Monday, November 12, 2007

காசி ஸ்னானம்

அன்பர்களே தீபாவளியின் போது 'கங்கா ஸ்னானம் ஆச்சா?" என்று கேட்பது வழக்கம் அன்று காலை 4 முதல் 5 வரை கங்கை நீர் வந்து நம்மைப் பவித்திரமாக்குகிறது
நாம் மானசீகமாகக் காசி போய் தங்க அன்னபூர்ணியைத் தரிசித்து பலன் பெறலாம் இந்தச்ஸ்லோகம் படித்தால் அதன் பலன் அவசியம் உண்டு என்று முன்னோர்கள் சொல்கிறறர்கள் இது 1920 வது வருடத்தின் ஸ்லோக புத்தகம் என் பாட்டியினுடையது.....


மானசீகக் காசி யாத்திரை

1 ஸத்குருவின் கிருபையினால் காசி யாத்ரர மகிமை
சங்கிரமாய் சொல்லுகிறேன் சாதுக்கள் மகிழ

2புத்தியினால் நிச்சியிக்கும் சிருஷ்டிகளெல்லாம்
போத மயமாயிருக்கும் பூர்ணவடிவாய்

3 தேசாந்திரங்கிடந்து சோஷிக்குமாற்போல்
தசேந்திரியங்களையும் படிய அடக்கி

4ஆதார கங்கைஎன்று உத்சாகமாய் சொல்லும்
ஆனந்தஸ்வரூபந்தன்னில் நிரஞ்சனமாய்

5அஹங்கார முதலான அந்தக் கரணத்தின்
அஹந்தை மமதை என்ற வரியை விட்டு

6 காமக்குரோதப் பகவரை கிட்டவொட்டடமல்
விவேகமென்னும் சத்வாசனையுடனிருந்தே

7 ஸ்தூல ஸ்தூக்ஷ்மாய் இருக்கும் ரரஜ்ஜியம் விட்டு
ஏகாக்கிர சிந்ததயெனும் வாகனமேறி

8 ஏக போகமாயிருக்கும் காசிதனிலிறங்கி
ஹிருதயசுத்தியாகவே தியானம் பண்ணி

9 ஈஷணாத்ர பங்களென்னும் வாசனைப் போக்கி
இந்திரியங்கள் பதினாலு முள்ளேயடிக்கி

10 இடைப் பிங்களை என்று இரண்டு நாடியை
யமுனை கங்கையாகப் பாவித்து என்னுளே

11 சுஷும்னா என்ற நாடியைத்தானே
ஸ்ரஸ்வதியாம் மந்தர்வாகினியும் கூட

12 திருவேணி சங்கமத்தின் தீர்த்தங்களாடி
திருதாபமறற்தொரு வெண்பட்டுடத்தி

13 நிஷ்களங்கமாய் இருக்கும் ஜபதபம் செய்து
நித்தியாமந்தமாய் இருக்கும் கோவில்புகுந்து

14 பக்தியுடனம்மை மகிழ் விசுவநாதரைப்
பிரதி தினம் தரிசித்து உள்ளே இருந்தேன்

15 அறிவெனும் விசாலாட்சி அம்மனுமப்போ
ஆகாமியசஞ்சி தங்கள் இரண்டு மறுத்தாள்

16 தாரக பிரும்மஎன்ற விசுவநாதரும்
சந்தோஷமாக கங்கா ஸ்னானம் பண்ணென்றார்

17 அத்புதமாய் விசுவநாதர் கிருபைனாலே
ஆனந்த கங்கா ஸ்னானம் பண்ணியபிரகு

18 பக்தியுடன் பிரரகையில் ஸ்னானம் செய்து
பரிபூர்ணமாக மணிகர்ணை ஆடி

19 கங்கையுடன் யமுனை ஸ்ரச்வதி முதலாம்
கீர்த்தியுள்ள அறுபத்தினாலு தீர்த்தங்களாடி

20 சப்த சன்மம் ஈடேற வட விருஷத்தின் கீழ்
நித்திய திருப்தியாக வெகு பிண்டமும் போட்டு

21 தத்துவங்கள் தொண்ணுத்தாறு கயாவாளிக்கும்
சந்தோஷமாக வெகு திருப்திகள் பண்ணி

22 நித்தியா நித்யவஸ்து காவடி கட்டி
நிரந்த்ரபிரும்மமெனும் கங்கையைத் தூக்கி

23 சத்சங்கமெனும் சோபதிகளோடு
சிரவணமனனமெனும் மார்க்கமும் தாண்டி

24ஜனன மரணமற்ற ராமேச்வரத்தில்
ஸ்தீரீபோகமாகவங்கே வந்திருந்து

25 அக்கியானத்தினால் வந்தத் துக்கங்கள் தீர
ஆனந்தச்சாகரத்தில் ஸ்னானமும் பண்ணி

26 ஆதியந்தமற்றிருக்கும் இராமநாதர்க்கு
அறிவென்லுங்கங்கை கொண்டபிஷேகம் பண்ணி

27 ஜ்யோதிர்மயமாய் இருக்கும் இராமநாதரை
சித்தத்துக்குள்ளே வைத்து தரிசனம் பண்ணி

28 அகண்ட பரிபூரணமாய் அசஞ்சலமாய்
ஆனந்த பிரம்மந்தன்னில் ஐக்கியாமானேன் ...........

ஓம் பிரம்மார்ப்பிதம் ,,,,,,,,,



அன்புடன் விசாலம்

No comments: