Wednesday, July 22, 2009

"பசுபதியே நீயே கதி "

உரையாடல் சமூக, கலை , இலக்கிய அமைப்பு ” நடத்தும்
சிறுகதைப்போட்டி ……..,,,,,,,,,,,,


பசுபதியே நீயே கதி ,,,,,,,,,


காலைப்பொழுது ,,,,பால் ,,என்ற சத்தம் கேட்டு விழித்தேன் ,என்னால் எழுந்திருக்க
முடியவில்லை , சம தலைவலி ,,மண்டைப்பிளக்கும் தலைவலி ,டம்டம் என்று இடித்தது
மழையில் நனைந்ததால் இருக்குமோ ,,,,அல்லது சைனஸ் தொந்தரவோ,,,,துப்பட்டாவை
எடுத்துத் தலையில் முண்டாசுப்போல் கட்டிக்கொண்டேன் ,துப்பட்டா பலருக்கு இப்போதெல்லாம் மூட வேண்டிய இடம் மூடாமல் கழுத்தில் சிவனது பாம்புப்போல் சுருண்டு கிடக்கிறது …..என் கணவரோ ஹிந்து பேப்பரில் மூழ்கி இருந்தார் காலையில் பேப்பர் அவர் கையில் கிடைத்துவிட்டாலோ பூலோகமா ஸ்வர்கமா ஒன்றும் தெரியாது அவருக்கு ,,,,
நல்ல வேளை,காலைக்காப்பி அவரே செய்து குடித்து விடுவதால் நான் தப்பித்தேன் ,

“கமலா கமலா ,,,அடுத்தாத்துப்பாட்டியின் குரல் ,,என் தலை முண்டாசுடன் அவள் முன்
தரிசனம் தந்தேன் ,

“ஐயோ என்ன இது ? தலைவலியா ,,,,மண்டை குத்துகிறதா?”

“ஆமாம் “ தலையை ஆட்டினேன் ,,,,,,

“இரு தலைக்குப்பத்து செஞ்சிண்டு வரேன்…….. அத நெத்திலே தடவிக்கோ சரியாப்போயிடும் ,

பாட்டி தன் வீட்டிற்குப்போய் சுக்கை நன்றாக இழைத்து அத்துடன் மஞ்சள் பொடி மிளகுப்பொடியைக்கலந்து நீருடன் கலக்கி இலுப்பக்கரண்டியில் சுட வைத்தாள்,
அது கொஞ்சம் இளகியதும் என் தலையில் தடவி விட்டார்,தலை விறுவிறுவென்று
இழுத்தது கொஞ்சம் எரிந்தது ஆனால் இதமாக இருந்தது ,மறுநாள் ,,,,,எனக்குத்தலைவலி
குறைந்தது ,, ஆனால் திரும்பவும் அன்றிரவு தலைவலி ஆரம்பித்தது ,

என் தோழி சரோஜா யதேச்சையாக வந்தாள்,

“என்ன கமலா முகமெல்லாம் ரொம்ப வாடி இருக்கு ஏன் இப்படி டல்லாக இருக்கே?”

இல்லடிசரோஜ் தலைவலி பத்துப்போட்டும் போகலைனு கவலை ,,,,,,”

“என்க்குத்தெரிந்த அலோபதி டாக்டர் சூப்பராகப் பார்ப்பார் நல்ல கைராசி .. அட்ரஸ் தரேன்
அங்கு போய் காமி…” ஏதாவது டியூமர் போல் இருக்கபோகிறது ,ரொம்ப ஈசியா எடுத்துக்காதே”

தலை உடலுக்கு மிக முக்கியமானது ஆயிற்றே. “எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் “
என்ற பழமொழியும் உண்டே ! சரோஜா சொன்னது போல் தலையில் எதாவது கட்டி இருந்தால் ,,,,,,மனதில் பயம் வர அவள் சொன்ன டாக்கடரைப்பார்த்து அலோபதிக்கு ஓடினேன் ….அவர் எல்லாம் சரிவரப்பார்த்து ஒரு பேபரில் ஒரு கிறுக்கல் வரைந்தார்
அவைகள் ம்ருந்தின் பெயர்கள் அந்தத்தாளைப்பல பக்கங்கள் திருப்பிப்பார்த்தும் அவர் எழுதியதைப் படிக்கமுடியவில்லை ,அதை மருந்துக்கடையில் கொடுக்க கடைக்காரர்
பல மருந்துகள் கொடுத்தார் ,பிராக்சிவான் என்ற மாத்திரையும் இருந்தது , கடையில் வேறு ஒருவர் நின்றுக்கொண்டிருந்தார் , இந்தப் “பிராக்சிவான்” என்ற மாத்திரையைப்பார்த்து
“அம்மா இந்த மாத்திரையைப் பார்த்துப்போட்டுக்கொள்ளுங்கள் இது ரொம்ப ஸ்ட்ராங்,,,,,,,கிட்னியைப்பாதிக்கும் “……
அவர் சொன்னது மனதிலே குடைய வீட்டிற்குப்போய் ஒரு மாத்திரைப்போட்டுக்கொண்டு
பின் பயத்தில் நிறுத்திவிட்டேன். இரண்டு நாள் பிறகு திரும்பவும் அதே டாக்டரிடம் போனேன் .
“டாக்டர் இன்னும் தலைவலி வருவதும் போவதுமாக இருக்கிறது என்னசெய்வது ?’
அவ்வளவுதான் …ஏண்டாப்பா கேட்டோம் என்று ஆனது ……..அங்கு மாட்டிக்கொண்டேன் ,,ஸ்கேன் ,சுகர் டெஸ்ட் ,என்று பலவித டெஸ்டுகள் பல ஆயிரம் அந்த
ஆஸ்பதிரிக்கு அழுதேன் , ரிசல்ட் எல்லாம்
நார்மல் என்று தான் வந்தது . அலோபதி மருந்து சாப்பிட தலைவலி போகத் திருகுவலி வந்ததே! இல்லை…..
இல்லை ,,, தலைவலிப்போகாமலே திருகுவலி…….மாத்திரைகள் சாப்பிட்டதில் வயிறு எரிச்சலுடன்
நெஞ்சும் எரிந்தது . ”ஐயோ ராமா இது என்ன? வயிறு வலி யும் சேர்ந்துக்கொண்டதே ! “அவர் கைராசி டாக்டர் தான். எனக்குத்தான் ராசி இல்லை போலிருக்கிறது ” என்று நினைத்து வீடு வந்தேன்
மகாகனம் பொருந்திய உமாபதி . அதுதான் என் கணவரின் பெயர் . “என்ன ஆச்சு ?’ என்று கேட்பது போல் முகபாவம் செய்தார் ,
“ஒன்றுமில்லை எல்லாம் நார்மல் தான் ” என்றேன்
என்னைப்பார்த்துக்கிண்டலாக ஒரு சிரிப்ப சிரித்தார் ” உன் உடம்பில் ஒரு கோளாறும் இல்லை, எல்லாம் மனசுதான்
காரணம் ஓடிஓடி ஏதாவது வேலைச்செய் சரியாகிவிடும் “என்றார் . சில
நாட்கள் கழிந்தன ,என் அண்ணனைப்போல் ஒரு நண்பன் வந்தான் ,வந்தால்
சும்மாஇருக்காமல் “என்ன கமலா இப்படி இளைச்சுப் போயிட்டே! என்ன உடம்பு “?என்று கேட்டான் .

ஆரம்பித்தேன் திரும்ப என் இராமாயணம்.
“ஹோமியோபதி “டாக்டர் சிவராமன் ரொம்ப சூப்பரரொம்ப கரெக்ட்டாக மருந்து தருவார் , என் கூட வா அழைத்துப்போகிறேன் “

சரியென்று ஹோமியோபதி டாக்டரைப்பார்க்கக் கிளம்பினேன் ,அங்கு அந்த டாக்டர் ஒரு
கனமானப் புத்தகம் ஒன்றைத்திறந்து ஒவ்வொரு பக்கமாகப் பிரித்துப்பிரித்துப் பார்த்தார் ,
பின் சர்க்கைரைக் கோலிகளில் சில சொட்டு மருந்துகளை விட்டுக் குலுக்கிக் கொடுத்தார்
அங்கு ஒரு ஆயிரம் சிலவாயிற்று.. பணம் போனால் போகட்டும் உடம்பு சரியானால் சரி
என்று என்னைத் தேற்றிக்கொண்டேன் ,டாக்டரிடம் சென்று வந்தப்பின்னர் மருந்துக்கலந்த அந்தச்சர்க்கரை
கோலிகளை ஸ்வாமி படத்தின் முன் வைத்தேன் ,ஒரு தடவை எடுத்துக்கொண்டேன் ,அடுத்தவீட்டுப்பாட்டியின் குட்டிப்பேரன் இதைப்பார்த்தான் , நான் குளிக்கச்சென்றேன்
திரும்பி வந்துப்பர்த்தேன் அந்தச்சின்னப்புட்டியில் ஒரு நாலு கோலிகள் தான் பாக்கி , மருந்துக்கும் எனக்கும் ராசி இல்லைப்போலிருக்கிறது என நினைக்கும் போது அந்தப்பேராண்டி வந்தான் “மாமி நான் அந்தச்சர்க்கரை கோலிகளைத் தின்னுட்டேன் , வந்து மாமி,,,,,,மாமி
ஸ்வாமி பிரசாதம்னு நினைத்தேன் “ …….எனக்குச்சிரிப்புத்தான் வந்தது ..
இப்படியாக ஹோமியோபதியும் பாதியில் நின்றது ,


ஒரு வாரம் சென்றது . மனம் மறுபடியும் குரங்குப்போல்
தாவியது திரும்ப என்ன வைத்தியம் செய்தால் சரியாகும்
என்று குழம்பினேன் ,ஒரு பத்திரிக்கையைத் திருப்பினேன் .கண்ணில் கொட்டையாகத் தெரிந்தது ஒரு விளம்பரம் ,, “இயற்கை வைத்தியம் ” ஆம் இன்னொரு
பதி ,,,அதுதான் ஆங்கிலத்தில் “நேசரோபதி “எல்லாவிதவியாதிகளையும் மூலிகையினாலும் இயற்கை
வைத்தியத்தினாலும் சரியாக்கி விடுகிறோம் குண்டுக்கு
ஒரு சவால் , பீப்பாயாக இருக்கும் இடையாளை
பிடி இடையாளாக ஆக்கிவிடுவோம் ” என்று ஒரு ராமாயணமே எழுதி இருந்தது , என் கண்முன்னே நான்
பிடி இடையாளாக வந்து அழகுப்போட்டியில் கலந்து பரிசு வாங்கும் அருமையானக்காட்சி ,,,,,,,இந்த மாதிரி ,கற்பனைக்காட்சி வந்து
அடிக்கடி என்னை அங்கும் இங்கும் ஓட வைக்கும்
கற்பனையும் நிஜமாகலாமே என்று நினைத்துப் போனை
அடித்தேன் . மேலும் விசாரித்தேன் ,
அங்கு ஒரு பத்துநாட்கள் தங்க வேண்டுமாம், இயற்கைச்சூழலில் வைத்தியமாம்.மூலிகையினால்
வைத்தியமாம், ஒரு பக்க விளைவும் இல்லை ஆனால்
பத்தாயிரம் கட்ட வேண்டுமாம் ,,
ஆஹா அருமைதான் வீட்டைவிட்டு ஹாய்யாக ஒரு பத்து நாள் ,,சமையல் அறைக்கு விடுதலை
“விடுதலை விடுதலை விடுதலை,
சமையலுக்கும் அரைச்சலுக்கும், சப்பாத்திக்கும் விடுதலை”
என்று என் மனம் பாரதியார் என்ற நினனப்பில் பாடியது.
வீட்டைவிட்டு ஒரு பத்துநாள் போனால்தான் கணவருக்கு என் அருமைத் தெரியும் ஆனால் பூனைக்கு மணி எப்படி கட்டுவது ? அதான் ,,அந்தப்பத்தாயிரத்தை எப்படி அவரிடமிருந்துக்கறப்பது? சரி நல்ல மூடில் இருக்கும் போது கிட்டப்போகலாம் என்று நினைத்தேன் ,

கிரிக்கெட் மாட்ச்சில் நம்மவர்கள் சம விளையாட்டு விளையாடி வெற்றி பெரும் நிலை ,, அவருக்கு ஒரே குஷி
இதுதான் சரியான சமயம் என்று விளம்பரத்தைக்
காட்டினேன் , “ஏன்னா இந்த விளம்பரத்தைப்பாத்தேளா?’
“நான் இங்கே போய்ச்சேர்ந்து வைத்தியம் செய்துக்கொள்ளட்டுமா?

” சரி சரி போ போ அதை ஒண்ணு பாக்கி வைப்பானேன் ,’
வழக்கம் போல் பஞ்சாங்கம் பார்ப்பாயே அஷ்டமி நவமி
சந்தராஷ்டமம் என்று ,,,,,” அடுக்கிக்கொண்டே போனார்

கிண்டல்தான் ! என்ன செய்வது ? நான் வளர்ந்த விதம் அப்படி ,,,,ஓடிபோய் பாம்புப்பஞ்சாங்கம் பார்த்து ஒரு நல்ல நாளைதேர்ந்த்டுத்தேன் ஆனால் கடைசியில் சின்ன எழுத்தில் கரி நாள் என்று எழுதியது என் கண்ணிற்குத்
தென்படலையே ,,,,,,,
ஆயிற்று ஒரு வாரத்திற்கு வேண்டிய உடைகளுடன் இயற்கை வைத்தியம் “ அரும்பாக்கத்திற்கு வந்தாயிற்று ,
உள்ளே ஒருவர் என்னை நன்றாகப்பரிசோதித்து
தினமும் செய்யவேண்டிய் அட்டவணையைக்கொடுத்தார்

ஐயோ இதெல்லாம் எப்படி செய்யப்போகிறேன்
காலை 5 மணிக்குள் எழுந்திருந்து ,,,,வேப்பங்குச்சி
அல்லது ஆலங்குச்சியால் பல் தேய்க்க வேண்டும் .தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்இதையாவது செய்துவிடலாம் ஆனால் காப்பி இல்லாமல் வெறும் வயிற்றுடன் ஒரு 10 சுற்று ஓடவேண்டுமே ,,, சீரியல்கள் எல்லாம் பார்க்க முடியாது அதுவே பெரிய தண்டனை ஆயிற்றே!,,

தவிர பிராணாயாமம தேகப்பயிற்சி மாலையில் பஜன் என அட்டவணையைக் கண்டேன் இரவில் டிபன் தான் ,அதுவும் உடலைப்பொருத்தமாதிரிதான் ,,,,,,


மறுநாள் காலை திருப்பள்ளி எழுச்சிப்போல் மணி அடித்து
சுப்ரபாதம் வைக்கப்பட்டது ,காலை சூரியன் இன்னும் உதிக்கவில்லை பிரண்டுப்படுத்தேன் கண்முழித்தால்தானே,,, பலர் எழுந்துவிட்டது நடமாட்டத்தினால் தெரியவந்தது , “சீ வெட்கக்கேடு
இன்னும் படுத்தால் நன்றாக இருக்காது என்று நினைத்து
சுருட்டிக்கொண்டு எழுந்தேன் பல் தேய்த்தேன்
மனம் சுடச்சுட காப்பி காப்பி என் ஜபம் செய்தது ,எத்தனை வருடப் பழக்கங்கள் ?,விட்டுபோகுமா?

ஏதாவது சூடாகக்கிடைக்காதா என்று ஏங்கினேன் ,,வந்தது ஒரு காப்பி ,,சுக்குமல்லிக்காப்பியாம் ,,,அதைச்சாப்பிட என் மூஞ்சி போன போக்கைப்பார்க்கணுமே ,,என்ன செய்வது ?
உரலில் தலையைக்கொடுத்தாச்சு …என் கண் முன் பத்தாயிரம் ரூபாயும் அடிக்கடி வந்து நின்றது , கூடவே கண்வர் உமாபதியின் முகமும் ,,,,,,
பெரிய மைதானத்தில் ரொம்பக்கஷ்டப்பட்டு ஒரு சுற்று முடித்தேன் ,ஆமை முயல் பந்தயம் ஞாபகம் வந்தது ,
மூச்சு இறைக்க நின்று நின்று நடந்தேன் ,
ஆ சொல்ல மறந்தேனே இதற்கென்று ஒரு சல்வார்
கமீஸ் வேறு தைத்துக்கொண்டேன் …அப்பாடி போதும் போதுமென்று ஆகிவிட்டது , அத்துடன் கசப்பு மருந்துகள்
வேறு ,,அதுதான் கஷாயமாமே,,,,,,,பின் சாப்பாடு இருக்கும்
என்று நினைத்தேனே ,,,,வந்தது பூஷிணிக்காய் ஜூஸ் ,,

அதே போல் ஒருநாள் அருகம்புல் ஜூஸ் பின் இளநீர் என்று வந்ததே தவிர சாப்பாட்டைக் கண்ணிலே காட்டவே இல்லை , அட இரண்டு இட்லி சட்னியாவது தரக்கூடாதா ,,,,,,இத்தனைப் பட்னிப்போட்டுத்தான் “பிடி இடையாளாக ஆக்குகிறார்களோ ,,,,

மாலை வந்தது ,, தேகப்பயிற்ச்சி முடிந்து திரும்ப பூஷிணிக்காய் ஜூஸ் ,,,,
இப்படியே இரண்டு நாட்கள் தள்ளிவிட்டேன் என் கண்முன் மிளகாய் பஜ்ஜியும் வெங்காயப் பக்கோடாவும் வந்து நாக்கை ஊற வைத்தன. பின் என்னைப் படுக்க வைத்து நெற்றி மேல் சொட்டு சொட்டாக எணணெய் விட்டார்கள். ஒரு செம்பு துளையுடன் இருக்க அது வழியாக மருந்தெண்ணை
சொட்டுகிறது அசையாமல் படுக்க வேண்டும் ,, இது தான்
எண்ணைய் தாரா வாம் இதில் ஊற சளிப்பிடித்தாற்போல்
பிரமை
முதுகெல்லாம் வலிப்பது போன்ற பிரமை ,ஆடத்
தெரியாதவளுக்கு முற்றம் கோணல் “என்பது போல் எனக்கு ஒன்றுமே ஒத்துவரவில்லை.. மனம் ஒத்துழைத்தால்தானே….
நல்ல வைத்தியம் தான் , இதற்கு திடமன்ம் வேண்டுமே!

மேலும் இதை வளர்த்துவானேன் நாலாவ்து நாள் ….பொறுமை இழந்தேன் . என் வீடே சுவர்க்கமாகத் தெரிந்தது ,
10000த்தில் மூவாயிரம் தான் சிலவானது இன்னும் பாக்கி இருக்கிறது
என் கணவர் உமாபதிக்குப்போன் போட்டேன்

” நான் திரும்பி வந்துவிடுகிறேன் , இங்கு சுக்கு மல்லிக்காப்பி தான் கிடைக்கிறது வீட்டுக்காப்பியைப் பார்த்து பல நாட்கள் ஆனால் போல் இருக்கிறது”

அங்கிருந்து கடுமையானக் குரல் பதிலாக வந்தது .

“வேறு வேலைஎன்ன்?எல்லா இடத்திலும் காலைவைக்க வேண்டியது .அப்பறம் பாதியில் ஓடி வர வேண்டியது ,,
உங்கப்பன் சமபளம் பாரு”! திரும்பம நக்கல் ……
“இல்லேன்னா என்னாலே ஓட முடியல , தவிர தினமும்
பூஷணிக்காய் ஜூஸ் வேறு , உள்ளே இறங்க மாட்டேங்கறது “
“ஆமாம் பெரிய ராணி ,,உனக்கு வாதாங்கீர் கொடுக்க ,, இயற்கை வைத்தியம்னா பஜ்ஜி பகோடாவா கொடுப்பா .
சரி சரி வீட்டிற்கு வா ,இதுதான் கடைசித்தடவை ,,இனிமே அங்கப்போறேன் இங்கப்போறேன்னு சொல்லு ,,,,என்ன செய்யறேன்னு பாரு” பட்டென்று டெலிபோனை வைத்து விட்டார் ,
அப்பாடி …..ஒரு எரிமலை வெடித்து அடங்கியது
உடனே வீடு கிளம்பினேன். எல்லோரும் ஒரு மாதிரியாகப்
பார்த்தனர்
“கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை” என்று என் உள்
மனமும் சொல்லியது .வாயையும் மனத்தையும் கட்டாமல் உடம்பில் தொல்லை என்றுச்சொல்லுவதில்
என்ன பயன் ?பொறுமை வீசை என்ன விலை என்று கேட்கும் எனக்கு என்ன வைத்தியம் ஒத்துப்போகும் ?

அசடு வழிய வீடு வந்தேன் ,,போன மச்சான் திரும்பி வந்தான் “என்பது போல் திரும்பி வந்தேன் க்ட்டியப்பணம்
கோவிந்தா ஆனது , என் கணவர் முகத்தைப்பார்க்கவே
எப்படியோ இருந்தது நல்ல காலம் ,,மாலையில் காலாற
நடக்கப்போயிருந்தார் , சாவியைப்போட்டுத்திறந்தேன்
கிச்சன் என்னை வா வா என்று அழைக்க சூடாகக்
காப்பிப்போட்டுக்குடித்தேன் , சுவாமிக்கு விளக்கு ஏற்றினேன் , “அப்பா ,,பசுபதியே நீயே கதி “
அலோபதி பார்த்தாச்சு ஹோமியோபதி பாத்தாச்சு நேசுரோபதி பாத்தாச்சு இனி என் கணவர் உமாபதியுடன் இந்தப்பசுபதியே கதி ,,,,இனி நீதான் என்னைக் காக்கவேண்டும் பசுபதியே என்று சிவனை வணங்கினேன் ,

திரும்ப ஒரு போன் வந்தது என் மைத்துனர் சபாபதி பேசினார் ,

“மன்னி உங்கள் தலைவலிக்கு அக்குபஞ்சர் அக்குபிரஷர்
வைத்தியம் இருக்கு ஒரு டாக்டர் ரொம்ப நன்னா பாக்கறார் ,,, வரேளா “

“என் தலைவலி போய்விட்டது இனிபசுபதிதான் வைத்தியர் “

போனை வைத்தேன் அப்பாடி இப்போதுதான் மனம் நிம்மதி அடைந்தது , எல்லா வியாதிகளுக்கும் மனமே
காரணம் இல்லையா ?

பண்டரிபுரம்

ஆடி மாதம் { ஜுலை 17-ஆகஸ்டு 17 வரை} வரும் ஏகாதசி மஹராஷ்டரத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள் ,காவடிப் போல் தோளில் இருபக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்து
விட்டு வருவார்கள் ,பண்டரிபுரம் வரை பொடி நடைதான் ,நடு நடுவே சில பிரபுக்கள் அவர்களுக்கு
வயிற்றுக்கு உணவும் பெரிய பந்தல் போட்டு படைப்பார்கள் சிறுவர்களும் இதில் கூட்டம்
கூட்டமாகப் போவார்கள் அவர்கள் வாயில் " பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா "
என்றும் விட்டல் விட்டல் ஜய ஜய விட்டல் என்றும் விடாமல் நாமஜபம் வந்துக் கொண்டிருக்கும் அந்த நாமம் கேட்டாலே உடலெல்லாம் புல்லரிக்கும்
இப்போது அந்த விட்டல் எப்படி வந்தார் என்ற கதையைப் பார்ப்போம்

லோக தண்டம் என்ற காட்டில் ஜன்னு முனிவர் வாழ்ந்து வந்தார் அவர் மனைவியின் பெயர்
சாத்தகி ,அவ்ருக்கு பலவருடங்கள் கழித்து ஒரு மகன் பிறந்தான் அவன் பிறந்தும் ஏன் பிறந்தான் என்று அவர்களுக்கு ஆகிவிட்டது அவன் பெயர் புண்டரீகன் .எதைப் பார்த்தாலும் அழிப்பான் துன்புறுத்துவான் நாய் மேல் கல் வீசுவான் ,முயலின் காதைத் திருகுவான் .இப்படி முரடாகவே வளர்ந்து பெற்றோர் பேச்சைக் கேட்காமல் பதிலுக்கு
எதிர்த்துப் பேசவும் துணிந்தான் ,அவனுக்கு திருமணம் செய்தால் வழிக்கு வருவான் என்று
எண்ணி புண்டரீகனுக்கு அவன் தந்தை ஒரு நல்லப் பெண்ணாகப் பார்த்து திருமணம்
செய்து வைத்தார்.ஆனாலும் அவன் செயலில் மாறுதல் இல்லை ,வீட்டில் மனைவி இருக்கும் போதே வெளியிலேயே இன்பம் தேடினான் ,அவன் தந்தை மனம் ஒடிந்து
வருந்தி அவனுக்குப் புத்தி கூறினார் ,அதற்கு அவன் "அப்பா நான் என் இஷ்டப்படி தான்
இருப்பேன் ,இந்த வீட்டில் எனக்கு சுதந்திரமில்லை ஆகையால் நான் இந்த வீட்டை விட்டுப்
போகிறேன் ,," என்று கத்தி தன் மனைவியுடன் வீட்டைவிட்டு வெளியேறினான் ,அவன்
பெற்றோர் மனமுடைந்துப் போனார்கள் பலநாடகள் பிறகு அவர்கள் ஒரு குழுவுடன்
காசி யாத்திரைக்குக் கிளம்பினார்கள் ஒரே மகன் தனக்கு இருந்தும் இப்படி விதி ஆகி விட்டதே என்று வருந்தி எல்லாம் கடவுளுக்கே அர்ப்பணம் செய்து விட்டார்கள்.

இதே நேரத்தில் தன் தந்தை தாய் காசிக்குக் கிளம்பியதை அறிந்து புண்டரீகனும் ஒரு குதிரையின் மேல் தன் மனைவியுடன் கிளம்பினான் ,வழியில் மனைவி தன் மாமனார் மாமியார் தள்ளாமல்
காலில் செறுப்புமில்லாமல் நடந்து வருவதைக் கவனித்து தன்
கணவரிடம் அவர்களுக்கு உதவும்படிக் கூறினாள் .ஆனால் அவன் "வாயை மூடிக்கொண்டு வா அவர்கள் கிழங்கள் வந்தால் நம்க்குத்தான் கஷ்டம் " என்றான் இரக்கமில்லாமல் ,,
அங்கு ஒரு சத்திரம் தென்பட்டது அங்குப் போய் சிறிது நேரம் களைப்பாறிவிட்டுச செல்லலாம் என்று அங்கு மனைவியுடன் போனான் .அதனருகில் ஒரு முனிவரின் ஆஸ்ரமம் இருந்தது ,
அங்கு குக்கூடக முனிவர் என்று ஒருவர் இருந்தார்,
பொழுது போகாமல் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தான் ஒரு முனிவர்
தென்பட்டார் ,உடனே அவரிடம் போய் " காசி ஷேத்திரம்.எங்கு உள்ளது ?
என்று கேட்டான் "காசியா ?எனக்குத் தெரியாதே ",,,,,,,,
"இது கூடத் தெரியாமல் நீங்கள் என்ன முனிவர்?
"காசி என்ற இடத்திற்கு நல்ல பண்புள்ளவர்கள் தான் போக வேண்டும் ..
நீ போகவேண்டும் என்கிறாயே ,,,"
இதைக் கேட்டு கோபம் கொண்டு திரும்பவும் தன் இடத்திற்கு வந்து விட்டான்
இரவு நேரம் ,,,,தூக்கம் வராமல் வெளியில் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மூன்று பெண்கள் நுழைந்தனர் ,மூன்று பேரும் மிகவும் கருப்பாகவும் அழுக்குடன் கோரமாகவும் இருந்தனர் ,,அந்த ஆஸ்ரமத்தில்
நுழைந்தௌ அவர்கள் பல வேலைகள் செய்தனர் ஒருவள் வீடு கூட்டினாள்
மற்றொருவள் வீடு துப்புறத் துடைத்து அழகான் கோலம் இட்டாள்.பின்
அந்த முனிவரின் பாதத்தை நீரால் கழுவி துடைத்து வணங்கினாள்,பின் அவர்கள் வெளியே வந்தனர் , என்ன ஆச்சரியம் மூன்று பேர்களும் மிகவும் அழகாக லட்சணமாக சுந்தரிகளாக வந்தனர் , "இது என்ன மாயை! போகும்
போது சகிக்க முடியாமல் இருந்தார்கள் .இப்போது எப்படி இது?
வியந்து புண்டரீகன் அவர்களிடம் ஓடினான் "சுந்தரிகளே ,நீங்கள் யார்?
சொல்லுங்கள் " என்றுக் கேட்டபடி ஒருவளது கையைப் பற்றினான் ,
அவள் மிகவும் கோபம் கொண்டு கையை உதறி பின் சொன்னாள்.
"நாங்கள் கங்கை யமனை ,ஸரஸ்வதி நதிகள், தினமும் பலர் குளிப்பதால் பாபம்
சேர்ந்து அந்தப் பாபத்தைக் கழுவ இங்கு வந்து சேவைச் செய்கிறோம் இந்தக்
குக்கூட முனிவருக்குச் சேவைச் செய்து எங்கள் பாபத்தைப் போக்கிக்
கொள்கிறோம் பாபம் எங்களிடம் சேர அவலட்சண்மாக மாறுவோம் இங்கு தினமும் வந்து அதைப் போக்கிக் கொள்கிறோம் போன ஜன்மப்
புண்ணியத்தினால் தான் நீ எங்களைப் பார்த்திருக்கிறாய் ,இனியாவதும்
திருந்தி பெற்ரோருக்கு சேவைச் செய்,,நீ இத்தனை நாடகள் செய்தப்
பாபத்தைப் போக்கிக் கொள் உன் துர்குண்த்தை மாற்றிக் கொள் ,தாய் தந்தைதான் உனக்குத் தெய்வம் அவர்களை வணங்கு"
புண்டரீகன் எதோ மந்திரச் சக்திக்குக் கட்டுப்பட்டது போல் மனம் மாறினான்
தான் செய்தத் தவறுகளுக்கு வருந்தினான் ,பின் கங்கா தேவியிடம் கேட்டான்
"இந்த முனிவர் யார்? இவரைத் தொழுதால் எப்படி பாவங்கள் விலகுகின்றன ?
" அப்பா புண்டரீகா ,இவர் கோவில் போனதில்லை ,யாகம் செய்ததில்லை
தான தருமம் செய்ததில்லை ,ஆனால் விடாமல் பெற்றோருக்குப்
பணிவிடைச் செய்து வருகிறார் அவர்களே அவரின் தெயவம் ,பாபம்
செய்தவர்கள் இவர் பாதத்தைத் தொட்டாலே போதும் .பாபங்கள் கரைந்துப்
போகும் "
" தாயே நான் பெற்றோருக்கு பல அநீதிகளை இழைத்து விட்டேன் , இப்போது
திருந்தி விட்டேன் இதோ இப்போதே போகிறேன் அவ்ருக்கு மனம் உவந்து
சேவைச் செய்வேன் ,"
திரும்பி வந்து படுத்தப்பின் காலையில் குக்கூட முனிவரைத் தரிசித்து அவர் பாதங்களைக் கழுவி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு பல சேவைகள் செய்தான்
ஆசியும் பெற்றான் பின் பெற்றோரைத் தேடி கண்ணிரால் பாதங்களைக்
கழுவினான் அதன் பின் அவன் உலகமே அவன் தாய் தந்தை தான்
வேறு ஒரு சிந்தனையும் இல்லை , இதெல்ல்லாம் பார்த்த கிருஷ்ணர் அவன்
சேவைக்கு மெச்சி அவனைப் பார்க்க பூலோகத்திற்கு வந்தார் , அவன் வீட்டு
வாசலில் வந்து கதவைத் தட்டினார் ,"புண்டரீகா புண்டரீகா ,,,,,
" யார் ,,,,யாராயிருந்தாலும் அங்கேயே நில்லுங்கள் ,நான் பெற்றோரின்
சேவையில் ஈடு பட்டுள்ளேன் " என்று ஒரு செங்கலைக் கதவைத்திறந்து வீசிப்
போட்டான் ,அந்த மாயக் கண்ணன் பக்தனுக்காக அந்தச் செங்கல் மேல் நின்று
இரண்டு கைகளும் இடுப்பில் வைத்துக் கொண்டார் ,, அப்படியே நின்றிருந்தார் ,
வெகு நேரம் கழித்து புண்டரீகன் கதவைத் திறந்தான் பார்த்தான்
கண்ணனை ,,தன்னை மறந்தான் ,அப்படியே சாஷ்டாங்கமாக வணங்கினான்.
"இந்தப் பாபச் செயலுக்கு மன்னியுங்கள் தங்களுக்குப் போய் செங்களைப்
போட்டு அதில் நிற்கவும் சொன்னேனே "

புண்டரீகா உன் சேவைக்கு மெச்சினேன் ,எதாவது வரன் கேள் "
"உங்கள் அருள் இருந்தாலே போதுமானது ஸ்வாமி'
புண்டரீகா உன் சேவையினால் புகழ் பெற்ற இந்த இடம் இனி பண்டரிபுரம் என்று நிலைக்கட்டும் நீ இங்கிருந்து எல்லோருக்கும் ஆசி வழங்கி வருவாய்
உன்னை எல்லோரும் "விட்டல் "என்றும் அழைத்து என்னையே உன்னிடம்
காண்பார்கள் "என்றார்

ஆடிமாதம் இந்த விட்டல் வந்ததால் ஏகாதசி அன்று மிகச் சிறப்பாக விரதம்
இருந்து மராட்டியர்கள் கொண்டாடுகிறார்கள்

Monday, June 29, 2009

அன்பே தெய்வம்

June 24, 2009
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு ” நடத்தும் சிறுகதை போட்டி ,,,,……………………
….அன்பே தெய்வம் …
…………….
“ட்ரிங் டிரிங் ” … டெலிபோன் மணி ஒலித்தது ,”இந்தப்போன்

பால் காச்சும் போதுதான் வரும், இரு இரு வரேன்” என்று ஒரு குழந்தைப்போல் சொல்லிக்கொண்டு ராஜம் போனை எடுத்தாள். “ஹலோ ஹலோ யார் பேசறது “?

“நான் தான் சுப்பிரமண்யன்”

“”நமஸ்காரம் இருங்கோ. இதோ எங்காத்து மாமாவைக் கூப்படறேன்”………டெலிபோனைப்பொத்தியபடி, “ஏன்னா இந்தாங்கோ நம்ம சம்பந்தி…. கூப்பிடறார் உடனே வாங்கோ”என்று தன் கணவர் சிவராமனைக் கூப்பிட்டாள் . பாதி ஷவரம் செய்த முகத்துடன் அவரும் வந்தார் “ஹலோ நமஸ்காரம் சௌக்கியமா? எப்போ முகூர்த்தத்தை வச்சுக்கலாம் ?

“அதுதான் சொல்ல வந்தேன். இந்தச்சம்பந்ததம் நடக்காது மன்னிக்கணும் , நீங்கள் நிச்சியதார்த்தம் அன்று போட்ட பொருட்கள் எல்லாம் திருப்பித் தந்துவிடுகிறோம், வந்து எடுத்துங்கோ.

“ஏன் என்ன ஆச்சு ? எல்லாம் நன்னாத்தானே நடந்தது இப்ப என்ன திடீர்னு …”

மேலே ஒண்ணும் சொல்லறதுக்கில்லை வச்சுடறேன்”

ராஜம் கேட்டாள் “என்ன ஆச்சு ?ஏன் இப்படி இடிஞ்சுப்போய் நிக்கறேள் ?

“நம்ம சம்பந்தம் வேண்டாம்னு சொல்றா …. நம்ம பையனுக்கு என்ன குறைச்சல் …ராஜா மாதிரி இருக்கான் சி ஏ வேறு …….கை நிறைய சம்பளம் ….அவாளுக்கு என்ன….. கசக்கறதா?சரி, விடு இந்தப்பெண் இல்லேன்னா எத்தனையோ பெண்கள்……..”ராஜத்திற்கு மனம் உளைச்சல் கண்டது . ஓடிப்போய் தன் தங்கையிடம் போனில் தெரிவித்தாள் பின் திருவாரூரில் இருக்கும் தன் அப்பாவைக்கூப்பிட்டாள்

,ஹலோ ஹலோ ,யாரு அப்பாவா…..’

“ஆமாம் ராஜமா …என்ன மோஹனுக்கு முகூர்த்ததேதி பார்த்தாச்சா”?

அதுதாம்பா சொல்ல வந்தேன் கல்யாணம் நின்னுபோயிடுத்து ,என்னகாரணம்னு தெரிலை நீங்கள் தான் துப்பறியும் சாம்பு போல் கண்டுபிடிக்க வேண்டும் பெண்ணோட தாத்தாவும் திருவாரூர்தானே….”

சரி ராஜம் நான் விஜாரிச்சு பின் சொல்றேன் ,கவலப்படாதே”

.அப்பாடி… இப்போத்தான் ராஜத்திற்கு மூச்சு வந்தது. உள்ளே போனாள்.

,” அப்துல் தும் கஹான் ஹோ?’ {அப்துல் நீ எங்குஇருக்கிறாய் “? என்று இந்தியில் பேச அப்துல் “அபி ஆயா{இதோவந்துவிட்டேன் } என்று பதில் சொன்னான் “சாப்பிட்டாயா …. அப்துல் …..நம்ம மோஹன் கல்யாணம் நின்றுவிட்டது தெரிமா”?


தெரியும் மாஜி ” என்று அவனும் தமிழில் பேச முயன்றான் அவன் கண்கள் கலங்கின.

தில்லியில் ஜனக்புரி என்ற இடத்தில் தான் சிவராமன் குடும்பம் இருந்தது. இரு மகன்கள் …..மூத்தவன் மோஹன்…. தம்பி சுரேஷ் ,,,பின் யார் இந்த அப்துல் “? இது தெரிய பத்து வருடங்களுக்கு முன்னால் நாம் போக வேண்டும். எப்போதும் தனக்கென்று ஒரு ரிக்க்ஷா வாலாவை ராஜம் தன் சிறு பிரயாணத்திற்கு அமர்த்திக்கொள்வாள். ஒருநாள் அவனைக்கூப்பிடப் போன போது ஒரு ஐந்து வயது சிறுவன் அங்கு அழுதுக்கொண்டிருந்தான். அவன் தான் ரிக்க்ஷாக்காரன் சலீமின் குட்டித்தம்பி அப்துல் …..ராஜம் அவன் ஏன் அழுகிறான் என்று கேட்க அவனும் தன் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் இந்தக்குட்டி அப்துலைத் தான் பார்த்துக்கொள்வதாகவும் வேலைக்குப்போக மிக கஷ்டமாக இருப்பதாகவும் கூறினான் தவிர வறுமை வேறு …..ராஜம் இயல்பாகவே இளகிய மனம் படைத்தவள் ஆதலால் அவனிடம் “சலீம் நான் இவனை வளர்த்து படிக்க வைக்கிறேன் அனுப்புகிறாயா ?”என்று கேட்டாள் கரும்பு தின்னக்கூலியா ? உடனேயே அவனை அனுப்பி வைத்தான். அப்துல் வயிறு ஒடுங்கி ஒல்லிக்குச்சியாய் ராஜத்தைத் தொடர்ந்தான். அன்று வந்தவன் தான் அப்துல் “மாஜி மாஜி “என்று அன்பைக்கொட்டினான். ராஜமும் அவனைப்பள்ளிக்கு அனுப்பித்தாள் . தமிழ் கற்றுக்கொடுத்தாள் விதவிதமான உடையும் வாங்கிக்கொடுத்தாள். அவனும் வளர்ந்தான். வீட்டுவேலையும் செய்துபின் படிப்பிலும் கவனம் செலுத்தினான். மொத்தத்தில் ராஜத்தின் வலது கையானான் ராஜத்தின் பிள்ளைகள் ஒரு வேலையும் செய்யாமல் அப்துலை வேலை வாங்குவார்கள். இது ராஜத்திற்கு மிக வருத்தம் உண்டாக்கும். அப்துலுக்கு அந்த வீட்டில் தனிச்சலுகை என்று இரண்டாவது மகன் மனம் வெம்பினான் பொறாமை வேறு அவனை ஆட்கொண்டது ஒருநாள் ராஜம் தலைவலியால் துடித்தாள் .அவள் மகன் சுரேஷ் காலேஜிலிருந்து வந்தான் ,”அம்மா என்ன திங்க வச்சிருக்கே எடுத்துக்கொடு”

“சுரேஷ் கண்ணா எனக்குத் தலைவலிடா….. நீயாகவே உள்ளே போய் தோசை எடுத்துக்கோ”

அப்போது அப்துலும் அங்கு வந்தான்.

“மாஜி என்ன ஆச்சு ?உங்கல்கு ,,,,,தலவலியா? இதோ நானு வரேன் ” என்று தனக்குத்தெரிந்தத்தமிழில் பேசித் தலைவலி பாம் கொண்டு வந்து தடவினான் ,பின் உள்ளே போய் தோசையும் கொண்டு வந்து “மாஜி இந்தா.. வாயைக்காட்டு,, தோசை சாப்பிடு” என்று ஆசையாகச் சொன்னான். ராஜம் மனம் நெகிழ்ந்தாள் அப்படியே அவனை அணைத்துக்கொண்டாள். இதையெல்லாம் பார்த்த சுரேஷுக்குக் கோபம் கோபமாக வந்தது “இந்த அம்மா என்ன இத்தனை மாறி விட்டாள் எப்போ பாத்தாலும் அப்துலையே கொஞ்சறாளே”


“ஏண்டா சுரேஷ் என்ன செய்யறே “என்று கேட்டபடி மோகன் அங்கு வந்தான் “ஒன்றுமில்லை அண்ணா… இந்த அப்துல் அம்மாவை என்ன மக்கன்{வெண்ணெய்} வைத்தானோ நன்னா மயக்கி வைத்திருக்கிறான் .அன்று நான் கிரிக்கெட் பார்க்கும் நேரத்தில் அம்மா அவனுக்காக இராமயணம் சானல் மாற்றினாள்”

ஆமாம் என்னிடமும் அம்மா அன்னிக்கு சொன்னாள் “இந்த அப்துல் எனக்குக்கால் பிடிச்சு விடறான், பாத்திரமும் அலம்பித்தருகிறான், ரொம்ப அன்பாக பழகுகிறான் நீங்கள்வருவதும் தெரிவதில்லை ஆபீஸ் போவதும் தெரிவதில்லை. என்ன பிள்ளைகள்டா நீங்கள் என்றாள்” இப்படிச்சொல்லும்போதே ராஜம் அங்கு வர பேச்சு நின்றுவிட்டது இந்த நிலையில் தான் மூத்தவன் மோஹனுக்கு பெண் பார்த்து அவர்கள் போபாலிலிருந்து வருவதாகச்சொன்னார்கள் அவர்கள்தில்லிக்கு ஒரு கல்யாணத்திற்கு வருவதாகவும் அப்போது பிள்ளையும் பெண்ணும் பார்த்து விடட்டும் ,என்று தீர்மானிக்கப்பட்டது வாசலில் வண்டி வந்து நின்றது “அப்துல் வாசலில் அவர்கள் வந்துவிட்டார்கள் போய் அழைத்துவரலாம் என்று அப்துலையும் அழைத்து வந்தாள் “ஆமாம் யார் இந்தப்பிள்ளை ‘? என்று கேட்டாள் பெண் சுமதியின் தாய் “இவன் தான் அப்துல என் பிள்ளை என்று அவனை அணைத்துக்கொண்டாள் ராஜம். பெண்ணின் தாய் முகம் சுளித்தாள் .பின் ராஜம் அந்த அப்துல் கையில் டிபன் காபி எல்லாம் கொடுத்து அனுப்பினாள் ..பெண்ணின் அம்மா ஆசாரம் இல்லை என்றாலும் அப்துல் பூஜை அறை கிச்சன் என்று நுழைவது அவளுக்குப் பிடிக்கவில்லை. பெண் சுமதியும் மோஹனும் தனியாகப் பேசிக்கொண்டு பின் ஒகே சொல்லி விட்டார்கள் .நிச்சியதார்த்தம் மிக நன்றாக நடந்தது ……………
.”போஸ்ட் என்று தபால்காரன் ஒரு கடிதத்தைப்போட ராஜம் அதை எடுத்துப்படித்தாள். அவள் அப்பா எழுதியிருந்தார்.அதில் அப்துலால் கல்யாணம் நின்றுவிட்டதாகவும் இரு மகன்கள் ராஜாப்போல் இருக்க இந்த அப்துலை ஏன் வளர்க்க வேண்டும் இந்தப்பையனுக்கும் அந்தக்குடுமபத்திற்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா என்ற சந்தேகம் வந்துவிட்டது அவர்களுக்கு என்றும் எழுதியிருந்தார்.

அவசரம் அவசரமாகப்போனை அடித்தாள்தன் அப்பாவுக்கு…….

“அப்பா லெட்டர் வந்தது. என்ன இது இப்படி அபாண்டமாகப்பழி….
,,,”"நீ ஏன் அந்த அப்துல் பயலை வளைய வர விட்டாய் அதுதான்கல்யாணமே நின்று விட்டது இப்போ ..பார்த்தாயா ?அதன் விளைவை ……”

“என்ன அப்பா…நீங்க ! அம்மா அப்பா இல்லாத ஒரு பிள்ளையைவளர்ப்பது தப்பா”?


“அதுசரி ராஜம்…. இப்போ என்ன செய்யப்போறே “?

வேறு வரன் வராமலா போய்விடும்? கடவுள் விட்ட வழி “

பேச்சு முடிந்தது .

,காலம் உருண்டது. வேறு பெண் மோஹனுக்கு நிச்சியம் ஆயிற்று

“சுரேஷ் அந்த அப்துலை என் கல்யாணத்திற்கு அப்புறம் வரசொல்” என்றான் மோஹன் .

“அம்மா அந்த அப்துல் பயலை கிட்நேப் செய்து கல்யாணம் ஆனபின் கொண்டுவிடுகிறேன் “என்று கிண்டல் அடித்தான் சுரேஷ்மோஹனும் சுரேஷும் தமிழர்கள் ஆனாலும் இந்தியில் பேசிக்கொண்டார்கள். ஆனால் அப்துலோ தமிழ் நன்றாகப்பேசினான். கல்யாணம் ஆனவுடனேயே மோஹன் தனிக்குடித்தனம் போய் விட்டான். இரண்டாவது மகனோ பூனாவில் வேலை சேர்ந்து விட்டான். சிவராமனும் ராஜமும் தனித்து விடப்பட்டனர். ஆனால் பிளைக்குப்பிள்ளையாக அப்துல் இருந்து காலேஜையும் முடித்தான்வேலையும் தேடினான் .

கொரியர் சர்விசில் ஒரு நல்ல வேலைக்கிடைத்தது .
அன்று முதல் சம்பளத்தை வாங்கி வீடு வந்து “மா..ஜி ஆசீர்வாதம்செய்யுங்கோ “என்று அவள் காலிலும் சிவராமன் காலிலும் விழுந்தான் தன் சம்பளத்தை அவள் கையில் கொடுத்தான்.

அடுத்த வீட்டிலிருந்து ஒரு இந்திபஜன் கேட்டது

“பிரேம் ஈஸ்வர் ஹை ஈஸ்வர் பிரேம் ஹை” {அன்பே கடவுள் கடவுளே அன்பு },,,,,ராம் ரஹீம் புத்த கரீம் …..கோயீ பி நாம் ஜபோ ரெ மனுவா ஈஸ்வர் ஏக்ஹை {ராம் என்று சொன்னாலும் ரஹீம் புத்தர் கரீம் என்று எந்தப்பெயர் சொன்னாலும் எல்லாமே ஒன்றுதான் ஈஸ்வரன் ஒன்றுதான் ,,,,,,

ராஜம் அப்துலை அணைத்தாள் . சொந்த மகன்கள்

எங்கேயோ இருக்க இந்த வளர்ப்பு மகன்

அதுவும் பீஹாரைச்சேர்ந்த முஸ்லிம் இப்படி அன்பைப்பொழிகிறன் அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது அங்கு அன்பே தெய்வமானது.
அன்புடன் விசாலம்

Wednesday, June 10, 2009

எல்லாமே நம்பிக்கைத்தான்

அதோபறக்கிறது மூவர்ணக்கொடி.
வணங்குகிறோம் அதன் புகழைப்பாடி
,பாரத நாட்டிற்கு ஒரு வணக்கம் ,
அங்கே தேசபக்தி மணக்கும் ,
தேசியக்கொடி ஏற்றம்
நம்முன் பாரத அன்னையின் தோற்றம்
,நம்பிக்கைக் கொடுப்பது அன்னையின் உணர்வு
எல்லாமே நம்பிக்கையால் ,,,,,,,,,
,அதோ தாத்தாவின் புகைப்படம்
அதன் முன் இனிப்பு சம்படம்
படையல் படைக்கும் உறவினர்கள்
ஆசிகள் வழங்கும் முன்னோர்கள்.
தாத்தாவைக்கும்பிடு,,எனும் தந்தை
கண் கலங்கி நிற்கும் அவர் சிந்தை
நம்பிக்கையில் தாத்தாவின் உணர்வு
எல்லாமே நம்பிக்கையால்,,,,
,மறைந்தத் தலைவர்கள் சிலையாக ஆட்சி
பிறந்த நாட்களில் மாலைகளுடன் காட்சி
கைக்கூப்பிக் கண் மூடி நினைக்கும் மக்கள்
ஆசிகளை வேண்டி நிற்கும் தொண் டர்கள்
தலைவர்கள் பேசிய பொன்மொழிகள்,
நம்பிக்கையில் தலைவரையே கண்ட உணர்வு
,எல்லாமே நம்பிக்கையால்,,,,,,,,,,
புகைப்படங்களில் தெய்வ உருவம் ,
கடவுளாகத் தோன்றும் அந்த ரூபம்
தீப வடிவில் தேவியின் தரிசனம்
பார்த்தால் பரவசம் ஆகும் சிலர் மனம் ,
கல்லிலும் கடவுளைக் காணும் மனிதன்
சிகரத்திலும் இறைவனை தரிசிக்கும் மனிதன்
நம்பிக்கையில் கடவுளைக் கண்ட உணர்வு
எல்லாமே நம்பிக்கையால் ,,,,,,,

யாதகிரி நரசிம்மர்

ஓம் வஜ்ர நகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஷட்ராய தீமஹிதந்நோ நாரசிம்ஹ:ப்ரசோதயாத்....இது நரசிம்ம காயத்ரி இதை நரசிமஹ ஜயந்தி அன்று ஜபிக்க நோய்கள் விலகி எங்கும்ஜயம் தான்*நாம் யாதுகிரி குட்டாவிற்குப்போய் அங்கு இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மரைப்பார்த்து ஆசிகள் பெறலாமா?ஹைதராபாத் லிருந்து சுமார் 69 கிமீதூரத்தில் வாரங்கல்லுக்கு அருகிலும் இந்தலக்ஷ்மிநரசிம்மர் கோயில் இருக்கிறது இது எதனால் விசேஷம் என்றால் இது பஞ்சநரசிம்மக்ஷேத்ரம் ,இங்கு ஒரு குகையில் யது என்ற ரிஷி தவம் இருந்தார் ,இவர்ரிஷிய சிங்கர் சாந்தாதேவி அவர்களது புத்திரர்.இவருக்கு மஹாவிஷ்ணு தரிசனம்தந்து அருள் புரிந்தார் ,ரிஷியும் தான் நரசிம்ஹ மூர்த்தியாக அவரைப்பார்க்கவிரும்பினார்,முதலில் ஜ்வால நரசிம்ஹராக வந்தார் பின்னர் உக்ர நரசிம்மராகத் தோன்றினார்அவர் மிக்வும் உக்ரமாகத் தோன்ற ரிஷியும் அந்தத் தோற்றம் வேண்டாமென்றுகேட்டுக்கொண்டார் ஆகையால் யோக நரசிம்மராகக் காட்சி அளித்தார் அதிலும் திருப்திபடாமல் போனதால் சாந்தமாக ல்க்ஷ்மி நரசிம்மராக தரிசனம் கொடுத்து அருள்புரிந்தார் ,ஆக மொத்தம் பஞ்ச நரசிம்மராகக் காட்சிக்கொடுத்தார் ,என்ன அத்புதம் !இங்குப் போனால் நவகிரஹ தோஷம் போய்விடுகிறது பில்லி சூன்யம் ஏவல் போன்றதும்மறைகின்றன , நாற்பது நாட்கள் தொடர்ந்து பூஜிக்க தீராத வியாதியும் தீருகிறதுஇவர்தான் அங்கு வைத்ய நரசிம்மர் ஆகிறார் ,இங்கு ஆஞ்சநேயரும் இருக்கிறார் தவிரஸ்ரீ ஆண்டாள் நான்கு ஆழ்வார்கள் ராமலிங்கேஸ்வர ஸ்வாமியும் எழுந்தருளிஅருள்பாலிக்கின்றனர் .கர்ப்பக்கிரஹத்தின் மேல் சிகரத்தில் தங்க சுதர்சனச்சக்கரம் உள்ளது முன்பெல்லாம்இந்தச்சக்கரம் பகதர்கள் வரும்போது அந்தப்பக்கம் திரும்பிஒரு காம்பஸ் போல்வழிக்காட்டுமாம்பல ரிஷிகள் இங்கு வந்து தியானம் செய்கிறார்கள் ,இதற்கு ரிஷி ஆராதனா க்ஷேத்ரம்என்றும் பெயர் ,இப்போதும் இங்கு பஞ்ச ராத்ர ஆகமம் நடக்கிறது.ஸ்ரீ வெங்கிபுரம்நரசிமசார்யாலு என்பவர் இந்த நரசிம்ஹரைப்பற்றி சுப்ரபாதம் பின் பலஸ்லோகங்கள் எழுதி இருக்கிறார்சுமார் முன்னூறு அடிக்குமேல் இருக்கும் இந்த பஞ்சநரசிம்மரையும் ரிஷி தவம்செய்த குகையும் பார்த்து ஆசி பெறலாமேஅன்புடன் விசாலம் *

அம்மாவென்று அழைக்காத உயிரிலில்லையே

மதர்ஸ் டே அதாவது அன்னையின் தினம் இது இந்தக்காலத்தில் நிச்சியமாகக் கொண்டாடப்படவேண்டிய ஒன்று ஏனென்றால்இந்தக்காலத்தில் அன்னையுடன் சேர்ந்து இருக்கும் வாய்ப்பு இளைஞர்களுக்குமிகவும் குறைவு. கல்விக்காகவும் உத்தியோகத்திற்காகவும் இவர்கள்பெற்றோர்களை விட்டு வெகு தூரம் போக வேண்டி இருக்கிறது. அவர்களுக்குஅன்னையை நினைக்க விரும்பினாலும் வேலையின் பளுவில், காதலில் மற்றபொழுதுபோக்குகளில், அவர்கள் மூழ்கி விடுவதால் அதன் முக்கியத்துவம் ஓரளவுமறைந்துதான் விடுகிறது ,வாரம் ஒரு தடவை போனில் விஜாரிப்பதோடு சரி அல்லது பணம் அனுப்புவதோடு சரி ,,,, முன் காலத்தில் இந்த நிலைமை இல்லை வேதக்காலத்திலேயே முதலில் அன்னைக்குத்தான் சிறந்த இடம் மாத்ரு தேவோ பவ என்று முதலில் அன்னைக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருந்தது முன் காலத்தில் அன்னைதினம் என்று தனித்தினம் தேவையில்லாமல் இருந்தது ஏனென்றால் காலையும் மாலையும் கூட்டுக்குடும்பத்தில் பெற்றோர்களை வணங்கிஆசியும்பெற்றுக்கொள்ளும் வழக்கம் இருந்தது தவிர அன்னையும் வீட்டில் இருந்து தன்மக்களின் நலத்தையே முக்கியமாகக்கொண்டு நல்லவளர்ப்பில் அவர்களைக் கொண்டு வந்தாள். பூணல் போட்டவுடன் முதலில் அன்னையைவணங்கி பவதி பிக்ஷாந்தேஹி என்று அந்த மகன் கேட்டு முதல் அரிசியையும்பருப்பையும் பிக்ஷையாக அன்னையிடமிருந்து வாங்கிக்கொண்டு ஆசி கோருகிறான் அன்னை பத்து மாதங்கள்: சுமந்து பல இன்னல்களுக்கு உடபட்டுஉள்ளிருக்கும் கருவையும் பொத்திப்பொத்திக் காப்பாற்றி அல்லல்பட்டுகுழந்தைப்பிறப்பு என்ற இன்பமான அவஸ்தையும் பட்டு அந்தக்குவா குவாசத்தத்தில் உலகையே மறக்கிறாள்,அன்று ஆரம்பிக்கும் தியாகம் அவள் உயிர் உள்ள வரையிலும்
தொடர்கிறது .கடைசியில் சந்தர்ப்ப வசமாக அவள் முதியோர் இல்லம் போகநேர்ந்தாலும் தன் மக்களை வெறுப்பதில்லை ஆனால்வாழ்த்துகிறாள்,அந்தப்புண்ணியவதியை நினைக்க ஒரு தினம் வேண்டாமா?நல்லவேளையாக் அன்னா ஜார்விஸ் என்பவர் இதை ஆரம்பித்துவைத்தார் அவரை மறக்கவே முடியாது எது இருந்தாலும் வெளி நாடுகளிலிருந்துவந்தால் அதற்கு தனி மவுசுதான் என்று இந்தியர்களின் எண்ணம் இது போல் தான்காதலர்தினமும் வந்ததுஆனால் அது கொடிக்கட்டிப் பறப்பதுப்போல் அன்னைதினம்இல்லை அது சிகரத்தைத் தொட்டுவிட்டது இந்த அன்னையின் தினம் அல்லவோசிகரத்தைத் தொடவேண்டும் ?தாய்க்கு என்ற ஒரு நாளை ஏற்படுத்தியஅன்னாஜார்விஸ் இதை உலகம் முழுவதும் மே மாதம் இரண்டாவதாக வரும் ஞாயிறுஎன்றுநிர்ணயித்து ஒப்புதலையும் பெற்றார் இந்த நாளில் அன்னைக்குத்தகுந்த மரியாதை அளித்து பரிசுகளும் கொடுத்து அன்று முழுவதும் அவர்கள்மகிழ்ச்சிகாக பாடு படவேண்டும் என்றும் சொன்னார் வெளி நாடுகளில் பதினாறுவயது முடிந்தவுடனேயேமகன் மகள் தனித்து வாழ்த்தொடங்கி விடுகின்றனர் ஆகையால்அன்னைக்கு என்று ஒரு தினம் அவர்களுக்கு மிகவும் தேவை ,ஆண்களே ! வருத்தப்படாதீர்கள் அப்பாதினமும் உண்டு ஆனாலும் அந்த அப்பாவைத்தந்ததும் ஒரு அன்னை தானே நேபாலில் இந்த அன்னை தினம் பல்லாண்டுகளுக்கு முன்பாகவேஇருந்ததாம் மாதா தீர்த்த ஔன்சி என்ற பெயராம் , இது வைகாசிஅமாவாசையன்று வருகிறது.மாதா என்றால் அன்னை தீர்த்த என்றால் தீர்த்தயாத்திரை அதாவது நேபாலின் பள்ளத்தாக்கில் புனித நீர் ஓடும் இடத்தில் இந்தயாத்திரை இந்த இடம் வரை நடந்தே வந்து அன்னையை வழிபடுகிறாகள்,பின்வீட்டில் இருக்கும் அன்னைக்க்குப் பரிசுகள் வழங்குகிறார்கள்,ஆசியும்பெறுகிறார்கள்.இதற்கு ஒரு புராணக்கதையும் உண்டு ,கண்ணன தேவகியைப்பிரிந்து பின் ஒருநாள் அவளைத்தேடி வருகிறான் தேவகியைப்பிரிந்த கண்ணனுக்கு பலவிதமான ஆபத்துக்கள் வந்தன,அன்னையைத்தேடித்தேடி பின் அவளை காட்மாண்டு பள்ளத்தாக்கில் ஒரு புனிதஆற்றில் காணுகிறான் தேவகி அன்னை ஸ்னானம் செய்துக்கொண்டிருக்கிறாள் பின்அன்னை கண்ணனை மிகுந்தப்பாசத்துடன் கட்டி அணைக்கிறாள், பின்இந்த இடத்தில் குளித்து அன்னையை நினைப்பவர்களுக்குஎன் பரிபூரண ஆசிகள் உண்டு என்றாளாம்.ஆனால் பின் வந்த சந்ததிகள் அவ்வளவாக இதைச் செய்வதில்லைஎன ஒரு நேபாலி குர்க்கா வருத்தப்பட்டுக்கொண்டான் ,\அன்னையைப்போல் ஒரு தெய்வம் உண்டோ ,,,,என்ற பாடலும்அம்மாவென்று அழைத்தாலே ,,,,,என்ற பாடலும் மனதில்ஞாபகம் வர நானும் மேல் லோகத்தில் இருக்கும் என் அன்னையை நினைத்து வணங்குகிறேன்

புத்தம் சரணம் கச்சாமி

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

புத்த பூர்ணிமா ,இந்த புத்தர் என்ற சித்தார்த்தர் பிறந்ததும் விசாகபௌர்ணமி

ஒளிப்பெற்றது விசாக பௌர்ணமி

மோக்ஷநிலை அடைந்ததும் விசாகபௌர்ணமி ,

மனதில் எழுந்தது வில்லுப்பாட்டுக்கேற்ற ஒரு கவிதை

சுத்தோதனின் உத்தம புத்திரன,

அருமை மகன் , அவன் சித்தார்த்தன் ,

கண்ணின் இமைப்போல் காக்கப்பட்டான்

உலகம் தெரியாது வளர்க்கப்பட்டான்

ஜோசியர் சொன்னதில் தந்தைக்குக்குழப்பம்''

பெரிய அரசனாவான் அல்லது யோகியாவான் ''

அரசகுமாரன் ஆக்கும் முயற்சி

கொடுக்கப்பட்டது பல பயிற்சி

தந்தையின் அதிக பராமரிப்பு

தாயின் அதிக ஆதரிப்பு ,கவசமான பெற்றோர்கள்

சூழ்ந்து காக்கும் ரக்ஷகர்கள்

அரண்மணைக்குள் பல வித்தைகள்

விதைக்கப்பட்டன பல கலைகள்

மனம் நிறையவில்லை

,எதிலும் சுவையில்லை

மனதில் தெளிவில்லை

ராஜபோகத்தில் ஈர்ப்புமில்லை

அவனுக்குத் தேவை ஒரு மாற்றம்

அதுவே மாப்பிள்ளைத் தோற்றம்

வந்தாள் கிளிப்போல் ஒரு கன்னி

''யசோதரா'' அவனையே எண்ணி,

ஒரு மகனையும் அளித்தாள்

ராஹுல் என்ற பெயரும் கொடுத்தாள்

ஒரு நாள்,

,அந்த நாள்

யசோதராவிற்கு சோதனை நாள்

உலகத்திற்கு நல்ல நாள்

வெளி வந்தான் சித்தார்த்தன்

தேரிலே பவனி வந்தான்

தேரோட்டியும் உதவினான்

அரண்மணை வெளியே வந்தான்

வாழ்க்கையில் அதுவே திருப்புமுனை

கௌதமபுத்தர் ஆன அரிய சுனை

கண்டான் அங்கு ஒரு தொண்டு கிழவன்

கூனல் முதுகு ,கையில் தடி காலில் நடுக்கம்

மனம் பதைபதைத்தான்சித்தார்த்தன்

இதுவா வாழ்க்கை ?தொடர்ந்தபிரயாணம்

கண்டான் அங்கு ஒரு நோயாளி
உடல் ஆடஉள்ளம் தாக்க

கண்கள் சொருக

மரமாக சாய

ஆ இது என்ன ?இப்ப்டியும் ஒரு பிறப்பா ?

இதுவா வாழ்க்கை ?

மேலும் தொடர்ந்தான்

வந்தது ஒரு சவம்

எங்கும் நிரம்பிய சோகம்

சிவமாய் இருந்த உடல்

இன்று ஏன் சவமானது ?ஒரே குழப்பம் !

மனதிலே கேள்விக்குறி1

விரகித்தியடைந்த மனம்கேட்டது ஒரு வினா

இதுவா வாழ்க்கை?வேண்டாம் வேண்டாம்

ஆடம்பரம் வேண்டாம்

ராஜ போகம் வேண்டாம்

வேண்டும் நிம்மதி

வேண்டும் அமைதி

வேண்டும் ஒரு தேடல்

பிறப்பின் காரணம் தேடல்

படைத்தவனைத்தேடல்

மனம் தத்தளித்தது

வீடு கசந்தது

நல்லிரவு

.மனைவி யசோதராமீது ஒருபார்வை

பிஞ்சு பாலகன் மீது ஒரு பார்வை

வைராக்கியம் புகுந்தது

எல்லாம் உதறினான்

உள்ளோளி தேடினான்

திரும்பிப்பாராமல்வேகமாய் நடைத் தொடர்ந்தது

தேடலும் தொடர்ந்தது

''கயாவில் சென்று நின்றது

தியானத்தில் நிலைத்தது

நீண்ட தியானம்

அரச மரத்தின் கீழ்தன்னை மறந்த நிலை

திடீரென்று ஒரு ஒளி

அவர் அனுபவித்த பரமானந்தநிலை

உள்ளே ஒளி தெரிந்தது

ஞானோதயம் பிறந்தது

''கௌதமபுத்தர் '' ஆனார்

எட்டடி பாதைகள்."பிறப்பு

புத்தமதத்தின் சிறப்பு

ஆயிரம் பிறையும் கண்டார்

''ஆசியாவின் ஒளி''யும் ஆனார்

வீடும் வாஸ்துவும்

வீடு என்பது சுவர்க்கமாக இருக்க வேண்டும்,அங்கு அமைதி நிலவுதல் மிக அவசியம் ,சிலர்
குடிசை வீட்டிலும் கூழோ கஞ்சியோ குடித்தாலும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் பின் அவர்களே பங்களா வாங்கும் நிலைக்கும் உயர்ந்து விடுகிறார்கள் சிலர் பெரிய வீட்டில் இருந்தாலும் மனக் கஷ்டம் வியாதியுடன் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக கழிக்கிறார்கள் ஒவ்வொருவரும் புது வீடு போகும் போது தானும் தங்கள் குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் போகிறார்கள் ஆனால் சிலருக்கு எண்ணம் பலிக்கிறது மற்றவர்களுக்கு ஏமாற்றம் தான் ,,,
இது ஏன் நட்க்கிறது ,வாஸ்து என்ற மனக்கலை சரியாக அமையாததால் தான் ,,
சந்தோஷம் குறையாமலும் சகல வளமும் பெற வழிக்கட்டியாக இருப்பது இந்தக்கலைதான் ,
கடவுள் நம்பிக்கையுடன் முதலில் ஒரு பிரார்த்தனைச்செய்து பின் மனை வாங்க
நன்மைதான் முதலில் விகனமிலாமல் இருக்க முதல் கடவுள் கணபதியைத் தொழ பின்
பூமிக்காரன் செவ்வாய்க்கு அதிபதி ஸ்ரீ முருகனையும் வேண்டிக்கொண்டு வீடு வாங்கும் வேடையில் இறங்க வேண்டும் எல்லாவற்றுக்கும் முதலாக அவரவர் குலதெய்வ வழிபாடும்
மிக முக்கியம் ,இப்போது வருவோம் மனை வாங்கும் கட்டத்திற்கு,,,,,,,,,மனை இல்லாமல்
வீடு கட்ட முடியாது அது குடிசையாக இருந்தாலும் சரி கோபுரமாக இருந்தாலும் சரி ,
மனை சாஸ்திரம் சரியாக அமைந்து விட்டால் அங்குக் கட்டும் வீடும் அதில் வசிக்கப் போகும் மனிதர்களும் ஒரு குறைவுமில்லாமல் பிரமாதமாக இருப்பார்கள்
சாஸ்திரத்திற்கு முரணாக அமைந்து விட்டால் எத்தனைக் கோடி சிலவு செய்து கட்டியும்
தொல்லகளும் துன்பங்களும் தான் பார்க்க முடியும் எந்த மனை வாங்கினாலும் அது சதுரமாக இருப்பது மிக அவசியம் சதுரத்தில் ஒரு பக்கம் கொஞ்சம் கோணலோ அல்லது நீண்டோ காணப்பட்டால் அதைச் சதுரமாக்கியப் பின் தான் கட்ட வேண்டும்
மனை கிழக்கு மேற்கு தெற்கு வடக்குஎன்று நாலு திசையில் அமையலாம் இருப்பதற்குள் முதல் இடம் பெறுவது கிழக்கு நோக்கிய மனை , அடுத்து வருவது
வடக்கு நோக்கியமனை மறற இரண்டும் சுமார் என்று தான் சொல்ல வேண்டும்
ஆனால் இந்தக்கிழக்கு நோக்கிய மனையும் நல்ல மனை என்ற விதிக்குள் வந்து தோஷமில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்

கிழக்கு திசை நோக்கிய மனை சிறந்த செல்வாக்கும் புகழும் அளிக்கும் கல்விகளில்
தேர்ச்சி நல்ல நண்பர்கள் நல்ல எண்ணங்கள் என்று மிகவும் சுபீட்சத்தைக் கொடுக்கும்,
ஆனால் இந்த கிழக்கு மனையானது தோஷமில்லாமல் இருக்க வேண்டும் அதாவது
கிழக்கு நோக்கிய மனையில் கிழக்கு பகுதி குறுகியோ அல்லது துண்டித்தோ இருக்கக்கூடாது ,தவிர அந்த மனை முன்பு ஒரு மயான பூமியாகவோ இருந்தாலும்
பிரச்சனை தான் அஸ்திவாரம் போடும் போது பார்க்கமால் எலும்புத்துண்டு அல்லது
மணடி ஓடு போல் தங்கினாலும் தோஷம் உண்டு என்று சொல்கிறார்கள்

வடக்கு மனை வியாபாரிகளுக்கு மிகவும் நல்லது ந்ல்ல வியாபாரம் நடக்கும் அதிக
லாபம் வரும் வசதியான் வாழ்க்கை ஆடம்பர பொருட்களின் சேர்க்கை நல்ல திருமண
வாழ்க்கை மக்கள் செல்வங்கள் கல்வி என்று பல ந்ற் பலன்கள் உண்டாகின்றன.
எப்போதும் பணம் இரட்டிப்பு ஆக்கும் சிந்தனையே மிகும் அதனால் இது பெரிய
வியாபாரிகளுக்கு ஏற்ற திசை சிலவுகள் வந்தாலும் அது சுபச்சிலவுகளாக இருக்கும்
வடக்கு திசையில் தான் குபேரன் இருக்கிறான் என்பார்கள் இதிலும் தோஷமில்லாமல்
பார்த்து வாங்க வேண்டும் வடகிழக்கு குறுகி இருக்கக் கூடாது அதே போல் வட மேற்கு நீண்டு இருத்தல் ஆகாது ,,,,,,,,,,,,,,,

விதியின் வலை

.வானம் இருண்டது .
,மேகம் திரண்டது ,
இடியுடன் மின்னல்,
மழையுடன் புயல்,
நூல் போல் இழை,
சோ என்ற மழை.
ஒரு அறையில் நான் தனிமையில்,
,பிரித்த ஒரு புத்தகம் என் கையில்,
திடீரென்றுஒரு பூச்சி என் தோளில்,
படபடப்பு அதன் இறக்கையில்,
மழையில் நனைந்த நேரம்,
அதன் உடலும் ஈரம்,
என் கை அதைத் தட்டியது.
சுவற்றின் மூலையில் விழுந்தது .
அதன் பக்கம் என் கவனம்,
பூச்சி சாதித்தது மௌனம் ..
ஒன்றிக்கவனித்தேன் அதனை,
அழகு பட்டாம்பூச்சிதனை,
சிருஷ்டியின் கைவண்ணம் என்ன?
அதில் கலந்த வண்ணம் தான் என்ன?
வானவில் போன்ற வண்ணங்கள்!
அதில் தீட்டியக்கோலங்கள்.
அது பறக்காதா? என்ற ஏக்கம் .
கூடவே வந்தது துக்கம்.
பிரார்த்தனையும் சேர்ந்தது.
திடீரென அது பறந்தது .
ஒரே வியப்பு,
ஒரே மலைப்பு.
சுற்றிச்சுற்றிப் பறநதது .
சுவற்றில் அது அமர்ந்தது .
.நீளவிளக்கின் பின் ஒரு வலை .
கண்டேன் முக்கோணத்தலை .
.நம் பல்லிதான் ,
அதன் யமன் தான்.
அதன் விதியை மாற்றினேன் .
கம்பால் சுவற்றைத் தட்டினேன் .
ஓடி ஒளிந்தது .
பூச்சியும் பறந்தது .
என் முகத்தில் வெற்றிப்புன்னகை .
விதியை வென்று சூடிய வாகை .
''டிக்'' என்ற ஒரு ஒலி கேட்டேன் .
கீழே விழுந்தப் பூச்சியும் கண்டேன் .
அதன் இறக்கைகள் என் மேல் ,
வண்ணக்கலவைகள் என் மேல் ,
சுழலும் விசிறி அதன் யமனானான் .
தன் கடமைச்செய்த தருமனானான்
வண்ணாத்திப்பூச்சியின் உடல்சுவரோரம் கிடைந்தது
விதி வென்று அங்கு சிரித்தது
அன்புடன் விசாலம்

இரு படகுகள்

நம்பிக்கை என்ற கடலைக்கண்டேன்,

வாழ்க்கை என்ற படகைக்கண்டேன் ,

மனம் என்ற பாய்மரம் கண்டேன்

,கடவுள் அன்பு காற்றாய்க்கண்டேன்

கருணைத் தென்றல் அங்கு வீசக்கண்டேன்

மனம் அங்கு விரியக்கண்டேன்

,அன்பெனும் துடுப்பைச்செலுத்தக்கண்டேன்

,தெய்வபலம் அங்கு புகுவதைக்கண்டேன்,

சோதனையில் சாதனை பெருகக்கண்டேன்

எதிர்நீச்சலில் மன உறுதி வலுக்கக்கண்டேன்

வாழ்க்கைக்கடலின் இன்பம் உணரக்கண்டேன்

இயற்கையில் தெய்வதரிசனம் அங்கு கண்டேன்

இரண்டாவது படகு ,,,,,,

அவநம்பிக்கை என்ற கடலைக்கண்டேன்

வாழ்க்கைப்படகு அங்கு மிதக்கக் கண்டேன்

மனம் என்ற பாய்மரம் இறுகக்கண்டேன்

வெறுப்பு என்ற துடுப்பு செலுத்தக்கண்டேன்

பேராசை,பொறாமை அலைகள் வீசக்கண்டேன்

குறுகிய மனத்தில் புயல் வீசக்கண்டேன்

சூராவளி ஒன்று அங்கு அடிக்கக்கண்டேன்

,வாழ்க்கைப்படகு தத்தளிப்பதைக்கண்டேன்

மன உறுதி அங்கு துவளக் கண்டேன்

மனச்சாட்சி அங்கு மடியக்கண்டேன்

இறைச்சக்தி அங்கு மறையக்கண்டேன்

ஒளி அடங்கி மன இருளில் ஒடுங்கக் கண்டேன்

வாழ்க்கைப்படகில் அங்கு துன்பத்தைக்கண்டேன்

கற்பகத்தரு

நிலவாக உன்னை நினைத்தாலோ,
காலை காணாமல் போய்விடுவாய்
மலராக உன்னை நினைத்தாலோ
ஒரு நாளில் நீ உதிர்ந்துவிடுவாய்,
வானவில்லாக உன்னை நினைத்தாலோ
கணநேரத்தில் நீ மறைந்து விடுவாய் ,
பனித்துளியாக உன்னை நினைத்தாலோ
வெயில் பட மறைந்து விடுவாய் ,
அலைகளாக உன்னை நினைத்தாலோ
காலை முத்தமிட்டு ஓடி விடுவாய் ,
மலையாக உன்னை நினத்தாலோ
கல்மனம் போல் நீ மாறிவிடுவாய்.
நீராக உன்னை நினைத்தாலோ
பனிக்கட்டிப்போல் உறைந்து விடுவாய் ,
உன்னை நான் ஒன்றும் நினைக்க்வில்லை
எனக்கு நீ நீயாகவே இரு
என்றுபோல் நீ ஒரு கற்பகத் தரு

அன்புடன் விசாலம்

Friday, April 3, 2009

இறைவனை நோக்கி ஒரு அடி வைத்தால் ,,

சத்ய சாயி பாபாவைச் சில பக்தர்கள் சந்திக்கச் சென்றனர்அவரது அறையில் சிலருக்கு ஒரு சந்தேகம் கேட்டு அதற்கு பதிலும்தெரிந்துக்கொள்ள ஆவலாக இருந்தது ,பாபா அவர்கள் அவர்களிடம்" ஏதோ கேட்க நினைத்தீர்கள் அல்லவா?தயக்கமில்லாமல் கேளுங்கள்" என்றார்,"சுவாமி துன்பம் எங்களைத் துரத்துகிறது , அந்தத் துன்பத்தைவிட்டுவிலகிப்போக ஏதாவது வழியுண்டா?"" நீங்கள் இப்போது சூரியனை நோக்கி நடந்து பின் வந்த வழியே எதிர்ப்புறமாகத் திரும்பி வாருங்கள்"அவர்களும் எழுந்துச்சென்று பாபா கூறினப்படியே செய்து விட்டுவந்தனர் ,பாபா அவர்களிடம் கேட்டார் ,,,,,," போகும் போது என்ன கவனித்தீர்கள்?பின் வரும்போது என்னகவனித்தீர்கள்?"நாங்கள் ஒன்றும் கவனிக்கவில்லையே!"" சூரியனை நோக்கி நீங்கள் சென்றபோது உங்களுடைய நிழல் உங்களுக்குப்பின்னே போய்விட்டது.சூரியனிடமிருந்து நீங்கள்விலகி வந்த போது உங்களுடைய நிழல் உங்கள் முன்னே சென்று வழிக்காட்டத்தொடங்கியது .இறைவனை நோக்கி நீங்கள்சென்றால் உங்களுடய துன்பம் பின்னே போய்விடும் .இறைவனிடமிருந்து நீங்கள் விலகிச் சென்றால் துன்பம் உங்களுக்குவழிகாட்டத் தொடங்கும் " பக்தர்கள் இந்த விளக்கத்தால் மனம் நிறைந்தனர் .நம்முடைய நிழல் நம்மையே தொடரும் அதைப்பிரிக்க முடியாது அதே போல வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரு பக்கங்கள் ,தவிர்க்க முடியாத ஒன்று இறைவனது நாமத்தால் துன்பம் பின்னேதள்ளப்படுகிறது .நாம் ஒரு அடி இறைவனை நோக்கி முன் வைத்தால் அவர் நம்மைநோக்கி ஆறு அடி முன் வருவாராம் ,துன்பத்தை விலக்குவதும் ,பெற்றுக்கொள்வதும் நம் கையிலேதான்ஒம் சாயி ராம்

சுந்தர காண்ட மகிமை

ராமாயணம் முழுவதும் படிக்கப் படிக்க ஆனந்தம் தான் அதிலும் சுந்தரகாண்டம்படித்தால் சகல கார்ய சித்தி தீராத வியாதிகள்போகல் விவாகம் நடத்தல் தனலாபம் போன்றவைகள் கிடைக்கின்றன , இதைப்படிக்கவும் முறைகள் உண்டுஇது "உமா சம்ஹிதை" யில் பார்வதி பரமேஸ்வர சம்வாதத்தில் சிறப்பாகக் கூறப்பட்டுள்லனதவிர அவரவர் ஜாதக ரீதியாக நடக்கும் தசை தோஷங்கள் போக்க பாராயணம் செய்ய சில ஸ்லோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளனஇதை நான் பின்பற்றி அதன் பலனையும்கண்டிருக்கிறேன் ,பல மருத்தவர்கள் கைவிட்ட தீராதவியாதியும் தீரக் கண்டிருக்கிறேன்மிகவும் எளிது சக்திக்கும் வசதிக்கும் ஏற்ப செய்தால் போதுமானது ஒரு நல்ல நாளில் சங்கல்பம் செய்து கொண்டு ஸ்ரீராமர் சீதை லக்ஷ்மணர்அனுமார் சஹிதமாக பிரதிமையோ போட்டோவோவைத்துக்கொண்டு முறைப்படி பிரதிஷ்டைச் செய்து கொள்ள வேண்டும்பின்சுந்தரகாண்டத்தின் ஸப்த ஸர்க பாராயணம்செய்யவேண்டும் கடைசி நாள் பட்டாபிஷேக சர்க்கத்தையும் படித்துபின் பாராயணத்தைக் கற்பூரம் காட்டி முடிக்க வேண்டும்அவரவருக்குத்தகுந்தாற்போல் நைவேத்தியம் வைக்கலாம் பின் அன்னதானம் ஏழை எளியவர்களுக்குச் செய்யலாம் ,மனோவியாதி பூதபிசாசு பயங்கள் ஹனுமாரின் லங்காவிஜயம் வர்ணிக்கும் மூன்றாவது ஸர்க்கம் மாலையில் முதலில் சர்க்கரான்னம் நைவேத்தியம் செய்து பின் படிக்க வேண்டும் தாரித்திரியத்தைப் போக்க ஹனுமார் லங்கையில் ஸ்ரீசீதாவைக்கண்ட 15 வ்துஸர்க்கம் படிக்க வேண்டும் விட்டுப்பிரிந்த பந்துக்கள் சேர ஸ்ரீ ஹனுமார் சீதாவிற்கு மோதிரம் கொடுத்த36 சர்க்கம் காலையிலும் மாலையிலும் படிக்கவேண்டும் மாம்பழம் பலாப்பழம் நிவேதனம் செய்யவேண்டும் கெட்ட ஸ்வப்பனம் தோஷ சாந்திக்கு திரிஜடை கண்ட கனவை விவரிக்கும்27வது ச்வர்க்கம் படித்து சர்க்கரை நிவேதனம் செய்யவேண்டும் தெரிந்தோ தெரியாமலோ செய்த அபராதங்களைப் போக்க காகாசுரனுக்கு அனுக்கிரஹம்செய்த38 வது ஸ்ர்க்கம் படித்து ஸ்ரீ ராமனை நமஸ்கரிக்கவேண்டும் சந்தர தசை தோஷம் 5வது ஸர்க்கம் படிக்க வேண்டும் செவ்வாய் தோஷம் ,,ஹனுமார் ராவணனுக்கு உபதேசித்த 51ஸர்க்கம் படிக்க வேண்டும் குஜதசையில் சுக்ரபுக்தி கெட 52 ஸர்க்கம் ஹனுமாருக்காக ஸ்ரீதேவி அக்னி யைப் பிராத்திக்கும் ஸ்லோகம் படிக்கவேண்டும் ராஹூதசையில் சுக்ரபுக்தி கெட்டிருந்தால் ஹனுமார் அக்ஷன் எனும் ராக்ஷசனை வதம் செய்த 47 வது ஸர்க்கத்தைப் பாராயணம் செய்யவேண்டும் குருதசை கடுமையாக இருந்தால் சுந்தர காண்டத்தின் முதலாவது ஸர்க்கம் ஸ்ரீஹனுமான் கடலைத் தாண்டியதைப் படித்து பின் பொரியை நிவேதனம்செய்யவேண்டும் குருதசையில் கேது கெட்டிருந்தல் 61 62 ஸர்க்கம் ஹனுமான் மதுவனத்தை அழித்தது படிக்க வேண்டும் சனி தசை தோஷம் ஹனுமார் பிரும்மாஸ்திரத்திலிருந்து விடுப்பட்ட 48 வதுஸர்க்கம் படிக்க வேண்டும் சனி தசையில் சுக்ரபுக்தி கெட்டிருந்தா; ஸ்ரீதேவிக்கு சூடாமணியைத் தந்த 38ஸர்க்கத்தைப் படிக்க வேண்டும்

விழுக்கல்வி

நாம் கல்வியை எடுத்துக்கொண்டால் அதை இரு அம்சங்களாகப் பிரிக்கலாம் ,ஒன்றுபுற உலகை ஒட்டிய கல்வி , இதில் நாம் புத்தகத்தைப் படித்து அறிவைவளர்த்து புற உலகைப் பற்றிய செய்திகள் அறிந்து நமக்கும் பணம் சம்பாதிக்கும் வழியையும் உணர்ந்து திறமைகளை வளர்த்து அதனால் பெரிய இடத்தைப்பிடிக்கவழி வகுக்கிறது ,இரண்டாவது அம்சம் உயிரூட்டும் கல்வி இதை விழுக்கல்விஎன்றும் சொல்லலாம் {educare } மனிதன் தன் வாழ்க்கையை இனிமையாக்க செம்மையாக்க பல பண்புகள் தேவைப் படுகின்றன .இந்தப்பண்புகள் இந்தவிழுக்கல்வியில் கற்றுதரப்படுகின்றன .கிருஸ்தவர் பள்ளியிலும் மாரல் ஸையின்ஸ் என்ற புத்தகம் படிக்க கோர்சில் முன்பு இருந்தது ,கல்வியின் பயன்.... நம் வாழ்க்கைக்குத் தேவையான் அன்பு நன்னடத்தை ,ஒழுக்கம் பணிவு மனித நேயம் என்று பல இதழ்கள் கொண்ட நம் வாழ்க்கை ஒரு மலராக மலர வேண்டும் ,இவைகள்இல்லாத கல்வி நாட்டிற்கும் வீட்டிற்கும் பயனளிப்பது இல்லை ,ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல மனித மேம்பாடுகள் மறைந்திருக்கின்றன ,விழுக்கல்வி நம் மனதில் மறைந்துக்கிடக்கும் ஒளியைத் தேடி எடுத்து அந்தத் தெய்வீகப்பண்புகளை வெளிக்கொணர்ந்து அன்றாட வாழ்க்கையில் உபயோகித்து பலர் பயனடையுமாறு செய்தல் வேண்டும் சுயநலம் , பேராசை பொறாமை அஹங்காரம் அறவே தவிர்க்க வேண்டும் இவைகள் இந்தக்கல்வி படிக்க தடைகள் ஆகின்றன காந்தீஜியின் மூன்று குரங்கு பொம்மைகள் போல் இருத்தல் அவசியம் .நல்லதையே நினை நல்லதையே பேசு நல்லதையே செய் என்ற மனப்பக்குவம் வந்து மேலே ஏறமுயற்சித்தால்மிக எளிதாக வெற்றி பெறலாம்இதற்கு தேவை ஆங்கிலத்தில் ஐந்து டி {D} கடவுள் பக்திமன்க்கட்டுப்பாட்டுடன் ஒழுக்கம் கூர்ந்து நோக்கும் அறிவு கடும் மன உறுதி கடமை அதாவது divinity discipline dedication determination dutyநல்ல எண்ணங்களை விதைப்போம் நல்ல பயிரை வளர்போம் நம் மனம் என்ற நிலத்தில் நல்ல விதைகள் விதைப்பது மிகஅவசியம் நல்ல செயலகள் வளர்ந்து நல்ல பழங்கள் அளிக்கும் அன்புடன் விசாலம்

Saturday, January 31, 2009

சூரியனுக்கு கோயில்கள்

எல்லா அன்பர்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள் பொங்கும்மங்களம் எங்கும் தங்குக,,சூரியன் உத்தராயணத்தில் பிரவேசிக்கும் நாள்தான் இந்தப் பொங்கல் திருநாள் இதை மகா சங்கராந்தி என்று வடக்கில் சொல்வார்கள் சூரிய பகவான் நமக்குக் கர்மயோகத்தை விளக்குகிறார், நம் மனதிலுள்ள இருளை நீக்கி ஞானம் என்ற ஒளியைப்பெற்றுக் கொள் என்று சொல்லாமல் தன் மூலமாகத் தெரியப் படுத்துகிறார் அந்தச் சூரியச் சக்தி{solar energy}யினால் தான் உலகமே இயங்குகிறது ஒரு நாள் சூரியன் இல்லையென்றால் உலகமே இருள் தான் . மழை வருவதும் செடி கொடிகள் வளருவதும் நமக்கு உணவு கிடைப்பதும் இந்த ஆதவனால்தான் சூரியன் என்றாலே அப்பழுக்கிலாதத் தனமை ஒழுங்கு {perfection} ஒரே சீரான ஓட்டம் பிரதி பலன் பார்க்காமல் செய்யும் கடமை எல்லோரும் சமம் என்ற நோக்கு தன் ஒளியை எல்லோருக்கும்தந்து தான் இன்பமுறல் என்றெல்லாம் நமக்குப்பார்க்க முடிகிறது "தத்வ மஸி" என்றத் தத்துவம் விளங்குகிறது இந்த நன்நாளில் ஆதித்ய ஹிருதயமும் காயத்திரி மந்திரமும் ஜபித்தால் அதனுடைய சக்தியே தனிதான் இத்தனைச்சக்தி தரும் சூரியனுக்கு மிகவும் குறைவாகத்தான்கோயில்கள் இருக்கின்றன ,எனக்குத் தெரிந்து குமபகோணம் அருகில் இருக்கும் சூரியநாராயணர் கோயில் ஒரிஸ்ஸாவில் இருக்கும் கொனாரக் பின் காஞ்சியில்இருக்கும் இஷ்ட சித்தீசம் என்னும் ஒரு கோயில். என் நினைவில் வருகின்றன.இஷ்டசித்தீசம் கோயிலில் வடகிழக்கில் துர்க்கைஅமர்ந்திருக்கிறாள் தென் கிழக்கில் சூரியன் விளங்க நடுவில் இறைவன் கச்சாபேசன் அருள் புரிகிறார் ,சூரியனுக்குரிய நாள் ஞாயிறு ,,இத்தினத்தில் சூரிய வழிபாடு பூசை நட்க்க்கிறது . மயூரசன்மன் என்ற மன்னனுக்கு கண்பார்வை இல்லாமல் பின் சூரியனை வழிப்பட்டுசூரிய சதகம் என்னும் நூலை இயற்றினானாம். தீவிரமாக் அந்த வழிப்பாட்டில் மனம்ஈடுபட அவன் கண்ணொளி பெற்றானாம் இங்குக் கார்த்திகை மாதம் ஞாயிறு மிகச்சிறப்பு வாய்ந்தவை.இந்தத் தினத்தில் பக்தர்கள் இஷ்ட சித்தி தீர்த்தத்தில்
நீராடி பின் ஒரு புது மண் சட்டியில் மாவிளக்கு மாவு போல் வைத்து பின் அதன் நடுவில் அகல் தீபம் ஏற்றி வைத்து பின் அதற்கு நைவேத்தியப்பொருளகள் சமர்ப்பித்து பின் தலையில் சுமந்துக்கொண்டு கோயிலை வலம் வருவார்களாம்,இதனால் தலைவலி காதுவலி கண்ணில் ஏற்படும் கோளாறுகள்எல்லாம் போய்விடும். இந்த நேர்த்திக்கடனை கர்த்திகை ஞாயிறு செய்ய இயலவில்லை என்றால் திருவாதிரை அன்று செய்ய வேண்டும்.சூரிய நாராயணர் கோயில் ஒரு பரிகாரக்ஷேத்ரமாக விளங்குகிறது ஒருவர் ஜாதகத்தில் சூரியன் நீச்சனாக இருந்தாலும் அல்லது சத்ரு ஸ்தானத்தில் இருந்தாலும் இங்கு வந்து பரிகாரம் செய்துக்கொள்கின்றனர் இந்த ஒரு இடத்தில் தான் அடுத்து வருவது சூரியநாராயணர் கோயில் இது கும்பகோணம் அருகில் உள்ளது,வெள்ளெருக்குச் செடிகள்பல இங்கு இருக்கின்றன , இந்தக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் சூரியபகவான் நடுநாயகமாக தன் இருமனைவிகளுடன் அமர்ந்து அருள் பாலிக்கிறார் . அவரைச்சுற்றி மற்ற கோளகளின் நாயகர்கள் தங்கள் மனைவியுடன் அமர்ந்து அருள்புரிகின்றனர் எல்லோருக்கும் தனித்தனி சிறு கோயில் உண்டு ,இது போன்றஅமைப்பு உள்ள கோயில் இது மட்டுமே ,,,,,அடுத்து வரும் சூரியன் கோயில் ஒரிஸ்ஸாவில் இருக்கும் கொனாரக் இது கங்கைநதி தீரத்தில் அமைந்துள்ளது இந்தக்கோயில் பலதடவைகள்படையெடுப்பால் சூரையாடப்பட்டு அதன் பல பாகங்கள் சிதிலடைந்துவீணாகிப்போய்விட்டது தவிர இயற்கையின்சீற்றத்தாலும் கடல் கொந்தளிப்பாலும் பாழ்பட்டு விட்டதுஎஞ்சி இருக்கும் கோயிலைப் பார்க்க பல வெளி நாட்டவர்கள் வருகின்றனர்,இதன் கட்டடக் கலை மிகச்சிறப்பு வாய்ந்தது இதன் கலை நுட்பத்தைச் சொல்ல இயலாது . அங்கு இருக்கும் சிற்பங்களும் செதுக்கின விதமும் மிகவும் வியப்படைய வைக்கின்றன.முதலாம் நரசிம்மதேவன் 13ம் நூற்றாண்டில் மிகவும்வித்தியாசமான முறையில் இதைக் கட்டினான். கற்கள் நடுவேஇரும்புத்துண்டுகளின் இணைப்புக் கொடுத்துக்கட்டப்பட்டுள்ளது சூரியன் ஏழு குதிரைகள் கொண்ட தேரில் பவனி வருகிறான்அந்தத் தேரின் சக்கிரங்கள் 24அந்தச்சக்கிரங்களின் வேலைப்பாடு மிகவும் மனதைக்கவர்கிறது .பிற்காலத்தில் சூரியனின்சிலை அகற்றப்பட்டு
தற்போது பூரியில் இருப்பதாகச் சொல்கிறார்கள் ,இந்த கோயிலில் விளங்குகளின் சிலைகள் பறவைகளின் சிலைகள் அதைத்தவிர தேவ்தேவிகள் அபசரஸ் போன்ற அழகிகள் எல்லாம் மிக நுணுக்கமாகச்செதுக்கப்பட்டிருக்கின்றன , குழந்தைகளும் இந்த விலங்குகள் பறவைகளால் ஈர்க்கப்படுகின்றனர் ,இளைஞர்களுக்கு காமசூத்ராவின்அடிப்படையில் பல சிற்பங்கள் அங்கே காணப்படுகின்றன .வயதானவர்களுக்கும் தேவ தேவிகள்அருள் புரிகின்றனர் ,கோயில் மூன்று பிரிவுகளாக உள்ளது சூரியன் ஒவ்வொரு நாலு மாதத்தில் ஒவ்வொருபிரிவின் வழியாக தன் ஒளியைத் சூரியனார் மீது வீச வைக்கிறான்,இந்தக்கோயிலை யுனெஸ்கோ உலகப்பாரமபரியச்சின்னமாகப் பாதுகாத்து வருகிறதுசூரியனைப்பூஜிப்பது சௌரமதம் என்கிறார்கள்..பொங்கல் என்பதே விவசாயிகள் புது நெற்கதிரை எடுத்துஅதில் பொங்கல் படைத்து இறைவனுக்கு நன்றி சொல்லும் நாள் இங்கு இறைவன்சூரிய பகவான் தான்அவனில்லாது வெளிச்சம் இல்லை மழை இல்லைமழை இல்லையென்றால் பயிறும் இல்லை ,,,.ஏழைத் தன் வியர்வைச் சிந்தி ஒவ்வொருத் துளிகளையும் தன் பயிறுக்குள் அர்ப்பணித்துநமக்கு உண்வாகக் கொடுக்கிறார்கள் அவர்கள் அந்த விளைச்ச்லுக்காக கடவுளுக்குமறக்காமல் தங்கள் முதல் சாகுபடிக் கதிரை அர்ப்பணிக்கிறார்கள் .நாம் இன்று நமக்குஉண்வை வழங்கும் அவர்களை நினைத்துக் கொண்டு அவர்கள் பயன் படும்படிஎதாவது நல்லக் காரியம் செய்து ஒரு புது விதமாகக் கொண்டாடலாமே

என் தந்தையின் டைரியிலிருந்து ,,,,,,, குடியரசு தினம் ஜனவரி 26 -- 1950 என் தந்தையின் டைரியில் முதல் குடியரசு தினம் கொண்டாடிய குறிப்பு இருந்தது தில்லியில் நடந்த நிகழ்வும் சென்னையில் நடந்த நிகழ்வும் இருந்தன , சென்னையில் நடந்ததை எழுதுகிறேன். குடியரசு தினத்தை முன்னிட்டு 8000 கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டனர். மாலை ஐந்து மணிக்கு சென்னை கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில் விழா நடக்க இருந்தது பகல் 2 மணியிலிருந்தே கூட்டம் சேரஆரம்பித்து விட்டது சுமார் இரண்டு இலட்சம் இருக்கலாம்.திடீரென்று நிசப்தம் ,,,, கோச்சு வண்டியின் சப்தம் ஆம் கவர்னர் தம்பதி கோச்சில் ஸ்டேடியத்தை நோக்கி வந்துகொண்டிருந்தனர் நெருக்கமாக இரு குதிரைகள் ராஜ நடைப் போட்டு அவரது கோச்சுடன் வந்துக்கொண்டிருந்தன . அதில் ஒருவர் போலீஸ் உதவி கமிஷனர் திருஆர் எம் மகாதேவன்மற்றொருவர் சார்ஜெண்ட் மேஜர் லூயிஸ் ,,,,கவர்னரின் வரவேற்பு மிகப்பிரமாதமாக இருந்தது சென்னையின் முதன் மந்திரி பி எல் குமாரசாமி ராஜா ஓடி வந்து வரவேற்றார்,போலீஸ் படையும் மரியாதைச் செலுத்தினர் அங்கு ஒரு மேடையில் தேசியக்கொடிதயாராக வைக்கப்பட்டிருந்தது கவர்னர்அங்குச் சென்று தேசியக்கொடியைப் பறக்கச் செய்தார் பின் அதற்கு மரியாதை அளித்தார் உடனே இராணுவப்படைகளும் மரியாதைச்செலுத்தின ,மாலையிலிருந்து இரவு வரை மெரினா கடற்கரையில் வாணவேடிக்கை கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக இருந்தது வனொலியில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது காலையில் வந்தேமாதரம் பாடல் டீஅர் விஸ்வநாத சாஸ்திரி தொகுத்தது பின்மதுரை சோமசுந்தரம் கச்சேரி ,பின் டில்லியில் நடந்த குடியரசு விழாவின் நேர் முக வர்ணனை ,மாலை திருவெண்காடு பி சுப்பிரமண்யப்பிள்ளை நாதஸ்வரம் பின்குமாரசுவாமி ராஜாவின் குடியாட்சி சிறப்புறை ,,என் எஸ் கிருஷ்ணன ,டிஏ மதுரம் அவர்களின் "விந்தை மனிதன் "இரவு திருமதி எம்.எஸ் சுப்பலட்சுமி அவர்களின் கச்சேரி ,,,,,இத்துடன் வானொலி நிகழ்ச்சியும் முடிவடைந்தது ,,,,,,,,ஆஹா பழையகால என் தந்தை நினவுகளை நானும் மனதில்கொண்டுவந்து பார்க்கிறேன் இப்போது டிவியில் பல சானலகள்
அதில் கச்சேரி என்பது மிக மிக குறைவு ,பல சினிமா கதாநாயகர்கள் நாயகிகள்வந்து தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்கின்றனர் யாராவது தேசத்திற்கு உழைத்து எங்கேயோ ஒரு சின்னவீட்டில் வாழ்ந்து வரும் சுதந்திர தியாகிகளைக் கண்டு பேட்டி எடுத்து டிவி முன் அழைத்து கௌரவிக்கலாமே ,இதே போல் அந்தக்காலத்தில் இருந்த கவிஞர் எழுத்தாளர் ,தியாகிகள் வீரர்கள் போன்றவர்களை அழைத்துஅவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளச்சொல்லாமே என் இனிய குடியரசு வாழ்த்துகள் அன்புடன் விசாலம்

மூன்று நபர்கள்

ஒரு கோடீஸ்வரர் இருந்தார் .அவர் இரக்க சுபாவமுள்ளவராகவும்இருந்தார் ஆகையால் அவர் அடிக்கடி தானமும் செய்து வந்தார் ஒரு நாள் அவர்தானம் செய்ய ஆரம்பித்ததில் ஒரு ஏழை அவரைஅணுகினான் ," ஐயா எனக்கு ஐந்து ரூபாய் வேண்டும் .தாருங்கள் "என்றான் அதற்கு அவர் "என்ன இத்தனை அதிகாரத்துடன் கேட்கிறாய் .நீ ஏழ்மை நிலையில் இருந்தாலும் அகம்பாவம் கொண்டிருக்கிறாய் .நான் உனக்கு இரண்டுரூபாய் தருகிறேன் .எடுத்துக்கொண்டு போய் வா " என்றார் அவன் முணுமுணுத்தபடி அதைவாங்கிக்கொண்டு நகர்ந்தான். இரண்டாவதாக இன்னொரு ஏழை வந்தான் , தயங்கியபடியே நின்றான் பின் "ஐயாரொம்ப பசி ஐயா நாலு நாட்கள் ஒருவேளை சாப்பாடு கூட கிடைக்கவில்லை எனக்கு பெரிய மனது செய்து உதவுங்கள் என்றுகைகூப்பியபடி வேண்டினான்வ்கோடீஸ்வரரும் அவனது பணிவினால் மனம் மகிழ்ந்து " இந்தா பத்து ரூபாய் சந்தோஷமாக எடுத்துக்கொள் திருப்தியாக சாப்பிடு "என்றார் அவனும் மகிழ்ச்சியுடன் அதைப்பெற்றுக்கொண்டுபோய்ச்சேர்ந்தான்மூன்றாவதாக மற்றொரு ஏழை வந்தான் .அவன் அங்கு வந்ததும் வணங்கினான் " ஐயா வணக்கம் உங்கள் நல்ல குணத்தைப் பற்றிகேள்விபட்டிருக்கிறேன் ஆகையால் இந்த நல்ல மனிதரைத்தரிசிக்க வந்தேன் தானத்தில் சிறந்தது அன்னதானம் அதை நீங்கள்மிகச்சிறந்த முறையில் செய்து வருகிறீர்கள் ஏழைகளுக்கு நீங்கள் தான் தெய்வம் "என்றான் இத்தனைப் பேசியும் தனக்கு பசி என்றோ ஏதாவது கொடு என்றோ கேட்கவில்லை ,கோடீஸ்வரர் அவனது பணிவான இனிய பேச்சினால் கவரப்பட்டார் பின்"ஐயா வெகுதூரம் நடந்து மிகக் களைப்புடன் வந்திருப்பீர்கள்,முதலில் உணவுசாப்பிடுங்கள் பின் பேசலாம் "என்றார் ,அவனும் உணவு உட்கொண்டான் பின் ஐயா மிக்க நன்றி" என்றான்"இப்பொழுது சொல்லுங்கள் நான் மேலும் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று ""ஐயா என் பசிக்கு நல்ல உணவு அளித்தீர்கள்,வேறு என்ன வேண்டும் ?என் மீதுகாட்டிய அன்பை என்னவென்று சொல்வது? அந்த இறைவன் எல்லா நலன்களையும்கொடுப்பாராக"இதைச்சொல்லும் போதே மனம் நெகிழ்ந்து போனான் அவன் ,கோடீஸ்வரருக்க்கு அவன் மேல் இருந்த மதிப்பு பன்மடங்கானதுஅவனைத் தன்னுடனே இருக்க அன்பு வேண்டுகோள் விடுத்தார்அவருக்கு உதவி செய்யவும் ஒரு வேலைப் போட்டுக்கொடுத்தார்அவனுக்கென்று ஒரு சின்ன வீடும் கட்டிக்கொடுத்தார் முழு ஆதரவும் அளித்தார்இந்தக் கதையில் நாம் கோடீஸ்வரரைக் கடவுள் என்று எடுத்துக்கொள்ளலாம்மூன்று ஏழைகள் மூன்று வித பக்தர்கள்கடவுளிடம் என்ன கேடகவேண்டும் என்றும் எப்படிக்கேடக வேண்டும் என்றுயோசிக்காதவர்கள் முதல் வகைகடவுள் கொடுத்தது போதும் என்று திருப்தி அடைந்து தங்களுக்குதேவையானதை அவர் அறிவார் என்று உணரும் பகதர்கள் இரண்டாவது வகைஇறைவா எல்லாம் உன்னிடம் சமர்ப்பணம் எல்லாம் நீயேஉன் அருளால் தான் எங்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது என்று ஒவ்வொரு மூச்சிலும் அந்த இறைவனையே நினைக்கும் பக்தர்கள் மூன்றாவது வகை ,,,,அவனன்றி ஒரு அணுவும் அசையாது

.அன்புடன் விசாலம்

Saturday, January 24, 2009

காத்தருளவாய் மாருதியே

அருள் புரிவாய் மாருதியே

அருள் புரிவாய் மாருதியே

அல்லல் களைவாய் மாருதியே

வீரம் ஞானம் வெற்றி தந்து

மன உறுதி வழங்கும் மாருதியே

அசோக வனத்தில் அன்னையைக் கண்டாய்

அவள் சோக மனதில் ஆறுதல் தந்தாய்

ஸ்ரீ ராமனுடைய தூதனும் ஆனாய்

,எண்ணியதை முடித்தும் வைத்தாய் மாருதியே

இராம நாமத்தில் மூழ்கிப்போனாய் ,

சீதைக்கு கணையாழியும் கொடுத்தாய்

வாயு வேகத்தில் சஞ்சீவி கொண்டு

இலக்குவன் உயிரைக்காத்து நின்றாய்

.அஞ்சனைக்குமாரன் மாருதியே

சிறிய திருவடி மாருதியே

சிரஞ்சீவி பட்டம் பெற்ற மாருதியே

பஞ்ச முகமான மாருதியே ,

ஈரேழு தலமும் புகழ்ந்து வணங்கும மாருதியே செங்கமலத்திருவின் திருவருள் பெற்ற மாருதியே

காமனை வென்றவனே!காலத்தை வென்றவனே

காத்தருள்வாய் , நின் தாள் பணிந்தேன் அனுமானே

அன்புடன் விசாலம்

தேசிய இளைஞர்கள் தினம்

ஜனவரி 12 ல் ஸ்வாமி விவேகானநதரின் பிறந்த நாள் ,இந்தத் தினம் தேசியஇளைஞர்களின் தினமாகக்கொண்டாடப்படுகிறது ஒரு இளைஞன் தேசப் பற்று ,வீரம் , ஒழுக்கம் மனிதநேயம் நற்பண்புகள் ,தளர்ந்து போகாத நெஞ்சம் ,இலட்சியத்தை நோக்கி வெற்றிப்பாதை வகுத்தல் ,மனோதைரியம் ,பெரியவர்கள் மேல் அன்பு மரியாதை முதலியவைகளைக் கொண்டிருந்தால் அந்தநாடும் முன்னேறும் என்கிறார் சுவாமி விவேகானந்தர் அவர் மேலும் அவர் சொல்வது"நம்பிக்கையே இறைவன் .....தன்னிடம் தானே நம்பிக்கை இழப்பது இறைவனிடம்நம்பிக்கை இழப்பதாகும் ""தூய்மையும் ஞானமும் நம்மிடமிருந்து வெளியேறும் போதுதான் சமயச்சண்டைகள் மனிதனிடம்ஆரம்பமாகின்றன""பெயர் புகழ் சொர்க்கம் என எதுவொன்றையும் கருதாமல் நன் முயற்சிகளில்ஈடுபடுவார்கள் எல்லாநாடுகளிலும் இருக்கிறார்கள் .தாம் வாழும் மக்களின் நடுவே பயன் கருதாமல்நறுமணத்தைப் பரப்பிக்கொண்டுஇருக்கும் மலர்களைப் போன்றவர்கள் இவர்கள்" அவர் வாழ்க்கையில் ஒரு அனுபவம் ஒரு முறை ஸ்வாமி விவேகானந்தர் ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்தார் அப்போது சில ஆங்கிலேயர்கள்ஏறினர் விவேகானந்தரின் உடை அவரது முண்டாசு போன்ற கோலத்தைப் பார்த்துசிரித்தனர் ஆங்கிலத்தில் கேலி செய்தனர் எல்லாம் இவரும்கேட்டுக்கொண்டிருந்தார் ,பின் ரயில்நிலைய அதிகாரி வந்தார்அவருடன் சுவாமி சரளமாக ஆங்கிலத்தில் பேசினார் ,பின் ஒரு ஸ்டேஷனின் ரயில் நின்றுவிட்டுக் கிளம்பியதும் அவர்கள் கேட்டனர்'நாங்கள் உங்களைப் பற்றி கேலியாகவும் கிண்டலாகவும் பேசினோமே!நீங்கள் ஏன் ஒன்ரும்கேட்கவில்லை? கோபமும் வரவில்லை?சண்டைக்கும் வரவில்லையே?"அதற்கு அவர் விடையளித்தார்"" நான் முட்டாள்களச் சந்திப்பது இது முதல் தடவையல்ல"அந்த மஹானுக்கு கரம் குவித்து வணங்குகிறேன் ,,அவரது பிறந்த திதி சப்தமிதிதியில் ஹஸ்த நட்சத்திரம்இந்த மாதம் 17ந்தேதி வருகிறது

தாய்க்கு நிகரேது ?

மரங்களில்லாத சாலையைக்கண்டேன்

,நாணயமில்லா வர்த்தகம் கண்டேன் ,

தன்நலமிக்க மக்களைக் கண்டேன்

,பண்பில்லாத கல்வியைக் கண்டேன் .

நேர்மையற்ற அரசியல் கண்டேன் .

குறுகிய மனத்துடன் கூட்டங்கள் கண்டேன்

.விரிந்த பார்வையில்லாத மதத்தினைக் கண்டேன்

ஒற்றுமையற்ற ஜன சமுதாயம் கண்டேன் ,.

அன்பில்லாத உறவினர்கள் கண்டேன்

உறவினரில்லா வீட்டைக்கண்டேன்

போலி சாமியார் வளர்வது கண்டேன் ,

இதயமில்லா விக்ஞானம் கண்டேன்

அர்த்தமற்ற கொச்சை பாடலகள் கண்டேன்

அனுபவமில்லாத உபதேசம் கண்டேன்

ஆடைக்குறைவின் பேஷன் கண்டேன்

.பிஞ்சிலே பழுக்கும் மழலைகள் கண்டேன்

தீவிரவாதம் வலுக்கக் கண்டேன்

பணத்திற்கு கொலையும் செய்யக் கண்டேன்

பாசம் ,அனபு குறையக் கண்டேன்

லஞ்சப்பேய் வளரக் கண்டேன்

முதியோர் இல்லத்தில் கூட்டம் கண்டேன்

.விவாகரத்தும் பெருகக் கண்டேன்

தேர்தலில் தில்லுமுல்லு நடக்கக் கண்டேன்

,எல்லாப்பொருளிலும் கலப்பைக்கண்டேன்

இத்த்னையும் கண்டேன் ,கண்டேன்

ஒன்று மட்டும் மாறாது இருக்கக் கண்டேன்.

அதுவே தாயின் உள்ளமெனெ

என் மனம் சொல்லக்கண்டேன்

அங்கு வற்றா பாசம் கண்டேன்

இதற்கு நிகரேது என புரிந்தும் கொண்டேன் .'

கலைவண்ணம் அங்குக்கண்டேன்

நான் ஒரு சமயம் மணவர்களைச் செஞ்சிக்கோட்டைக்கு அழைத்துப் போயிருந்தேன்.அங்கு ஒரு பெரிய மஹாவிஷ்ணு அழகாக ஒரு குன்றின் மீதுபள்ளிக்கொண்டிருக்கிறார் ,இந்தச்சிலையைப்போல் பெரிய சிலை வேறு எங்கும்கிடையாது என நினக்கிறேன் இது மஹாபலிபுரத்தில் உள்ள சிற்பக்கலையை ஒட்டிஅமைந்த ஒன்று செஞ்சிக்கோட்டைக்கு மூன்று மைல்களுக்கு அப்பால் இந்தப்பள்ளிக்கொண்ட பெருமாளைக் காணலாம் சிலையின் நீளம் இருபது அடி ,உயரம்ஒன்பது அடி சிங்கவரத்தில் அமைந்த இந்த ரங்க நாதனை வழிப்பட்டவன் நம் தேசிங்கு மன்னன். தெய்வீக அழகில் உருவ அமைப்பில் இதன் அழகு சொல்ல இயலாது திண்டிவ்னத்திலிருந்து திருவண்ணாமலைப்போகும் பாதையில்பிரசித்தப்பெற்றசெஞ்சிக்கோட்டையைக் காணலாம் அங்கு இருக்கும் ஒவ்வொரு தூணும் மிகவும் அழகாக சிற்பக்களஞ்சியமாக விளங்குகிறதுகோட்டை வாசலில் நம்மை வரவேற்பவன் ஒரு வீரன் அவன் பெரிய மீசையுடன்கம்பீரமாக கையில் கத்தியும் கேடயமுமாக நின்றுக்கொண்டிருக்கிறான், அதைத்தாண்டிப்போனால் இன்னொருஅதிசயத்தைக் காண்கிறோம் ஒரு சிறு குன்றில் ஆஞ்சநேயர்விஸ்வரூப காட்சி நமக்கு அளிக்கிறார். மிகச் சக்தியுள்ள ஆஞ்சநேயரைப்பார்க்கவும் நேர்த்திகடனைச் செலுத்தவும் மக்கள்வந்தவண்ணம் உள்ளனர் .மலைக்கோட்டைக்குள் நெற்களஞ்சியங்களைக் காண்கிறோம்.அத்துடன்கொத்தளங்களும் பெரிய கலயாணமண்டபங்களும் இருக்கின்றன ,இவைகள் பழைய மன்னர்களின்சாதனைகளுக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு , மதுரை வீரன் சிலையும்,,தாயும் சேயும் மகிழும் குரங்குகளின் சிலைகளும் மிக அற்புதமாகச்செதுக்கப்பட்டுள்ளன கோட்டைக்குள் ஒரு பாழடைந்தவெங்கடநாரயணரின் கோயிலும் காண்ப்படுகிறது பகைவர் வாரமல்காத்துக்கொள்ள பெரிய அகழியும் கட்டப்பட்டிருந்தன .உள்ளே நடக்க நடக்க பல காண இருக்கின்றன ,நான் இதற்கே மிகவும் களைத்து விட்டதால் அதிகம் பார்க்க இயலவில்லை,இளைஞர்களுக்கு மலை ஏறும் பயிற்சிக்கும்adventure செய்யவும் மிகச் சிறந்த இடம் ,பல பள்ளியிலிருந்துஇந்த இடத்திற்கு உல்லாசப்பயணம் செய்கிறார்கள் கூடவே சரித்திரமதிப்புப் பெற்ற திரு தேசிங்கு ராஜனின் கோட்டைகளையும்காட்டுகிறார்கள்.இது போல் சரித்திரப்புகழ் பெற்ற பல இடங்களைக்காட்ட மாணவ மாணவிகளின் மனது விரிவடையும் தேச் வீரர்களைப் பற்றிதெரிந்துக்கொள்ளவும் முடியும் வெறும் ஏட்டுப் படிப்பை விட இது போல்practical knowledge மிகவும் உதவுகிறதுமனதில் ஆணித்தரமாக பதிகிறது ,

பகுள பஞ்சமி

ஸ்ரீ த்யாகராஜ ஆராதனை பகுள பஞ்சமி அன்று திருவையாற்றில் அவரது பிருந்தாவனத்தில் மிகச் சிறப்பாக நடக்கும். அன்றையத் தினம் பெரிய சங்கீத மேதைகள் அவர் இயற்றியப்பஞ்ச ரத்ன கீர்த்தனங்களைப் பாடுவார்கள்.அப்போது அவரது சிலைக்கும் அபிஷேகம்அராதனை,பூஜைகள் நடக்கும் .அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் .அவர் தன் ஐந்து வயதிலிருந்தே ஸ்ரீராமநாமத்தைஜபிக்க ஆரம்பித்தார் சுமார் 95கோடிகள் ஜபித்திருக்கிறார், ஒரு சமயம்அவ்ர் திருப்பதிகோவிலுக்குப் போய் திரும்பி வந்துக் கொண்டிருந்தார் அப்போது ஒரு இடத்தில்ஒரே கூட்டம் ,.என்னவென்று விஜாரித்ததில் ஒருவன் கிணற்றில் விழுந்துஇறந்து விட்டான் என்றுத் தெரிய வந்தது அதாவது ஒரு பிராமணன் தன் மனைவி,குழந்தையுடன் அங்கிருக்கும் ஒரு கோவிலுக்குப் போனான், இருட்டிவிட்டதுஒரு ஆலயத்திற்குள்சென்று இரவைக் கழித்துவிட்டுச் செல்ல நினைத்தான் ஆனால் அந்தக் கோவில் உள்ளேத்தாழிடப்பட்டிருந்தது என்ன செயவது என்றுத் தெரியாமல் அங்கிருக்கும் மதில்மேல் ஏறி உள்ளேக் குதித்து பின் உள் இருக்கும் தாழ்பாளைத் திற்க்கலாம்என்று எண்ணி உள்ளேகுதித்தான் அவ்வளவுதான் டம் என்றச் சத்தத்துடன் கிணற்றில் விழுந்து விட்டான்நீரில் மூழ்கி தத்தளித்து செத்துப்போனன் ,.அவள் மனைவி வாசலில் தன்கணவன் இவ்வள்வு நாழியகியும் வெளியில் வரவில்லையெ என்று கவலையுடன்அழுது ஊரைக் கூட்டினாள் /எல்லொரும் கோவில் உள்ளேத்தேடி பின் அவனைக்கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள்.அவன் கழுத்தில் துளசி மாலைஇருந்தது அவன் சிறந்த விஷ்ணு பகதன் என்று தியாகராஜஸ்வாமிக்குத்தெரிந்து,பின் "நா ஜீவோ தாரா என்றுத் தெலுங்கில் ஒரு பாட்டு அதாவது அந்த மனிதனின் உயிரைத் தந்துவிடு ராமாஎன்று உள்ளம் உருகிப் பாடினார் அந்த உயிர்ப் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போலஉயிர்ப் பெற்று நின்றான் .என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை ,,,,,, "ராம நாமம்" ஒரு சிறந்த மந்திரம் இதை எப்போதும் ஜபிக்கலாம்ப்டுக்கையிலும் ஜபிக்கலாம் அதன் சக்தியே தனிவாருங்கள் நாமும் ராம நாமம் சொல்லலாமே ,,,,,,,,,,,, பொங்கல் நன்நாளுடன் திருவள்ளுவர் தினமும்ஸ்ரீ தியாகபிரும்மத்தின் ஆராதனை தினமும் சேர்ந்து வந்த இந்நாளை மறக்காமல்வழிபடுவோம் விசாலம் ,

பொறுப்பை உணரும் நாள் எதுவோ?

ஒருவன் தான் செய்யும் பணியே தெய்வமாக மதித்து செயல்படவேண்டும் அதில் தான்அவனது சிறப்பு அடங்கியுள்ளது சில வங்கியில், வாடிக்கையாளர்கள் செக் புத்தகத்துடன் நிற்க ஊழியர்களில் ஒருவள் தன் செல்லில் சிரித்து பேசிக்கொண்டிருக்கிறாள் சரியென்று அடுத்த இடத்தில் போனால் அங்கு.மற்றொருவன் தான் குடிக்கும் டீயை ரசித்துக்கொண்டிருக்கிருந்து தன்அருகில் இருக்கும் ஒருவனிடன் போகும்படி கையைக்காட்டுகிறான் .அங்குச்சென்றால் அது தன் வேலை இல்லை அதைக்கவனிக்க வேறு ஒருவர் வரவேண்டும் என்றுகூறி வேலையில்லாமல் அமர்ந்திருக்கிறான் ,வேறு சிலர் தான் பார்த்தசினிமாவை விமர்சன்ம் செய்துகொண்டிருக்கிறார்கள் ,இவர்களது வேலை அரசுசமபந்தப்படிருப்பதால் பாதுகாப்பானது ஆகையால் ஒருவரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்து இருக்கிறது தவிர அப்படி யாரையாவது விலக்க நேர்ந்தால் யூனியன் சேர்ந்து வேலை நிறுத்தம் என்று ஆரம்பித்து விடுகிறார்கள்,தில்லியில் ஒரு பெயர் போன வங்கியில் குளிர்காலத்தில் ஆபீஸ் வந்துஅமருவதே 10 மணிக்கு மேல். அதுவும் தவிர குளிருக்காக சூடான டீ குடித்து முடிக்க ஒரு 30 நிமிடம்,பின் 1 மணி ஆவதுற்கு முன்பே லஞ்சுக்கு தயார் ஆகிவிடுகின்றனர்.சிலர் சாதாரண் மனிதனானாலும் தன்னைப் பிறர் முன்னால் ஒரு பெரிய மனிதனாய்க் காட்டிக்கொள்வார்கள் அவர்கள் நம்மை முட்டாள் ஆக்கியும் விடுவார்கள்;சிலர் ஒழுங்காக வேலைச்செய்பவனையும் மாற்றி " நாளை பார்த்துக்கொள்ளலாம் இப்போது கிளம்புபார்டிக்கு " என்று வலுக்கட்டாயமாக இழுத்தும் போய் விடுகிறார்கள் ,மாதா அம்ருதானந்தமயி மா ஒரு சொற்பொழிவில் சொன்ன கதை ஞாபகம் வருகிறதுசேனையில் ஒருவனுக்கு கர்னல் பதவி கிடைத்தது வேலைஉயர்வு தான் புதியபொறுப்பு எடுத்துக்கொண்ட அவனுக்குத் தலைகால்தெரியவில்லை அன்றே அந்தக்கர்னலைப் பார்க்க ஒருவன் வந்தான் அவன் உள்ளேநுழைந்ததும் கர்னல்போனை எடுத்து "ஹலோ யர்ர் பேசுவது? ஜனதிபதி கிளிண்டனா?குட் மார்னிங் ?எதாவது விசேஷம் உண்டா ?நான் இன்றுதான் சார்ஜ்எடுத்துள்ளேன் நிறைய பைல்கள் குவிந்து இருக்கின்றன நான்பின்னர் பேசுகிறேன் "இப்படிப்பேசி அந்தப்போனை வைத்தார் வந்தவன் அங்கேயே நின்றுக்கொண்டிருந்தான் ."ஏனப்பா என்ன வேண்டும்? இன்னும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய்?கர்வமான குரலில் கேட்டார்வந்தவன் " மன்னிக்க வேண்டும் நான் தொலைப்பேசி நிலயத்திலிருந்துவருகிறேன் உங்கள் போனுக்கு உடனேகனெக்சன் கொடுக்கும்படி உத்தரவு கிடைத்தது நேற்று வைத்த போன் இது,அதற்கு இன்னும் கனெக்சன் கொடுக்கவில்லை அதில்தான் நீங்கள் பேசினீர்கள் "இந்த இடத்தில் முட்டாள் ஆனது யார் ?இதுபோல் தினமும் பலமுறைகள் நாம் முட்டாள் ஆகிறோம்தற்பெருமை நம்மை எங்கு இழுத்துச்செல்கிறது ?முன்பு காபி ஆற்றிக்கொடுத்து இட்லி விற்ற ஒருவர் தனது உழைப்பினாலும்அந்தப் பணியைத் தெய்வத்திற்கு சம்ர்ப்பித்துவிட்டுமுயற்சியையே மூலதமாகக் கொண்டார் இன்று அவரது ஹோட்டல்பல வெளிநாடுகளிலும் வியாபித்து இருக்கிறது .

தேசிங்கு ராஜன்

சிங்கவரம் அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது ,இதுசெஞ்சிக்கு வடக்கே ஐந்து கிமீ தூரம் உள்ளது இக்கோயில் மலையின் மேல் இருப்பதால் 125 படிகளைக் கடக்க வேண்டும்,எல்லோரா போல் ஒரே பாறையைக்குடைந்து செய்யப்பட்டக்கோயில் ,,,,,இந்தப்பாறையிலேயே முன் புறம் இரு தூண்கள் மிகப்பெரிய அளவில் நிற்க உள்ளே நீண்ட கருவறை தெரிகிறது .அங்கு ஆதிசேஷன் சுருண்டுக் கிடக்க அந்தப்படுக்கையில் அனந்தசயனமாக அரங்கன் சயனித்திருகிறார் , இந்த அரங்கன் தான் தேசிங்கு ராஜாவின் தெய்வம் ,எந்த வேலைச்செய்தாலும் இந்தஅரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம் இங்குத் தாயார்சன்னதியும் இருக்கிறது தேசிங்கு ராஜன் தன் செஞ்சிக்கோட்டைஅரண்மனையிலிருந்தே அந்த்க் கோயிலுக்குச்செல்ல சுரங்கப்பாதைஅமைத்தாராம் அவனது ராணியும் மற்றத்தோழிகளும் பாதுக்காப்பாகச்செல்லவும் இந்தச்சுரங்கம் உதவப்பட்டது எந்தப்போருக்குச்சென்றாலும் தேசிங்கு இந்த அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் தான் செல்வாராம் அவரது கடைச்ப்போரின் போதும் அந்த ரங்கநாதனிடம்"நான் போருக்குப்போகவேண்டும்உத்தரவு கொடுங்கள் என்று கேட்டார் ,ஆனால் அரங்கநாதன் உத்தரவு தராமல் தன் சிரத்தை திருப்பிக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது மொகலாயப்பேரரசின் படைத் தளபதியாக ஸ்வரூப் சிங் என்பவர் மிகத்திறமையுடன் கைக்கொடுத்தார் பல எல்லைகளை விரிவுபடுத்தினார் , 17ம் நூற்றாண்டில் செஞ்சியில் ஒரு பகுதியை ஆட்சிக்காகத்தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்வரூப் சிங் அங்கு அனுப்பப்பட்டார். இந்த ஸ்வரூப் சிங், அவரது மனைவி ராமாபாய்க்கு சிங்கம் போன்று அழகியவீரன் பிறந்தான். அவனது பெயர் தேஜாசிங் இந்தத் தேஜாசிங்தான் ராஜா தேசிங்கு ஆனார் , சிறுவயதிலேயே பல ஆயுதங்களுடன் விளையாடுவான் புலிகளுடன் சண்டைப் போடுவானாம் ,தில்லியில் நீலவேணி என்ற குதிரையை அடக்க ஸ்வரூப் சிங்அழைக்கப்பட்டார் ஆனால் அவரால் அதை அடக்க முடியவில்லைஇதனால் அந்த மன்னன் இவரைச் சிறையில் அடைத்தான் சிறுவன் தேஜாசிங் தன் தந்தையைக் காணாமல் தாயிடம் இதைப்பற்றிக்கேட்டான் அதற்கு அவன் தாய் அவர் சிறையில் அடைக்கப்பட்டக் காரணத்தைக்கூறினாள் உடனேயே அங்குச்சென்றான் அப்போது அவனுக்கு 15 வயது தானாம்அந்த நீலவேணி என்ற குதிரையை அடக்கி தன் தந்தையை மீட்டுவந்தான் , இதற்குப்பரிசாக படைத்தலைவன் பீம்சிங் தன் மகளைத் திருமணம் செய்துக்கொடுத்தான்.ஸ்வரூப்சிங் ஆட்சியைத் தொடர்ந்தார் ஆனால் இறந்து போனார் .தேசிங்கு ராஜாவாக விரும்பினான் ஆனால் அவனை ராஜாவாக முடிச்சூடுவதை ஆர்க்காட்நவாப் மறுத்தார் ஏனென்றால் தேசிங்கு தில்லியில் கப்பம் கட்ட மறுத்ததே காரணம் . ஆனாலும் அஞ்சா நெஞ்சத்துடன் பரம்பரை உரிமை விடாமல் எதிர்ப்புகளையும் முறியடித்துவிட்டு தானே மன்னராகமுடிசூட்டிக்கொண்டார்ஆர்க்காடுநவாப் போருக்கு அழைத்தான் அப்போதுதான் தான் போருக்குப்போகலாமா என்று அரங்கனைக் கேட்க கோயிலுக்குச்சென்றார் ஆர்க்காடு நவாப்மீது அவர் மிகவும் கோபத்தில் இருந்ததால் போருக்குச்செல்லும் வேகமும் அதிகமாக இருந்தது , கோயிலில் திருவரங்கன் தன்தலையைத் திருப்பி மறுப்புத்தெரிவித்தும் ஆறிலும் சாவு நூறிலும்சாவு நான் மடிந்தால் வீரமரணமாக மடிவேன் என்று கூறி போருக்கு வந்தார். தர்மத்தை,மீறி ஆர்காடு நவாப் சாததுல்லாகானால் நயவஞ்சகமாக தேசிங்கு கொல்லப்பட்டார் என்று கூறப்டுகிறது. அவருடன் அவர் மனைவியும் உயிரை விட்டாள் ,நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராஜனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன. கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை நீலவேணியின் சமாதியும் இருக்கிறது அரங்கன் சன்னதியில் திருமணம் செய்தால் எல்லா வளமும் பெற்று தம்பதிகள் மிகச்சிறப்பாக வாழ்வார்கள் என்று நம்புகிறார்கள் இங்கிருக்கும்மக்கள். ,மார்கழி மாதம் சொர்க்கவாசல் திறப்பு விழாவும் வைகுண்ட ஏகாதசியும் சிறப்பாக நடைப்பெறுகின்றன பூதேவியுடன் வாராக மூர்த்தியும் அமைந்துள்ளது இங்குஅமையப்பெற்ற குளமும் சுனையும் இயற்கை எழிலில்அழகுடன் விளங்குகிறது மாசிமகம் திருவிழாவும் வீதிஉலாவில்அரங்கன் அலங்காரங்களுடன் ஆடி அசைந்து வருவது ந்ம்மைப்பரவசமடைய்ச்செய்கிறதுஅங்கு இருக்கும் கிராம மக்கள் இன்றும் தேசிங்கு ராஜனின் சரித்தரத்தைநாட்டுப்பாடலாக பாடுகின்றனர் வில்லுப்பாட்டும் நடக்கிறதுஎல்லாம் அவருடைய வீரம் தீரம் வெளிப்படும் பாட்டுக்கள் இத்தனைச்சிறுவயதிலேயே பலப்போர்களைச்ச்ந்தித்து வெற்றிக்கண்டு செஞ்சியை ஆண்டதேசிங்கு என் மனதில் ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு விட்டார் என்றுசொல்லவும் வேண்டுமா ?

குடியரசு தினம் 1950

என் தந்தையின் டைரியிலிருந்து குடியரசு தினம் ஜனவரி 26 -- 1950 என் தந்தையின் டைரியில் முதல் குடியரசு தினம் கொண்டாடிய குறிப்பு இருந்தது தில்லியில் நடந்த நிகழ்வும் சென்னையில் நடந்த நிகழ்வும் இருந்தன , சென்னையில் நடந்ததை எழுதுகிறேன்குடியரசு தினத்தை முன்னிட்டு 8000 கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டனர்மாலை ஐந்து மணிக்கு சென்னை கார்ப்பரேஷன்ஸ்டேடியத்தில் விழா நடக்க இருந்தது பகல் 2 மணியிலிருந்தே கூட்டம் சேரஆரம்பித்து விட்டது சுமார் இரண்டு இலட்சம் இருக்கலாம்.திடீரென்று நிசப்தம் ,,,, கோச்சு வண்டியின் சப்தம் ஆம் கவர்னர் தம்பதி கோச்சில் ஸ்டேடியத்தை நோக்கி வந்துகொண்டிருந்தனர் . நெருக்கமாக இரு குதிரைகள் ராஜ நடைப் போட்டு அவரது கோச்சுடன் வந்துக்கொண்டிருந்தன அதில் ஒருவர் போலீஸ் உதவி கமிஷனர் திருஆர் எம் மகாதேவன்மற்றொருவர் சார்ஜெண்ட் மேஜர் லூயிஸ் ,,,,கவர்னரின் வரவேற்பு மிகப்பிரமாதமாக இருந்தது. சென்னையின் முதன் மந்திரிபி எல் குமாரசாமி ராஜா ஓடி வந்து வரவேற்றார்,போலீஸ் படையும் மரியாதைச் செலுத்தினர் அங்கு ஒரு மேடையில் தேசியக்கொடி தயாராக வைக்கப்பட்டிருந்தது கவர்னர்அங்குச் சென்று தேசியக்கொடியைப் பறக்கச் செய்தார் பின் அதற்குமரியாதை அளித்தார் உடனே இராணுவப்படைகளும் மரியாதைச்செலுத்தின ,மாலையிலிருந்து இரவு வரை மெரினா கடற்கரையில் வாணவேடிக்கை கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக இருந்ததுவனொலியில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது காலையில் வந்தேமாதரம் பாடல் டீஅர் விஸ்வநாத சாஸ்திரிதொகுத்தது பின்மதுரை சோமசுந்தரம் கச்சேரி ,பின் டில்லியில் நடந்தகுடியரசு விழாவின் நேர் முக வர்ணனை ,மாலைதிருவெண்காடுபி சுப்பிரமண்யப்பிள்ளை நாதஸ்வரம் பின்குமாரசுவாமி ராஜாவின் குடியாட்சி சிறப்புறை ,,என் எஸ் கிருஷ்ணன ,டிஏ மதுரம் அவர்களின் "விந்தை மனிதன் "இரவு திருமதி எம்.எஸ் சுப்பலட்சுமி அவர்களின் கச்சேரி ,,,,,இத்துடன் வானொலி நிகழ்ச்சியும் முடிவடைந்தது ,,,,,,,,ஆஹா பழையகால என் தந்தை நினவுகளை நானும் மனதில்கொண்டுவந்து பார்க்கிறேன் இப்போது டிவியில் பல சானலகள்அதில் கச்சேரி என்பது மிக மிக குறைவு ,பல சினிமா கதாநாயகர்கள் நாயகிகள்வந்து தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்கின்றனர் யாராவது தேசத்திற்கு உழைத்து எங்கேயோ ஒரு சின்னவீட்டில் வாழ்ந்து வரும் சுதந்திர தியாகிகளைக் கண்டு பேட்டி எடுத்துடிவி முன் அழைத்து கௌரவிக்கலாமே ,இதே போல் அந்தக்காலத்தில் இருந்தகவிஞர் எழுத்தாளர் ,தியாகிகள் வீரர்கள் போன்றவர்களை அழைத்துஅவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளச்சொல்லாமே என் இனிய குடியரசு வாழ்த்துகள் அன்புடன் விசாலம்

Thursday, January 15, 2009

ஆருத்ரா தரிசனம்

நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா ,,,,,திருவாதிரை நக்ஷத்திரம் அன்று மார்கழியில்
வரும் பண்டிகை ஆருத்ரா தரிசனம் ,, ஆஹா அந்தக் காலை நேரம் சுடச்சுட களி கிளறி
ஏழுகறி குழம்பும் செய்து நடராஜரைத்தியானம் செய்து வாழை இலையில் வைத்து
நடராஜருக்குப் படைக்க உண்டாகும் ஆனந்தமே தனி தான் ,இந்தத் திருநாளில் முன்னொரு
சமயம் தேர் விழாவின் போது நடந்த ச்ம்பவம் {நான் படித்தது} என் நினைவுக்கு வருகிறது
தில்லைத் தாண்டவ நடராஜா தேரில் பவனி வ்ந்துக் கொண்டிருந்தார் ,நான்கு வீதிகளிலும்
பவனி வர வேண்டும் அப்போது ஒரு வீதியில் ஒரு ஓரமாக ஒருவர் நடராஜரைப் பார்க்க
ஆசையாக நின்றுக் கொண்டிருந்தார் அவர் பிறப்பினால் அவர் தூர விலகி நின்றுக்
கொண்டிருந்தார் .ஆவலாக அந்தக் கூத்தனாரைக் கண்கொண்டுக் களிக்க எதிர்ப்பார்த்துக்
கொண்டிருந்தார் ,அப்போது தேர் அவர் அருகில் வரும் போது நின்றுவிட்டது நகரவில்லை
தேரின் சக்கரம் மண்ணில் புதைந்து விட்டது பல பேர்கள் முயற்சித்தும் அசைந்துக்
கொடுக்கவில்லை ,அப்போது ஒரு குரல் கேட்டது ,,"சேந்தா தேர் ஓடப் பல்லாண்டுப்
பாடு,,"ஆம் அங்கு நின்றவர் சேந்தனார் .....,,கடவுள் ஜாதி மதம் என்றுப் பார்ப்பதில்லை
அவர் பார்வையில் எல்லோரும் ஒன்றுதான் ஒரு ஓரமாக நின்ற சேந்தன் பாட ஆரம்பித்தார்,
"மன்னுகத் தில்லை வள்ர்கநம்
பகதர்கள்,வஞ்சகர் போய் அகல
பொன்னின் செய மண்டபத்துள்ளே புகுந்து
புவனியெல்லாம் விளங்க,,,,,,,,,,,,,,,,
தில்லைத் திருப்பல்லாண்டு முதல் திருப்பதிகத்தைப் பாடினார் சேந்தனார், தேர் எளிதாக
அசைந்துக் கொடுக்க நான்கு வீதிகளிலும் வலம் வர சோழமன்னன் பரவசம் அடைந்து
சேந்தனை நோக்கி வேகமாக வந்து அவரை வணங்கினார், இதைப் பற்றிக் கோவிலில்
கொடிமரத்தின் கீழ் எழுதியுள்ளது என்கிறார்கள்.மிகவும் கூடடம் இருந்ததால்
என்க்குப் பார்க்க முடியவில்லை ,
திரு பாபநாசம் சிவன் அவ்ர்களின் பாட்டு என்னை மிகவும் கவர்ந்தது


சிதமபரம் என மனங்கனிந்திட ஜபம்செய்யக் கொடிய
ஜனன மரணபய மொழிந்திடும் சிவ,,{சிதமபரம்}

ப்தஞ்சலியும் புலிப் பதந்திகழ் முனியும்
நிதம் பரவவரு ணிறைந்த வுருவொடு
கதம்ப மலரணி குழலொடு திகழ்சிவ
காமிமருவும் ஸ்வாமியை எனது கனக்
ஸபேசனை நடேசனைத் தொழு சிவ {சிதம்பரம்]


மோஹாந்தகாரமதில் முழுகியழிந் தென்னாளும்,
மோசம் போகாதே என் மூடநெஞ்சமே
சோகாந்தமுற நர ஜன்மமுமிழந்து கொடுந்
துன்பந்தரும் நரக் வாதை மிஞ்சுமே
ஸ்ரீகாந்தனும் ஸரஸ்வதீ காந்தனும் பணிய
தேஹாந்தத்துள் நடிக்கும் ஆனந்தத் தாண்டவதை
தாஹாந்த மடையக்கண் டேகாந்தக்களிபெற
தத்தரிகிட தீம் த்ரிகிட திமிதக
தளாங்குதோம்தகு எனவே நடமிடு ,,{சிதம்பரம்}



இதில் தேஹாந்தத்துள் நடிக்கும் ஆனந்தத் தாண்டவத்தை என்பது மிகச் சிறந்த நடராஜரின் தத்துவம் ...இந்தப் பாட்டில் மிகவும் அழகான வரிகள் நடராஜரைத் துதிப்போம்
சூடாக களியும் குழம்பும் ருசிப்போம்

கல்வியும் வேலை வாய்ப்பும்

தற்கால கல்வியில் ந்ம் எல்லோருக்கும் ஒத்து வரும்படி பல விதமான பிரிவுகள்
சமீப காலமாக அதிகரித்துள்ளன. ,நிறைய வேலை வாய்ப்பும் அதனால் ஏற்பட்டுள்ளன
ஆனால் ஒரு டாக்டர் ஆனாலோ அல்லது இஞ்ஜினியர் ஆனாலோதான் சிறந்த படிப்பு
அந்த பிரிவில் படித்தவன் தான் சிறந்தவன் என்றக் கணிப்பு மாற்றப் பட வேண்டும் .
எல்லோருக்கும் அந்தப்பிரிவில் ஆர்வமோ ,அல்ல்து லட்சியமோ இருக்க வாய்ப்பு இல்லை
அப்போது பெற்றோர்கள் தன் மக்களை அவர்கள் விருப்பமில்லாமல் தாங்கள் நினைத்தது
தான் படிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது தவறு . சித்திரம் வரைவதில்
ஆர்வம் உள்ள ஒருவனை "ஆமாம் நீ படம் வரைந்துக் கிழிக்கப் போகிறாய் ,,,அதுதான் சோறு போடுமா?என்று அவனது உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளாமல் இருக்கும் பெற்றோர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்,
என் பள்ளியில் மணி அடிப்பவனின் மகன் ,,குஷிராம் என்று பெயர் அவன் அம்மா
பாத்திரம் தேய்த்து படிக்க வைத்தாள் அவ்னுக்கு அவ்வள்வு படிப்பு வரவில்லை
ஆனால் அவனுக்கு மின்சார பழுது பார்ப்பதில் ரொம்ப ஆர்வம் , கஷ்டப்பட்டு 8 வது
தேறினான் அத்ற்கு பின் அவனால் முடியவில்லை நாங்கள் எல்லோரும் பணம்
சேர்த்து அவனை ஒரு மின்சார சம்பந்தப்பட்ட வகுப்பிற்கு அனுப்பி வைத்தோம்
ட்ரெய்னிங் இன்ஸ்டிடூயூட் ல் சேர்த்து இப்போது அவன் அதில் வெகு வேகமாக
முன்னேறி தற்போதுஒரு கடையே திறந்துள்ளான் அவனில்லாமல் ஒரு கல்யாண்மும்
நடப்பதில்லை அவன் தான் விளக்கு அலங்காரம் செய்கிறான்
நம் திரு ஹரிஹரன் கஜல் புகழ் ,, படிப்பில் பெரிய அளவு இல்லை என்றாலும் அவன்
குரல் வள்மும் பாட்டில் இருக்கும் உயிரும் எல்லோரையும் வளைத்துப் போட்டது
சின்ன வயதிலிருந்து அவ்ர் எனக்கு நல்ல பழக்கம்
நான் ஒரு தடவை ஜெனீவா போயிருந்தபோது ஹோலிப் பண்டிகை இருந்தது
அதற்கு நிறைய இந்தியர்களைக் கூப்பிட்டிருந்தார்கள் நானும் போயிருந்தேன்
அப்போது ஒரு இளைஞன் புல்கானின் தாடியுடன் மிகவும் ஸ்டைலாக
நடனம் ஆடிக்கொண்டிருந்தான் .பின் நடு நடுவே என்னைப் பார்த்து புன்னகைத்தான்
எனக்கு எங்கேயோ பார்த்தாற்போல் இருந்தது பதிலுக்கு நானும் புன்னகை வீசினேன்
உடனே அவன் ஓடி வந்து "மேடம் நான் தான் மஹேஷ் ,, உங்கள் பிடிதத மாணவன்
என்றான் பின் குனிந்து என் பாதத்தை ஒற்றிக் கொண்டான்
இங்கு எங்கே ? என்றுக் கேட்டேன் "நீங்கள் சொன்னது போல் நான் டெக்ஸ்டைல் டிசைன்
எடுத்துப் படித்தேன் இப்போது எக்ஸ்போர்ட் பிஸ்னஸ் செய்கிறேன்" எல்லாம் உங்கள்
ஆசிகள்தான் என்று சொன்னதும் நான் சுவர்க்கத்திற்கே போய்விட்டேன் ஒரு ஆசிரியைக்கு
தன் மாண்வன் பணிவாக பண்ம் இருப்பினும் கர்வமில்லாது குருவின் காலில் விழுந்தால்
அதை விட மகிழ்ச்சி வேறு ஏது?
இப்போது கல்வி ஹோட்டல் மெனேஜிங் மாடலிங் , நடிப்பு கல்லூரி ஹேர் ஹோஸ்டஸ்
டிரெய்னிங் சில்ப கலை தோட்டக்கலை என்று பலவிதமாக இருந்து வேலை வாய்ப்பும்
கிடைக்கிறது அதை நன்றாக உபயோகப் படுத்திக் கொள்ளலாம் செய்யும் தொழிலே தெய்வம் என்பதை வளர்த்துக் கொண்டால் உலகமே நம் முட்டியில் தான்
ஆனால் கூட நேர்மை ஒழுக்கம் .அன்றன்று காரியங்களை அப்போதே முடிததல்
மனிதாபிமானம் போன்றவைகள் இருந்தால் எதையும் சாதிக்கலாம்

கல்வியில் education in human value என்பதைக் கொண்டு வர வேண்டும்
அதற்கு நல்ல ஆசிரியர்கள் தேவை அதற்கு ஆசிரியர்கள் மன ம்கிழ்ச்சியாக இருக்க வேண்டும் அவர்கள் வீடு சுபீட்சமாக இருக்க வேண்டும் அவர்களுக்குத் தேவையான
செல்வம் கிடைக்க வேண்டும் மாணவர்களை குழந்தைகளாகவும் அதே சமயம்
தன் நண்பர்களாகவும் நினைத்துப் பழக வேண்டும் ,,To sir with love " சினிமா இதற்கு
நல்ல உதாரணம்

ஒரு அறிஞர் சொல்லுகிறார் unless knowledge is transformed into wisdom and wisdom is expressed
into charecter education is a wasteful process ,,,,,,,,,the end of education is charecter and the end of knowledge is love .

தங்கம் சொத்து பணம் ,,,இவைகளைவிட நமக்கு கல்வி வழியாகக் கிடைக்க வேண்டியச்
சொத்து உண்மை அன்பு ஒழுக்கம் சாந்தி அமைதி ,, இந்த இரத்தினங்கள்
வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவைகள். இவைகளை இதயம் என்ற வங்கியில்
சேர்த்து வைப்போம் ......
அன்புடன் விசாலம்
....

கல்வியும் வேலை வாய்ப்பும்

தற்கால கல்வியில் நம் எல்லோருக்கும் ஒத்து வரும்படி பல விதமான பிரிவுகள்
சமீப காலமாக அதிகரித்துள்ளன. ,நிறைய வேலை வாய்ப்பும் அதனால் ஏற்பட்டுள்ளன
ஆனால் ஒரு டாக்டர் ஆனாலோ அல்லது இஞ்ஜினியர் ஆனாலோதான் சிறந்த படிப்பு
அந்த பிரிவில் படித்தவன் தான் சிறந்தவன் என்றக் கணிப்பு மாற்றப் பட வேண்டும் .
எல்லோருக்கும் அந்தப்பிரிவில் ஆர்வமோ ,அல்ல்து லட்சியமோ இருக்க வாய்ப்பு இல்லை
அப்போது பெற்றோர்கள் தன் மக்களை அவர்கள் விருப்பமில்லாமல் தாங்கள் நினைத்தது
தான் படிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது தவறு . சித்திரம் வரைவதில்
ஆர்வம் உள்ள ஒருவனை "ஆமாம் நீ படம் வரைந்துக் கிழிக்கப் போகிறாய் ,,,அதுதான் சோறு போடுமா?என்று அவனது உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளாமல் இருக்கும் பெற்றோர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்,
என் பள்ளியில் மணி அடிப்பவனின் மகன் ,,குஷிராம் என்று பெயர் அவன் அம்மா
பாத்திரம் தேய்த்து படிக்க வைத்தாள் அவ்னுக்கு அவ்வள்வு படிப்பு வரவில்லை
ஆனால் அவனுக்கு மின்சார பழுது பார்ப்பதில் ரொம்ப ஆர்வம் , கஷ்டப்பட்டு 8 வது
தேறினான் அத்ற்கு பின் அவனால் முடியவில்லை நாங்கள் எல்லோரும் பணம்
சேர்த்து அவனை ஒரு மின்சார சம்பந்தப்பட்ட வகுப்பிற்கு அனுப்பி வைத்தோம்
ட்ரெய்னிங் இன்ஸ்டிடூயூட் ல் சேர்த்து இப்போது அவன் அதில் வெகு வேகமாக
முன்னேறி தற்போதுஒரு கடையே திறந்துள்ளான் அவனில்லாமல் ஒரு கல்யாண்மும்
நடப்பதில்லை அவன் தான் விளக்கு அலங்காரம் செய்கிறான்
நம் திரு ஹரிஹரன் கஜல் புகழ் ,, படிப்பில் பெரிய அளவு இல்லை என்றாலும் அவன்
குரல் வள்மும் பாட்டில் இருக்கும் உயிரும் எல்லோரையும் வளைத்துப் போட்டது
சின்ன வயதிலிருந்து அவ்ர் எனக்கு நல்ல பழக்கம்
நான் ஒரு தடவை ஜெனீவா போயிருந்தபோது ஹோலிப் பண்டிகை இருந்தது
அதற்கு நிறைய இந்தியர்களைக் கூப்பிட்டிருந்தார்கள் நானும் போயிருந்தேன்
அப்போது ஒரு இளைஞன் புல்கானின் தாடியுடன் மிகவும் ஸ்டைலாக
நடனம் ஆடிக்கொண்டிருந்தான் .பின் நடு நடுவே என்னைப் பார்த்து புன்னகைத்தான்
எனக்கு எங்கேயோ பார்த்தாற்போல் இருந்தது பதிலுக்கு நானும் புன்னகை வீசினேன்
உடனே அவன் ஓடி வந்து "மேடம் நான் தான் மஹேஷ் ,, உங்கள் பிடிதத மாணவன்
என்றான் பின் குனிந்து என் பாதத்தை ஒற்றிக் கொண்டான்
இங்கு எங்கே ? என்றுக் கேட்டேன் "நீங்கள் சொன்னது போல் நான் டெக்ஸ்டைல் டிசைன்
எடுத்துப் படித்தேன் இப்போது எக்ஸ்போர்ட் பிஸ்னஸ் செய்கிறேன்" எல்லாம் உங்கள்
ஆசிகள்தான் என்று சொன்னதும் நான் சுவர்க்கத்திற்கே போய்விட்டேன் ஒரு ஆசிரியைக்கு
தன் மாணவன் பணிவாக பணம் இருப்பினும் கர்வமில்லாது குருவின் காலில் விழுந்தால்
அதை விட மகிழ்ச்சி வேறு ஏது?
இப்போது கல்வி ஹோட்டல் மெனேஜிங் மாடலிங் , நடிப்பு கல்லூரி ஹேர் ஹோஸ்டஸ்
டிரெய்னிங் சில்ப கலை தோட்டக்கலை என்று பலவிதமாக இருந்து வேலை வாய்ப்பும்
கிடைக்கிறது அதை நன்றாக உபயோகப் படுத்திக் கொள்ளலாம் செய்யும் தொழிலே தெய்வம் என்பதை வளர்த்துக் கொண்டால் உலகமே நம் முட்டியில் தான்
ஆனால் கூட நேர்மை ஒழுக்கம் .அன்றன்று காரியங்களை அப்போதே முடிததல்
மனிதாபிமானம் போன்றவைகள் இருந்தால் எதையும் சாதிக்கலாம்

கல்வியில் education in human value என்பதைக் கொண்டு வர வேண்டும்
அதற்கு நல்ல ஆசிரியர்கள் தேவை அதற்கு ஆசிரியர்கள் மன ம்கிழ்ச்சியாக இருக்க வேண்டும் அவர்கள் வீடு சுபீட்சமாக இருக்க வேண்டும் அவர்களுக்குத் தேவையான
செல்வம் கிடைக்க வேண்டும் மாணவர்களை குழந்தைகளாகவும் அதே சமயம்
தன் நண்பர்களாகவும் நினைத்துப் பழக வேண்டும் ,,To sir with love " சினிமா இதற்கு
நல்ல உதாரணம்

ஒரு அறிஞர் சொல்லுகிறார் unless knowledge is transformed into wisdom and wisdom is expressed
into charecter education is a wasteful process ,,,,,,,,,the end of education is charecter and the end of knowledge is love .

தங்கம் சொத்து பணம் ,,,இவைகளைவிட நமக்கு கல்வி வழியாகக் கிடைக்க வேண்டியச்
சொத்து உண்மை அன்பு ஒழுக்கம் சாந்தி அமைதி ,, இந்த இரத்தினங்கள்
வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவைகள். இவைகளை இதயம் என்ற வங்கியில்
சேர்த்து வைப்போம் ......
அன்புடன் விசாலம்
....

சூடிகொடுத்த நாச்சியார்

அன்பு குழந்தைகளே நீங்கள் ஆண்டாளின் படம் பார்த்திருப்பீர்கள் , முக்கியமாகத் தலையில் பெரியக் கொண்டை அதைச் சுற்றி முத்துமாலை ,அந்த முத்து மாலையின் ஒரு பகுதி கொண்டையின் உச்சியிலிருந்து தொங்கி ஊஞ்சல் ஆட அழகோ அழகு மாறு வேஷப் போட்டியிலும் உங்களில் சிலர் ஆண்டாள் வேஷம் போட்டிருக்கலாம் ,,அந்த ஆண்டாளின்
கதையைப் பர்ப்போமா!

பன்னிரெண்டு ஆழ்வார்களின் நடுவில் ஒரு பெண்ணாக பூஜைகுரியவராக ஒரு பெரிய
இடம் பெற்று ஸ்ரீரங்கநாதனுக்கு அருகிலேயே இருக்கும் பாக்கியம் பெறற பூதேவியின் அவதாரம் அவர். .திரு விஷ்ணுசித்தர் என்ற ஒரு பக்தர் தினமும் கண்ணனுக்கு பூக்கள்
பறித்து த் தொடுத்து கோவிலில் கொண்டுபோய்க் கொடுப்பார் ஒரு சமயம் அவர் ஒரு முக்கிய வேலையாக வெளியே சென்றார் அப்போது ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது சற்று நின்று சத்தம் வந்த இடத்திற்குப் போக அங்கு ஒரு துளசி செடியின் கீழ் ஒரு அழகிய பெண் குழந்தையைக் கண்டார் ,தனக்கு குழந்தை இல்லாதக் குறையைத்
தீர்க்க அந்த எம்பெருமானே இந்தக் குழந்தையைக் கொடுத்திருக்கிறார் என்று ம்கிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தார் பூமியிலிருந்து கண்டெடுத்ததால் கோதை என்று பெயரிட்டு வளர்த்தார் அந்தப் பெண்ணிற்கு எல்லாக் கலைகளும் , கண்ணனைப் பற்றியும்
மற்ற நல்லொழுக்கம் தமிழ் , வேதாந்தம் போன்றவைகளும் கற்றுக் கொடுத்தார்
கண்ணனைப் பற்றிக் கேட்கக் கேட்க அவரையே மண்க்க ஆசைக் கொண்டாள்,
கண்ணன் மேல் அளவில்லாதக் காதலினால் அவனுடன் ஒடி விளையாடி,கண்களை பொத்தி ஒளிந்துக் கொண்டு கற்பனை உலகத்தில் மிதந்தாள் ,அவள் அழகாக
கண்ணனுக்காக மாலைக் கட்டி அதைத் தானே அணிந்துக் கொண்டு நிலைக்கண்ணாடியில்
பார்த்து ரசித்து பின் அந்த மாலையை கண்ணனுக்கும் அணிவிப்பாள்,இதே போல் நடக்க
ஒரு நாள் கோதையின் அப்பா மாலையை கோவிலுக்கு எடுத்துப் போக கையில் எடுத்தவுடன் அதில் கோதையின் நீள முடி இருந்ததைப் பார்த்தார் மிகவும் ம்னம் வருந்தி
அன்று மாலையைக் கோவிலில் கண்ணனுக்கு அணிவிக்காமல் இருந்து விட்டார் அன்றிரவு
கடவுள் அவர் கனவில் வந்து "கோதையின் நறுமணம் அவள் அணிந்துக் கொடுக்கும்
மாலையை நான் அணியாததால் இன்று வரவில்லை அவளை நான் ஆட்கொள்ள
விரும்புகிறேன் அவளை நன்கு மணப் பெண் போல் அலங்கரித்து ஸ்ரீரங்கத்திற்கு
ஸ்ரீஅரங்கநாதனிடம் அழைத்து வா "என்றார், பெரியாழ்வார் இதைக் கேட்டு மலைத்து
நின்றார்.பின் அந்தக் கண்ணன் புரோகிதர்களிடமும் கனவில் வந்து ஆண்டாளை
முத்துப் பல்லக்கில் அழைத்து வரவும் மற்றக் கல்யாண ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னார் இதே போல் அவர் குறிப்பிட்ட நாளில் எல்லோரும் சூழ கோதை என்ற ஆண்டாள் அழகாக அலங்கரித்து வர, மேள தாளங்கள் முழங்க க் கோவில் அருகில் வந்தவுடன் ஸ்ரீ ஆண்டாள் பல்லக்கிலிருந்து குதித்து மிக மகிழ்ச்சியுடன் போக
ஸ்ரீ ரங்கநாதரும் சிலையிலிருந்து வெளியே வர ஸ்ரீ ஆண்டாளை அணைத்துக் கொண்டு
மறைந்தார் ,,,
ஸ்ரீஆண்டாள் துள்சியின் அவதாரம் பூதேவியின் மறு அவதாரம் இவர் எழுதியத் திருப்பாவை மிகச் சிறப்பு வாய்ந்தவை மார்கழி மாதம் ஒவ்வொன்றாகப் பாட மனம் தூயமைப் பெறும் வாருங்கள் திருப்பாவை கற்ருக் கொண்டுப்
பாடலாம் ,,,

Tuesday, January 6, 2009

நேருஜிக்கு தன் மகள் சௌ இந்திராபிரயதர்சினியை ஒரு மகன் போல் வளர்க்க ஆசை,ஏனென்றால் அவருக்கு முதலில் ஒரு ஆண்மகவு பிறந்து உடனேயே இறந்து விட்டது , ஆகையால் இந்திராஜியை அவர் மகனாக நினைத்து அவருக்கு குதிரை ஓட்டும் பயிற்சி ,நீச்சல் பேட்மிண்டன்,முதலியவைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தித்தந்தார் ,அவரது தைரியமும் உடனடியாக்த் தீர்மானித்து செயல் புரியும்மனோதிடமும் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது .அவரை அவரதுதந்தை அன்புடனும் அத்துடன் கண்டிப்பு ஒழுங்குமுறையுடனும் வளர்த்தார் ,அவர் இந்தியாவை மிகச்சிறந்த நாடாக ஆக்கவும் கனவு கண்டார் .அந்தக் கனவை அவர் மகள் செயல்படுத்தினார் .இந்திராஜி மிகச்சிறந்த அறிவாளி .நடக்கப் போவதை முன் கூட்டியே சிந்தித்து செயல் படுவதில் திறமையனவர். இந்த அறிவு அவருக்கு அவர் படித்த பல புத்தகங்ளினால் மேலும் கூர்மையானது ,அவரதுதந்தை அவருக்கு அவரது பிறந்த நாளுக்கு புத்தகங்கள்தான்பரிசாகத் தருவாராம் ,தவிர அவர் தன் மகளுக்கு எழுதும் கடிதங்களும்சிந்தனையைத் தூண்டக்கூடியதாகவே இருக்கும் அந்தமாதிரி புத்தகங்களில் "Glimpses of world history"யும் Letters from a fatherti to a daughter " என்ற்வைகளைப் பலமுறை அவர் படிப்பாராம் .மிகவும் தரமிக்க புத்தகங்களைப் படித்ததால் அவர் எண்ணங்களும்உயர்ந்து நின்றன . அவரது தந்தை சுதந்திரப்போராட்டத்தில்அல்மோரா ஜெயிலில் இருந்தபோது 1935ல் புத்தாண்டு முதல் நாள்ஸ்யின்ஸ் ஆப் லிவ்விங் " என்ற புத்தகம் அனுப்பி வைத்தார்.இதைப்படித்தவுடன் இந்திராஜியிடம் ஒரு நல்ல மாற்றம்ஏற்பட்டு திடநிச்சியம் அசாத்திய துணிச்சல் போன்றவை வெளிப்பட்டன ,அவர் "ஜோன் ஆப் ஆர்க்"புத்தகம் படித்தப்பின் "அப்பா நானும்ஜோன் ஆப் அர்க்"போல் மிகவும் வீரமான பெண்மணி ஆவேன் "என்றார் .இவரது தாய் திருமதி கமலா நேருவும் மிகவும் மென்மையானவர்,பண்புள்ளவர் .இவரிடமிருந்து இந்திராஜி எளிமை , புன்முறுவல் ,அடக்கம் .பணிவு எல்லாம் கற்றுக்கொண்டார் ,ஆனால் அவரதுஅன்னை உடல் நலம் குன்றி டி பி யால் மிகவும் அவதிப்பட்டதால் நேருஜியின்
பொறுப்பு மிக அதிகமானது .அவரை நாலு வருடங்கள் பூனாவில் படிக்க அனுப்பிவைத்தார் .ஆனால் அம்மையாரோமூன்று வருடத்திலேயே நாலு வருடப்படிப்பை முடித்து விட்டார் .பினவர் சந்தினிகேதனில் படிக்கச்சென்றார்,அங்கு எல்லோருக்கும் மிகவும்வியப்பு தான் ,எத்தனைப் பெரிய கோடீஸ்வரி ஒரு சாதாரண இயற்கைச்சூழலால்சூழப்பட்ட ஒரு பள்ளியில் வந்துஎப்படி படிப்பார் ? அவர் எப்படி வருவார்?காரிலா ?வேலயாட்களுடனா?என்று பலசந்தேகங்கள்,,,,,,,,ஆனால் அவர் நட்ந்து ஒரு பழைய சூட்கேஸுடன் கையில்ஒரு படுக்கையுடன்வந்தது நம்பமுடியாததாக இருந்தது , அங்கும் மணிபுரி நடனம்கற்றுக்கொண்டார் அங்கு எல்லோர் உள்ளமும் கொள்ளைக்கண்டார் அவர் பின்ஆக்ஸ்போர்டு படிப்பு முடிந்தப்பின் இந்தியா வந்துசுதந்திரப்போராட்டத்தில் ஈடு பட்டார் ,வானர சேனா என்றும் ஒரு பிரிவைஆரம்பித்த்து போராட்டத்தில் பங்கு கொண்டு தன் தந்தைக்கும் உதவுவாராம் ,"விளையும்பயிர் முளையிலேயே தெரியும் என்றபடி சிறுவயதிலிருந்தே ,தேசப்பற்றுடன் வளர்ந்த இவர் இன்று எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பெற்றிருக்கிறார்,அவரது வயது பிறந்த நாள் நவம்பர் 19 ,,,,,,,,,,,என்னைக்கவர்ந்த அவரை நினைத்து வணங்குகிறேன் ,,,,,

அழுதாமலை

அழுகை நதி என்று ஒரு நதியா ? ஆம் இருக்கிறது ,இதைச்
சபரி யாத்திரைக்கு நடந்துச்செல்லும் பகதர்கள் காணலாம்
ஒரு அரக்கியின் கண்ணீர் ஒரு நதியாகவே ஓடுகிறது என்றால் வியப்பாக இருக்கிறது .அந்த
அரக்கியின் பெயர் மகிஷி.மகிஷியை வதம் செய்ய மணிகண்டன் அம்பு எய்ய அது மகிஷியைத்
தாக்கியது.அவள் உடலைத் துளைத்தது .அவள் அப்படியே சரிந்து விழ அவளது தீய
எண்ணங்களும் குணங்களும் சரிந்து வீழ்ந்து விட்டன ,அவள் தவறை உணர்ந்து ஸ்ரீஐயப்பனிடம்
அழுதபடியே மன்னிப்பு கேட்டாள் ,அப்போது அவளது கண்ணீர் ஆறாகப் பெருகி அழுதா நதியாக ஆனதாம் அவள் போரிட்ட இடம் அழுதா மலையானது.

சபரி மலைக்குப் போகும் பக்தர்கள் முதலில் அழுதாநதியில் குளிக்க வேண்டும் பின் அந்த நதியிலிருந்து ஒரு கல்லை எடுத்துக்கொண்டு தன்னிடத்தே வைத்துக்
கொள்ள வேண்டும் பின் பல மேடு பள்ளங்களைக் கடந்து அந்த மேடு முடியும் தருவாயில்
அந்தக் கல்லைப் போட்டு விடவேண்டும் எந்த இடத்தில் போட வேண்டும் என்பதைத்
தெளிவாக எழுதியும் வைத்திருக்கின்றனர் அதன் பெயர் "கல்லிடும் குன்று" இங்கு ஏன் எல்லோரும் கல்லைப் போடவேண்டும்? மகிஷியோடு உடல் அங்கு பூதங்கணங்களால் புதைக்கப்பட்டதாம் ,பூதகணங்கள் பல கற்களைப்போட்டு புதைத்தனராம் இதை நினனவு கூறும் சம்பவம் தான் கல் போடும் சம்பவம் ,

பின் வருகிறது கரிமலை கரி என்றால் சம்ஸ்கிருதத்தில் யானை , இதிலிருந்து தெரிகிறது
அந்தக்காடு முழுதும் யானைகள் இருக்கும் காடு என்று ,,கடும் விரத்ம் இருந்து ஐயப்பனின்
நாமம் ஒன்றே மனதில் இருத்திச்செல்லும் பகதர்களுக்கு இந்த இடத்தில் ஐயப்பனே துணை இருந்து கை கொடுப்பார் ,இந்தப் பாதை ஏறுவது மிகக் கடினம். மன திடத்துடன் பல பக்தர்கள்
ஏறுகிறார்கள் , இப்போதெல்லாம் சிலர் பம்பா நதிக் கரையிலிருந்து சபரி யாத்திரை ஆரம்பிக்கிறார்கள்

ஸ்வாமியே சரணமய்யப்பா

நீவருவாய் என

அன்பு மகனேஏன் இந்தக் கோபம் ?

ஏன் இந்தத் தாபம் ?

இதில் என்ன லாபம் ?

மரத்தின் பின்னே நீ,ஒளிந்திருந்திருப்பது ஏன் ?

என்ன தான் செய்கிறாய்?அசையாமல் நின்றபடி,,,,

,காணத்துடிக்கும் நான்காத்து நிற்கும் நான் ,

உன் பசியை நான் அறிவேன் .

அன்புப் பாலைச் சுரப்பேன்,

மா என்று அழைப்பாயே!துள்ளி ஓடி வருவாயே !

வந்துபுட்டான் பாவி மனுசன்

பால் கறக்கும் சின்னசாமி

பாலை ஒட்டக் கறந்து புட்டான்

என் கண்ணீர் வடிவது தெரியலயா

!என் மன நிலை நீ அறியலயா ?"

பால் குவளையும் கையுமாய்நடந்தான்

மரத்தடிக்கு சின்னசாமி ,

அலாக்காகத் தூக்கினான் கன்றை,

,வைக்கோல் சிதறி விழுந்தது.

அம்மா "என்ற ஆசைக் குரலுமில்லை ,

பசுவின் அலறல் மட்டும்

காற்றில் கலந்து அழுதது .

Monday, January 5, 2009

சுவாமியே சரணமய்யப்பா

ஸ்வாமியே சரணமய்யப்பா,,,,,,,,,,"பள்ளிக்கட்டு சபரிமலைக்க்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" என்றகோஷங்கள் கேட்கின்றன குருஸ்வாமி வழிக்காட்ட பகதர்கள் பின் செல்கின்றனர்முதலில் போகும் இடம் எரிமேலிபேட்டைஇங்கு பகதர்கள் பேட்டை துள்ளல் செய்கிறார்கள் இந்த இடத்தில் தான் ஸ்ரீமணிகண்டன் மகிஷியுடன் போர்செய்தான் இதை நினைவுகூரும் நிகழ்ச்சிதான் இது,அவர்கள் பாடும் பாட்டு நமையும் பாடவைக்கிறது "ஸ்வாமியே அய்யப்ப ,அய்யப்பஸ்வாமியே ,,சுவாமி திந்தக்க தோம் தோம் ஐயப்ப திந்தக்க தோம் தோம் என்றகோஷத்துடன் பாடல் , ,,,,,,,பேட்டைத்துள்ளிக்குப்பின் எரிமேலி சாஸ்தா பின் வாபரின் தரிசனம்,,,,,அதன் பின் காட்டு வழி தொடங்குகிறதுஅவர்கள் ஒரு நாள் தங்குவது பம்பாநதி தீரத்தில் தான் , இந்தப்பம்ப நதியை தக்ஷிண கங்கை என்றும் கூறுகிறார்கள் ,இது மிகச் சிறப்பு வாய்ந்த இடம் ஏனென்றால் ஐயப்பனைப் பிறக்கச் செய்தஇடமல்லவோ ? ஈசனும் மோகினி அவதாரம் எடுத்த மஹாவிஷ்ணுவும் தங்கள் சக்தியைஒன்று கலக்கச் செய்து ஹரிஹரனை உண்டாக்கிய இடம் ,அதோடு மட்டுமல்ல! பந்தளராஜா குழந்தை ஹரிஹரனைக் கண்டு எடுத்த இடமும் இதுதான் .இங்கு குளித்து பின் பூஜை செய்தப்பின் பக்தர்களுக்கு கிடைக்கும்சாப்பாட்டை "பம்பாசத்தி" என்கின்றனர் வடை பாயசத்துடன்சக்கைவரட்டி எரிசேரி ஓலன் , அவியல் , என்று பல ஐட்டங்கள்இருக்கும் சரியான பிறந்த நாள் விருந்துதான் .இந்த விருந்திலேசாதி இல்லை பேதமில்லை பண்க்காரரென்று இல்லை ஏழையென்றும் இல்லை ,எல்லோரும்ஒரே குலம் எல்லோரும் ஒரே இனம் என்றபடி அமைகிறது ,தவிர ஐயப்பனும் பகதர்வடிவில் வந்து அமர்ந்து "சத்தி"saddhi}உண்வாராம் ஆகையால் எல்லாபக்தர்களும் தம் அருகில் அமர்ந்திருப்பது ஐய்யப்னோ என்று எண்ணி மகிழ்ந்துபோவார்கள்.இதற்கு சமைப்பது இலேசல்ல ,,எத்தனைக் கூட்டம் ,,,அன்னதானம் நடந்தபடியேஇருக்கும் ,இதற்கென்று மூட்டப்பட்ட விற்கின் சாம்பல் மகா பிரசாதமாக ஆகிவினியோகிக்கப்படுகிறது இதனால் வளர்க்கும் அடுப்புக்கள் 108 ,,இந்தஅடுப்புச் சாம்பலை அல்லது பஸ்மத்தை பிரசாதமாக கன்னிசாமி வீடு எடுத்துவரவேண்டும்ஹரித்துவாரில் கங்கா மாதாவுக்கு மாலை ஆர்த்தி காட்டுவார்கள்ஒவ்வொரு அகல் விளக்கோ அல்லது பனை ஓலையில் விளக்கோ ஏற்றி ஆர்த்தி முடியும்தருவாயில் அவைகளை கங்கை நதியில்மிதக்க விடுவார்கள் ஒரே சமயத்தில் நூறுகண்க்கான விளக்குக்ள்மித்ந்துப்போவது கண்கொள்ளாக்காட்சிதான் ,,அதேபோல் இங்கும்மூங்கிலால் செய்யப்பட்ட சிறு சப்பரங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துநதியில் விடுவார்கள்,இவரது இருமுடிகளை ஐய்யப்னாகவே நினைத்து அவற்றுக்கும் தீபபராதனைச் செய்து பின் தலையில் ஏற்றி வைப்பார் ,,,,,,,பமபா நதி பார்க்க மிக அழகு ,,,கோயிலுக்கு போக முடியாதவர்கள் பம்பா நதி தீரத்திற்காவது அவசியம் போக வேண்டும் சபரி மலைக்குப் போகும் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு சிறப்பைக் கொண்டுள்ளது ,,,,அங்குப் போக அனுஷ்டிக்கும் நியதிகளால்ஒரு ஒழுங்கு முறை , மனத்தூய்மை எல்லாம் ஒன்றாக நினைக்கும் பக்குவம்எல்லாம் வந்துவிடுகிறது ஒரு வேளை சாப்பாடு பின் பலகாரம் என்பதில் சீரணசக்தி சீராக இயங்குகிறது ,படாடோபம் அஹங்காரம் மறைகிறது ,தேகப்பயிற்சி போல் நிறைய நடை இருப்பதால் உடல் சீராகுகிறது ,மனம் ஒருமைப்படுகிறது ,ஞாபகச்சக்தி பெருகுகிறது ,

பூலோக வைகுந்தம் ஸ்ரீரங்கம்

ஸ்தலங்களில் முதனமையானதும் அருள் மிகு ரங்கநாதர் சயனகோலத்தில் இருக்கும் க்ஷேத்திரமும் ஸ்ரீரங்கமாகும் இங்கு நடக்கும் உத்சவங்கள் யாவுமே மிகச்சிறப்பு வாய்ந்தவை ,அதிலும் மார்கழி மாதம் நடைப்பெறும் வைகுநத ஏகாதசி மிக முக்கியப்பங்கு வகிக்கிறது "பகல் பத்து " ",இராப்பத்து" இயற்பா என்று 21 நாட்கள் பாடப்படும் பகல்பத்தின் போது திரு அரங்கநாதர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளுவார் ,இராப்பத்தின் போது பெருமாள்ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி சேவைச் சாதிப்பது தொன்று தொட்டே நிகழ்ந்து வருகிறது
"மாதங்களில் நான் மார்க்ழியாக இருப்பேன்" என்று கீதையின் நாயகன் சொன்னார் .இந்த மாதத்தில் தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி திரு ஆண்டா.ளும் பாவை நோன்பு நூற்று அந்தஸ்ரீரங்கநாதனையே மணந்து அவருடன் ஐக்கியமானாள் ,அதே மார்கழியில் தான் இந்த வைகுண்ட ஏகாதசியும் வருகிறது ,ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆனி மாதம் சுக்ல ஏகாதசிமுதல் ஐப்பசிசுக்ல ஏகாதசிவரை இருக்கும் காலங்களில் யோக நித்திரைசெய்கிறாராம் . இதனால் இது சயன ஏகாதசி என்று கூறப்படுகிறது .ஆவணி மாதம் வரும் சுக்ல ஏகாதசியன்று வலது பக்கம் திரும்பிப்படுப்பதால் இதை பரிவர்த்தன ஏகாதசி என்றும் கூறப்படுகிறது ,பின் கார்த்திகை மாத சுகல ஏகாதசியை கைசிக ஏகாதசி என்கின்றனர் மார்கழிமாதம் தேவர்களுக்கு உஷா காலம் ,இந்த மாதத்தில் வரும் வைகுந்த ஏகாதசியில் திருவாய்மொழி ஓதப்படுகிறது பகல் பத்து நேரத்தில் திருமொழிப்பாசுரங்கள் சொல்லப்படும். பின் இராப்பத்தில் திருவாய் மொழிப்பாசுரங்கள் அபிநயங்களுடன் அரையர்களால் சேவிக்கப்படும் பத்தாம் நாள் திருநாளில் பெருமாள் மோகினி அவதாரத்துடன் வருவார் ,பின் வைகுந்த ஏகாதசியன்று நம்பெருமாள் ரத்ன அங்கியில் ஜொலிப்பார் மூலவரோ முத்தங்கியுடன் அழகு மிளிரக் காட்சி அளிப்பார் இதைக்காணக் கோடிக்கண்கள் போதாது, அத்தனை அழகு ,,,,வைகுந்த ஏகாதசிய்ன்று காலை 4 மணிக்க நம்பெருமாள் பரமபத வாசல் வழியே வந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளுகிறார் .இதையே "சுவர்க்க வாசல் திறப்பு"என்று கூறுகின்றனர் இந்த வைபவத்தில் தாம் நடுநாயகமாகப்பெருமாள் எழுந்தருளி நிற்க அவருக்கு எதிரில் அனைத்து ஆழ்வார்களும் வரிசையாக எழுந்தருளியிருக்கின்றனர் .இந்தக்காட்சி இந்த மார்கழி மாதத்தில் தான் காண முடியும் இத்துடன் இராப்பத்து எட்டாம் நாள் நம்பெருமாள் குதிரை வாகனத்தில் வந்து வேடுபறி கண்டருளுவர். பின் நம்மாழ்வார் மோட்சம் சேவிப்பது என்ற வைபவமும் கண்கொளாக்காட்சியாகும் இந்த உற்சவம் திருமங்கையாழவார் காலத்திலிருந்தே தொடங்கி இன்றும் நடைப்பெறுகிறது இத்துடன் இந்தவருடம் ஸ்ரீராமானுஜரின் முக்கிய சீடரான திரு கூரத்தாழ்வார் அவர்களின் 1000 வது ஆண்டும் சேர்ந்து வருகிறது அரசனுக்கும் அஞ்சாது ஸ்ரீ நாராயணனே பரம் பொருள் என்று வாதாடி வெற்றிக்கண்டு வைணவத்திற்காக தன் கண்களும் இழந்து வாழ்ந்தவரும் குருபக்த்தியில் மிகச்சிறந்து விளங்கிய திருகூரத்தாழ்வாரையும் வணங்கி அவர் அருள் பெறுவோம் குருவருள் ,திருவருள் இரண்டும் கிடைத்து வாழ்க்கையின் பலனைஅடைவோம் ,,,,,ஓம் நமோ நாராயணாய
அன்புடன் விசாலம்

Sunday, January 4, 2009

அவரவர் கண்ணோட்டம்

அவரவர் கண்ணோட்டத்தில் அவன் ஒரு திருடன்
அவன் மயங்கிக் கிடந்தான் . . குடித்துவிழுந்து கிடந்தான் .
பார்த்தான் ஒரு திருடன் ,
"பாவம் திருடிக்களைத்தானோ?
இரவெல்லாம் திருடினானோ?"
எண்ணம் அங்கு வலுத்தது.
மனமும் அதையே நினைததது .
அங்கிருந்து விலகினான்.
வந்தான் ஒரு வலிப்பு நோய்க்காரன் ,
ஒரு நிமிடம் அங்கு நின்றான்
கண்டு வருந்தினான் .
"ஐயோ!பாவம் ,,வலிப்பு வந்து விழுந்தானோ"
எண்ணம் அங்கு வலுத்தது
மனமும் அதையே உணர்ந்தது .
அடுத்து வந்தார் ஒரு உண்மை சாது.
கண்டார் அவனை அவர் நினைப்பில்
,,"சமாதி நிலையில் இருக்கிறானோ?
தொடுவேன் அவன் பாதம்
"எண்ணம் அங்கே வலுத்தது
அதையே செய்ய வைத்தது
அன்புடன் விசாலம்

தாய்க்கு நிகரேது

மரங்களில்லாத சாலையைக்கண்டேன் ,நாணயமில்லா வர்த்தகம் கண்டேன் ,தன்நலமிக்க மக்களைக் கண்டேன் ,பண்பில்லாத க்ல்வியைக் கண்டேன் .நேர்மையற்ற அரசியல் கண்டேன் .குறுகிய மனத்துடன் கூட்டங்கள் கண்டேன் .விரிந்த பார்வையில்லாத மதத்தினைக் கண்டேன்ஒற்றுமையற்ற ஜன சமுதாயம் கண்டேன் ,.அன்பில்லாத உறவினர்கள் கண்டேன்உறவினரில்லா வீட்டைக்கண்டேன்போலி சாமியார் வளர்வது கண்டேன் ,இதயமில்லா விக்ஞானம் கண்டேன் அர்த்தமற்ற கொச்சை பாடலகள் கேட்டேன் அனுபவமில்லாத உபதேசம் கேட்டேன் ஆடைக்குறைவின் பேஷன் கண்டேன் .பிஞ்சிலே பழுக்கும் மழலைகள் கண்டேன் தீவிரவாதம் வலுக்கக் கண்டேன் பணத்திற்கு கொலையும் செய்யக் கண்டேன் பாசம் ,அனபு குறையக் கண்டேன் லஞ்சப்பேய் வளரக் கண்டேன் முதியோர் இல்லத்தில் கூட்டம் கண்டேன் .விவாகரத்தும் பெருகக் கண்டேன் தேர்தலில் தில்லுமுல்லு நடக்கக் கண்டேன், எல்லாப்பொருளிலும் கலப்பைக்கண்டேன் இத்தனையும் கண்டேன் ,கண்டேன் ஒன்று மட்டும் மாறாது இருக்கக் கண்டேன் .அதுவே தாயின் உள்ளமெனெ என் மனம் சொல்லக்கண்டேன் அங்கு வற்றா பாசம் கண்டேன் இதற்கு நிகரேது என புரிந்தும் கொண்டேன் .'அன்புடன் விசாலம்

தாயின் பூரிப்பு

உன் செவ்விதழில் என் நெஞ்சம் சிலிர்க்கிறது ,.உன்வில்லொத்தப்புருவத்தில் என் மனம் மலர்கிறது .உன் முனகும் மொழியில் ,என் உள்ளம் பூரிக்கிறது உன் ஒப்பனையிலா அழகில் .என் சிந்தைப் பரவசமாகிறது . உன் தாமரைவிழிச் சுழற்சியில் ,என் என் உடல் உன்னை அணைக்கிறது உன் பட்டுப்போன்றக் கரங்களில்என் உள்ளம் பஞ்சு போல் மிருதுவாகிறது உனக்கு பாலூட்டும் வேளையில் .என்னை சுவர்கத்திற்கு அழைத்துச்செல்கிறது ,இந்த இனிமையான வேளையில்என் கணவரின் முகமும் தோன்றுகிறது இரண்டு மூன்றான நிலையில்மனம் இறைவனுக்கு நன்றிச்சொல்கிறது