Wednesday, November 6, 2013

சிவன் வில் பெற்ற இடம்

மஹாபாரதத்தில் கர்ணனுக்கு துரியோதனன் நண்பனாகி  அவனுக்கு பரிசாக அங்க
தேசத்தை அளித்தான் .இந்த அங்க  தேசத்திற்கு சம்பா என்ற இடத்தைத்தலைநகராக
அமைத்தான் கர்ணன் ...வட இந்தியாவில் சுல்தான்கஞ்ச் என்ற இடம்  ஒன்று உண்டு.அதன்  அருகே  இந்தத் தலைநகரைக் காணலாம்

இந்தச்சம்பா  என்ற இடத்தில் தான் கர்ணன் கட்டிய கோட்டையை."கர்ணாகர்"
என்ற பெயரில் இன்றும் நாம் காணலாம்.     தற்போது   .இந்தக்கோட்டை மிகவும்
சிதிலமடைந்துள்ளது .
பாகல்பூர் என்ற ஜில்லாவில் தான்  சுல்தான்கஞ்ச் என்ற டவுன் உள்ளது.
.இங்குதான் மிகவும் புகழ்ப்பெற்ற  "அஜ்கெய்பிநாத் மஹாதேவ் ஆலயம் " உள்ளது
.இந்த  மகாதேவருக்கு  கங்கை  நீராலேயே அபிஷேகம் செய்யப்படுகிறது .
இங்கு ஓடும் கங்கைக்கு  ஜாஹ்னவி என்ற பெயரும் உண்டு .இவள்
தெற்கிலிருந்து வடக்கு பக்கம் ஓடுவதால்  இவள் உத்தரவாஹினி ஆகிறாள்.
இங்கு ஓடும் கங்கைக்கு  ஜாஹ்னவிஎன்ற பெயரும் உண்டு .

 ஜாஹ்னு என்ற முனிவர்  ஒரு குன்றின் அருகில் தன் ஆஸ்ரமம்  அமைத்து தன்
சிஷ்யர்களுக்கு வேதம் ஓத பயிற்சி  அளித்து வந்தார் .கங்கையின் பிரவாகத்தினால் அந்தப்பெரிய குன்று பலமுறை   அடிக்கப்பட்டு  அளவில் சிறிதாகியது
இந்தக்குன்றின் மேல்தான்  மகாதேவர் ஆலயம் கட்டப்பட்டது .

சரி....கங்கை எப்படி ஜாஹ்னவி என்ற பெயர் பெற்றாள்?.

ஒரு சமயம் ஜாஹ்னு முனிவர்  தன் தபஸில் தீவரமாக இறங்கி இருந்தார் .அப்போது
பகீரத முனிவர்  தன் முன்னோர்கள் பரமபதவி பெற  கங்கை நதியைச் சிவனது ஜடையிலிருந்து தருவிக்க சிவனை நோக்கி  கடும் தவமிருந்தார் .
சிவனும் மனமகிழ்ந்து கங்கையை ஜடாமுடிலியிலிருந்து பூமிக்கு இறக்கினார்
.அவ்வளவுதான்  ! கங்கை   கட்டுக்கடங்காமல் பூமியில் பாய்ந்தது
தவத்தில்  மூழ்கியிருந்த முனிவர் மேல் கங்கை பாய்ந்தது .எதிர்ப்பாராத
இந்த நிகழ்வால் சீற்றமுற்று கங்கையைத்தன்   சக்தியால்  அப்படியே விழுங்கிவிட்டார் .
பகீரத முனிவர் அங்கு வந்து   கங்கையை வரவழைத்த காரணத்தைக்கூறி
மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.பின்னர் கங்கையைத்திருப்பி தரும்படி
வேண்டுகோள் விடுத்தார் .   ஜாஹ்னு முனிவரும்தன் தொடையைக்கீறி  கங்கையை வெளியே விடுத்தார் .ஜாஹ்னு முனிவரிடமிருந்து வந்ததால்  கங்கையும்  ஜாஹ்னவி என்ற பெயர்  பெற்றாள்.

இந்த இடத்தில் இருக்கும் குன்றின்  மேல் இருக்கும்  சிவன்  சுயம்புவாக வந்ததாம் ஆற்றின் நடுவில் இருக்கும் குன்றுக்குப்போக  முன்பு   படகை உபயோகித்து வந்தனர் .ஆனால்
 இப்போது  கரையிலிருந்து   குன்றுக்குச்செல்ல ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது .
குன்றின் மேல்  கோயிலைத்தவிர ஒரு மசூதியும் இருக்கிறது இந்த மசூதி இக்தியார் முகமது கில்ஜியில் கட்டப்பட்டது .

சிவனின் ஆலயம் வட  இந்திய பாணியில்  கட்டப்பட்டிருக்கிறது .அவர் "கெய்பிநாத் 'என்ற பெயரில் ஜடாமுடியுடன் காட்சி தந்து அருள் புரிகிறார்.   குன்றின் இருக்கும் குகையில் பல சித்திரங்களைக்காணநமக்கு அஜந்தா .எல்லோரா நினைவு வருகிறது .சுவர்களில் புத்த  சமய சித்திரங்கள்  ராமாயண காட்சிகள்    மகாவிஷ்ணு நரசிம்மர் போன்றவைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன .

சில இடங்களில் வெறும் கற்தூண்கள் மட்டும் நிற்கின்றன. அங்கு கோயில்
இருந்து பின்னால் அழிந்துபோயிருக்கலாம் .ராமாயணத்தில்  ஜனகரிடம் ஒரு வில் இருந்ததும்   .ஜனகரின் மகள் சீதையின்சுயம்வரம் போது அந்தவில்லை   அனாயாசமாக தூக்கி நிறுத்தி
 உடைத்ததும்  நம் எல்லோருக்கும் தெரியும் அந்த வில்லை வட இந்தியாவில்
"அஜ்கெய்ப் தனுஷ் 'என்கிறார்கள். இந்த வில்லை  இந்தக்குன்றின் மேல்தான் சிவன் இருந்து பெற்றார்.இந்தக்குன்றில் ஜாஹ்னு  முனிவர் இருந்ததாலோ என்னவோ இதற்கு  ஜாஹ்னு கிரி என்று   பெயர் .விசுவகர்மா பிரத்யேகமாக  சிவனுக்கென்று தயாரித்த வில் தான் இது

 இந்த வில் வந்த  காரணம் என்ன?

 நாரதர் தன் கலகத்தினால் இந்திரனைத்தூண்டி விட்டார் .. அதுதான் சிவன்
பராக்கிரமசாலியா அல்லது விஷ்ணுவா?இருவரிலும் யார் பெரியவர் .....
ஹரியா  அல்லது ஹரனா?இதற்கென்று ஒரு போட்டியும் நடத்த விரும்பிய நாரதரின்
எண்ணத்தைப்புரிந்து கொண்டார் ஈசன் .இதற்கென்று ஒரு வில் தயாராயிற்று .வில்லைச்செய்தவர்  தேவசிற்பி விஸ்வகர்மா .அதன் பளு சொல்லமுடியாது.   பல சக்கரங்கள் கொண்ட வண்டியில் தான் அதை ஏற்றி அழைத்துவரமுடியும் .
அந்த வண்டியைத்தள்ள  நூற்றுக்கணக்கானவர் வேண்டும்.   அத்தனை கனம்
..இந்தக்கனத்தைத் தள்ள ஒன்றேகால நாழிகை ஆகுமாம் .நடு நடுவே ஓய்வு எடுத்துக்கொண்டால் தான் இது முடியும் .ஆனால் பரமேஸ்வரனோ தானே அதை எளிதாகக் தூக்கி நிறுத்திக்கொண்டார்.

போட்டி ஆரம்பமாயிற்று  . ஆனால் விஷ்ணுவிடம் அது போல் வில் இல்லாததால்
அதேபோல் ஒரு வில்லை விசுவகர்மா மகாவிஷ்னுவிற்கும் செய்து கொடுத்தார்  போர் தொடங்கியது .ஆனால்  இருவரும் சளைக்காமல்

 போர்   தொடர  தேவர்கள் போரை நிறுத்துமாறு வேண்டினர் ,மகாவிஷ்ணு பின்னர் அந்த வில்லை ரிசிகா முனிவரிடம் கொடுத்தார் .அவர் பிற்காலத்தில் அதை ஜமதக்னி
முனிவரிடம் கொடுக்க கடைசியில் அது பரசுராமரிடம் வந்தது .
சிவனோ தன் வில்லை  மிதிலை தேச மன்னரிடம் கொடுத்தார் , அது ஏழு தலைமுறையாக
வந்து பின் ஜனகரிடம் வந்ததாம்   ஜனகரின் மகள் ஜானகி அந்த வில்லை சிவபெருமான் போல்  வெகு எளிதாக  கையில் ஏந்திவிட்டாளாம்
பின் அந்த வில்லை ஏந்தி  உடைத்து சீதையை மணம் புரிந்தார் அந்த ஸ்ரீ ராமன் /

இந்தச்சம்பவத்தை  மனதில் கொண்டு  இங்கு  தாமிர   கலவையைக்கொண்டு  151
அடி உயரத்துடன் அஜ்கெய்ப் என்ற சிவன்  தனுர்தாரியாக  கம்பீமாக வானளாவி நிற்கிறார்
இந்தச் சிவன் காரணமாக சுல்தான்கஞ்சில்  எப்போதும் மக்கள் கூட்டம் திரளாக வருகிறது .பிரதோஷம் ,கார்த்திக் சோம்வார் போன்ற விஷேச நாட்களில் இந்தக்கோயிலைப்பார்க்க   மனம் பரவசமாகிறது.

No comments: