Tuesday, May 8, 2007

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-2

இப்போது சர்தார்ஜி கிஷன் சிங் தன் நட்பையும் எனக்காக களைந்த சம்பவத்தைக் காணலாம்...
இந்தக் கிஷன் சிங்கிற்கு ஒரு மிகப் பழகிய நண்பர் இருந்தார். அவர் பெயர் கர்தார் சிங், வயது சுமார் 55 இருக்கலாம் அவர் ஒரு டேக்ஸி ஓட்டுனர், ஆங்கிலம் நன்கு பேசுவார், அவர் அடிக்கடி இங்கு வருவார், அவர் நம் முன்னாள் பிரதமர் ஸ்ரீமதி இந்திராகாந்தி அம்மையாருக்கு கார் ஓட்டுனராக இருந்ததாகச் சொல்லி கொண்டார். என்னைஅவருக்கு ஒரு நாள் அறிமுகம் செய்து வைத்தார்கள் சர்தார்ஜி குடும்பத்தினர், அங்கு ஆங்கிலம் பேசுவது நான் மட்டும் தான் என்பதால் இந்தக் கர்தர்சிங் என்னிடம் ஆங்கிலத்தில் அரசியலை ஆரம்பித்து அலசுவார், எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம்இருப்பினும் பொறுமையாகச் செவி சாய்ப்பேன். கொஞ்சம் கொஞ்சமாக அவர் என்வீட்டிற்குள் வந்து பேச ஆரம்பித்தார். என் மாமியார் அவர்களுக்கு தமிழ் நாவல் என்றால் உயிர்தான். அதுவும் திருமதி ஆர் சூடாமணி வை மு,கோ திருமதி லட்சுமி தமிழ்வாணன் போன்ற புத்தகங்கள் தமிழ்ச் சங்கத்திலிருந்து எடுத்து வந்து படிக்கஆரம்பித்தால் பூலோகமோ சுவர்கமோ தெரியாது. அவ்வளவு அதில் ஆழ்ந்துவிடுவார், அடிக்கடி தன் நண்பரைப் பார்க்க இந்த ஓட்டுனர் வந்து பின் முற்றத்தில் பேச்சுக்கள் தொடங்கி ஆரம்பித்து விடும் விஸ்கி பார்ட்டி, அதுவும்வாட்69 என்ற பிராண்ட், அத்துடன் பக்கோடா வேறு, ஒரே சிரிப்பும் கொம்மாளமும் தான் முற்றத்தின் ஒரு கோடியில் தான் என் வீட்டு டாய்லட் அமைந்திருந்ததால் எனக்கு இந்தக்கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டால் வீட்டுச் சிறைதான். வெளியே வரமுடியாது. சர்தார் கிஷன்சிங்கின் அன்புக்காக பொறுமையுடன் இருக்க முயற்சித்தேன். இதற்குஒரு முடிவு தா என்று நான் வணங்கும் தேவியிடம் முறை இட்டேன், ஒருநாள், அந்தக் கர்தார் சிங் அவர் நண்பர் இல்லாத நேரம் என் வீட்டில் திடீரென நுழைந்தார், கதவு அநேகமாக திறந்தே இருக்கும், நான் அந்த நேரம் ரேடியோவில் பினாக்காகீத் மாலா கேட்டுக் கொண்டிருந்தேன் அந்தப் பாட்டுக் கூட ஞாபகம்இருக்கிறது, "ஜரா ஸாம்னே தோ ஆவோ சலியே.." என்ற சிவரஞ்சனியில் மிக அருமையான பாடல். இவர் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்து கொண்டார். " நீ இன்று ரொம்ப அழகாக இருக்கிறாய்" என்றார்,ஐயோ இது என்ன ட்ராக் மாறுகிறதே என்று பேச்சை மாற்ற சாய் வேண்டுமா என்றேன், "இல்லை நீ இருந்தால் போதும் பாணிபிலாவோ" தண்ணீர் கேட்டார் சரி என்று தண்ணீர் எடுக்க உள்ளே சென்று ஒரு கிளாசில் தண்ணீர் வைத்து அதை ஒரு ட்ரேயில் வைத்து அவரிடம் நீட்டினேன், டம்ளரை கையில் கொடுக்கும்படிக் கேட்டார் கொடுத்த பின் உள்ளே நகர்ந்து விடலாம் என்று எண்ணி கிளாஸ் டம்ளரை அவரிடம் நீட்ட கிளாஸுடன் என் கையையும் பிடித்தார்...

வளரும்...

No comments: