியேற்ற விழா விமரிசையாக நடக்கும் .
ராஜா கர்ணாசிங்ஜி ஜாலா'என்பவர் இந்தக்கோயிலைப்புதுப்பித்தது மாசிமதம் ,
அவர்தான் இந்தத்திருவிழாவையும் ஆரம்பித்தார் .
இந்தகோயில் மிகப்பழமை வாய்ந்தது எட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்தது ,
ராஜா சோலாங்கி மாந்தாதா என்ற மன்னர் முதன் முதலில் இந்தக்கோயிலைக்கட்டி 'திரிநேத்ரேஸ்வரர்' என்ற பெயரிட்டு வணங்கி வநதாராம்

இரண்டாம் நாளன்று கங்கை நீர் சேகரிக்கப்பட்டு எல்லோரும் அதில்
ஸ்னானம் செய்து தங்கள் பாபங்களைப்போக்கிக்கொள்வார்கள்

மூன்றாம் நாள் ' திரௌபதி சுயம்வரம்' ஞாபகமாக இங்கும் சுயம்வரம் நடக்கும்
பல மலைச்சாதிப்பெண்கள் இதில் கலந்துக்கொள்வார்கள் .எங்கும் பச்சை .சிவப்பு போன்ற ஆழமான வர்ணங்களின் உடைகள் அதில் பதிக்கப்பட்டு பளபளக்கும்
கண்ணாடிகள் .சம்க்கி வேலை செய்யப்பட்ட ரவிக்கைகள். குட்டிப்பாவாடையான
'காக்ராஸ்' அதில் இருக்கும் மடிப்புக்கள் பெரிய வட்டமாகச்சுழட்ட வசதியாக
இருக்கும் நெற்றியில் பெரிய பொட்டும் சரிகையுடன் மின்னும்

இந்தச்சுயம்வரப்பெண்கள் வரிசையாக நிற்க ஆண்களும் வரிசையாக எதிர்வரிசையில் நிற்பார்கள். அவர்களின் உடையும் வித்தியாசமாக இருக்கும்
கீழே பஞ்சகச்ச வேஷ்டி சரிகைப்போட்டது , தலையில் பளபளக்கும் சரிகை முண்டாசு . மேலே முழுக்கைசட்டை . மிகக்குட்டையாக இருக்கும்

இப்போது சுயம்வரம் ஆரம்பிக்கும் வாத்தியங்களில் ஷெனாய் முக்கியமாக இருந்து மங்கல ஒலி கிளப்பும் பின் மேளதாளங்கள் ஒவ்வொன்றாய் ஆரம்பிக்க
விழா களைக்கட்டும்
இப்போது ஒவ்வொரு ஆணும் பெண்ணிடம் சென்று குஜராத்தியில்
தங்கள் ஆசையைத்தெரிவிப்பார்கள் அப்படி என்னதான் சொல்கிறார்கள்?
"என்னைப்பார் என் அழகைப்பார் . என்னை மணக்க உனக்கு சம்மதமா?
என்று அவர்கள் கேட்ப்பார்களாம் சம்மதம் என்றால் மூன்று
முறை தலையை ஆட்டி பெண்கள் சம்மதம் தெரிவிப்பார்கள் ,
பின் என்ன .டும்டும் டும் என்று கலயாணம் ஆகும் பின் இந்த திரிநேத்திரேஸ்வரர்
கோயில் போய் வணங்குவார்கள் .

நடனம் இல்லாமலா ? குஜராத்திற்குப்பெயர் போன ''தாண்டியா'நடனம் நடக்கும்

சிலம்பாட்டம் ,பானைகளைத்தலையில் வைத்தபடி ஆட்டம் . குத்துச்சண்டை
கத்திச்சண்டை போன்ற கலைகளும் அங்கு வெளிப்படும்

மணமக்களுக்கு அடுக்கடுக்காக பூவேலைகளுடன் பல வண்ணங்களுடன் மணிகளுடன் செய்யப்பட்ட மூன்றடுக்கு குடை பரிசாக கொடுப்பார்கள்
இதைப்பார்க்க வெளிநாட்டினரும் வருகின்றனர்

முதல் வருடம் திருமணம் செய்துகொண்டவர்களும் மறுவருடம் இந்தநாளில்
வந்து நன்றிதெரிவித்து விழாவில் பங்கு பெருகிறார்கள் ,

துர்க்கை

நவராத்திரி என்றாலே தேவிபாகவதம் உடனே நினைவுக்கு வரும். தேவிபாகவதம்
என்று நினைக்க அழகான துர்க்கை நம் கண்முன் நின்று அருள் புரிவாள். வேதத்தில் துர்காசூக்தம் என்று ஒன்று உண்டு .அதில் ' தாமக்னி வர்ணாம் தபஸா
ஜ்வலந்தீம் ' என்றும் அக்னே த்வம் பாரயா நவ்யோ"என்றும் கூறப்பட்டிருக்கிறது இதில் துர்க்கையை அக்னியின் வடிவானவள் என்றும் அந்த ஜோதியின் வீர்யத்தையும் புகழ்கிறது இதனால்தானோ அநேக கோயில்களில் துர்க்கை அல்லது சில அம்பாளின் சிரசைச்சுற்றி அக்னிப்பிழம்புகள் வட்டமாக சூழப்பட்டிருக்கும் சில அம்மன் கோரப்பற்களுடனும் காணப்படுவாள். அநேகமாக
வடக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பாள் ,சில இடங்களில் 24 கரங்களுடன்
ஒவ்வொரு கரத்திலும் ஒவ்வொரு ஆயுதம் தாங்கி நிற்பாள்.ஒரு காலின் கீழ்
மகிஷனுடைய தலை மிதிப்பட்டிருக்கும் .

துர்க்கை என்றாலே நம்மைக்காப்பாற்றும் அன்னை என்ற பொருள் கொள்ளலாம்
கோட்டைக்கு சம்ஸ்கிருதத்தில் துர்க்கம் என்று சொல்வதால் இந்தப்பெயர்
துர்க்கைக்கு மிகப்பொருந்துகிறது . ஒரு அரண் போலிருந்து நம்மைக்காப்பாற்றும்
தேவியாக துர்க்கை விளங்குகிறாள்.
இவளுக்கு மகிஷாசுரமர்த்தினி என்றும் ஒரு பெயர் உண்டு . மகிஷன் என்ற அசுரனைக் கொன்றவள் இவள். ஒரு சமயம் தேவர்களின் தலைவனான
இந்திரனுக்கு 'மகிஷாசுரன்' என்ற அசுரனுடன் போர் மூண்டது . மிகவும் சக்தி
பெற்ற மகிஷனுடன் போர் செய்யமுடியாமல் பல தேவர்கள் தோற்றனர்.
மனம் கலங்கி அவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டனர் .பிரும்மா தேவர்களுடன்
மஹேஸ்வரனையும் மஹாவிஷ்ணுவையும் கண்டு வணங்கி தங்கள் பிரச்சனையைக்கூறினர் .இதனால் கோபம் கொண்டனர் .அந்தக்கோபத்தின் தாக்கத்தினால் ,சக்தியால் நெற்றியிலிருந்து ஒரு அக்னிப்பிழம்பாய் ஒரு பேரொளி தோன்றியது.பின் அந்த ஒளி ஒரு பெண்ணின் உருவம் கொண்டது .அங்கிருந்த
தேவர்களும் ,பின் இந்திரன் வருணன் .வாயு சூரியன் ,குபேரன் .பூமி பிரும்மா
சந்தியா எல்லோரும் அந்த உருவத்தைப் படைத்தனர் .உருவம் வந்தப்பின்
அதற்குச் சக்தி வேண்டுமே !
சிவபெருமான் தன் திருசூலத்திலிருந்து வேறொரு சூலம் உண்டாக்கிக்கொடுத்தார்
அக்னி ஈட்டியைக்கொடுத்தார். விஷ்ணுவோ தன் சக்கரத்திலிருந்து மற்றொரு
சக்கரம் கொடுத்தார் வாயு வில் அம்பு . இந்திரன் வஜ்ஜிராயுதம் , வருணன் பாசக்கயிறு, காலதேவன் வாள் கேடயம் , . யமன் காலதண்டம், ஆதிசேஷன்
நாகபரணம் , ஹிமவான் சிம்மவாஹனம் , . என்று பல பொருடகள் அந்த்த்தேவிக்கு வந்து சேர அளக்கமுடியாத சக்தி சேர அகிலாண்டகோடிபிரம்மாண்ட நாயகியாய் மகிஷனை வதம் செய்ய புறப்பட்டாள்,
அண்டம் நடுநடுங்க மகிஷன் தேவியைக்கண்டான் .இருவரின் போர் தேவிபாகவதத்தில் மிகச்சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது முடிவில் அவன் துணைகளையெல்லாம் பறிக்கொடுத்து
தனியாக நின்றான் .தேவி உக்கரமாக அவனைத்தூக்கி வீசி அவனைக்கீழே
வீழ்த்தி தன் பாதத்தை அவன் மேல் இருத்தி நின்றாள் .
பின் மகிஷாசுரமர்த்தினி ஆனாள்.
இந்த மகிஷன் தான் தவம் இருந்த போது பெண்களின் பலவீனத்தை எடைப்போட்டு
பெண்ணைத்தவிர பிறரால் தனக்கு மரணம் நேரக்கூடாது என்ற வரத்தைக்கேட்டான்
இதனால் பெண்வடிவமாக வநதாள் அன்னை . மகிஷனும் தன் உருவங்களை
பல உருவங்களாக மாற்றிக்கொண்டான் யானையானான் ,.சிங்கமானான், பாம்பானான் ஆனால் தேவியோ எல்லாவற்றையும் அழித்து வெற்றிவாடைச்சூட்டிக்கொண்டாள்.
இந்த நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், .அடுத்து மூன்றுநாட்கள் திருமகளுக்கும் கடைசி மூன்று நாட்கள் கலைமகளுக்கும்
பூஜை நடக்கும்
மூன்றுசக்திகளின் அருள் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்
நவராத்திரி வாழ்த்துகள்

Sunday, September 26, 2010

சாம்பலை உடம்பில் பூசி .........

அந்தக்காலத்தில் இருந்த வீரத்தாய்மார்களை இப்போது காணமுடிவதில்லைபள்ளியில் மாணவனைக்கொஞ்சம் கோபித்துக்கொண்டால் போதும் ஆசிரியருடன் சண்டைக்கு வந்துவிடுகிறார்கள் பெற்றோர்கள் செல்லம் அதிகம் கொடுக்கிறார்களோ ? அல்லது அவர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் தங்கள் செல்வங்களுடன் சேர்ந்து இருக்க முடியாத சூழ்நிலையினால்குழந்தைகள் கேட்டது எல்லாம் வாங்கித் தருகின்றனரோ ? தில்லியில் லோகமான்ய திலக் ஜயந்தி ஆகஸ்டு ஒன்றாம் தேதி விமரிசையாக நடக்கும் எல்லா மராட்டியர்களும் அதில் பங்கு ஏற்பார்கள் . அத்துடன் சில மந்திரிகளும் வருவார்கள் நாங்களும் சில மாணவ மாணவிகளை அழைத்துக்கொண்டு காலை 8 மணிக்கு லோகமானயதிலக் அவர்களின் சிலைக்க்குப்போய்மாலை அணிவித்து வணக்கத்துடன் மரியாதை செலுத்துவோம் .குழந்தைகளுக்கு தேசபக்தி வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம் ஆனால் ஒருதடவை மிகவும் வெப்பத்துடன் புழுக்கமும் சேர்ந்துஒரு மாணவன் மயக்கமுற்று கீழே சாய்ந்தான் . அவனை ஓடிப்போய் தாங்கிபின் எலக்ட்ரால் கொடுத்து கொஞ்சம் பிஸ்கட்டுகளும் கொடுக்க அவன்பழைய நிலமைக்கு வந்தான் ஆனாலும் அவன் வீட்டில் இது தெரிய அவனது தாய் "நல்லதேசபக்தி கத்துக்கொடுப்பது ! அந்த திலக்ஜியைப்பற்றித்தெரிந்துகொண்டால் இந்தியா சரியாகிவிடுமா ! எல்லாம் நேரமும் வேஸ்ட் என் குழந்தை மயக்கம் போட்டுவிழுந்தானாம் "என்று கனனாபின்னா என்று பள்ளிக்கு வந்து திட்டினாள் அவள் குழந்தை என்று சொன்னது ஒன்பதாவது படிக்கும் மாணவன் தான் எத்தனை வயதானாலும் தாய்க்கு தன் குஞ்சு பொன்குஞ்சுதானே!. அந்தத்தாய் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர் என்று எனக்கு தெரியுமாதலால் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது தமிழ் நாட்டிலும் தேசப்பற்று மிகுந்துதேசத்திற்காகத் தியாகம் செய்த திருப்பூர் குமரன் .கப்பலோட்டிய தமிழன்திரு வ உ சிதமபரனார் ஆங்கிலேயரை விரட்டிய கட்டபொம்மன் ,,,,,இதுபோல் எத்தனைப்பேர் இருந்தார்கள் , ஆனாலும் சர்தார்ஜி பஞ்சாபிகள் போல் வீரம் தீரம் ஊட்டி வளர்க்கும் தாய் தமிழ்நாட்டில் அத்தனை இல்லையோ என தோன்றுகிறது தீபாவள்யின் போது சர்தார்ஜியின் இரண்டு வயது குழந்தையின்கையில் பட்டாசு இருக்கும் நம்மைப்போல் பார்ப்பவர்களுக்கு மனம் திக்திக் என்று இருக்கும் ஆனால் சர்தார்ஜி குடும்பம் கவலையே படாது. தெருவைத்தாண்டிப்போகும் போதும் தமிழ் அன்னை "கையைப்பிடிச்சுக்கோடா செல்லம் "என்றுஅந்தப்பையனின் கையைப்பிடித்து அழைத்துபோவதைப்பார்த்திருக்கிறேன்ஆனால் பஞ்சாபி குழந்தை கையைப்பிடித்தாலே உதறிவிடும் அத்துடன் அந்தக்குழந்தையின் பெற்றோர்களும் மிகவும் கோழையாக வளர்க்க விரும்பமாட்டார்கள் இதை நினைக்கும் போது எனக்கு ஒரு வீரத்தாயின்கதை ஞாபகம் வருகிறது அந்த வீரத்தாய் தன் மகனின் அஸ்தியை என்ன செய்தாள் தெரியுமா?

ஒருவன் இறந்து விட்டால் அவனுடைய சாம்பல் நல்ல நதியில் தூவப் படுகிறது .சிலர் காசிக்குச் சென்று கங்கையில் கறைப்பார்கள்,அன்னை இந்திரா காந்தி அவர்களின் அஸ்தி இமயமலையிலும் கூட ஹெலிக்காப்டரில் எடுத்துச் சென்று மேலிருந்து தூவினார்கள்,ஆனால் ஒருவனது சாம்பலை அந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு இளம் தாயும் தங்கள் வயிற்றில் அந்தச்சாம்பலைபூசிக்கொண்டார்கள், ஏன் என்றால் தங்களுக்கும் இது போல் ஒரு மகன் பிறக்க வேண்டும் என்பதால் தான் ஆம் அந்த வீர மகன் ,எல்லோராலும் போற்றப்பட்ட மகன் , நாட்டுக்காக தன் உயிரையே கொடுத்தத் தியாகி ,இள்ஞ்சிங்கம் ஸர்தார் பகத் சிங் தான் , 1931ல் மார்ச் 23ந்தேதிபகத் சிங்கைதூக்கிலிட்டு,பின் வெள்ளையர்கள் அவனை எரித்தச் சாம்பலை அவன் தாயிற்கு அனுப்பி வைத்தனர் ,அந்த வீரத்தாயைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் ,தூக்குத்தண்டனையிலிருந்து தப்ப பாவம் அந்தத் தந்தை மனம் சோர்ந்துப்போய் ஒரு கருணை மனு கொடுத்தால் மகனைக் காப்பாற்றலாம் என்று வக்கீல் சொல்லக் கேட்டு ஒரு மனு பத்திரம் வாங்கியும் வந்தார் ,தன் மனைவியைக் கூப்பிட்டார் , "பகத்சிங்கின் தாயே நமக்கு நம் மகன் வேண்டாமா?இந்தக் கருணை மனுவில் ஒரு கையெழுத்துப் போடு நான் போட்டுவிட்டேன் ,நீதான் பாக்கி" என்று அந்தப் பத்திரத்தைக் கொடுத்தார் ,அந்தத் தாய் அதை வாங்கிப்பொருமையாகப்படித்தார்., பின் சுக்குக் சுக்காகக் கிழித்துப்போட்டார் பத்திரத்தை ,,,,,,"மானமில்லையா எனக்கு ? வெள்ளையினிடம் போய் உயிர்ப்பிச்சை கேட்க வேண்டுமா? என் மகன் வெள்ளையனுக்கு எதிராக நின்று ஜயித்து வெள்ளையனை வீழ்த்தினான் என்ற பெருமையிலே அவன் சாவதை நான் விரும்புவேனேத்தவிர கருணை மனுவைப் பெற்று உயிர் வாழ்வதை நான் விரும்ப மாட்டேன் . அவன் கோழையில்லை வீரன், என் மகன் வீரன் . அவன் புகழோடு மடிவதைப் பார்த்தாலும் பார்ப்பேன் வெள்ளையன் தயவில் உயிருடன் அலைவதை ஒருக்காலும் விரும்ப மாட்டேன் " ஆஹா இப்படி ஒரு தாயா ? இரண்டு கரங்களையும் கூப்பி வணங்க தோன்றுகிறது அல்லவா?

முடியிலும் கண்ணன் நாமம்

திரௌபதியின் சபதம் நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் தனக்குக் கௌரவர்கள் செய்த கொடுமைகளை அவளால் தான் மறக்க முடியுமா?
துகிலை உருவும் துச்சாசனன். அதைப்பார்த்து ரசித்து எக்காளமிடும்
சில கௌரவர்கள் ........அங்கு விதுரர் பீஷ்மர் துரோணர் போன்ற மஹான்கள் இருந்தும் ஒன்றும் செய்யமுடியாத நிலை......... அழிவுக்காலம் வந்துவிட்டால் இப்படித்தான் எதாவது நடக்குமோ!

கடைசி வரைப்போரடிய திரௌபதி தன்னால் இனி முடியாது என்ற நிலை வந்ததும் 'கண்ணா காப்பாற்று"

என்று கதற பின் வருகிறான் கண்ணன். சேலை உருவ உருவ வளர்ந்து திரௌபதியின் மானமும் காப்பற்றப்பட்டது . அப்போது அவள் கண்ணனுக்கு நன்றி தெரிவித்தப்பின்
தன் சபதத்தையும் சபை நடுவே சொல்லுகிறாள்

.பாரதியின் பாஞ்சாலி சபதம் படிக்கப்படிக்க திகட்டாது ,
அதில் அவர் இதை வர்ணிக்கிறார் ,

""தேவி திரௌபதி சொல்வாள்--ஓம்

தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்

பாவி துச்சாசனன் செந்நீர் - அந்தப்

பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம் ,

மேவி இரண்டுங்கலந்து - குழல்

மீதினிற் பூசி நறுநெய் குளித்தே

சீவிக்குழல் முடிப்பேன் யான் -இது

செய்யுமுன்னே முடியே" என்றுரைத்தாள்

தன் முடியை பிரித்தபடி வைத்திருக்க பாரதப்போர் முடிந்து தன் சபதத்தை எப்போது நிறைவேற்றப்
போகிறோம் என்று காத்திருக்கிறாள் அவள் .தலைக்குளிக்காமல ஒரே சிக்குப்பிடித்திருந்தது

பாரதப்போர் முடிந்தது ஆவேசத்துடன் ஓடி வந்து தன் சபதத்தை நிரைவேற்றுகிறாள் திரௌபதி
துச்சாசனனனின் இரத்தம் அவள் கூந்தலில் தடவப்பட்டிருந்தது

இதைக்குறித்து ஒருகதை கேள்விப்பட்டேன்

கண்ணனுக்கும் திரௌபதி ஒருதடவை துணியைக்கொடுத்து காப்பாற்றினாளாம்
ஒரு முறை ஆற்றில் நண்பர்களுடன் நீச்சலடித்து விளயாடிக்கொண்டிருக்க வேடிக்கைக்காக
சில குறும்பு நண்பர்கள் கண்ணனின் உடையையும் கௌபீனத்துடன் பறித்து வைத்துக்கொண்டனர்,
எத்தனை நேரம்தான் நீரில் இருப்பது ? அந்தநேரம் அங்கு வந்த திரௌபதி தன் புடவைத்தலைபை
கிழித்து மானம் காத்து உதவினாளாம் இது காதில் விழுந்த செய்தி

சத்தியபாமாவும் ருக்மிணியும் அந்தத் திரௌபதியின் கண்ணன் பக்தியைக்காண அவளிடம் சென்றனர்
திரௌபதி தலையில் இருக்கும் சிக்கையும் இரத்தத்தையும் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தாள்.
அவளுக்கு உதவ இருவரும் அவளை நெருங்கி தாங்களும் அவள் முடியைச்சரிசெய்தனர்
அப்போது ஒரு அதிசயம் நடந்தது ஒவ்வொரு முடியிலிருந்தும் ஒரு ஒலி எழுந்தது அந்த ஒலி என்ன தெரியுமா? அதுதான் " கிருஷணா கிருஷ்ணா!"
பக்தி என்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும்

Saturday, September 25, 2010

மாமரமே உயர்தரமே

மாமரமே மாமரமே
நிழல் கொடுக்கும் மாமரமே
பூஜைகளில் முதலிடம்
உன் இலைகளுக்கே மாமரமே
கலசம் வைக்க உன் இலைகள்
தோரணம் கட்டவும் உன் இலைகள்
மாம்பூவின் வாசனை ஊரைக்கூட்டும்
அது வசந்தத்தின் ஆரம்பத்தைக்காட்டும்
கிளிகள் அமர ஏற்ற இடம்
அவை "கீ கீ"என்று மகிழும் இடம்
பொத்து பொத்தென்று குதிக்கும் அணில்கள்
மாழ்பழம் சுவைக்கும். அருமை காட்சிகள்,
கனத்த காற்றில் கீழே விழும் மாவடுகள்
அதைப்பொருக்கி எடுத்து கடிக்கும் சிறுவர்கள்
துவர்ப்பும் புளிப்பும் ரசிக்கும் அவர்கள்.
மாங்காய் விழ வீசும் க்ற்கள

அம்மா போடும் மாவடின் ருசி
தயிர் சாதத்துடன் வளரும் பசி
மாமரமே !நீ கொடுக்கும் மாங்காயோ!
ஆவக்காய் ரூபத்தில் காட்சியோ!
சிவப்பு வர்ணத்தில் வருகிறாய்
உறைப்பின் உச்சியைத்தொடுகிறாய்
இனிக்கும் மாம்பழங்கள் தருகிறாய்,
பல "விட்டமின்" னும் கொடுக்கிறாய்.
வண்டுகளின் ரீங்காரத்தின் இனிமை
உற்சாகம் தந்து போக்குவது தனிமை

உன் கீழே கட்டிய மேடை
பஞ்சாயத்துக்கு உபயோகும் மேடை.
நிழலுக்கு அமரும் மேடை
களைப்பைப்போக்கும் மேடை
மாமரமே மாமரமே எங்கள் வீட்டு மாமரமே
நீ பலவகையிலும் உயர்தரமே

Friday, September 24, 2010

பலமுக கணபதி

பெங்களூரில் ஒரு பிள்ளையார் கோயில் பார்த்தேன் அவர் வாகனம் மூஞ்சூர் இல்லை ஆனால் சிங்கமாக இருந்தது இவர் ஆசனத்தில் அமராமல் நின்ற
நிலையில் அருள் புரிகிறார், கீழே இருக்கும் சிங்கமோ அவர் கீழ் சுண்டெலி போல் காட்சி தருகிறது அனுமாருக்கு வடை மாலை சார்த்துவது போல் இவருக்குக் குழக்கட்டை மாலை சாத்துகிறார்கள் இதை கடுபு மாலை என்று சொல்கிறார்கள் தினமுமே இவருக்கு "கணேஷ் சதுர்த்தி" போல் கூட்டம் திரளாக வருகிறது. வெண்ணெயும் சிலர் சாத்துகின்றனர் மிகவும் சக்தி வாய்ந்தவர் இவர்.
இதேபோல் பஞ்சமுக கணபதி சென்னையில் சுவாமிநாத கோயில் கந்தாஸ்ரமத்திலும் காணலாம் இங்கு இருக்கும் ஹேரம்ப கண்பதியின் அடி சுமார்12 அடி, பத்து கைகள் அதில் முறையே பாசம், தந்தம, ருத்ராக்ஷம், பரசு, உலக்கை, மோதகம், அருகம்புல் போன்றவைகள் இருக்கின்றன. இது போல் திருவானைக்காலிலும், புதுக்கோட்டை புவனேஸ்வரி கோயிலிலும் காணலாம்.
யானை முகமே இல்லாமல் மனித முகம் போல் இருக்கும் கணபதியை திருசெங்கட்டான்குடியில் காணலாம்.
இரண்டு முகம் கொண்ட கணபதி மஹாராஷ்ட்ராவில் அருள் புரிகிறார்.
இவரது வர்ணம் பச்சையாம்.
இதேபோல் மூன்று முகம் கொண்ட கணபதி சிவப்பு நிறத்தில் இருக்க, பாசம், அங்குசம், அட்சமாலையுடன் அமர்ந்திருக்கிறார். அவரது இருக்கை பொற்றாமரை மலர்.
ஜப்பானில் இந்த மூன்று முகப் பிள்ளையாரைக் காணலாம்.
நாலு முக கணபதி சீனாவில் இருக்கிறாராம்.
திருக்கழுகுன்றில் ஆறுமுக கணபதி அருள் புரிகிறார்.
இவரை ஷண்முக கணபதி என்று அழைக்கிறார்கள்.
நாம் பிடிக்கும் மஞ்சள் பிள்ளையாரில் முகம் இல்லாமல் வெறும் ஒரு கோணம் தான் இருக்கிறது ஆனாலும் அதிலும் அவர் ஜம்மென்று அமர்ந்து அருள் புரிகிறார்.

:ஓம் கணேசாய நம:

Wednesday, July 22, 2009

"பசுபதியே நீயே கதி "

உரையாடல் சமூக, கலை , இலக்கிய அமைப்பு ” நடத்தும்
சிறுகதைப்போட்டி ……..,,,,,,,,,,,,


பசுபதியே நீயே கதி ,,,,,,,,,


காலைப்பொழுது ,,,,பால் ,,என்ற சத்தம் கேட்டு விழித்தேன் ,என்னால் எழுந்திருக்க
முடியவில்லை , சம தலைவலி ,,மண்டைப்பிளக்கும் தலைவலி ,டம்டம் என்று இடித்தது
மழையில் நனைந்ததால் இருக்குமோ ,,,,அல்லது சைனஸ் தொந்தரவோ,,,,துப்பட்டாவை
எடுத்துத் தலையில் முண்டாசுப்போல் கட்டிக்கொண்டேன் ,துப்பட்டா பலருக்கு இப்போதெல்லாம் மூட வேண்டிய இடம் மூடாமல் கழுத்தில் சிவனது பாம்புப்போல் சுருண்டு கிடக்கிறது …..என் கணவரோ ஹிந்து பேப்பரில் மூழ்கி இருந்தார் காலையில் பேப்பர் அவர் கையில் கிடைத்துவிட்டாலோ பூலோகமா ஸ்வர்கமா ஒன்றும் தெரியாது அவருக்கு ,,,,
நல்ல வேளை,காலைக்காப்பி அவரே செய்து குடித்து விடுவதால் நான் தப்பித்தேன் ,

“கமலா கமலா ,,,அடுத்தாத்துப்பாட்டியின் குரல் ,,என் தலை முண்டாசுடன் அவள் முன்
தரிசனம் தந்தேன் ,

“ஐயோ என்ன இது ? தலைவலியா ,,,,மண்டை குத்துகிறதா?”

“ஆமாம் “ தலையை ஆட்டினேன் ,,,,,,

“இரு தலைக்குப்பத்து செஞ்சிண்டு வரேன்…….. அத நெத்திலே தடவிக்கோ சரியாப்போயிடும் ,

பாட்டி தன் வீட்டிற்குப்போய் சுக்கை நன்றாக இழைத்து அத்துடன் மஞ்சள் பொடி மிளகுப்பொடியைக்கலந்து நீருடன் கலக்கி இலுப்பக்கரண்டியில் சுட வைத்தாள்,
அது கொஞ்சம் இளகியதும் என் தலையில் தடவி விட்டார்,தலை விறுவிறுவென்று
இழுத்தது கொஞ்சம் எரிந்தது ஆனால் இதமாக இருந்தது ,மறுநாள் ,,,,,எனக்குத்தலைவலி
குறைந்தது ,, ஆனால் திரும்பவும் அன்றிரவு தலைவலி ஆரம்பித்தது ,

என் தோழி சரோஜா யதேச்சையாக வந்தாள்,

“என்ன கமலா முகமெல்லாம் ரொம்ப வாடி இருக்கு ஏன் இப்படி டல்லாக இருக்கே?”

இல்லடிசரோஜ் தலைவலி பத்துப்போட்டும் போகலைனு கவலை ,,,,,,”

“என்க்குத்தெரிந்த அலோபதி டாக்டர் சூப்பராகப் பார்ப்பார் நல்ல கைராசி .. அட்ரஸ் தரேன்
அங்கு போய் காமி…” ஏதாவது டியூமர் போல் இருக்கபோகிறது ,ரொம்ப ஈசியா எடுத்துக்காதே”

தலை உடலுக்கு மிக முக்கியமானது ஆயிற்றே. “எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் “
என்ற பழமொழியும் உண்டே ! சரோஜா சொன்னது போல் தலையில் எதாவது கட்டி இருந்தால் ,,,,,,மனதில் பயம் வர அவள் சொன்ன டாக்கடரைப்பார்த்து அலோபதிக்கு ஓடினேன் ….அவர் எல்லாம் சரிவரப்பார்த்து ஒரு பேபரில் ஒரு கிறுக்கல் வரைந்தார்
அவைகள் ம்ருந்தின் பெயர்கள் அந்தத்தாளைப்பல பக்கங்கள் திருப்பிப்பார்த்தும் அவர் எழுதியதைப் படிக்கமுடியவில்லை ,அதை மருந்துக்கடையில் கொடுக்க கடைக்காரர்
பல மருந்துகள் கொடுத்தார் ,பிராக்சிவான் என்ற மாத்திரையும் இருந்தது , கடையில் வேறு ஒருவர் நின்றுக்கொண்டிருந்தார் , இந்தப் “பிராக்சிவான்” என்ற மாத்திரையைப்பார்த்து
“அம்மா இந்த மாத்திரையைப் பார்த்துப்போட்டுக்கொள்ளுங்கள் இது ரொம்ப ஸ்ட்ராங்,,,,,,,கிட்னியைப்பாதிக்கும் “……
அவர் சொன்னது மனதிலே குடைய வீட்டிற்குப்போய் ஒரு மாத்திரைப்போட்டுக்கொண்டு
பின் பயத்தில் நிறுத்திவிட்டேன். இரண்டு நாள் பிறகு திரும்பவும் அதே டாக்டரிடம் போனேன் .
“டாக்டர் இன்னும் தலைவலி வருவதும் போவதுமாக இருக்கிறது என்னசெய்வது ?’
அவ்வளவுதான் …ஏண்டாப்பா கேட்டோம் என்று ஆனது ……..அங்கு மாட்டிக்கொண்டேன் ,,ஸ்கேன் ,சுகர் டெஸ்ட் ,என்று பலவித டெஸ்டுகள் பல ஆயிரம் அந்த
ஆஸ்பதிரிக்கு அழுதேன் , ரிசல்ட் எல்லாம்
நார்மல் என்று தான் வந்தது . அலோபதி மருந்து சாப்பிட தலைவலி போகத் திருகுவலி வந்ததே! இல்லை…..
இல்லை ,,, தலைவலிப்போகாமலே திருகுவலி…….மாத்திரைகள் சாப்பிட்டதில் வயிறு எரிச்சலுடன்
நெஞ்சும் எரிந்தது . ”ஐயோ ராமா இது என்ன? வயிறு வலி யும் சேர்ந்துக்கொண்டதே ! “அவர் கைராசி டாக்டர் தான். எனக்குத்தான் ராசி இல்லை போலிருக்கிறது ” என்று நினைத்து வீடு வந்தேன்
மகாகனம் பொருந்திய உமாபதி . அதுதான் என் கணவரின் பெயர் . “என்ன ஆச்சு ?’ என்று கேட்பது போல் முகபாவம் செய்தார் ,
“ஒன்றுமில்லை எல்லாம் நார்மல் தான் ” என்றேன்
என்னைப்பார்த்துக்கிண்டலாக ஒரு சிரிப்ப சிரித்தார் ” உன் உடம்பில் ஒரு கோளாறும் இல்லை, எல்லாம் மனசுதான்
காரணம் ஓடிஓடி ஏதாவது வேலைச்செய் சரியாகிவிடும் “என்றார் . சில
நாட்கள் கழிந்தன ,என் அண்ணனைப்போல் ஒரு நண்பன் வந்தான் ,வந்தால்
சும்மாஇருக்காமல் “என்ன கமலா இப்படி இளைச்சுப் போயிட்டே! என்ன உடம்பு “?என்று கேட்டான் .

ஆரம்பித்தேன் திரும்ப என் இராமாயணம்.
“ஹோமியோபதி “டாக்டர் சிவராமன் ரொம்ப சூப்பரரொம்ப கரெக்ட்டாக மருந்து தருவார் , என் கூட வா அழைத்துப்போகிறேன் “

சரியென்று ஹோமியோபதி டாக்டரைப்பார்க்கக் கிளம்பினேன் ,அங்கு அந்த டாக்டர் ஒரு
கனமானப் புத்தகம் ஒன்றைத்திறந்து ஒவ்வொரு பக்கமாகப் பிரித்துப்பிரித்துப் பார்த்தார் ,
பின் சர்க்கைரைக் கோலிகளில் சில சொட்டு மருந்துகளை விட்டுக் குலுக்கிக் கொடுத்தார்
அங்கு ஒரு ஆயிரம் சிலவாயிற்று.. பணம் போனால் போகட்டும் உடம்பு சரியானால் சரி
என்று என்னைத் தேற்றிக்கொண்டேன் ,டாக்டரிடம் சென்று வந்தப்பின்னர் மருந்துக்கலந்த அந்தச்சர்க்கரை
கோலிகளை ஸ்வாமி படத்தின் முன் வைத்தேன் ,ஒரு தடவை எடுத்துக்கொண்டேன் ,அடுத்தவீட்டுப்பாட்டியின் குட்டிப்பேரன் இதைப்பார்த்தான் , நான் குளிக்கச்சென்றேன்
திரும்பி வந்துப்பர்த்தேன் அந்தச்சின்னப்புட்டியில் ஒரு நாலு கோலிகள் தான் பாக்கி , மருந்துக்கும் எனக்கும் ராசி இல்லைப்போலிருக்கிறது என நினைக்கும் போது அந்தப்பேராண்டி வந்தான் “மாமி நான் அந்தச்சர்க்கரை கோலிகளைத் தின்னுட்டேன் , வந்து மாமி,,,,,,மாமி
ஸ்வாமி பிரசாதம்னு நினைத்தேன் “ …….எனக்குச்சிரிப்புத்தான் வந்தது ..
இப்படியாக ஹோமியோபதியும் பாதியில் நின்றது ,


ஒரு வாரம் சென்றது . மனம் மறுபடியும் குரங்குப்போல்
தாவியது திரும்ப என்ன வைத்தியம் செய்தால் சரியாகும்
என்று குழம்பினேன் ,ஒரு பத்திரிக்கையைத் திருப்பினேன் .கண்ணில் கொட்டையாகத் தெரிந்தது ஒரு விளம்பரம் ,, “இயற்கை வைத்தியம் ” ஆம் இன்னொரு
பதி ,,,அதுதான் ஆங்கிலத்தில் “நேசரோபதி “எல்லாவிதவியாதிகளையும் மூலிகையினாலும் இயற்கை
வைத்தியத்தினாலும் சரியாக்கி விடுகிறோம் குண்டுக்கு
ஒரு சவால் , பீப்பாயாக இருக்கும் இடையாளை
பிடி இடையாளாக ஆக்கிவிடுவோம் ” என்று ஒரு ராமாயணமே எழுதி இருந்தது , என் கண்முன்னே நான்
பிடி இடையாளாக வந்து அழகுப்போட்டியில் கலந்து பரிசு வாங்கும் அருமையானக்காட்சி ,,,,,,,இந்த மாதிரி ,கற்பனைக்காட்சி வந்து
அடிக்கடி என்னை அங்கும் இங்கும் ஓட வைக்கும்
கற்பனையும் நிஜமாகலாமே என்று நினைத்துப் போனை
அடித்தேன் . மேலும் விசாரித்தேன் ,
அங்கு ஒரு பத்துநாட்கள் தங்க வேண்டுமாம், இயற்கைச்சூழலில் வைத்தியமாம்.மூலிகையினால்
வைத்தியமாம், ஒரு பக்க விளைவும் இல்லை ஆனால்
பத்தாயிரம் கட்ட வேண்டுமாம் ,,
ஆஹா அருமைதான் வீட்டைவிட்டு ஹாய்யாக ஒரு பத்து நாள் ,,சமையல் அறைக்கு விடுதலை
“விடுதலை விடுதலை விடுதலை,
சமையலுக்கும் அரைச்சலுக்கும், சப்பாத்திக்கும் விடுதலை”
என்று என் மனம் பாரதியார் என்ற நினனப்பில் பாடியது.
வீட்டைவிட்டு ஒரு பத்துநாள் போனால்தான் கணவருக்கு என் அருமைத் தெரியும் ஆனால் பூனைக்கு மணி எப்படி கட்டுவது ? அதான் ,,அந்தப்பத்தாயிரத்தை எப்படி அவரிடமிருந்துக்கறப்பது? சரி நல்ல மூடில் இருக்கும் போது கிட்டப்போகலாம் என்று நினைத்தேன் ,

கிரிக்கெட் மாட்ச்சில் நம்மவர்கள் சம விளையாட்டு விளையாடி வெற்றி பெரும் நிலை ,, அவருக்கு ஒரே குஷி
இதுதான் சரியான சமயம் என்று விளம்பரத்தைக்
காட்டினேன் , “ஏன்னா இந்த விளம்பரத்தைப்பாத்தேளா?’
“நான் இங்கே போய்ச்சேர்ந்து வைத்தியம் செய்துக்கொள்ளட்டுமா?

” சரி சரி போ போ அதை ஒண்ணு பாக்கி வைப்பானேன் ,’
வழக்கம் போல் பஞ்சாங்கம் பார்ப்பாயே அஷ்டமி நவமி
சந்தராஷ்டமம் என்று ,,,,,” அடுக்கிக்கொண்டே போனார்

கிண்டல்தான் ! என்ன செய்வது ? நான் வளர்ந்த விதம் அப்படி ,,,,ஓடிபோய் பாம்புப்பஞ்சாங்கம் பார்த்து ஒரு நல்ல நாளைதேர்ந்த்டுத்தேன் ஆனால் கடைசியில் சின்ன எழுத்தில் கரி நாள் என்று எழுதியது என் கண்ணிற்குத்
தென்படலையே ,,,,,,,
ஆயிற்று ஒரு வாரத்திற்கு வேண்டிய உடைகளுடன் இயற்கை வைத்தியம் “ அரும்பாக்கத்திற்கு வந்தாயிற்று ,
உள்ளே ஒருவர் என்னை நன்றாகப்பரிசோதித்து
தினமும் செய்யவேண்டிய் அட்டவணையைக்கொடுத்தார்

ஐயோ இதெல்லாம் எப்படி செய்யப்போகிறேன்
காலை 5 மணிக்குள் எழுந்திருந்து ,,,,வேப்பங்குச்சி
அல்லது ஆலங்குச்சியால் பல் தேய்க்க வேண்டும் .தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்இதையாவது செய்துவிடலாம் ஆனால் காப்பி இல்லாமல் வெறும் வயிற்றுடன் ஒரு 10 சுற்று ஓடவேண்டுமே ,,, சீரியல்கள் எல்லாம் பார்க்க முடியாது அதுவே பெரிய தண்டனை ஆயிற்றே!,,

தவிர பிராணாயாமம தேகப்பயிற்சி மாலையில் பஜன் என அட்டவணையைக் கண்டேன் இரவில் டிபன் தான் ,அதுவும் உடலைப்பொருத்தமாதிரிதான் ,,,,,,


மறுநாள் காலை திருப்பள்ளி எழுச்சிப்போல் மணி அடித்து
சுப்ரபாதம் வைக்கப்பட்டது ,காலை சூரியன் இன்னும் உதிக்கவில்லை பிரண்டுப்படுத்தேன் கண்முழித்தால்தானே,,, பலர் எழுந்துவிட்டது நடமாட்டத்தினால் தெரியவந்தது , “சீ வெட்கக்கேடு
இன்னும் படுத்தால் நன்றாக இருக்காது என்று நினைத்து
சுருட்டிக்கொண்டு எழுந்தேன் பல் தேய்த்தேன்
மனம் சுடச்சுட காப்பி காப்பி என் ஜபம் செய்தது ,எத்தனை வருடப் பழக்கங்கள் ?,விட்டுபோகுமா?

ஏதாவது சூடாகக்கிடைக்காதா என்று ஏங்கினேன் ,,வந்தது ஒரு காப்பி ,,சுக்குமல்லிக்காப்பியாம் ,,,அதைச்சாப்பிட என் மூஞ்சி போன போக்கைப்பார்க்கணுமே ,,என்ன செய்வது ?
உரலில் தலையைக்கொடுத்தாச்சு …என் கண் முன் பத்தாயிரம் ரூபாயும் அடிக்கடி வந்து நின்றது , கூடவே கண்வர் உமாபதியின் முகமும் ,,,,,,
பெரிய மைதானத்தில் ரொம்பக்கஷ்டப்பட்டு ஒரு சுற்று முடித்தேன் ,ஆமை முயல் பந்தயம் ஞாபகம் வந்தது ,
மூச்சு இறைக்க நின்று நின்று நடந்தேன் ,
ஆ சொல்ல மறந்தேனே இதற்கென்று ஒரு சல்வார்
கமீஸ் வேறு தைத்துக்கொண்டேன் …அப்பாடி போதும் போதுமென்று ஆகிவிட்டது , அத்துடன் கசப்பு மருந்துகள்
வேறு ,,அதுதான் கஷாயமாமே,,,,,,,பின் சாப்பாடு இருக்கும்
என்று நினைத்தேனே ,,,,வந்தது பூஷிணிக்காய் ஜூஸ் ,,

அதே போல் ஒருநாள் அருகம்புல் ஜூஸ் பின் இளநீர் என்று வந்ததே தவிர சாப்பாட்டைக் கண்ணிலே காட்டவே இல்லை , அட இரண்டு இட்லி சட்னியாவது தரக்கூடாதா ,,,,,,இத்தனைப் பட்னிப்போட்டுத்தான் “பிடி இடையாளாக ஆக்குகிறார்களோ ,,,,

மாலை வந்தது ,, தேகப்பயிற்ச்சி முடிந்து திரும்ப பூஷிணிக்காய் ஜூஸ் ,,,,
இப்படியே இரண்டு நாட்கள் தள்ளிவிட்டேன் என் கண்முன் மிளகாய் பஜ்ஜியும் வெங்காயப் பக்கோடாவும் வந்து நாக்கை ஊற வைத்தன. பின் என்னைப் படுக்க வைத்து நெற்றி மேல் சொட்டு சொட்டாக எணணெய் விட்டார்கள். ஒரு செம்பு துளையுடன் இருக்க அது வழியாக மருந்தெண்ணை
சொட்டுகிறது அசையாமல் படுக்க வேண்டும் ,, இது தான்
எண்ணைய் தாரா வாம் இதில் ஊற சளிப்பிடித்தாற்போல்
பிரமை
முதுகெல்லாம் வலிப்பது போன்ற பிரமை ,ஆடத்
தெரியாதவளுக்கு முற்றம் கோணல் “என்பது போல் எனக்கு ஒன்றுமே ஒத்துவரவில்லை.. மனம் ஒத்துழைத்தால்தானே….
நல்ல வைத்தியம் தான் , இதற்கு திடமன்ம் வேண்டுமே!

மேலும் இதை வளர்த்துவானேன் நாலாவ்து நாள் ….பொறுமை இழந்தேன் . என் வீடே சுவர்க்கமாகத் தெரிந்தது ,
10000த்தில் மூவாயிரம் தான் சிலவானது இன்னும் பாக்கி இருக்கிறது
என் கணவர் உமாபதிக்குப்போன் போட்டேன்

” நான் திரும்பி வந்துவிடுகிறேன் , இங்கு சுக்கு மல்லிக்காப்பி தான் கிடைக்கிறது வீட்டுக்காப்பியைப் பார்த்து பல நாட்கள் ஆனால் போல் இருக்கிறது”

அங்கிருந்து கடுமையானக் குரல் பதிலாக வந்தது .

“வேறு வேலைஎன்ன்?எல்லா இடத்திலும் காலைவைக்க வேண்டியது .அப்பறம் பாதியில் ஓடி வர வேண்டியது ,,
உங்கப்பன் சமபளம் பாரு”! திரும்பம நக்கல் ……
“இல்லேன்னா என்னாலே ஓட முடியல , தவிர தினமும்
பூஷணிக்காய் ஜூஸ் வேறு , உள்ளே இறங்க மாட்டேங்கறது “
“ஆமாம் பெரிய ராணி ,,உனக்கு வாதாங்கீர் கொடுக்க ,, இயற்கை வைத்தியம்னா பஜ்ஜி பகோடாவா கொடுப்பா .
சரி சரி வீட்டிற்கு வா ,இதுதான் கடைசித்தடவை ,,இனிமே அங்கப்போறேன் இங்கப்போறேன்னு சொல்லு ,,,,என்ன செய்யறேன்னு பாரு” பட்டென்று டெலிபோனை வைத்து விட்டார் ,
அப்பாடி …..ஒரு எரிமலை வெடித்து அடங்கியது
உடனே வீடு கிளம்பினேன். எல்லோரும் ஒரு மாதிரியாகப்
பார்த்தனர்
“கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை” என்று என் உள்
மனமும் சொல்லியது .வாயையும் மனத்தையும் கட்டாமல் உடம்பில் தொல்லை என்றுச்சொல்லுவதில்
என்ன பயன் ?பொறுமை வீசை என்ன விலை என்று கேட்கும் எனக்கு என்ன வைத்தியம் ஒத்துப்போகும் ?

அசடு வழிய வீடு வந்தேன் ,,போன மச்சான் திரும்பி வந்தான் “என்பது போல் திரும்பி வந்தேன் க்ட்டியப்பணம்
கோவிந்தா ஆனது , என் கணவர் முகத்தைப்பார்க்கவே
எப்படியோ இருந்தது நல்ல காலம் ,,மாலையில் காலாற
நடக்கப்போயிருந்தார் , சாவியைப்போட்டுத்திறந்தேன்
கிச்சன் என்னை வா வா என்று அழைக்க சூடாகக்
காப்பிப்போட்டுக்குடித்தேன் , சுவாமிக்கு விளக்கு ஏற்றினேன் , “அப்பா ,,பசுபதியே நீயே கதி “
அலோபதி பார்த்தாச்சு ஹோமியோபதி பாத்தாச்சு நேசுரோபதி பாத்தாச்சு இனி என் கணவர் உமாபதியுடன் இந்தப்பசுபதியே கதி ,,,,இனி நீதான் என்னைக் காக்கவேண்டும் பசுபதியே என்று சிவனை வணங்கினேன் ,

திரும்ப ஒரு போன் வந்தது என் மைத்துனர் சபாபதி பேசினார் ,

“மன்னி உங்கள் தலைவலிக்கு அக்குபஞ்சர் அக்குபிரஷர்
வைத்தியம் இருக்கு ஒரு டாக்டர் ரொம்ப நன்னா பாக்கறார் ,,, வரேளா “

“என் தலைவலி போய்விட்டது இனிபசுபதிதான் வைத்தியர் “

போனை வைத்தேன் அப்பாடி இப்போதுதான் மனம் நிம்மதி அடைந்தது , எல்லா வியாதிகளுக்கும் மனமே
காரணம் இல்லையா ?