Sunday, May 6, 2007

நான் இருக்கிறேன் உனக்கு ,,,,,,,


" இருள் சூழ்ந்து போகிறது.
போகலாம் வா" என்றான்
" என் வாழ்க்கையே இருளானதே,
எங்கே போவேன் நான்? என்றாள்
எங்கும் மௌனம்...

அலையின் சத்தம்
மன அலையும்
ஓயாமல் அடிக்க
கேட்டான் அவன்,
யார் அந்தக் கயவன்?
கூறாமல் விம்மினாள்,
கைகள் மணலில் கோலம்
அவள் வாழ்க்கையே அலங்கோலம்
மங்கலான முகம்
அங்கு தெரிந்தது
காதலில் ஏமாந்தாள் தங்கை,
அண்ணன் கொடுத்தான் தன் கை,
பெற்றோர்கள் ஒதுக்க
தங்கைக்கு ஒரு தாயானான்
காப்பாற்ற ஒரு தந்தையானான்
இனி அவனுக்கு ஏது திருமணம்?
தங்கையின் வாழ்வே நறுமணம்
இதுதான் அவன் லட்சியம்
அலைகளே அதற்கு சாட்சியம்
ஒரு வழிபிறந்தது அங்கு
பாசமலர் மலர்ந்தது அங்கு...

அன்புடன் விசாலம்

1 comment:

கதிரவன் said...

நல்ல கவிதையம்மா..

இன்றுதான் உங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன்; இனி அடிக்கடி வருவேன் :)