Thursday, May 10, 2007

எல்லை இல்லா அன்பும் அடங்காத வெறியும் 3

என் மார்பு படபட என்று அடிக்கத் தொடங்கியது, என் மனதில் அப்போது ஒருதைரியமான ஒரு வேகம் வர அவர் கையை ஒரு உதறு உதறினேன், எதிர் பார்க்காமல் நடந்ததால் அவர் கை தண்ணிர் கிளாஸில் பட அது கீழே 'டணார்' என்ற சத்தத்துடன் விழுந்து உடைந்தது, சென்னை வாசியாய் இருந்தால் “என்ன நினைதாய் நீ? செறுப்பு பிஞ்சிடும்” என்று சொல்லியிருப்பேன்.ஆனாலும் என் காலில் அப்போது செறுப்பு இல்லை ஸாக்ஸ் தான் போட்டிருந்தேன் அதை அவிழ்த்து அடித்தால் அதற்கு ஒரு முத்தம் தந்து எடுத்துக் கொண்டு போயிருப்பார், அவரைச் சொல்லி குற்றமில்லை... அவருக்குள் போயிருக்கும் சரக்கு அல்லவா பேசுகிறது, அவர் கீழே விழுந்த கண்ணாடித் துண்டுகளைப் பொறுக்கக்குனிந்தார், “மாப் கர்னா ஜீ” என்று அவர் வாய் முணுமுணுத்தது. இதற்குள் நான் என்அம்மா{மாமியார்} அவரிடம் போய் நின்றேன்,அவர் முற்றத்தில் குளிர் போக வெயிலில் அனுபவித்து கையில் திரு சாண்டில்யன் அவர்களது "கடல் புறா"வில் மூழ்கி இருந்தார். கீழே "மிதிலாவிலாஸ்"என்ற புத்தகமும் இருந்தது. உள்ளே நடந்தது ஒன்றும் அவருக்குத் தெரியாமல் மனம் ஒன்றி நாவலில் மூழ்கி இருந்தார் “அம்மா உள்ளே வறேளா கொஞ்சம்... தன் கண்ணாடியை எடுத்து பின் என் முகத்தை நோக்கினார் என்ன? என்ற பாவத்துடன், நான் அவர் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனேன். உள்ளே என் அம்மா நுழைந்ததும் அந்தச் சர்தார்ஜி ஒன்றும் நடக்காதது போல் "நமஸ்தே மாதாஜி" என்று சர் என்று நடையைக் கட்டினார். என்னைப் பார்த்து நாளை வருவேன் என்றும் சொன்னார், என்க்கு சற்று உதறல் கண்டது, மறுநாள், எப்போது விடியும் என்று காத்திருந்தேன். இரவு தூக்கம்வரவில்லை, என் கணவர் ஆபீஸ் விஷயமாக பேங்காக் போயிருந்தார், காலை குருத்துவாரா போக என் ஸர்தார்ஜி அப்பா கிளம்பினார். "நீங்கள் குருத்த்வாரா போய் வாருங்கள். பின் உங்களிடம் நான் பேசவேண்டும்" என்றேன், அவரும் என்னை அவர் வீட்டிலேயே சாப்பிடச் சொன்னார், என் மாமியாருக்கு பாவம்…. வயிற்றில் அல்சர் இருந்ததால் எப்ப்போதும் கஞ்சி ஆகாரம் தான். பின் அவர்வந்தார், நான் அவரிடம் "என்ன நீங்கள் இவ்வளவு நல்லவாராக இருக்கிறீர்கள், உங்கள் நண்பர் இப்படி…" என்று இழுத்தேன்.
பின் விவரமாக நடந்ததைச் சொன்னேன். பொறுமையாகக் கேட்டார் "நான் இருக்கிறேன் கவலைப்படாதே! பார்த்துக் கொள்கிறேன்" என்று அபயம் கொடுத்தார். ஷீரடி பாபாவின் ஞாபகம் வந்தது "நான் இருக்க பயமேன்" என்ற அவர் படம் என்னைப் பார்த்து புன்னகை புரிந்தது. அன்று மாலை அவன் வந்தான், இனிமேல் "அவர்" என்பது போய் அவன் என்று ஆகிவிட்டது{இனி மரியாதைத் தேவை இல்லை என்று மனதிற்கு பட்டது}. என் அப்பா சர்தார்ஜி அவனைப் பார்த்தவுடன் வேகமாக வெளியே போனார் "அந்தர் மத் ஆஜா" "உள்ளே வராதே! திரும்பிப் போய்விடு இனி இந்தவீட்டில் உனக்கு இடமில்லை நாம் பார்த்துக் கொள்ளவேண்டுமானால் இனித்தெருவில் தான் பார்ப்போம்" என்று கத்த அவர் "ஏன்? "என்று கேட்க பதிலுக்கு இவர் "என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? இவள் உன் பெண்ணின் வயசல்லவோ..."அவரைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளாதக் குறைதான்.. பலவருடங்களாக உயிருக்குயிராக இருந்த நட்பை என்க்காக முறித்துக் கொண்டு விட்டார். அவர் என் கண்முன் இந்த உலகத்தில் இல்லை என்றாலும் மிக உயர்ந்து நிற்கிறார். மறுநாள் அந்த்க் கர்தார் சிங்கின் மகன் அர்ஜுன் சிங் என்னிடம் வந்து தன் அப்பாவுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். அவரும் ஒரு மன்னிப்புக் கடிதததைக் கொடுத்து அனுப்பி இருந்தார், நானும் மன்னித்து விட்டேன், தவறுவது சகஜம் அதை உணர்ந்து விட்டால் அவனும் நல்ல மனிதன் ஆகிறான் இல்லையா?

அன்புடன் விசாலம்.

No comments: