Friday, November 7, 2008

விவேக சிந்தாமணி 2

இரண்டாம் பாகம் ,,,இந்த நான் என்பதற்கு சாதி இல்லை பேதமில்லை மொழி நாடு குணம் குறைஎன்று ஒன்றும் இல்லைநாம் உலகத்தில் நடக்கும் நாடகத்தில் ஒரு வேஷம்எடுத்துக்க்கொண்டிருக்க்கிறோம் ,அந்த வேஷம் போட்டுக்கொள்ள நிச்சியம் ஒருஉடல் தேவை ,இப்போது நாம் ஒரு நடிகன் மேடையில் அந்த வேஷத்துடன்நடிக்கிறோம் ,பின் நாடகம் முடிந்ததும் வேஷமும்கலைந்துவிடுகிறது இதே போல்தான் உலகப்பற்று,,,,,,,,முதலில் பற்றினால் ஒரு வேஷம் போடுகிறோம் ,அது ஒரு நாள் கலையத்தான்போகிறது , குருவின் தயவால் அவரின் உதவியால் இந்த வேஷம் கலைக்கப்பட்டுபின் ஆன்மாவை உணர்கிறோம் ,எல்லா வேதாந்தத்திலும் ஆரம்பத்தில் கயிறு ,பாம்புஉதாரணம் வரும் ,இருளில் ஒருவன் நடக்கிறான் மொரு சாதாரணதாம்புக்கயிற்றைக் கண்டு பாம்பு எனநம்பி அலறுகிறான் பின் வெளிச்சத்தில் பார்த்தவுடன் அது கயிறாகஇருக்கிறது ,அதாவது ஞானஒளி வந்தவுடன் அவனுக்கு இது புரிகிறது , தெளிவுபிறக்கிறது ,அறியாமை என்ற இருளில் அவன் கயிறைப்பாம்பாக நினைக்கிறான் இதுதான் அவன் மாயையில்சூழ்ந்திருப்பது ,,,,,,,எப்போது ஒருவனுக்கு பற்று அகல்கிறதோ அப்போதுஞானமும் பிறக்கிறது அந்த ஞானம் பிறந்து விட்டால் என்றுமே ஆனந்தம் தான்துக்கம் அவனை அண்டுவதேயில்லை ,துக்கம் சுகம் ஏழை பணக்காரன் வெயில் குளிர் எல்லாமே அவனுக்குச் சமம் தான்"எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்போருள்மெய்ப்பொருள் காண்பது அறிது "என்கிறார் திருவள்ளுவர் ,எந்தப்பொருளையும் அதன் உண்மைக்குணங்களை நன்கு உணர்ந்து பின் தான்செயல்படவேண்டும்உலகம் மாயையால் கவரப்பட்டிருக்கிறது அந்த மயக்கத்தில் நாம் விழாமல்பொருள்களின் உண்மையைப் புரிந்து வழ்ந்தால் அத்வே ஞான வாழ்வாகும்.ஒருபெரிய நீரோடையில் பனிக்கட்டி விழுகிறது.. அது மிதந்தபடி பல நாட்கள்அப்படியே இருப்பதில்லை .மெள்ள நீரில் கரைந்து அத்துடன் சேர்ந்து கலந்தும்விடுகிறதுசங்கரர் சொல்கிறார் ." ஒரு கையளவு நீரை எடுத்து இதுதான் கரைந்த பனிக்கட்டி நீர் என்று சொல்லமுடியுமா? ஆன்மா பனிக்கட்டி என்றால் பிரம்மம் ஒரு கடல்,,பனிக்கட்டிப்போல் ஆன்மா பிரும்மத்துடன்கல்க்கிறது இதுவே "அஹம் பிரும்மாம்மி " நானே பிரும்மம் ,,,,,,,,,,

No comments: