Wednesday, November 6, 2013

கோகுலத்தில் கண்ணன்

கண்ணன் என்றவுடனேயே நமக்கு கோகுலமும்  பிருந்தாவனமும் ஞாபகத்திற்கு வந்துவிடும் .எனக்கு இங்கு பலதடவைகள் போகும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம் தான் ,கண்ணன் பிறந்த இடம் ஒன்று ,வளர்ந்த இடம் ஒன்று ,பிருந்தாவனத்தில் கண்ணனை ராதையுடன் காணலாம்  .
வடநாட்டில் ருக்மிணியைவிட ராதைக்குத்தான் அதிக செல்வாக்கு . தெருவில்
ரிக்க்ஷாகாரனும் வழிவிட மணி அடிப்பதில்லை  வாய் நிறைய ' ராதே கிருஷணா'
என்று தான்  சத்தமாக சொல்கிறான் . கோகுலத்தில் பலராமர் கோயில்
உள்ளது அங்குக்குழந்தைக்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு . பல குழந்தைகளை
அங்கு அமர வைத்து பிரசாதம் கொடுத்து ஆசீர்வதிக்கிறார்கள்.
பலராமர் போல் பலத்துடன் வீர்யத்துடன் குழந்தைகள் வளருவார்கள் என்ற நம்பிக்கையால் இதுபோல் செய்கின்றனர் .
கோகுலத்தில் கண்ணன் வெண்ணெய் திருடித்தின்ற இடங்களையும்  நாம்
பார்க்க முடிகிறது இங்கே பசுக்களுக்குப் ப்ஞ்சமில்லை  நாம் நிற்கும்போதே நம்மேல் உரசிய வண்ணம் போகிறது .ஆனால் முட்டுவதில்லை ,
நல்ல ருசியான பாலும்  லஸ்ஸியும் {மோரும்} எப்போதும் கிடைக்கிறது .
 
பிருந்தாவனத்தில் கூட்டம் அலை மோதுகிறது  பொறுமையாக கியூவில் நகர கண்ணன் அருகில் வந்தாலும் திருப்பதி  போல்  உடனேயே நகர்த்திவிடுகிறார்கள்.
ஒரு நிமிடம் தான் கண்ணனைப்பார்க்க அனுமதி . ஏன் என்றால் கண்ணன்
அழகில் பிரமித்து நிற்க திருஷ்டி விழுந்துவிடுமாம் .
 
இந்தக்கண்ணன் சாக்ஷாத் நாராயணனே ! இந்த நாராயணன்  கண்ணனாகப்பிறநத
அழகைப்பார்க்க சிவன் ஆசைப்பட்டார் .கண்ணனைப்பார்க்க ஆசையுடன் வருகிறார்.பரமேஸ்வரனின் உடை தான் தெரியுமே !
புலித்தோலுடன் நீண்ட தாடியுடன் ஒரு முனிவர் போல் வந்து நின்ற சிவனைப்
பார்த்த யசோதை ஒன்றும் புரியாமல் குழம்பிப்பிபோய் நிற்கிறாள்
"கண்ணா கண்ணா' என்று முனிவர் அழைக்கிறார் .யசோதைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை  இவரைப்பார்த்து குழந்தை பயப்படுமோ என்று அஞ்சுகிறாள் அதே சமயம் முனிவருக்கும்  மரியாதை செலுத்த வேண்டும் .அதனால்  யசோதை அந்த முனிவரிடம்
"என் செல்லம் தூங்குகிறான்  அவனை அணைத்தபடி கொண்டு வருகிறேன் இரண்டு நிமிடங்கள்  தான் பார்க்க வேண்டும் .தூக்கம் கெடாமல் இருக்க வேண்டும் "
 ''அப்படியே செய்கிறேன் "என்று பரமேஸ்வரன் இரண்டுநிமிடங்கள் பார்த்து
மனம் பூரித்து மறைந்துவிடுகிறார்
யசோதைக்கும் வந்தது அந்தப்பரமேஸ்வரனே  என்று புரிந்தது அந்தச்சிவனுக்கே கண்ணனைப்பார்க்க இரண்டு நிமிடங்கள் தான் கிடைத்தது ஆகையால் தான்
பக்தர்களுக்கும் ஒருநிமிடம் தான் பார்க்க அனுமதி .
 
கண்ணனை இங்கே 'பாங்கே பிஹாரி 'என்று மக்கள் அழைக்கின்றனர்
கண்ணன் கை புல்லாங்குழலை ராதையாகவே கருதுகிறார்கள்.
 
தில்லியிலிருந்து சுமார் 147 கிமீ தூரத்தில் இந்த விரஜபூமி இருக்கிறது
எங்கும் ஜே ஜே என்ற கூட்டம்  கண்ணன் ராதை அழகில் நாமும் நம்மை மறந்துவிடுகிறோம் 

No comments: