Friday, September 12, 2008

தோன்றினும் புகழுடன் தோன்றுக

இசை மேதை திருமதி அருணா சாயிராம்

இவர் நமது இசையை மேல்நாடுகளுக்கும் எடுத்துச் சென்று புகழ் மாலைச் சூட்டி வந்திருக்கிறார் என்று தெரிவிப்பதில் மிகப் பெருமை அடைகிறேன் {singer Aruna has been honoured with a spl congressional proclamation issued by the U.S.House of representatives } அந்த இடத்தில் நம் நாட்டுத்
தேசிய கீதம் இசைக்க அதே போல் அவர்கள் நாட்டு தேசிய கீதம் இசைக்க அவளை
மரியாதைச் செய்தது எனக்கு மிகப் பெருமை ,,,,,,அருணா சாயிராமுடன் அவர் சிறு குழந்தையாய் இருந்ததிலிருந்தே பழக்கம் ,அவர் தாயார் திருமதி ராஜலட்சுமி தந்தை
திரு சேதுராமன் என் குடும்பத்தில் ஒருவராக இருந்தனர் அந்தப் பெற்றொர்கள் அருணா
பெரிய பாடகியாய் வர கனவு கண்டனர்,அவர்கள் இப்போது இருந்திருந்தால் எத்தனை மகிழ்ச்சி
அடைந்திருப்பார்கள்? அவர்கள் எங்கிருந்தாலும் ஆசிகள் வழங்குக் கொண்டிருப்பார்கள்
திருமதி அருணா நடனமும் படித்தார் . அவளுடன் நான் பல வருடங்கள் கூட இருந்திருக்கிறேன் பள்ளிக்குப் போகும் வயது ,அப்போதே பாட்டும் சாதகம் செய்ய
அவளது பெற்றோர்கள் மிகவும் உதவினர் ,
தனக்கென ஒரு பாணி வகுத்துக் கொண்டு எந்தப் பாட்டு பாடினாலும் அதில் ஒரு விருத்தம் போல் சேர்த்து பின் பாடல் பாடும் அழகே தனி . ,கச்சேரியில் முதல் பாதி நேரம் ராக ஆலாபனை, கற்பனை ஸ்வரங்கள் ராகம் தானம் பல்லவி என்று முடித்து பின் பாமர
மக்களுக்கும் புரியும்படி நாட்டுப்பாடல்கள் காவடிச் சிந்து திருப்பாவை துக்காராம் ஞானேஸ்வர்
போன்ற்வர்கள் பாடிய அபங் மராட்டியில் ,,என்று கச்சேரி களைக் கட்டும் ஒவ்வொரு பாடலிலும் அதன் பாவத்தைக் காணலாம் முருகன் நேரே வருவார் குழலூதும் கண்ணன் என்ன ,,,,,திருப்பதி வெங்கடாசல்பதி என்ன! காமாட்சி என்ன! என்று பலரையும் நமக்கு நேரே
நிறுத்தி விடுகிறார் நாம் உணர்ச்சி மேலிட்டு அழுதும் விடுகிறோம் இது எல்லாவற்றுக்கும்
காரணம் கடும் உழைப்பு ,சுருதி சுத்தத்துடன் பல மணி நேரங்கள் அப்பியாசம் ,அதில் லயித்து ஒரு யோகம் போல் ஒன்றிவிடுதல் ,,,,,,,,,இத்தனை இருந்தும் கர்வம் இல்லாமல்
எல்லோரிடமும் இனிமையாகப் பேசும் குணம் தன் மாமியார் அவர்களிடம் அன்பும் மரியாதையும் வைத்திருக்கும் பண்பு என்று பல நற்குணங்கள் அவரிடம் இருக்கின்றன

அவர் கணவர் திரு சாயி ராமும் எனக்கு நன்குப் பழக்கப்பட்டவர் அவரது ஒத்துழைப்பும் இவர் மேலே முன்னேற வழி வகுத்தது அவருடைய பாட்டு காளிங்க நர்தன தில்லானா,,,, ஊத்துக்காடு பாடல் இன்றும் காதில் ஒலிக்கிறது அவருடைய ஒவ்வொரு பாடலும் முத்துக்கள் ,,,, அருணா ,,,,நான் உங்கள் உயர்வைக் கண்டு மிகப்பெருமை அடைகிறேன்,நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்க வளமுடன்
,

No comments: