Friday, May 18, 2007

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-8

அக்டோபர் மாதம் தில்லியில் நல்ல குளிர் முன்பெல்லாம் இருக்கும், இப்போது நவம்பர் கடைசியில் தான் குளிர் வர ஆரம்பிக்கிறது அடுக்கு மாடி கட்டிடங்கள் பெருகப் பெருக இயற்கையிலும் மாற்றம் ஏற்படுகின்றன, அப்போது வெட்ட வெளி அதிகம், இந்த அக்டோபர் மாதம் வந்தாலே என் பழைய ஞாபகங்கள் கிளறப் பட்டு விடுகின்றன,
அக்டோபர் மாதம், முப்பது 1984, காலை சுமார் ஒரு பத்து மணி இருக்கும், கரோல்பாக் என்ற இடம் சின்ன மாதுங்கா{ மும்பாய்,,} எனலாம் அல்லது

மாம்பலம்{சென்னை}எனலாம் அங்கு தான் என் வீடு எல்லா வீட்டுகாரர்களும் அநேகமாக ஸர்தார்ஜீயாக இருந்தனர். அந்தக்
காலத்தில் பாகிஸ்தான் இந்தியா பிரிவினையின் போது பலர் அங்கிருந்து தப்பி ஓடி வந்து இங்கேயே தங்க வீட்டையும் கட்டி கொண்டனர். அவர்கள் மதராசி என்றாலே வீடு வாடகைக்குக் கொடுத்து விடுவார்கள். முதல் தேதியே தமிழர்கள்
நாணயமாக வாடகை
தந்து விடுவார்கள். சண்டைப் போட மாட்டார்கள் என்ற நல்ல பெயர்

நான் காலையில் கடிதம் போஸ்ட் செய்ய ஒரு தபால் நிலயத்திற்கு சென்றேன். அந்தப் போஸ்ட் ஆபீஸ் அருகில் ஒரு பெரிய வீடியோ கடை இருந்தது மூன்று சர்தார்ஜிகள் அதைப் பார்த்து வந்தனர் திடீரென்று ஒரு பெரிய சுனாமி அலைப் போல் மளமளவென்று ஒரு கூட்டம் வந்தது நான் அந்தக் கூட்டத்திற்குள் மாட்டிக்கொண்டேன் என் வாய்
நாமஸ்மரணைச் செய்ய ஒருவன் எனக்கு வழி விட்டான். பின் அவர்கள் அந்த சர்தார்ஜியின் கடைக்குள் நுழைந்து அவனைப் பிடித்து அடி அடி என்று அடித்து முதுகிலும் தோளிலும் குத்தி ஒரே வில்லன் சண்டை தான் சிலர் உள்ளே நுழைந்து பல கேசட்கள் சூறையாடி பைகளில் போட்டுக் கொண்டனர், குரங்கு கையில் பூமாலைப் போல்
கடை ஆனது.
நான் ஒரே ஓட்டம்... மனது படபடவென்று அடித்துக்கொண்டது. நேரே வீடு ஓடி வந்தேன் நல்ல வேளையாக வீடு அருகில் இருந்ததால் பிழைத்தேன். முதல் காரியமாக சர்தார்ஜி அப்பாவைக் கூப்பிட்டேன் விவரம் சொன்னேன். அத்ற்குள் ரேடியோ அலறத் தொடங்கிற்று
கூட டிவி யும் தான் அதுதான் ஸ்ரீமதி இந்திரா காந்தி அம்மையார் அவரது காவல் காப்போனால் சுடப்பட்டு விட்டார். பல இடத்தில் கோலிகள் துளைத்துக் கொண்டு சென்றிருக்கின்றன என்றும் செய்திகள் மாறி மாறி வந்துக் கொண்டிருந்தன. ஒரு சீக்கிய மெய்க்காவலனே அவரைச் சுட்டு விட்டான். அகில இந்திய மருத்துவ மனையில்
சேர்க்கப் பட்டிருக்கிறார், என்றும் தகவல், எங்கும் பிரார்த்தனைகள், எங்கும் மனதில் ஒரு பீதி, கலவரம், சோகம் அப்பப்பா சொல்ல முடியாது. ஒரு தீப்பொறிப் போல் பற்றி எல்லா இடமும் காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது, எல்லா அலுவலகங்களும் செயலிழந்து போயின, ஒருவர் கூட வேலை செய்யவில்லை, ஆஸ்பத்திர்யின் வாசலில் கூட்டம் சொல்லி முடியாது, பலர் டிவி முன் சாப்பாடு கூட இல்லாமல் உட்கார்ந்திருந்தனர். பள்ளி, காலேஜ் மூடப்பட்டன. மாலை வந்தது, ஒரு பிரளயத்தைக் கண்டேன் ஆம் முன்னாள் பாரதப் பிரதமர் பாரதரத்னா ஸ்ரீமதி இந்திராகாந்தி அவர்கள் மரணம் அடைந்தார் என்ற செய்தி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாற்போல் ஒரு ஆட்டம் ஆட வைத்தது...


வளரும்...

1 comment:

Raju iyer said...

October 30 illa, october 31, enaku nalla nazapakam irkku mami.