Friday, August 31, 2007

மந்தனே காக்க

இன்று சனிப்பெயர்ச்சி ,சப்தமி திதியில் அசுவனி நட்சதிரம் நிறைந்த நன்னாளில் சித்த யோகத்தில் சனி பகவான் செவ்வாய் ஹோரையில் பஞ்சபட்சி வல்லூரின் வலிமை நிறைந்த
வேளையில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசித்துள்ளார் அதாவது ஆயில்ய நட்சத்திரத்திலிருந்து மகம் நட்சத்திரம் வந்துள்ளார்

" சனி பகவான் நவகிரஹ மந்திரம்

நீலாஞ்சன ஸமானாபம் ரவிபுத்ரம் யமகிரஜம்
சாயா மர்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்வரம்

மைப்போன்று கருமை சூரிய்னின் புத்திரன் எமனின் தமையன் சூர்யனுக்கும் சாயாதேவிக்கும்
பிறந்தவன் மந்த கதியில் செல்பவன் ,,,,,,நான் இவரை நம்ஸ்கரிக்கிறேன்

சனி காயத்ரி

ஓம் காகத் த்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: பிரசோதயாத்

கொடியில் காகம் கரத்தில் உடைவாள் ஏந்தியவரை வண்க்குகிறேன்

எங்களுக்கு அறிவு என்ற ஒளியை அருள்வாயாக

சனிக்கு உகந்த மலர்கள் நீலமலர் ஊமத்த்ம்பூ வன்னி இலை தும்பை , கொன்றை நீல சங்கு
மலர் ,,,
எள் தீபம் மிகவும் நல்லது சக்தி வாய்ந்தது சனியின் தான்யம் எள் ...கறுப்பு எள் முன்னோர்க்கு திதி செய்யும் போதும் உதவுகிறது ஆகையினால் இந்த எள் ஒரு கறுப்பு
துணியில் முடிக்கப்பட்டு தீபம் ஏற்ற ந்ம் முன்னோர்கள் செய்த பாவங்கள் நீங்கும் .

சனி பகவானை சனீஸ்வரன் என்கிறோம் நவகிரஹங்களில் இவர் ஒருவருக்குத்தான்
ஈச்வரப் பட்டம் ,மூன்று பேருக்குத்தான் ஈஸ்வரப் பட்டம் கிடைத்துள்ளது ஒன்று
பரமேஸ்வரன் பின் இலங்கேஸ்வரன் ,,முன்றாவதாக சனீச்வரன் .இதிலிருந்தே அவரின் சிறப்பு தெரிகிறது ,கலிகாலம் என்பது சனிபகவானின் காலம் .ஒருவரை அரச்னாக்குவதும்
ஆண்டியாக்குவதும் அவர் கையில் உள்ளது.நம் கர்ம விதிப்படி அவர் செயல்படுகிறார்

சனிபகவானைப் பற்றி சொல்லும் நேரம் திருநள்ளாறு தான் ஞாபக்ம் வருகிறது ,அங்கு உள்ள
நளதீர்த்தத்தில் முங்கி எழுந்து பின் அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரைத் தரிசித்துப்
பின் தான் சனி பகவானைத் தரிசிக்கவேண்டும் சனிப் பெயர்ச்சியின் போது அவ்ர் தங்க காகத்தின் மீது அமர்ந்து பவனி வருவது க்ண்கொள்ளாக் காட்சி ,திருநள்ளாறு
எனபது நளன் வந்து தன் கலியைத்தீர்க்க தீர்த்தத்தில் குளித்து பின்சனியைப் பூஜித்து தன்
தோஷத்தைப் போக்கிக் கொண்டார் ,இதற்கு அதிபுரி என்ற பெயரும் உண்டு அதாவது
பிரும்மா இங்கு வந்து பூசித்தாராம் ,சனிப் பெயற்சியைக் காட்டும் முக்கிய அம்சம்
கற்பூர ஆரத்தி ,,,இன்று 12 ,,19 க்கு இந்த ஆரத்திக் காட்டப்பட்டது அத்துடன் மந்திரங்களும்

தேவாரங்களும் ஓதப்பட்டன இன்று நளனின் கதையைப் படிக்க மிகவும் விசேஷம் என்கிறார்கள்

இந்தச் சிம்மச்சனியால் உலகெங்கும் மக்களது உரிமைகள் பாதுகாக்கப்படும் ஈழப்பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று ஒரு ஜோசியர் கூறியிருக்கிறார்.
மகிழ்ச்சியான விஷயம் தான் நாட்டின் நலத்திற்காகவும் மக்களின் நலத்திற்காகவும் சனீஸ்வரரின் அருளைப் பிரார்த்தித்துப் பெருவோமாகுக ..

"காக்கவே சனியே காக்க
காக்கவே காக மூர்த்தி
கருதநற்பொருளே காக்க
காக்கை வாகனனே காக்க "

அன்புடன் விசாலம்

No comments: