Wednesday, November 6, 2013

உண்மை வெல்லும்

அன்பு குழந்தைகளே சில சமயம்  நாம்  அனாவசியமாக புகழாரம்  சிலருக்குச் சூட்டுகிறோம்,அவர் அதற்கு தகுதியாக இருந்திருக்க  மாட்டார் எனினும்  அவர் செல்வாக்கைப் பார்த்து 
அவரது அன்பினால் நமக்கு எதாவது ஆதாயம் கிடைக்கும் என்று சுயநல எண்ணத்தினால்  அவரை பொய்யாக  உயர்த்தி பேசுகிறோம்.சில சமயம் நமது பெரியவர்கள் தாய்  தந்தை 
தவறு செய்தாலும் அதை மரியாதையுடன்   பக்குவமாக பணிவான குரலில் எடுத்து  சொல்ல வேண்டும் ,உண்மை  எப்போதும் வெல்லும் ,மன திடம் , தைரியம்   இருந்தால் எப்போதுமே நாம் முன்னுக்கு வர  முடியும்  ,
இப்போது ஒரு கதை  பார்க்கலாம் 
 
ஒரு நாட்டை  ஒரு அரசர் மிகச் சிறப்பாக ஆண்டு வந்தார் ,அவர் தன் ஆட்சிஎல்லோருக்கும் பிடித்திருக்கிறதா ?தான் மேலும் நாட்டு நலனுக்கு எதாவது செய்ய வேண்டுமா? 
என்று தெரிந்துக்கொள்ள ஒரு சிறந்த அறிவுறை வழங்கும் மந்திரியைத் தேடினார் ,அதற்கு நாடு முழுவதும்  தண்டோரா போடச்சொன்னார் ."இதனால் நம் அரசர் சொல்வது என்னவென்றால்   ,,,டம்டம் டம் ,,,,,,,,நம் அரசருக்கு சிறந்த மந்திரி  தேவை ,,,டம்டம்டம் 
நாளை திங்கட்கிழமை  தேவைப்படுபவர் அரசரை வந்து சந்திக்கலாம்  டம்டம்டம் .....
என்று  பணிவாளர்கள் நாடு முழுவதும்  இதை அறிவித்தனர் ,
பலர் கூடினர்  ,அதில் ஒரு ஐந்து பேர்களைத்தேர்ந்தெடுத்தார்  அரசர்.
முதலில்  ஒருவனை அழைத்தார் ." அறிவாளியே,நான் எப்படி அரசை ஆள்கிறேன் என்று சொல் " 
முதல்  மனிதன்  சொன்னான் " மதிப்புக்குறிய அரசரே ,,நாடு உங்கள் தலைமையில் மிகவும் சுபீட்சமாக இருக்கிறது நாங்கள் எல்லோரும்  மிக மகிழ்ச்சியுடன்  இருக்கிறோம்"
இரண்டாவது  மனிதனிடமும் இதே கேள்வி கேட்கப்பட்டது ,
அவன் பதிலளித்தான் "அன்புக்குரிய அரசரே  தங்கள்  ஆட்சியில் நாங்கள் சுவர்க்கத்தில் இருப்பது போல் தான்  எல்லாமே அனுபவிக்கிறோம் நான் சொல்ல என்ன  இருக்கிறது?"
மூன்றாவது மனிதனோ  அரசரை மிகவும் புகழ்ந்து   தலை மேல் தூக்கிவைத்துக் கொண்டாடினான் . இவர்கள் எல்லோருக்கும் அரசன் வைரக்கற்களை அன்பளிப்பாகக்
கொடுத்து அனுப்பிவைத்தார் 
கடைசியில் ஒருவன் வந்தான்  அரசர் இதே கேள்வியை அவனிடமும் கேட்டார்     
அதற்கு அவன் " நீங்கள் நன்றாக ராஜ்யத்தை  ஆண்டாலும் இன்னும் மக்கள் நலனுக்க்காக பல செய்யவேண்டும் மரங்கள் நிறைய நடவேண்டும் இன்னும் வழிப்போக்கர்களுக்கு  சத்திரங்கள் பல கட்டவேண்டும் சுங்க வரியைக் குறைக்க வேண்டும்  "என்று  அவர் செய்யாத சில  பணிகளை பணிவாக எடுத்துறைத்தான் 
அரசருக்கு அவனது  தீரம் .உண்மைப்பேசுதல்  மிகவும்  பிடித்திருந்தது  அனாவசியமாக  புகழாரம் சூட்டாமல் 
 தவறுகளைச் சுட்டிக்காட்டியது மிகவும்  பிடித்தது ,அவனையே  தன் 
மந்திரியாக்கிக் கொண்டார் .
அனாவசியமாகப் பொய்ச் சொல்லிப்புகழ்ந்த  மற்றவர்கள்   தங்கள் வைரக்கற்களைப் பார்த்து  பெருமை அடைந்தனர் ஆனால் அது போலி என்று பிறகு  தெரியவந்தது ,தங்கள் முட்டாள்தனத்திற்கு  வருந்தினர்.
ஆகவே   உண்மைப்பேச பயப்படாதீர்கள் எப்போதும் உண்மையே பேசுங்கள்

No comments: