Friday, August 31, 2007

ஒணம் வர, ஓடப் போட்டி

ஆகஸ்டு மாதம் வந்தாலே கேரளத்தில் ஓடங்கள் கப்பல்கள் எல்லாம் ,, பழுதுகள் சரியாக்கப்பட்டு , புதுசாக்கப்பட்டு ,வர்ணங்கள் பூசப்பட்டு தயாராகி விடும் எதற்கு இந்த அலங்காரங்கள் என்றால் " வெள்ளம் களி"அதாவது போட் ரேஸுக்குத்தான் ,ஓணம் வர இந்த
போட் ரேஸும் கூட வந்து அமர்க்களப் படும் இதைச் சுந்தன் வள்ளம்"என்றும் சொல்வார்கள்
ஏன் என்றால் பாம்பு போல் இருக்கும் .இதன் நீளம் சுமார் 60 மீட்டர் நீளம் ,,இதில் சுமார்
100 பேர் துருப்புடன் ஓட்ட அமரலாம் ..நடுவில் ஒரு சின்ன மேடை உண்டு ,அதில் பாடுபவர்கள், வாத்தியம் கொட்டுபவர்கள் அமருவார்கள்,இந்தப் பாடலுக்கு வஞ்சிப்பாட்டு எனப்பெயர் "செம்மீன் "படத்தில் மிக அழகாக இந்தக்காட்சியைப் படம் பிடித்திருக்கிறார்கள்.
"தையரே தையா தையாரே தையா தை தை ,,,,தைதைதை ,,,என்ரு ரிதமுடன் பாட அந்தக்
காட்சி மிக அழகு ,இயற்கைச் சூழலில் இந்தக் காட்சிக்காண பல வெளியூர்களிலிருந்தும்
வருவார்கள்,மிக முக்கியமான ரேஸ் "நேஹ்ரு டிராபி ரேஸ், இது ஆலப்புழாவில் புன்னமடை
ஏரியில் நடக்கும் .ஆலப்புழா இந்தியாவின் வெனிஸ் என்று பெயர் வாங்கியுள்ளது
பண்டித் நேஹ்ருஜி ஒருமுறை இதைப் பார்க்க வந்து மனம் மகிழ்ந்து போனார் {1952 ல் }
திரும்ப தில்லி போன பின் ஒரு வெள்ளி டிராபி பெரிய நீள பாம்பு போல ஜயித்தவ்ருக்கு
அனுப்பி வைத்தார் அதிலிருந்து அவர் பெயரில் இந்த ஓடப் போட்டி நடக்கிறது இது சுமார்
மூன்று மணி நேரம் வரைச் செல்லும் ,டிக்க்ட் முதலிலேயே வாங்க வேண்டும் ,ப்ல ஆயிரம் மக்கள் டூரிஸ்டுகள் கூடி இருப்பார்கள் இந்த ஓடப் போட்டி "உத்திரட்டாதி வள்ளம்
களி" ஆரன்முலா என்ற இடத்தில் கடைசியில் நடந்து நிறைவு பெறும் ,இந்தக் கண்
கொள்ளாக் காட்சியைக் காண ஆலப்புழா செல்வோம் வாருங்கள்
ஓணம் வாழ்த்துக்கள்
அன்புடன் விசாலம

No comments: