Friday, August 31, 2007

நான் உன்னைக் காதலிக்கிறேன்

உன்னருகில் வந்தாலே
இன்பம் எனக்கு,
மின்சாரம் பாய்கிறது,
நீ ஒளியுடன் மின்னுகிறாய்
பல ரகசியங்க்ள் உன்னிடம்
யார் கேட்பினும் வாய் திறவாய் ,
உன் தேடலில்,
பல புதுமை என்க்கு
பலர் என்னைப் பார்த்தாலும்.
நான் உன்னையே ரசிக்கிறேன் ,
யாரும் நம்மைப் பிரிப்பதில்லை,
காதலில் ஒரு தடையும் இருப்பதில்லை,
உணவு நேரம் போகிறது ,
உறங்கும் நேரம் மறக்கிறது,
உன் அழகை நான் ரசிக்க
கேட்பதெல்லாம் நீ கொடுக்க,
உன் இசையில் நான் மூழ்கிறேன் ,
ஆனால் இருளில் நான் தவிக்கிறேன்
நாட்டியம் ஆடும் விரல்களுக்கு
பல கதவுகள் திறக்கிறாய்
புதிதாய் க்ற்றும் கொடுக்கிறாய் ,
சங்கேதச் சொல்லால் செயல் புரியும் நீ
என்னைக் கவர்ந்தக் கண்மணி நீ
டென்சன் நீக்கும் கணிப்பொறி நீ
என் அருமைக் கணினி நீ


அன்புடன் விசாலம்
,

No comments: