Wednesday, June 10, 2009

கற்பகத்தரு

நிலவாக உன்னை நினைத்தாலோ,
காலை காணாமல் போய்விடுவாய்
மலராக உன்னை நினைத்தாலோ
ஒரு நாளில் நீ உதிர்ந்துவிடுவாய்,
வானவில்லாக உன்னை நினைத்தாலோ
கணநேரத்தில் நீ மறைந்து விடுவாய் ,
பனித்துளியாக உன்னை நினைத்தாலோ
வெயில் பட மறைந்து விடுவாய் ,
அலைகளாக உன்னை நினைத்தாலோ
காலை முத்தமிட்டு ஓடி விடுவாய் ,
மலையாக உன்னை நினத்தாலோ
கல்மனம் போல் நீ மாறிவிடுவாய்.
நீராக உன்னை நினைத்தாலோ
பனிக்கட்டிப்போல் உறைந்து விடுவாய் ,
உன்னை நான் ஒன்றும் நினைக்க்வில்லை
எனக்கு நீ நீயாகவே இரு
என்றுபோல் நீ ஒரு கற்பகத் தரு

அன்புடன் விசாலம்

No comments: