Friday, August 31, 2007

ராக்கியினால் தப்பினார்

சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது,அன்று ஒரு நாள் ரக்ஷா பந்தன் தினம் ,,,,,
திரு சந்திர சேகர் ஆஸாதை {Azad} சல்லடைப் போட்டு தேடிக்கொண்டிருகின்றனர்
ஆங்கிலேயச் சிப்பாய்கள் ,அவரும் டிமிக்கிக் கொடுத்து எல்லோருடையக் கண்களிலும்
படாமல் தப்பித்து கொண்டிருந்தார் ஒரு சமயம் அலஹாபாத்தில் ஒரு நண்பர் வீட்டில்
இருந்தார் எப்படியோ அது தெரிய வந்து அந்த வீட்டைச் சுற்றி போலீஸ் படை சுற்றிலும்
அமர்த்தப்படிருந்தது ,அங்கிருந்த திருமதி ஸ்ரீதேவி முட்சாதி தன்னை மிக அழகாக அலங்கரித்துக்கொண்டு நல்ல விலை உயர்ந்தப் புடவை உடுத்தி ஒரு பெரிய கூடையில்
பழங்கள் இனிப்புக்கள் நிரப்பி அதை திரு சந்திரசேகர் ஆஸாதிடம் கொடுத்து தூக்கி வருமாறு
செய்தாள்,அவரை வேலைக்காரனைப்போல் நடிக்கச் செய்தாள்,
"சீக்கிரம் சீக்கிரம் நாழி ஆக்காதே என் அண்ணா ராக்கிக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பார்
இப்போதே நான் ரொம்ப லேட்,,நீ வேறு ஆடி அசைந்து வருகிறாய் ,உம் நட நட "என்று அவரைப் பார்த்துக் கோபித்துக் கொள்வதுப்போல் நடித்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகாக
வழியை விட்டார் அப்போது அந்த அம்மணி ஆஸாதின் கூடையிலிருந்து ஒரு லட்டுவை எடுத்து "பாயி சாஹேப் கொஞ்சம் ஸ்வீட் சாப்பிடு "என்று திசையைத் திருப்பினாள் ,,,பின் என்ன? வேகமாகப் போய் காரில் அம்ர்ந்துக் கொண்டனர் ,,,இன்ஸ்பெகடரை முட்டாளாக்கி விட்டு தப்பித்துச் சென்றனர் ,பின் எல்லா போலீசும் உள்ளே போய் பார்க்க ஒருவரும் அங்கு இல்லை ,,ராக்கியினால் அவர் உயிர் தப்பியது ,இந்த ராக்கி தினம் ஆஸாதுக்கு
தப்பி ஓட சுதந்திரம் கிடைத்தது ,,,

அன்புடன் விசாலம்

No comments: