Sunday, November 9, 2008

கதிர்காமம்

முருக வழிபாட்டுக்கு புகழ் பெற்ற ஸ்தலம் கதிர்காமம் இலங்கையில் உள்ளது முருகன் , வள்ளிக்கிழங்கு
அருகில் நம்பிராஜனால் கண்டெடுத்து பின் வளர்க்கப்பட்ட வள்ளி மேல் காதல் கொண்டு அவளை அடைய
கிழவர் வேஷ்ம் போட்டு தன் அண்ணன் கணபதியை உதவிக்கு கூப்பிட்டு பின் வள்ளியை மணம் புரிந்தார்,
"வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்றே"
இந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால் நாகூர் போல் இங்கு இந்துக்களும் வருகின்றனர் ,முஸ்லிம்களும்
வருகின்றனர், தவிர புத்த பெருமான் இங்கு வந்து தியானத்தில் அமர்ந்திருந்தார்..சிங்கள அரசன்
போரில் வெற்றி பெரும் ஆற்றலை கொடுக்கும்படி கதிரை ஆண்டவரிடம் வேண்டிகொண்டாராம் அப்படி ஜயித்தால் கதிரை ஆண்டவர் ஆலயம் கட்டுவதாகவும் வேண்டி அதை நிறைவேற்றியும் வைத்தார்.
இங்கு ஜாதி மத்க் கோட்பாடு கிடையாது இங்கு ஆடித்திருநாள் மிக கோலாகலத்துடன் நடத்தப்படும்,காவடிகளுடன் அலகு குத்திக்கொண்டு தன்னை மறந்த நிலையில் பரவசமடைகிறார்கள், இங்கு ஊர்வலத்தில் எண்ணெய்
தீவட்டி கிடையாது எல்லோரும் புது மண்சட்டி வாங்கி அதில் விபூதி நிறப்பி பின் கற்பூரம் கொளுத்தி வெளிச்சம் தருகிறார்கள், ஊர்வலம் போவது மிக மிக அழகு
முற்காலத்தில் இங்கு வரவேண்டும் என்றால் கனவில் உத்தரவு வர வேண்டுமாம் இப்போது அப்படியில்லை
யார் வேண்டுமானாலும் போகலாம்
கதிரை மலையின் மேல் உச்சியில் வேல் இருக்கிறது மக்கள் அங்கும் போய் வழிப்பட்டு கற்பூரம்
கொளுத்தி கும்பிடுவார்கள் இம்மலைக்கு அருகில் விபூதி மலை என்று உள்ள்து இங்கிருந்துதான்
கதிர்காமத்திற்கு தெவையான விபூதி தயார் செய்யப் படுகிற்து கதிர்காமம் அடைந்தால் குளுமையான மாணிக்க கங்கை ஓடுகிறதுஇது தேவர்கள் முனிவர்கள் தேவகணங்கள்
மனதார முருகனை தண்ணீருக்காக் வேண்டிக் கொண்டதால் வீரபாகு முருகனின் ஆணைப் பெற்று
வரவழைக்கப்பட்டதாம் .
எல்லோரும் ஒரு குலம் என்ற நோக்குடன் ஜாதி மத பேதமின்றி எல்லோருமே வண்ங்கும் இந்த இடத்தை
மானசீகமாக பிராத்தனை செய்வோம்

No comments: