Friday, September 12, 2008

பாசம் என்ன விலை?

இன்று காணும் சூழ்நிலை ,
கூட்டுக்குடும்பம் பிரிநிலை
"பாசம் எங்கே?" என்ற நிலை ,
பணமே வாழ்க்கை ஆன நிலை .
தம்பதிகள் மட்டும் என்ற நிலை
பெற்றவருக்கு வந்தது அவல நிலை ,
அத்தை எங்கே மாமா எங்கே?
காணாதப் போகும் பந்துக்கள் எங்கே ?

கண்டேன் ஒரு சம்பவம்
அடுக்கு மாடிக்கட்டிடம்
ஏழாம்மாடியில் குடும்பம்
காட்டுவது மிக டம்பம்
காலை எழுந்தால் ஓட்டம் ,
பணம் சேர்க்கும் நாட்டம்
அடுத்த வீட்டில் யார்?
தெரியாத நிலை ,,,
முன் வீட்டில் யார் ?
பழகாத நிலை ,,,,,,
பேச நேரமும் இல்லை ,
நேரமிருக்க மனமுமில்லை

ஒரு நாள்,,,,,,,
கீழ மாடியில் ஒரு கூட்டம்
கேட்டது அழுகை ஓலம்
விபத்தில் ஏற்ப்பட்ட மரணமாம்
வேலைக்காரி தந்த விவரம்
எட்டிப்பார்த்தான் அவன் ,
கூட நின்றாள் அவள்,
ஆபீஸ் போகும் பரபரப்பு,
முகத்திலே ஒரு சிடுசிடுப்பு,
"செத்தவன் யாரோ?
நாம் யாரோ?"
அலங்காரம் தொடர்ந்தது ,
பீம் பீம் "காரும் நகர்ந்தது
காற்றினிலே ஓலம் கலந்தது ,
,

No comments: