Tuesday, June 26, 2007

ஒரு சிலைப் பேசுகிறது

நான் ஒரு கற்சிலை .,
ஆனாலும் பேசுகிறேன் ,
என் வயிறு பற்றி எரிகிறது,
பேச உயிரும் வந்தது ,
பத்து வருடங்களுக்கு முன் ,
என்ன அழகு நான் ,
செதுக்கியது யாரோ?
அவர் அன்பில் வடித்தாரோ?
தலையில் அழகியத் தலைப்பாகை,
முகத்தில் முறுக்கிய மீசை ,
கண்ணிலே ஒரு கருணை ,
கதர் ஜிப்பாவுடன் ஒரு வேஷ்டி ,
என் கண்களில் உயிர் ,
பொங்கி எழுந்தது என் வீரம் ,
நின்ற இடமோ அருமை ,
என்னைச் சுற்றி பசுமை ,
பத்து வருடங்களுக்கு முன் ,
என் ஞாபகப் பின்னோக்கம் ,
முதல் வருட நினவு நாள்,
கூட்டம் கூடியது ,
விழா எடுத்தது ,
பேச்சு முழங்கியது ,
ஐந்தடிசிலை புதிதாக முளைத்தது ,
மாலகளில் மறைந்தது ,
ஒலிப்பெருக்கியில் ,
தேசப் பாடல் முழக்கம் ,
வரட்டுப் பேச்சுக்கள் ,
“இவர் போல் உண்டா ?
உயிரைக் கொடுத்த
வீரத்தியாகி
அவர் கொள்கைகள்
கடைப்பிடிப்போம்
கடமை உணர்வோம் “
இன்று ,,,,
உருக்குலைந்து நிற்கிறேன் ,
அழகுத் தலைப்பாகையில்
பறவைகளின் எச்சம் ,
உடல் முழுதும் அழுக்கு .
வெய்யிலில் காய்கிறேன் ,
மழையில் நனைகிறேன் ,
என்னைச் சுற்றி பசுமை
இன்று எங்கே போனது?
சிறு நீர் வாடை
துரத்துகிறதே,,,
சோம்பேறிக்கூட்டம் ,
காசுக்கு சீட்டில்
தன்னை மறக்குதே
பொறுக்கவில்லை
பேசுகிறேன் இன்று ,
புயலே, இடியே, வந்து விடு
மின்னல் கொண்டு வந்து விடு ,
இடியில் என் சிலை அழியட்டும்
எனக்கு முக்தி கிடைக்கட்டும்

அன்புடன் விசாலம் ,

No comments: