Sunday, May 6, 2007

மன்னித்துவிடம்மா...


"சீ சீ இப்படியா நான்?
எப்படிம்மா இந்த மாதிரி நான்?
என்க்கே தெரியாத ஒன்று
நடந்து விட்டது இங்கு,
பல தடவை சொன்னாய் நீ

"இந்தப் போதை ஊசிப் பழக்கம்
உன் குடியையே கெடுக்கும்"
எனக்கு இந்த நிலையா?
ஆக்கினவன் யாரம்மா?
ஆ என் மூளையும் மழுங்கியதே
ஞாபக சக்தியும் போனதே,
இரு நினைவு செய்கிறேன்,
சற்று யோசிக்கிறேன்...
ஆ என்னைவைத்து வியாபாரம்
செய்தவன் ஒரு டாக்டர் அம்மா.
தவறை உண்ர்ந்தேன்...
என்னை மன்னித்துவிடம்மா...


அன்புடன் விசாலம்

No comments: