Friday, August 31, 2007

திடீர்க் கொடிகள்

நேற்று காலியான இடம் ,
இன்று திடீர்க் குடிசைகள் ,
தோன்றியது கூடவே ஒரு கொடி ,
கழிந்தது ஒரு வாரம் ,
முளைத்தன பல கொடிகள்
என்ன மந்திரமோ,
இது என்ன மாயமோ?
சிவப்பு ,கறுப்பு பச்சை.,
எனப் பல ரகங்கள் ,
எப்படி வந்தன?
எங்கிருந்து வந்தன?
பல எழுத்தைக் கொண்ட கட்சிகள்
நினைவிலும் நிற்கவில்லை
திடீரென்று வீர முழக்கம் ,
உடனே கிளம்பும் எதிர் முழக்கம் ,
ஆரம்பிக்கும் அங்கு அடிதடி
பறந்து வரும் சோடா புட்டி
எத்தனைக் கொடிகள்,
எத்தனைக் கட்சி
பறந்து போகும் எந்தக் கட்சி ?
நாளைக் கொடிகள் மாறலாம் ,
பதவி மோகம் ,தலையும் மாறும் ,
ஒற்றுமையுடன் தேவை நல்லாளும் கட்சி ,
அதன் தவறைக்காட்ட எதிர்க்கட்சி

No comments: