Friday, August 31, 2007

வரலட்சுமி விரதம்

ஆடி அல்லது ஆவணி மாதம் சுக்ல பக்ஷம் இரண்டாவது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்
விரதம் ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம் ,கலசம் வைத்து அதில் மஞ்சள் பூசி அம்மன் முகம் வரைந்து
கலசத்திற்குள் அரிசி பருப்பு ,எலுமிச்சம்பழம் வெற்றிலைப்பாக்கு ,மஞ்சள் ஒரூருபாய் காசு
போட்டு பின் மாவிலை வைத்து ,,அதற்கு மேல் தேங்காய் வைக்க வேண்டும் அம்மனின் முகம் வெள்ளியில் கிடைக்கும் ,அதை வாங்கி அந்தச் சொம்பில் பொருத்த வேண்டும்
பின் மாலைகளால் அலங்கரிக்க வேண்டும் அதில் வரலட்சுமியை ஆவாஹனம் செய்து
பின் பூஜை செய்யவேண்டும் பூஜை முடித்தப்பின் நோமபுக்கயிரைக் கட்டிக் கொள்ள வேண்டும் இந்த விரதத்திற்கு மோதகம் ,இட்லி ,வெல்லப்பாயச்ம் ,வடை நைவேத்தியம்
செய்யலாம் ,அம்மனை அன்புடன் ஆரத்தி எடுத்து அழைத்தால் ஒடோடியும் வருவாள்
"லக்ஷமி ராவே மா இண்டிக்கு,,,,,,,,ஸ்ரீ ராஜபுத்ரி வரலக்ஷமி ராவே மா இண்டிக்கு "

"பாற்கடலில் உதித்தவளே
பவள நிறத்தவளே ,
சீர் மேவும் சித்திரமே ,
சிங்கார நல்முத்தே
கார்மேகக் கருணை மனம்
கைகளோ வள்ளனமை
பார்வையிலே பலனுண்டு
பைங்கிளியே இலக்குமியே


முத்து நகை ரத்தினங்கள்
மூக்குத்தி புல்லாக்கு
சத்தமிடும் கங்கணங்கள்
சங்கீத மெட்டியுடன்
சித்திரை நிலவு முகம்
சிங்காரப் புன்சிரிப்பு
பத்தரைப் பசும் பொன்னே
பவனி வரும் இலக்குமியே
எண்ணுவோர் எண்ணி யாங்கு,
எய்திடச் செய்யும் அன்னை
தன்னையே தமறாக் காக்கும்
தகவுடைத் தாயைப் போற்றி
எண்ணுவோம் ,வணங்குவோம்
இன்னலம் பெற்றே உய்வோம்

பாரதியார் காணும் ஸ்ரீதேவி ,,,,,,

பொன்னரசி நரணனார் தேவி ,புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மெனி யழகுடையாள்,
அன்னையவள் வையமெல்லம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண் புகுந்து வாழ்வோமே ,,,,,




அப்பர் கண்ட இலக்குமி


செந்துவர் வாய்க்கருங் கணிமை
வெண்ணகைத் தேன்மொழிய
வந்து வலஞ்செய்து மா நடம் ஆட மலித்த செலவக்
கந்தமலி பொழில்சூழ் கடல்
நாகைக்கா ரோண மென்று
சிந்தை செய்வாரைப் பிரியாது
இருக்குந் திருமங்கையே


அன்புடன் விசாலம்

No comments: