Wednesday, June 10, 2009

அம்மாவென்று அழைக்காத உயிரிலில்லையே

மதர்ஸ் டே அதாவது அன்னையின் தினம் இது இந்தக்காலத்தில் நிச்சியமாகக் கொண்டாடப்படவேண்டிய ஒன்று ஏனென்றால்இந்தக்காலத்தில் அன்னையுடன் சேர்ந்து இருக்கும் வாய்ப்பு இளைஞர்களுக்குமிகவும் குறைவு. கல்விக்காகவும் உத்தியோகத்திற்காகவும் இவர்கள்பெற்றோர்களை விட்டு வெகு தூரம் போக வேண்டி இருக்கிறது. அவர்களுக்குஅன்னையை நினைக்க விரும்பினாலும் வேலையின் பளுவில், காதலில் மற்றபொழுதுபோக்குகளில், அவர்கள் மூழ்கி விடுவதால் அதன் முக்கியத்துவம் ஓரளவுமறைந்துதான் விடுகிறது ,வாரம் ஒரு தடவை போனில் விஜாரிப்பதோடு சரி அல்லது பணம் அனுப்புவதோடு சரி ,,,, முன் காலத்தில் இந்த நிலைமை இல்லை வேதக்காலத்திலேயே முதலில் அன்னைக்குத்தான் சிறந்த இடம் மாத்ரு தேவோ பவ என்று முதலில் அன்னைக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருந்தது முன் காலத்தில் அன்னைதினம் என்று தனித்தினம் தேவையில்லாமல் இருந்தது ஏனென்றால் காலையும் மாலையும் கூட்டுக்குடும்பத்தில் பெற்றோர்களை வணங்கிஆசியும்பெற்றுக்கொள்ளும் வழக்கம் இருந்தது தவிர அன்னையும் வீட்டில் இருந்து தன்மக்களின் நலத்தையே முக்கியமாகக்கொண்டு நல்லவளர்ப்பில் அவர்களைக் கொண்டு வந்தாள். பூணல் போட்டவுடன் முதலில் அன்னையைவணங்கி பவதி பிக்ஷாந்தேஹி என்று அந்த மகன் கேட்டு முதல் அரிசியையும்பருப்பையும் பிக்ஷையாக அன்னையிடமிருந்து வாங்கிக்கொண்டு ஆசி கோருகிறான் அன்னை பத்து மாதங்கள்: சுமந்து பல இன்னல்களுக்கு உடபட்டுஉள்ளிருக்கும் கருவையும் பொத்திப்பொத்திக் காப்பாற்றி அல்லல்பட்டுகுழந்தைப்பிறப்பு என்ற இன்பமான அவஸ்தையும் பட்டு அந்தக்குவா குவாசத்தத்தில் உலகையே மறக்கிறாள்,அன்று ஆரம்பிக்கும் தியாகம் அவள் உயிர் உள்ள வரையிலும்
தொடர்கிறது .கடைசியில் சந்தர்ப்ப வசமாக அவள் முதியோர் இல்லம் போகநேர்ந்தாலும் தன் மக்களை வெறுப்பதில்லை ஆனால்வாழ்த்துகிறாள்,அந்தப்புண்ணியவதியை நினைக்க ஒரு தினம் வேண்டாமா?நல்லவேளையாக் அன்னா ஜார்விஸ் என்பவர் இதை ஆரம்பித்துவைத்தார் அவரை மறக்கவே முடியாது எது இருந்தாலும் வெளி நாடுகளிலிருந்துவந்தால் அதற்கு தனி மவுசுதான் என்று இந்தியர்களின் எண்ணம் இது போல் தான்காதலர்தினமும் வந்ததுஆனால் அது கொடிக்கட்டிப் பறப்பதுப்போல் அன்னைதினம்இல்லை அது சிகரத்தைத் தொட்டுவிட்டது இந்த அன்னையின் தினம் அல்லவோசிகரத்தைத் தொடவேண்டும் ?தாய்க்கு என்ற ஒரு நாளை ஏற்படுத்தியஅன்னாஜார்விஸ் இதை உலகம் முழுவதும் மே மாதம் இரண்டாவதாக வரும் ஞாயிறுஎன்றுநிர்ணயித்து ஒப்புதலையும் பெற்றார் இந்த நாளில் அன்னைக்குத்தகுந்த மரியாதை அளித்து பரிசுகளும் கொடுத்து அன்று முழுவதும் அவர்கள்மகிழ்ச்சிகாக பாடு படவேண்டும் என்றும் சொன்னார் வெளி நாடுகளில் பதினாறுவயது முடிந்தவுடனேயேமகன் மகள் தனித்து வாழ்த்தொடங்கி விடுகின்றனர் ஆகையால்அன்னைக்கு என்று ஒரு தினம் அவர்களுக்கு மிகவும் தேவை ,ஆண்களே ! வருத்தப்படாதீர்கள் அப்பாதினமும் உண்டு ஆனாலும் அந்த அப்பாவைத்தந்ததும் ஒரு அன்னை தானே நேபாலில் இந்த அன்னை தினம் பல்லாண்டுகளுக்கு முன்பாகவேஇருந்ததாம் மாதா தீர்த்த ஔன்சி என்ற பெயராம் , இது வைகாசிஅமாவாசையன்று வருகிறது.மாதா என்றால் அன்னை தீர்த்த என்றால் தீர்த்தயாத்திரை அதாவது நேபாலின் பள்ளத்தாக்கில் புனித நீர் ஓடும் இடத்தில் இந்தயாத்திரை இந்த இடம் வரை நடந்தே வந்து அன்னையை வழிபடுகிறாகள்,பின்வீட்டில் இருக்கும் அன்னைக்க்குப் பரிசுகள் வழங்குகிறார்கள்,ஆசியும்பெறுகிறார்கள்.இதற்கு ஒரு புராணக்கதையும் உண்டு ,கண்ணன தேவகியைப்பிரிந்து பின் ஒருநாள் அவளைத்தேடி வருகிறான் தேவகியைப்பிரிந்த கண்ணனுக்கு பலவிதமான ஆபத்துக்கள் வந்தன,அன்னையைத்தேடித்தேடி பின் அவளை காட்மாண்டு பள்ளத்தாக்கில் ஒரு புனிதஆற்றில் காணுகிறான் தேவகி அன்னை ஸ்னானம் செய்துக்கொண்டிருக்கிறாள் பின்அன்னை கண்ணனை மிகுந்தப்பாசத்துடன் கட்டி அணைக்கிறாள், பின்இந்த இடத்தில் குளித்து அன்னையை நினைப்பவர்களுக்குஎன் பரிபூரண ஆசிகள் உண்டு என்றாளாம்.ஆனால் பின் வந்த சந்ததிகள் அவ்வளவாக இதைச் செய்வதில்லைஎன ஒரு நேபாலி குர்க்கா வருத்தப்பட்டுக்கொண்டான் ,\அன்னையைப்போல் ஒரு தெய்வம் உண்டோ ,,,,என்ற பாடலும்அம்மாவென்று அழைத்தாலே ,,,,,என்ற பாடலும் மனதில்ஞாபகம் வர நானும் மேல் லோகத்தில் இருக்கும் என் அன்னையை நினைத்து வணங்குகிறேன்

No comments: