Monday, November 12, 2007

ஷீரடி சாயி

விஜயதசமி என்றால் எல்லோருக்கும் முதலில் நடக்கும் முத்தேவிகளின் ஆராதனையும் பின்
ஆயுதபூஜையும் உடனே ஞாபகம் வரும் ,நான் தினமும் ஷீரடியின் சாயி ஸச்சரிதா படிப்பேன்
அதில் "சாவடி ஊர்வலம் "என்ற பகுதி இரவு படுக்கும் முன் படிக்க அல்லது கண்முன் அந்தக்
காட்சியைக்காண மிகவும் நன்மைப் பயக்கும், ஷீரடியில் இன்றும் விஜயதசமி அன்று ஊர்வலம்
நடக்கிறது .சிறப்பு என்னவென்றால் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் மற்ற எல்லா மதப்
பிரிவுகளும் இதில் பங்கு ஏற்கின்றனர் ,ஒருவித சச்சரவுமில்லாமல் அமைதியாகச் சிறப்புடன்
நடைப்பெருகிறது அன்பும் பாசமும் கலந்த ஊர்வலம் ,பிரசாதமும் எல்லாவித உணவும் கலந்த ஒன்று ,சீரடிபாபா ஒரு ஜோலிப்பையில் எல்லோரும் கொடுக்கும் உணவைச்
சேகரித்து பின் அதைக்கலந்து எல்லோருக்கும் வினோகித்து பின் காக்கை குருவி நாய் பூனை
போன்றவைகளுக்கும் போட்டு பின் அவர் சாப்பிடுவாராம்
இதே விஜயதசமி அன்றுதான் அவர் சித்தி அடைந்தார் அவர் வாழ்ந்த வாழ்க்கை மிக எளிமை
ஆன ஒன்று .ஷீரடிக்குள்முதன் முதலாக அவர் நுழைந்தப்போது அவர் சீதனம் ஒரு செங்கலும் இரண்டு சாக்குகளும்தான்,"சாயி"என்றால் கூட வாழும் இறைவன் "என்று பொருள்
கொள்ளலாம் அவரின் ஒரே மந்திரம் "அல்லா மாலிக் ,பல கோடி மக்கள் இன்று அந்தப் பக்கிரி பாபாவைன் பொற்கமலங்களைப்பற்றி அமைதி காணுகிறார்கள்

பாபா தான் படுக்கப் போகும் போது தான் கொண்டு வந்தச் செங்கலை ஒரு பழைய
துணியில் சுற்றி அதில் தலை வைத்துக் கொள்வார்.அவருக்கு உதவ ஒரு குட்டிப்
பையன் ,,பாபாகூடவே இருந்து அவர் படுக்கப் போகும் முன் தூசியும் தட்டிக் அந்த இடத்தைக் கூட்டுவான் ,அவர் இறக்கும் சில தினங்களுக்கு முன் அவன் தான் கூட்டும்
போது குப்பை செங்கலில் விழ்க்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் செங்கலை ஒரு
துணியில் சுற்றத் தூக்கினான ஆனால் அது கைத்தவறி கீழே விழுந்து இரண்டாகி விட்டது
மிகவும் வருந்தி அழ ஆரம்பித்தான் பாபா வெளியில் போயிருந்தவர் உள்ளே வந்தார் ,
செங்கல் உடைந்ததைக் கண்டார் ,அந்தச் செங்கலில் தலை வைக்க புதுப்புது
சிந்தனைகளும் ஞானமும் பூககளாக மலருவது அவருக்குத்தான் தெரியும் அது உடைந்தது
அவருக்கு தன் ஆயுள் முடியும் தருணம் வந்து விட்டது என்று புரிந்தது
அந்த மரணமும் அவர் தன் பக்தனின் ஆயுள் முடிவைக் காப்பாற்ற தான் அதை ஏற்றுக் கொண்டு விட்டார் ,,,,,,,,,,,,,,,,போலோ சச்சிதானந்த சத்குரு சாயி ம்ஹராஜ் கி ஜெய்

நாளை முடியும் ,,,,,,,,,

No comments: