Monday, May 7, 2007

மருந்தில்லாத... மருத்துவம்..!

நாம் மருந்துகளை கோலிகளை முழங்கியே காலம் ஓட்டுகிறோம், ஒரு தலைவலியா? உடனே எடு ஒரு சாரிடோன். ஒரு ஜுரமா எடு ஒரு ஆஸ்பிரின், தூக்கம் வரவில்லையா? உடனே எடு ஒரு கம்போஸை... என்று அவசர உலகத்தில் அவசர வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். நம் உடலில் நமக்குள்ளேயே சரி செய்யும் சக்தியும் இருக்கிறது. நம் சரீரத்திற்குத் தகுந்த மாதிரி வாழ்க்கை முறையைக் கடைப் பிடித்தால்... ரோகமே வர வாய்ப்பு இல்லை, காலை எழுந்திருக்கும் நேரம் இரவு படுக்கும் நேரம் உண்ணும் உணவு கூடிய வரையிலும் இயற்கையுடன் ஒன்றி வாழ்தல் என்று ஒழுங்கு முறையுடன் வாழ பிரச்சனை வருவதில்லை. இயற்கைத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட அற்புதமாக செயல்படும் மெரிடியன் என்ற உடலில் உள்ள முக்கியப் புள்ளிகளில் அழுத்தம் தர மக்கள் மிகவும் பயனடைகின்றனர். இதை சுஜோக் தெரப்பி என்றும் அக்குபிரஷர் என்றும் சொல்லலாம். இதை உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம்
செய்திருக்கிறது இதில் அக்குபங்சர் என்று ஊசிகளை மெரிடியனில் இலேசாக ஏற்றி சரி செய்வதும் உண்டு, மற்றொன்று ரிப்ளக்ஸாலஜி இதுவும் அக்குபிரஷருக்கு தம்பி என்று சொல்லலாம். சீனாவில் ஆரம்பித்து பின் ஜப்பான், அமெரிக்கா என்று இப்போது பல நாடுகளில் இந்த வைத்திய முறையை விரும்பி ஏற்கின்றனர். இதைப் பற்றி பலர் பல புத்தகங்கள் எழுதி உள்ளனர். அதில் சோன்{zone }Wiliam pitzgerald எழுதிய புத்தகம் மிகப் பிரமாதம். Perfect health buy Deepak vohra and accupressure and fitness by bojraj இந்த இரண்டு புத்தகங்களும் இதைப் பற்றி நன்கு சித்தரிக்கப்பட்டுளன. நமது உடலில் சக்தி {energy}யின் ஓட்ட்ம் நிற்காமல் ஓடிக் கொண்டு இருக்கிறது.நமது சக்தி ஓட்டத்தில் நடுவே தடங்கல் {blocks ] வந்தால் ஓட்டம் கெட்டு அதில் பாதிப்பு வருகிறது. நமது கை கால்களில் இருக்கும் முக்கியப் புள்ளிகளில் அழுத்தம் தர சக்தியின் ஓட்டம் சரியாகி அதன் பிரச்சனையும் சரியாகிவிடுகிறது. அந்த முக்கியப் புள்ளிகள் சர்க்கரை நோய்க்கு, இருதயம், சிறு நீரகம், இரைப்பை, தைராய்ட் சோலார் பிளக்செஸ் போன்ற இடங்களில் சம்பந்தப்பட்டு கால் பாதங்கள், கைகளில் அந்தப் புள்ளிகள் முடிவடைந்திருக்கும், அதை நாம் தெரிந்து வைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு அழுத்தம் கொடுக்க அந்த நோய் கட்டுப்பட்டு பின் சரியாகும், இதில் பக்கவிளைவு பின் விளைவு இல்லை,அந்தக் காலத்தில் கோலம் போடுவது. தோசைக்கு அரைப்பது கிணற்றிலிருந்து தண்ணீர் இழுப்பது போன்ற ஒவ்வொரு செயலும் இந்த அக்குபிரஷர் சமபந்தப்பட்டதே, இன்று எல்லாவற்றுக்கும் இயந்திரம் வந்து சோம்பேறிகளாக ஆக்கி விட்டு அதனால் நோயும் கொடுத்து விட்டது,
உள் மன எழுச்சியால் உடல் பாதிக்கிறது டென்சனில் முதுகு எலும்பு, துயரம் என்றால் குடல் வயிறு பாதிக்கப் படுகிறது கவலை என்றால் மண்ணீரல் வயிறு பாதிக்கிறது, மகிழ்ச்சி அதிகமானால் இருதயம், பயம் அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப் படுகிறது, இந்த மன எழுச்சி வராமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் எல்லாம் நன்மைக்கே
என்று எடுத்துக் கொள்ளும் பக்குவம் வளர்க்க வேண்டும். விரல்கள் நுனியில் அழுத்தம் கொடுத்து வர உடல் உறுப்புகள் சரிவர இயங்கும்

அன்புடன் விசாலம்

No comments: