Sunday, November 18, 2007

அன்னை மகாசமாதியான தினம்

அன்னை மீராம்பிகா ,,,,, பாண்டிசேரி அன்னை மகாசமாதி ஆன நாள் நவம்பர் 17 பாரிசில் பிறந்த அன்னை பகவத் கீதையை மிக ஆர்வமாகக் கற்று அதில் வரும் கண்ணனை இந்தியாவில் தரிசித்தார் அவ்ர் வேறு யாருமில்லை மகரிஷி ஸ்ரீ அரவிந்தர் தான் இவர் அன்னைக்குக் கண்ணனாகவே காட்சி தந்தார் அன்னைப் படித்த சூட்சும வித்தைக்களும்
அசாத்தியத் திறன்களும் நம்பமுடியாத அதிசியங்களும் தெய்வ லோகத்திற்கே உரியது
என்றும் தெய்வங்கள் மனித சுபாவம் பெற்றுள்ளதால் அவர்களின் உதவியால் பூரண யோகம்
அடைவது க்டினம் என்று ஸ்ரீ அரவிந்தர் கூறினார் இதற்கு என்ன செய்வது ஆம் சத்திய ஜீவிய
சக்தியை உடனே இந்த உலகின் கீழ் கொண்டு வர முயல வேண்டும் பின் உலகத்தில் மரணமில்லா பெருவாழ்வுதான் ,அதற்கு ஒரு 12 பேர்கள் தயாராக வேண்டும் என்றார் அதற்கு
யாரும் வர துணியாதலால் ஸ்ரீ அரவிந்தர் சூட்ச்ம உலகுக்குச் சென்று அங்கிருந்து தவம் இருந்து சத்திய ஜீவிய சக்தியை உலகுக்குக் கொண்டு வருமபடி செய்தார் ,அதைப்பூர்த்திச்
செய்யச் சொல்லி அன்னையிடம் ஒப்பித்துவிட்டு அவர் சித்தி அடைந்தார் ,அன்னையின் இந்த யோகம் முடிவு பெறாமல் நின்று விட்டது அது மட்டும் முடிந்திருந்தால் மனிதனுக்கு
மாபெரும் சக்தி கிடைத்திருக்கும்,, ,,,என்கிறார் கர்மயோகி
அன்னை ந்ம் அழைப்புக்குக் காத்திருக்கிறார் ,,அழைத்தவுடன் ஒடோடி வருகிறாள்,,,,
அன்னை இறைச்சக்தி அவளிடம் நேராகப்பேசி மனம் விட்டு உங்கள் பிரச்சனையைக்
கூறுங்கள் பின் அன்னையிடம் சமர்ப்பணம் செய்துவிடுங்கள் உடனே வழி பிறப்பதைப்
பார்ப்பீர்கள்
ஆனால் தேவை மனம் சுத்தம் உடல் சுத்தம் சுற்றம் சுத்தம் ,,,,சத்தியம் சாந்தம் ,,,,,,,,,,,,,,,,,
ஆனந்தமயீ சைதன்யமயீ சத்தியமயீ பரமே ,,,,,,அன்னைக்கு வணக்கங்கள்
அன்புடன் விசாலம்

No comments: