Friday, September 12, 2008

ஓணம்

ஆகஸ்டு கடைசி வாரத்திலிருந்தே கேரளா களைக்கட்ட ஆரம்பித்து விடுகிறது எங்கு
பார்த்தாலும் ஒரே கூட்டம் நகைக் கடைகளிலோ கேட்கவே வேண்டாம் தவிர ஓணத்தின்
புடவையும் 300லிருந்து ஆரம்பித்து பல ஆயிரம் வரை ,,,எங்கும் மகிழ்ச்சி எங்கும் உல்லாசம் ,,
இது எல்லாம் எதற்கு? அவர்களது மன்னன் திரு மஹாபலி சக்கிரவர்த்தி அல்லவோ
வரப்போகிறார் !
திருவோண நட்சத்திர நாளில் வந்து ஒவ்வொரு பிரஜையையும் ஆசிர்வதித்துப் போகிறார்
அவரை வரவேற்க ஒவ்வொரு வீட்டு வாசலிலும் புஷ்பங்களால் அழகானக் கோலம்
போடப்பட்டிருக்கிறது ,எந்தக் கோலம் சிறந்தது என்றுச்சொல்ல முடியாதபடி அத்தனை அழகுடன் நம்மை மயக்குகிறது அவர் வருவதால் யானைகளின் ஊர்வலம் அந்த யானைகளுக்கும் பளபளவென உடை அதில் சரிகை வேலைப்பாடு ,,தவிர வித்விதமாக வாண
வேடிக்கை ,எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்கு வித்வித்மாக பிரசாதம் அந்தச் சாப்பாட்டை
சத்தி {saddhi } கூறுகின்றனர் ஓலன் காலன் எரிச்சேரி கூட்டான் பாலபாயசம் சக்கைப்பாயசம்
என்று பல வகைகள் அவர்கள் போடும் வாழை இலையின் அளவைப் பார்த்தாலே வயிறு
ரொம்பிவிடும் அந்த இலையின் முழுவதிலும் பலவிதமான ஐட்டங்கள் ஓ சொல்ல மறந்தேனே
நேந்தரம் பழம் இல்லாமலா,,,,,,,,அதுவும் இலையில் பலரூபங்களில் பறிமாறப்படுகின்றன ,
இதன் புராணம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று மஹாவிஷ்ணு வாமன்ராக வந்து மூன்று அடிகள் யாசித்தார் அதை திரு மஹாபலி கொடுக்க சம்மதித்த்வுடன் விண்ணையும் மண்ணையும்
இரண்டு அடிகளாக அளந்து பின் மூன்றாவது அடி எங்கே வைப்பது என்று கேடக மஹாபலி
தன் தலையைக் காட்ட அவரும் தன்பாதத்தை அவர் தலை மீது வைக்க அவன் கீழே அழுத்தப்பட்டு விடுகிறான் எல்லா மக்களும் அவருக்காக வருந்தி அழ மஹாபலியும் தன் பிரஜைகளைப் பார்க்க வருடத்தில் ஒரு நாள் அனுமதி வேண்டி
நிற்க ஸ்ரீ மஹாவிஷ்ணுவும் ஆசிகள் வழ்ங்குகிறார் திருவோண நட்சத்திரத்தில் அவர்
தன் மக்களைப் பார்க்க வருவதாக ஒரு ஐதீகம்
கேரளா சர்க்கார் இந்த வாரத்தைச் சுற்றுலா வாரமாக வைத்து விடுகிறது ஆகையால் வெளி
நாட்டவர்கள் கூடுகின்றனர் அவர்களுக்கு மிகவும் பிடித்த படகு போட்டி அல்லவா இருக்கிறது
அதுவும் கேரளா "வள்ளம் களியையும் கதக்களியையு
ம் பார்க்க நாம் நம்மையே மறந்து
விடுவோம் அத்தனை உல்லாசம் ,,பாம்பு போல் வளைந்தப் படகில் வரிசையாக மக்கள் உடக்கார்ந்து ஒரே மாதிரி துடுப்பு செலுத்தி அத்துடன் பாடலும் ரிதத்துடன் ஓட்ட ,,பார்க்க
வேண்டிய காட்சி தான் சிலர் புலி வேஷம் போட்டுக் கொண்டு தெருவில் நடனமும் ஆடுகின்றனர்

ஒணத்திற்கு நல் வாழ்த்துகள்

No comments: