Monday, November 12, 2007

மாரியாத்தா

என் ராசா மவனே
வாபுள்ளே
நல்லாத்தான் இருக்கியா?
எம்புட்டு கன்னம் ஒட்டிப்போச்சு
கவல என்ன சொல்லு புள்ளே!
சண்ட போட்டு வந்துகினியா
சரக்கு போட்டு வந்துகினியா?

"தாயி உன் கன்னமில்ல
ஒட்டிப்போச்சு
அட உன் கண்ணிலே
உள்ளே போச்சு
அவ பேச்ச கேட்டனில்ல
இங்கிட்டு துக்கி இல்ல போட்டேன் உன்னை
ஒத்த்க்குடிசைலே நீ மட்டும்

தாயி பிடி பிடியா சோறு ஊட்டுகினே
கவளச் சோறுக்கு உனை ஏங்க வச்சேனே
ஒரு துரோகி மடிலே அவளப் பாத்தேன்
அந்த ராட்சசி எனக்கு வேணாம் தாயி
உன் மடிலே தல வச்சுகிறேன் தாயி
என் உயிர் போணும் தாயி

"வேணாம் என் தங்க ராசா
கூட நாலு பெத்துவச்சிருக்கே
அப்பன் கடமை செய்யவேணும்
ஒங்குடுமபம் தழக்க வேணும்
உனக்கு வேணும் பெண்சாதி
உன் சந்தோஸம் தான் என் சந்தோஸம்
இத நீ என்னிக்கும் நினக்க வேணும்

"எப்படி தாயி
இத்தன அன்பு"


"அட ராசாபுள்ளே நீ ஒண்ணு
எல்லா மனசிலே கடவுள் பாரு
என்ன கஸ்டம் எனக்கு இங்கிட்டு "


" தாயி மாரியாத்தா நீதானே
இங்கிட்டு கோயிலில் குந்திப்புட்டேன்
வேறு கோயில் இல்ல தாயி "


அன்புடன் விசாலம்

No comments: