Monday, November 12, 2007

தீபாவளி மருந்து

தீபாவளி அன்று பட்சணங்களுக்கு பிறகு கொடுக்கப்படும் தீபாவளி லேகியம்
ஆஹா அருமை அதன் மணமும் அதன் பலனும் சொல்ல அளவில்லை
அந்த மருந்துக்காக ஒரு கவிதை

மருந்து அது அருமருந்து,
தீபாவளியில் ஒரு தனி மருந்து ,
ஆயுர்வேதக் கடைச் சரக்காம்,
அதற்கென்று ஒரு தனி சிறப்பாம்
சுக்கு மிளகு திப்பிலியாம்
ஆயுர்வேத மூவேந்தர்களாம் ,
ஓமமும் கூடச் சேர்ந்துவிடும்
அம்மியில் எல்லாம் அரைந்துவிடும்
உருளியில் கிளற பட்டுவிடும்
வெல்லமும் சேர்ந்து கலந்துவிடும்
வெண்ணெய் சேர்ந்து பள்பளக்கும்
கிளறக் கிளற மணம் பரப்பும்
ஆஹா அருமை லேகியம் தயார்
நெய்யும் மேலே வருவதைப்பார்
தீபாவளி லேகியம் நம் கைவசம்
ஏன் கவலை பட்சணம் உன்வசம்
தேன் கலர் லேகியம் அமிருதம் தான்
லேகியத்துடன் தீபாவளி குதூகலம்தான்

அன்புடன் விசாலம்
Reply
Reply

No comments: