Friday, November 7, 2008

விவேக சிந்தாமணி

விவேக சூடாமணி என்பது ஆத்மாவின் தத்துவங்களைச் சொல்லும்நூல் ,இதை எழுதியவர் ஆதி சங்கரர் , இது அவரது முதல் ஆன்மீக நூல்.இதில்அவர் பாமர மக்களுக்கும் புரியும்படி மிகஎளிதாக எழுதியிருக்கிறார்,இதைப் படிக்கப்படிக்க ஆன்மீக வழிஎளிதாக அடைய முடியும் விவேகம் என்பதை இரண்டு விதமாகப்பிரயோகிக்கலாம் "அந்த மனுசன் ரொம்ப விவேகமான மனுசன் தான்" என்றும்"அவனுக்கு சின்ன வயதிலேயே விவேகம் வந்து விட்டது என்றும் கூறக்கேட்டிருக்கிறோம் இந்த அர்த்தத்தில் விவேகம் என்றால் அறிவு ,ஆன்மீகத்தில் விவேகம் என்பதற்கு உலகத்தில் இருந்தும் காணமுடியாதஇறைவனைப்பற்றி உண்மைகளைத் தெரிந்துக்கொண்டு அதைப்பற்றிச் சிந்தித்துமேலும் பல உண்மைகளை அறிவது எனலாம் எது தவறு எது சரியானது என்றுசிந்திப்பதும் விவேகம் தான்சூடாமணிஎன்பது நம் எல்லோருக்கும் தெரியும், சிதாப்பிராட்டிஅந்த அனுமனிடம் தன்னுடைய சூடாமணியைத் தான் உயிருடன்இருப்பதைத்தெரிவிக்க ஒரு அடையாளமாகக் கொடுத்துஅனுப்பினார் ,இதற்கே 500க்கும் மேல் ஸ்லோகங்கள் உண்டுஎன நினைக்கிறேன்,பலர் இதற்கு பாஷ்யமும் எழுதியுள்ளனர்.இன்னும் ராஜஸ்தானிலும் குஜராத்திலும் இந்தச் சூடாமணி அணியும் வழக்கம்உள்ளது இது பலரககற்களால் ஆனது நவரத்தினங்களால் செய்யப்படும் ஒரு அணிகலன்,இதைதலையில் வகிட்டிலிருந்து ஆரம்பித்து நெற்றி அரம்பத்தில் படும்படியாகஅணிவார்கள் தலையில் தான் கடைசி சக்க்ராவான ஸ்ஹஸ்ராரா இருப்பதால் அதுமுக்கியமாக இருந்திருக்குமோஎன நினக்கிறேன்சூடாமணி தலையில் எப்படி பிரகாசிக்கமோ அதுபோல் விவேகச்சுடர்சூடாமணியைப்போல் பிராகாசிக்கிறதுஅதில் கூறிய கருத்துக்கள் ,,தெய்வத்தின் அருள் இருக்க ஒருவன் சத்சங்கத்தில் இருப்பான்சத்சங்கத்தில் இருக்க அவனுக்கு நல்ல குருவும் கிடைப்பார் , ஒரு நல்லகுரு கிடைக்க நல்ல எண்ணங்கள் உருவாகும் ,குரு எப்படி இருக்க வேண்டும்?அவர் நல்லெண்ணங்கள் மட்டும் கொண்டிருக்க வேண்டும் சொல்லிக்கொடுப்பதைக்கடைப்பிடிக்க வேண்டும் பாபச்செயலகள் செய்யாதிருத்தல் வேண்டும் .வேதங்களைக் கற்று ஓதி அதன் வழிநடக்கவும் வேண்டும் தீயஎண்ணங்கள் வரவிடாமலும் அப்படி வந்துவிட்டால்அதைச்சுட்டெரித்து மனதைவிட்டே நீக்க வேண்டும்இரக்க சுபாவம் மனித நேயம் கருணை நல்வழி இவைகளுக்குவழிகாட்ட வேண்டும்.துக்கம் சுகம் இரண்டையும் சமநிலையாகப்பாவிக்கவேண்டும் பிறர் சேவை செய்யவேண்டும் தன் நலமில்லாமல் இருக்கவேண்டும் பற்றை ஒதுக்குப்வராக இருக்க வேண்டும் இதே போல் மஹான்கள்இப்பவும் இருக்கிறார்கள்{ஆனால் நம்க்கு பக்குவம் போதாமல் அவர்களைக் கண்டுக்கொள்ள முடிவதில்லை ,போலி சாமியார்களினால் நம்பிக்கைகுறைந்து போகிறது என நினக்கிறேன் }அடுத்த நிமிடம் நம் வாழ்வில் நட்ப்பது என்ன்வென்று தெரியாதுஆகையால் நல்லகாரியத்தை இப்போதே செய்து விடு ஆசை யாரை விட்டது?ஆசைப்படலாம்,ஆனால் அதிக அளவு அதாவது பேராசைப்படாதே ." பேராசைபெருநஷ்டம்"ஆசைகள் ஓரளவு அந்தந்த காலங்களில் அனுபவித்தபின்னர் அதையும்விவேகத்தால் வராமல் பார்த்துக்கொள் ,வந்து விட்டால் தடைசெய்துவிடு நான் என்றச்சொல்லைக் கவனித்து அந்த நான் யார்?என்று சிந்தித்தல் வேண்டும் .கைவலி என்கிறோம் கை என்பதுநானா ,,,கால் வலி என்கிறோம் கால் என்பது நானா? கால் என்பது நானாகஇருந்தால் "நான் வலி "என்று ஏன் சொல்வதில்லை?"நான் தூங்கிவிட்டேன்என்பதில் தூங்கியது யார் ?என் கண்ணா அல்லது நானா ? இவைகளெல்லாம் சிந்திக்கச் சிந்திக்க நம்க்குவிடைக்கிடைக்கும் ,எல்லா விஷயங்களுக்கும்"நான் யார்?"என்ற கேள்வி கேட்க ஒரு நாள் ஞானம் வெளிப்படும்என்று விவேக சிந்தாமணி சொல்கிறதுஇந்த ஞானம் ஆரம்பத்தில் கொடுப்பது நல்ல குருதான் அவர்ஆசியுடன் கடவுள் சித்தமும் இருந்தால் தான் இந்த நிலை கிடைக்கும் .

No comments: