Saturday, November 9, 2013

சன்னல் வழியே பார்

எல்லா காளி கோயில்களிலும் பக்தர்கள் போனால் காளியைக் கர்பக்கிரஹத்தின்  அருகில் சென்று தரிசிக்க முடியும் .ஆனால் ஹிமாசலப் பிரதேசத்தில்  இருக்கும்  காளிக்கோயில் மிக வித்தியாசமாக ஆனது . அந்தக்கோயில் இருக்குமிடம்  ஷர்ஹான் என்ற 

கிராமம் . இயற்கையின் எழில் சூழ ஒரு குன்றின்மேல்   வெகு அழகாக அமர்ந்து  அருள்புரிகிறாள் அந்தக்காளி .  அவளை 'பீம்காளி' என்று அழைக்கிறார்கள். நான் கூட  அந்தக்காளியைப் பீமன் பூஜித்திருப்ப்பார்  அதனால் அந்தப்பெயர் வந்திருக்குமோ என நினைத்தேன் .

 என் நினைப்பும் உண்மையாகவே  இருந்தது . பாண்டவர்கள் இங்கே தங்கியிருந்ததாகவும் அப்போது பீமன் இந்தக்காளியைபிரதிஷ்டைச்செய்து  பூசித்ததாகவும்  சிலர் சொல்லுகிறார்கள்.

     பன்னிரண்டாம் நூற்றாண்டில்  பீம்கிரி என்று ஒருவர்  வழக்கம் போல் காலை மலைப்பகுதியில் நடந்துக்கொண்டிருக்க  அவர் காலடியில் ஒரு காளியின் சிலை தட்டுப்பட்டது . அதை மிக ஆர்வத்துடன் எடுத்து தன் வீட்டிற்குக் கொண்டு

வந்தார் .பின் அதற்கென்று ஒரு கோயில் கட்டி   காளியைப்பிரதிஷ்டைச் செய்தார் .பின் தினசரி பூஜைக்கும்  ஏற்பாடு செய்து தானும் அங்கு முழுநாளும் சேவை செய்ய   ஆரம்பித்தார் . பீமகிரி அந்தக்காளியைப் பிரதிஷ்டடைச்செய்ததால் எல்லோரும் 

அந்தக்கோயிலை  'பீமகிரி காளி  'என்று அழைத்தனர் . 

இங்கு வரும் பூசாரி  சிவப்புத்தொப்பியை அணிந்துக்கொள்கிறார்.அத்துடன்  அவர்   உடையும் சிவப்பு வர்ணமாக இருக்கிறது .அவர்  நேர் வழியாக வராமல்  கோயிலிருந்து வரும் ஒரு சுரங்கப்பாதையில் நுழைந்து   காளியிடம் வருகிறார் . பின்னர் பூஜை முடித்தப்பின்

அதே சுரங்கப்பாதை  வழியாக வெளியே வந்துவிடுகிறார். இப்படிச்செய்வதுதான்   முறை  என்று அங்கிருக்கும் ஒரு பெரியவர் சொன்னார். 

 பீம்காளியைப் பார்க்க பக்தர்கள் கருவறைக்கு சிறிது  தூரத்தில்  அமைத்திருக்கும் ஒரு சன்னல் அருகே வரிசையாக நிற்கிறார்கள் .  பின் சன்னல் வழியாகத்தான்  அந்தக்காளியைத் தரிசிக்கவேண்டும் காளியைப்பார்க்க சிவப்பு  தொப்பி அணிந்துக்கொண்டுதான்

வரவேண்டும் . காளி அப்படியே ரக்தவண்ணமாக அமர்ந்திருக்கிறாள்.கண்கள் முழித்தபடி  உருண்டையாக  இருக்கின்றன   நாக்கும் வெளியே நீட்டிகொண்டிருக்கிறது சன்னல் வழியாகப்பார்ப்பதால்  நேரில் அருகில் நின்று பார்ப்பது போன்று தெளிவாக இல்லை .

ஏன் அருகில் செல்லக்கூடாது என்று பலரைக்கேட்டேன் .ஆனால் விடை சரியாகக்கிடைக்கவில்லை . சிலர்  காளியின் சக்தி மிகவும்  அதிகமானதால்  நேரில் நம்மால் தாங்கிக்கொள்ளமுடியாது என்கின்றனர் 

இந்தக்காளியின் அருகில்  200 ஆண்டுக்ளுக்கு முன்  பிரதிஷ்டை செய்த காளியும் இருக்கிறாள். அவள் தான் பீமன் பூஜித்த காளியாக இருக்கலாம் . அவள் அருகில் இந்த பீம்காளி  எட்டுக்கரங்களுடன்     அருள் புரிகிறாள் .

இங்கு வரும் பக்தர்கள்  சிவப்பு அங்கியை வாங்கி காளி மேல் சார்த்த கொடுக்கின்றனர் .பக்தர்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றிவைக்கிறாளாம் இந்த  பீம்காளி  

No comments: