Wednesday, June 10, 2009

யாதகிரி நரசிம்மர்

ஓம் வஜ்ர நகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஷட்ராய தீமஹிதந்நோ நாரசிம்ஹ:ப்ரசோதயாத்....இது நரசிம்ம காயத்ரி இதை நரசிமஹ ஜயந்தி அன்று ஜபிக்க நோய்கள் விலகி எங்கும்ஜயம் தான்*நாம் யாதுகிரி குட்டாவிற்குப்போய் அங்கு இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மரைப்பார்த்து ஆசிகள் பெறலாமா?ஹைதராபாத் லிருந்து சுமார் 69 கிமீதூரத்தில் வாரங்கல்லுக்கு அருகிலும் இந்தலக்ஷ்மிநரசிம்மர் கோயில் இருக்கிறது இது எதனால் விசேஷம் என்றால் இது பஞ்சநரசிம்மக்ஷேத்ரம் ,இங்கு ஒரு குகையில் யது என்ற ரிஷி தவம் இருந்தார் ,இவர்ரிஷிய சிங்கர் சாந்தாதேவி அவர்களது புத்திரர்.இவருக்கு மஹாவிஷ்ணு தரிசனம்தந்து அருள் புரிந்தார் ,ரிஷியும் தான் நரசிம்ஹ மூர்த்தியாக அவரைப்பார்க்கவிரும்பினார்,முதலில் ஜ்வால நரசிம்ஹராக வந்தார் பின்னர் உக்ர நரசிம்மராகத் தோன்றினார்அவர் மிக்வும் உக்ரமாகத் தோன்ற ரிஷியும் அந்தத் தோற்றம் வேண்டாமென்றுகேட்டுக்கொண்டார் ஆகையால் யோக நரசிம்மராகக் காட்சி அளித்தார் அதிலும் திருப்திபடாமல் போனதால் சாந்தமாக ல்க்ஷ்மி நரசிம்மராக தரிசனம் கொடுத்து அருள்புரிந்தார் ,ஆக மொத்தம் பஞ்ச நரசிம்மராகக் காட்சிக்கொடுத்தார் ,என்ன அத்புதம் !இங்குப் போனால் நவகிரஹ தோஷம் போய்விடுகிறது பில்லி சூன்யம் ஏவல் போன்றதும்மறைகின்றன , நாற்பது நாட்கள் தொடர்ந்து பூஜிக்க தீராத வியாதியும் தீருகிறதுஇவர்தான் அங்கு வைத்ய நரசிம்மர் ஆகிறார் ,இங்கு ஆஞ்சநேயரும் இருக்கிறார் தவிரஸ்ரீ ஆண்டாள் நான்கு ஆழ்வார்கள் ராமலிங்கேஸ்வர ஸ்வாமியும் எழுந்தருளிஅருள்பாலிக்கின்றனர் .கர்ப்பக்கிரஹத்தின் மேல் சிகரத்தில் தங்க சுதர்சனச்சக்கரம் உள்ளது முன்பெல்லாம்இந்தச்சக்கரம் பகதர்கள் வரும்போது அந்தப்பக்கம் திரும்பிஒரு காம்பஸ் போல்வழிக்காட்டுமாம்பல ரிஷிகள் இங்கு வந்து தியானம் செய்கிறார்கள் ,இதற்கு ரிஷி ஆராதனா க்ஷேத்ரம்என்றும் பெயர் ,இப்போதும் இங்கு பஞ்ச ராத்ர ஆகமம் நடக்கிறது.ஸ்ரீ வெங்கிபுரம்நரசிமசார்யாலு என்பவர் இந்த நரசிம்ஹரைப்பற்றி சுப்ரபாதம் பின் பலஸ்லோகங்கள் எழுதி இருக்கிறார்சுமார் முன்னூறு அடிக்குமேல் இருக்கும் இந்த பஞ்சநரசிம்மரையும் ரிஷி தவம்செய்த குகையும் பார்த்து ஆசி பெறலாமேஅன்புடன் விசாலம் *

No comments: