Monday, November 12, 2007

சீரடி சாயி இரண்டாம் பாகம்

பாகம் 2
திரு ராமசந்திர படேல் என்பவர் மிகவும் நோய்வாய்ப்
பட்டிருந்தார் அவர் எப்போதும் சீரடி நாம ஸ்மரணையில் இருந்தார் கடைசிக்காலம் போல் நாடி துடிப்பு குறைய
ஆரம்பித்தது ஒரு நாள் இரவு ,தூக்கம் வராமல் கண்ணை மூடிக் கொண்டிருந்தார் அப்போது சீரடி பாபா தலைப் பக்கம் வந்து நின்றார் ,ராமசந்திரபடேல்
கேட்கிறார் "பாபா எனக்கு வலி தாங்க முடியவில்லை எனக்கு எப்போது மரணம் வரும்" ?
"நீ பிழைத்து விடுவாய் ,ஆனால் தாத்யா படேல் உடல் நலம் குன்றி விஜயதசமி அன்று மரணமடைவார் ,இதை
ஒருவரிடம் தெரிவிக்காதே முக்கியமாக தாத்யாபடேலுக்கு
தெரிவிக்காதே அவர் இதை நினைத்து நினைத்தே
பயத்தில் உடல் இன்னும் மோசமாகிவிடும்"
பாபா இதைச்சொல்லி விட்டு மறைந்து விட்டார் ,
சிலதினங்களுக்குள் தாத்யாபடேல் சுரத்தில் மிக மோசமான
நிலையை அடைந்தார்,விஜயதசமியும் நெருங்கியது
ஆனால் அவர் சதா சர்வ காலமும் பாபாவையே
நினைத்து அசைக்கமுடியாத நம்பிக்கையில் "பாபா என்னைக் காப்பாற்றி விடுவார் " என்று சொல்லி வந்தார்
அப்போது தான் ஒரு திடீர் திருப்பம் ,அன்பே தெய்வமாக வந்த பாபா
அவரின் உடல் நிலையைத் தான் பெற்றுக் கொண்டார்
அவரைப் பிழைக்க வைத்து விட்டார் தாத்யா படேலின்
நம்பிக்கை வீண் போகலாமா? பாபா தன் முடிவை விஜயதசமி
அன்று தீர்மானித்துக் கொண்டார் அதனால் பாபாவுக்கு
உடல் தளர்ச்சி ஏற்பட்டது,ஆனால் விஜயதசமி அன்று
மிகவும் சுறுசுறுப்பாக எழுந்து உடக்கார்ந்திருந்தார் எல்லோருமே பாபா நம்மிடையே பல வருடங்கள் இருப்பார் என்ற நம்பிக்கையில் இருந்தனர் ,மகிழ்ந்தனர் ஆனால் அவருக்குத் தெரிந்தது தன் முடிவு நெருங்கி விட்டது என்று,,,,,கடைசியாக பகதை ஸ்ரீ லட்சுமிபாய் சிண்டேயைக்
கூப்பிட்டார் பின் அவளுக்கு ரூபாய் ஒன்பது வழங்கினார்
பின் எல்லா சீடர்களையும் பகதர்களையும் அனுப்பி
விட்டார் திரு காகா சாஹேபிற்கும் பாபூ சாஹேப் பூட்டிக்கும்
அவரை விட்டுப் போக விருப்பமில்லை ஆனாலும் அவரது கட்டளைக்குக் கட்டுப்பட்டனர் மஸ்ஜித்திற்கு
சென்றனர் பாபாவின் வருகையை எதிர்ப்பார்த்துத்
தங்கினர்
பையாஜி மட்டும் அவருடன் இருந்தார் பாபாவின் முச்சு
வாங்க பையாஜியின் மேல சாய்ந்துக் கொண்டார்
பாகோஜி என்பவர் இதைப் பார்த்த மாத்திரத்தில் தண்ணீர்
எடுத்து ஒடோடி வந்தார் அவர் வாயில் தந்தார் ஆனால்
தண்ணீர் வெளியே வழிந்தது "ஓ தேவா" என்ற அலறல்
அவர் வாயிலிருந்து வந்தது "ஹா"என்றார் பாபா
பின் நிசப்தம் தான் ஒரு சலனமும் இல்லை ,அசைந்த
உயிர் சமாதி நிலையை அடைந்தது ஒரு வேப்பமரமே
அவரது மாளிகையாக இருந்தது அவர் உடையில்
பட்டும் பிதாமபரமும் இல்லை ஒரு கிழிந்த வேஷ்டியும்
ஒரு அழுக்குத் துண்டும் தான் அலங்கரித்தது அவர் உணவோ எல்லோரிடத்திலும் கேட்டு பின் அதை ஒன்றாக்கியக் கதம்பம்
எத்தனை எளிமையான வாழ்க்கை ,,,,,பாபா கோடானுகோடி மக்களுக்கு இன்று சொந்தம் அனபு
சிரததை பொறுமை என்ற கொள்கைகள் அவரின்
வேதவாக்கு
விஜயதசமி அன்று சாவடியிலிருந்து துவாரகாமாயிக்கு
பக்தர்கள் பாபாவை ஒரு பல்லக்கில் அலங்கரித்து
ஆர்ப்பாட்டத்துடன் வண்ணக்கலர் தூவி வாத்தியங்கள் டோல் முழங்க பல
நிகழ்ச்சிகளுடன் கதாகாலட்சேபத்துடன் அழைத்துச்
செல்வார்கள் பாபாவின் படம் தாங்கிய பல்லக்கை ஒரு அழகியக் குதிரை சுமந்து செல்லும் அதன் பேர் "ஷ்யாம்
சுந்தர் "பாபாவின் தலைக்கு மேல் பின்னல் வேலைகள்
செய்த வண்ணக்குடை ,,,,,,,,,
இந்த ஊர்வகத்தைப் பார்க்க பகதர்கள் கூட்டம் அலை மோதும்
அவர் சமாதியில் இருந்தாலும் இன்றும் அவர் உயிருடன்
இருக்கிறார் எல்லோரையும் அருள் பாலித்து வருகிறார்
நம்பினால் கேடபது கிடைக்கிறது மனம் அமைதி
அடைகிறது அவர் ஹிந்து கோவிலிலும் இருந்தார்
மஸ்ஜித்திலும் இருந்தார் ,ஹோமமும் செய்தார்
குர்ரானும் படித்தார் அவருக்கென்று தனி மதம் கிடையாது ,இன்றும் பலதரப்பட்ட மதத்தினர் அங்குத்
திரள் திரளாகச் சென்று அருள் பெற்று பயனடடவதைக்
நான் கண்கூடாகப் பார்க்கிறேன் என் வாழ்க்கையிலேயே
பல ஏற்றம் அவரால் ஏற்பட்டிருக்கிறது "சாயி ஸச்சரிதா"
படித்துப் பயன் அடையுங்கள் ஒரு வியாழனன்று
ஆரம்பித்து மறு புதனில் முடித்து பின் மறுதினம் ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டும் ,ஒன்று மனதில் நேர்ந்து கொண்டும்
இதைச் செய்யலாம் அல்லது லோகத்தின் சுபீட்சத்திற்கும்
இதைப் படிக்கலாம் ,,,இதை என்னை எழுத வைத்த
சீரடி சாயிநாத்திற்கு நன்றியுடன் ப்லகோடி வண்க்கங்கள்
ஓம் சீரடி சாயி நாத்திற்கு ஜெய் ,,,,,,,,,
அன்புடன் விசாலம்

No comments: