Sunday, November 9, 2008

கதிர்காமம்

முருக வழிபாட்டுக்கு புகழ் பெற்ற ஸ்தலம் கதிர்காமம் இலங்கையில் உள்ளது முருகன் , வள்ளிக்கிழங்கு
அருகில் நம்பிராஜனால் கண்டெடுத்து பின் வளர்க்கப்பட்ட வள்ளி மேல் காதல் கொண்டு அவளை அடைய
கிழவர் வேஷ்ம் போட்டு தன் அண்ணன் கணபதியை உதவிக்கு கூப்பிட்டு பின் வள்ளியை மணம் புரிந்தார்,
"வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்றே"
இந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால் நாகூர் போல் இங்கு இந்துக்களும் வருகின்றனர் ,முஸ்லிம்களும்
வருகின்றனர், தவிர புத்த பெருமான் இங்கு வந்து தியானத்தில் அமர்ந்திருந்தார்..சிங்கள அரசன்
போரில் வெற்றி பெரும் ஆற்றலை கொடுக்கும்படி கதிரை ஆண்டவரிடம் வேண்டிகொண்டாராம் அப்படி ஜயித்தால் கதிரை ஆண்டவர் ஆலயம் கட்டுவதாகவும் வேண்டி அதை நிறைவேற்றியும் வைத்தார்.
இங்கு ஜாதி மத்க் கோட்பாடு கிடையாது இங்கு ஆடித்திருநாள் மிக கோலாகலத்துடன் நடத்தப்படும்,காவடிகளுடன் அலகு குத்திக்கொண்டு தன்னை மறந்த நிலையில் பரவசமடைகிறார்கள், இங்கு ஊர்வலத்தில் எண்ணெய்
தீவட்டி கிடையாது எல்லோரும் புது மண்சட்டி வாங்கி அதில் விபூதி நிறப்பி பின் கற்பூரம் கொளுத்தி வெளிச்சம் தருகிறார்கள், ஊர்வலம் போவது மிக மிக அழகு
முற்காலத்தில் இங்கு வரவேண்டும் என்றால் கனவில் உத்தரவு வர வேண்டுமாம் இப்போது அப்படியில்லை
யார் வேண்டுமானாலும் போகலாம்
கதிரை மலையின் மேல் உச்சியில் வேல் இருக்கிறது மக்கள் அங்கும் போய் வழிப்பட்டு கற்பூரம்
கொளுத்தி கும்பிடுவார்கள் இம்மலைக்கு அருகில் விபூதி மலை என்று உள்ள்து இங்கிருந்துதான்
கதிர்காமத்திற்கு தெவையான விபூதி தயார் செய்யப் படுகிற்து கதிர்காமம் அடைந்தால் குளுமையான மாணிக்க கங்கை ஓடுகிறதுஇது தேவர்கள் முனிவர்கள் தேவகணங்கள்
மனதார முருகனை தண்ணீருக்காக் வேண்டிக் கொண்டதால் வீரபாகு முருகனின் ஆணைப் பெற்று
வரவழைக்கப்பட்டதாம் .
எல்லோரும் ஒரு குலம் என்ற நோக்குடன் ஜாதி மத பேதமின்றி எல்லோருமே வண்ங்கும் இந்த இடத்தை
மானசீகமாக பிராத்தனை செய்வோம்

Friday, November 7, 2008

விவேக சிந்தாமணி 2

இரண்டாம் பாகம் ,,,இந்த நான் என்பதற்கு சாதி இல்லை பேதமில்லை மொழி நாடு குணம் குறைஎன்று ஒன்றும் இல்லைநாம் உலகத்தில் நடக்கும் நாடகத்தில் ஒரு வேஷம்எடுத்துக்க்கொண்டிருக்க்கிறோம் ,அந்த வேஷம் போட்டுக்கொள்ள நிச்சியம் ஒருஉடல் தேவை ,இப்போது நாம் ஒரு நடிகன் மேடையில் அந்த வேஷத்துடன்நடிக்கிறோம் ,பின் நாடகம் முடிந்ததும் வேஷமும்கலைந்துவிடுகிறது இதே போல்தான் உலகப்பற்று,,,,,,,,முதலில் பற்றினால் ஒரு வேஷம் போடுகிறோம் ,அது ஒரு நாள் கலையத்தான்போகிறது , குருவின் தயவால் அவரின் உதவியால் இந்த வேஷம் கலைக்கப்பட்டுபின் ஆன்மாவை உணர்கிறோம் ,எல்லா வேதாந்தத்திலும் ஆரம்பத்தில் கயிறு ,பாம்புஉதாரணம் வரும் ,இருளில் ஒருவன் நடக்கிறான் மொரு சாதாரணதாம்புக்கயிற்றைக் கண்டு பாம்பு எனநம்பி அலறுகிறான் பின் வெளிச்சத்தில் பார்த்தவுடன் அது கயிறாகஇருக்கிறது ,அதாவது ஞானஒளி வந்தவுடன் அவனுக்கு இது புரிகிறது , தெளிவுபிறக்கிறது ,அறியாமை என்ற இருளில் அவன் கயிறைப்பாம்பாக நினைக்கிறான் இதுதான் அவன் மாயையில்சூழ்ந்திருப்பது ,,,,,,,எப்போது ஒருவனுக்கு பற்று அகல்கிறதோ அப்போதுஞானமும் பிறக்கிறது அந்த ஞானம் பிறந்து விட்டால் என்றுமே ஆனந்தம் தான்துக்கம் அவனை அண்டுவதேயில்லை ,துக்கம் சுகம் ஏழை பணக்காரன் வெயில் குளிர் எல்லாமே அவனுக்குச் சமம் தான்"எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்போருள்மெய்ப்பொருள் காண்பது அறிது "என்கிறார் திருவள்ளுவர் ,எந்தப்பொருளையும் அதன் உண்மைக்குணங்களை நன்கு உணர்ந்து பின் தான்செயல்படவேண்டும்உலகம் மாயையால் கவரப்பட்டிருக்கிறது அந்த மயக்கத்தில் நாம் விழாமல்பொருள்களின் உண்மையைப் புரிந்து வழ்ந்தால் அத்வே ஞான வாழ்வாகும்.ஒருபெரிய நீரோடையில் பனிக்கட்டி விழுகிறது.. அது மிதந்தபடி பல நாட்கள்அப்படியே இருப்பதில்லை .மெள்ள நீரில் கரைந்து அத்துடன் சேர்ந்து கலந்தும்விடுகிறதுசங்கரர் சொல்கிறார் ." ஒரு கையளவு நீரை எடுத்து இதுதான் கரைந்த பனிக்கட்டி நீர் என்று சொல்லமுடியுமா? ஆன்மா பனிக்கட்டி என்றால் பிரம்மம் ஒரு கடல்,,பனிக்கட்டிப்போல் ஆன்மா பிரும்மத்துடன்கல்க்கிறது இதுவே "அஹம் பிரும்மாம்மி " நானே பிரும்மம் ,,,,,,,,,,

விவேக சிந்தாமணி

விவேக சூடாமணி என்பது ஆத்மாவின் தத்துவங்களைச் சொல்லும்நூல் ,இதை எழுதியவர் ஆதி சங்கரர் , இது அவரது முதல் ஆன்மீக நூல்.இதில்அவர் பாமர மக்களுக்கும் புரியும்படி மிகஎளிதாக எழுதியிருக்கிறார்,இதைப் படிக்கப்படிக்க ஆன்மீக வழிஎளிதாக அடைய முடியும் விவேகம் என்பதை இரண்டு விதமாகப்பிரயோகிக்கலாம் "அந்த மனுசன் ரொம்ப விவேகமான மனுசன் தான்" என்றும்"அவனுக்கு சின்ன வயதிலேயே விவேகம் வந்து விட்டது என்றும் கூறக்கேட்டிருக்கிறோம் இந்த அர்த்தத்தில் விவேகம் என்றால் அறிவு ,ஆன்மீகத்தில் விவேகம் என்பதற்கு உலகத்தில் இருந்தும் காணமுடியாதஇறைவனைப்பற்றி உண்மைகளைத் தெரிந்துக்கொண்டு அதைப்பற்றிச் சிந்தித்துமேலும் பல உண்மைகளை அறிவது எனலாம் எது தவறு எது சரியானது என்றுசிந்திப்பதும் விவேகம் தான்சூடாமணிஎன்பது நம் எல்லோருக்கும் தெரியும், சிதாப்பிராட்டிஅந்த அனுமனிடம் தன்னுடைய சூடாமணியைத் தான் உயிருடன்இருப்பதைத்தெரிவிக்க ஒரு அடையாளமாகக் கொடுத்துஅனுப்பினார் ,இதற்கே 500க்கும் மேல் ஸ்லோகங்கள் உண்டுஎன நினைக்கிறேன்,பலர் இதற்கு பாஷ்யமும் எழுதியுள்ளனர்.இன்னும் ராஜஸ்தானிலும் குஜராத்திலும் இந்தச் சூடாமணி அணியும் வழக்கம்உள்ளது இது பலரககற்களால் ஆனது நவரத்தினங்களால் செய்யப்படும் ஒரு அணிகலன்,இதைதலையில் வகிட்டிலிருந்து ஆரம்பித்து நெற்றி அரம்பத்தில் படும்படியாகஅணிவார்கள் தலையில் தான் கடைசி சக்க்ராவான ஸ்ஹஸ்ராரா இருப்பதால் அதுமுக்கியமாக இருந்திருக்குமோஎன நினக்கிறேன்சூடாமணி தலையில் எப்படி பிரகாசிக்கமோ அதுபோல் விவேகச்சுடர்சூடாமணியைப்போல் பிராகாசிக்கிறதுஅதில் கூறிய கருத்துக்கள் ,,தெய்வத்தின் அருள் இருக்க ஒருவன் சத்சங்கத்தில் இருப்பான்சத்சங்கத்தில் இருக்க அவனுக்கு நல்ல குருவும் கிடைப்பார் , ஒரு நல்லகுரு கிடைக்க நல்ல எண்ணங்கள் உருவாகும் ,குரு எப்படி இருக்க வேண்டும்?அவர் நல்லெண்ணங்கள் மட்டும் கொண்டிருக்க வேண்டும் சொல்லிக்கொடுப்பதைக்கடைப்பிடிக்க வேண்டும் பாபச்செயலகள் செய்யாதிருத்தல் வேண்டும் .வேதங்களைக் கற்று ஓதி அதன் வழிநடக்கவும் வேண்டும் தீயஎண்ணங்கள் வரவிடாமலும் அப்படி வந்துவிட்டால்அதைச்சுட்டெரித்து மனதைவிட்டே நீக்க வேண்டும்இரக்க சுபாவம் மனித நேயம் கருணை நல்வழி இவைகளுக்குவழிகாட்ட வேண்டும்.துக்கம் சுகம் இரண்டையும் சமநிலையாகப்பாவிக்கவேண்டும் பிறர் சேவை செய்யவேண்டும் தன் நலமில்லாமல் இருக்கவேண்டும் பற்றை ஒதுக்குப்வராக இருக்க வேண்டும் இதே போல் மஹான்கள்இப்பவும் இருக்கிறார்கள்{ஆனால் நம்க்கு பக்குவம் போதாமல் அவர்களைக் கண்டுக்கொள்ள முடிவதில்லை ,போலி சாமியார்களினால் நம்பிக்கைகுறைந்து போகிறது என நினக்கிறேன் }அடுத்த நிமிடம் நம் வாழ்வில் நட்ப்பது என்ன்வென்று தெரியாதுஆகையால் நல்லகாரியத்தை இப்போதே செய்து விடு ஆசை யாரை விட்டது?ஆசைப்படலாம்,ஆனால் அதிக அளவு அதாவது பேராசைப்படாதே ." பேராசைபெருநஷ்டம்"ஆசைகள் ஓரளவு அந்தந்த காலங்களில் அனுபவித்தபின்னர் அதையும்விவேகத்தால் வராமல் பார்த்துக்கொள் ,வந்து விட்டால் தடைசெய்துவிடு நான் என்றச்சொல்லைக் கவனித்து அந்த நான் யார்?என்று சிந்தித்தல் வேண்டும் .கைவலி என்கிறோம் கை என்பதுநானா ,,,கால் வலி என்கிறோம் கால் என்பது நானா? கால் என்பது நானாகஇருந்தால் "நான் வலி "என்று ஏன் சொல்வதில்லை?"நான் தூங்கிவிட்டேன்என்பதில் தூங்கியது யார் ?என் கண்ணா அல்லது நானா ? இவைகளெல்லாம் சிந்திக்கச் சிந்திக்க நம்க்குவிடைக்கிடைக்கும் ,எல்லா விஷயங்களுக்கும்"நான் யார்?"என்ற கேள்வி கேட்க ஒரு நாள் ஞானம் வெளிப்படும்என்று விவேக சிந்தாமணி சொல்கிறதுஇந்த ஞானம் ஆரம்பத்தில் கொடுப்பது நல்ல குருதான் அவர்ஆசியுடன் கடவுள் சித்தமும் இருந்தால் தான் இந்த நிலை கிடைக்கும் .