Friday, September 12, 2008

உலக நல்லெண்ணங்கள் நாள்

உலக நல்லெண்ணங்கள் நாள்,,,ஆஹா கேட்கவே எத்தனை அருமையாக இருக்கிறது இந்த நாளில் ஒரு வெறுப்பு இருக்காது ஒரு வசவு இருக்காது கோபம் தாபம் எல்லாவற்றையும் மூட்டைக்
கட்டி வைத்து விட்டு மனதை நல்லெண்ணங்களாலே நிரப்புவோமாக , ஒரு குழுவில் நாம் செய்யும் பிரர்த்தனைக்கே எத்தனைச் சக்தி! இதை நாம் எல்லோரும் கண்கூடாகப் பார்க்கிறோம் ஒவ்வொருவருடைய நல்லெண்ணங்களும் அவர்களது வாழ்த்தலும் நம்மைச் சுற்றிப்பரவி பிரபந்தத்தில் கலந்து அதனால் நல்ல வைப்ரேஷன் ஏற்பட்டு அதனுடைய நற்பலன்களையும்
நாம் காண்கிறோம் இதே போல் உலகமுழுவதும் இன்று பாசிடிவ எண்ணங்கள் உதயமாக அதனுடைய சக்தி எத்தனை வலுவு மிகுந்ததாக இருக்கும் ?இலங்கையில் நல்ல
அமைதியான வாழ்க்கைப் பிறந்தவிட்டதாக எண்ணுவோம் தீவிரவாதிகள் மனம் மாறி
நல்ல செயல் செய்வதாக எண்ணுவோம் உலகில் இருக்கும் எல்லா மக்களும் வசதியாகவும்
நிம்மதியாகவும் வாழுகிறார்கள் என்று எண்ணுவோம் இதேபோல் பல பிரச்சனைகளுக்கு
முடிவு வந்து வளமாக வாழ்வதாக எண்ணுவோம் தவறு இழைப்பவர்களை மன்னித்து அன்பைப் பரப்ப எண்ணுவோம் பெற்றோர்கள் குருமார்களுக்கு சேவை செய்ய எண்ணுவோம்
இதே போல் எத்தனை ந்ல்லெண்ணங்கள் உண்டோ அத்தனையும் உலகம் முழுவதும் எண்ண அதன் பலன் சொல்ல இயலாது ஆனால் எண்ணுவதிலும் போலித்தனம் இல்லாமல்
உணமையாக அடி மனத்திலிருந்து வர வேண்டும்
இதனால்தான் ஒருவருடைய பெயரும் பார்த்து நல்ல பொருள் வருவதாக வைக்கிறார்கள்
பலர் அவரை அழைக்க அது அவரைச் சுற்றி பரவி அவருக்கு நல்லது செய்கிறது சிலர் நல்ல பெயரை வைத்துப் பின் சுருக்கி விடுகிறார்கள் அதனால் கிடைக்கும் பலன் போய்
விடுகிறது சில பெயரில் இருக்கும் பொருளில் எதிமறை அலைகள் பரவி அது அவர்களுக்கு
துன்பமும் விளைவிக்கிறது "நேமாலஜி"இதிலிருந்து தான் பிறந்திருக்கும் என நினைக்கிறேன்

எண்ணங்களின் வலிமைக் குறித்து ஒரு புத்தகத்தில் படித்தேன்
ஒரு நோயாளி தன் நோயின் விஷத்தன்மை நீங்க தினமும் அந்த நோய் தன்னைவிட்டு
கறுப்பு கலரில் வெளியே செல்வதாகவும் அதனால் தான் திரும்ப உடல் நலம் பெற்றது
போல் வலிமையான எண்ணங்களை தினமும் கற்பனைச் செய்ய டாக்டர்களும் வியக்கும்படி
நன்கு தேறிவிட்டார், இதுவே தான் ஆல்பா தியானமும் சொ
ல்கிறது ந்ல்லெண்ணங்களை
விதைப்போம் நன்மைச் செய்வோம் நற்பலன்களைப் பெறுவோம்

உலக நல்லெண்ண்ங்கள் நாளுக்கு என் வாழ்த்துக்கள் அன்புடன் விசாலம்

No comments: