Sunday, June 3, 2007

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-9


இந்திரா மரணம்... இந்தியா மரணம்..!

30 தேதி மாலை...

ஸ்ரீமதி இந்திராகாந்தி பாரதப் பிரதமர் அவர்களின் மரணம் நாட்டையே ஒரு கலக்கு கலக்கி விட்டது, எல்லா ஹிந்துக்களும் பித்துப் பிடித்தாற் போல் செயல்கள் செய்ய ஆரம்பித்தனர், அன்பு பாசம் ஒருவர் மேல் அதிகமாக அது பிnனால் வெறியாகவும் மாறலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, அந்த வெறியில் எது செய்யலாம் எது செய்யக் கூடாது என்ற விவரமே புரியாமல் பல இராட்சஷ வேலைகள் செய்ய
ஆரம்பித்தார்கள். மூளையில் யோஜனை செய்யும் தனமையே இழந்து விட்டார்களோ?
ஒன்றாம் தேதி காலை பூகம்பமாக இருந்தது இப்போது எரிமலைக் குழம்பு போல் கக்கியது கூட்டம் கூட்டமாக ஹிந்துக்கள் சேர்ந்து கொண்டு பல கடைகளைச் சூரையாடத்தொடங்கினர், "தைமூர் என்பவன் பலதடவைகள் படை எடுத்து சூரை ஆடியது இப்படித்தான் இருக்குமோ? பஸ்கள் எரிந்தன, சர்தார்ஜி கடைகள் எரிக்கப்பட்டன என்வீட்டு அருகில் இருக்கும் ஒரு கடை இரத்தினகம்பளங்கள் விற்கும் வியாபாரி அவன்கடையில் ஒரு கூட்டம் போய் அவன் தலைப்பாகையை இழுத்து அவனை அடித்து பின் அவனது விலை உயர்ந்த கார்பெட் எல்லாம் நடு ரோடில் விரித்து அதில் நடந்தனர். சிலர் அதைத் தங்கள் வீட்டிற்கும் எடுத்து போயினர் சில விஷயமே புரியாத நடைபாதை திருடர்கள் இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணி கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் அந்த அரசியல் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டு புரியாமலே கோஷம் போட்டு நிறைய கொள்ளை அடித்துச் சென்றனர். பல சர்தார்ஜிகளின் குடும்பத்திற்குள் நுழைந்து குழந்தைகள் என்று கூடப் பார்க்காமல் வீட்டிற்க்கு நெருப்பு வைத்தனர். எங்கும் அழுகை சத்தம், எங்கும் அவலம், அப்பப்பா... அழிவுக்காலம் என்பது இப்படித்தான் இருக்குமோ..? வயிற்றில் ஒரு சங்கடம்...
நான் பால்கனி பக்கம் வரவே தயங்கினேன். என் சர்தார்ஜி அப்பாவுக்கு என்ன நடக்குமோ என்று நினைத்தாலே வயிற்றில் புளியைக் கரைத்தது, திடீரென்று "சர்தார்ஜி ஹாய் ஹாய்,, என்ற சத்தம் வந்தது, மெள்ள பால்கனி கதவைத் திறந்துப் பார்த்தேன், கீழே ஒரு கூட்டம் என்னைப் பார்த்து கையை ஆட்டியது அவர்கள் கையில் ஒரு சாக்கு நிறைய விடியோ கேசட்டுக்கள் இருந்தன. அப்போது தான் இந்த வீடியோ கேசட்டுக்கள் வர ஆரம்பித்தன. ஒன்று 400 ரூபாய் இருக்கலாம், நான் திரும்பி உள்ளே வரப் போனேன் "யே லே லோ பஹன் என்று என் பால்கனியில் மூன்று கேசட்டுக்கள் விட்டு எறிந்தார்கள். என் கணவர் "அங்கே என்ன வேடிக்கை உள்ளே வா" என்ன சத்தம் கல் விழுகிறதா?" என்று அவரும் வந்து பார்த்தார் நல்ல கேசட்டுக்கள் அதில் குருதத்தின் "பியாசா தேவானந்தின் கைட் guideபடமும் இருந்தன. என்னைப் பார்த்து இன்னும் வேண்டுமா
என்று வேறு கேட்டனர் பாவம்.. யாருடைய கேச்ட்டுக்களோ, பகல் கொள்ளை, அதில் தானம் வேறு அந்தக் கேசட்டுக்கள் இன்றும் என்னிடம் இருக்கின்றன.பல தங்கக் கடைகள் சூரையாடப்பட்டன, ஒரு மெய்க்காப்பாளன் தன் சுய நலத்திற்கு செய்த தவறுக்காக முழு சீக்கிய குடும்பத்தையும் அழிக்கும் மனம் ஹிந்துக்களுக்கு எப்படி வந்தது? பிரதமர் மேல் வைத்த பாசமா? உணர்ச்சிகளின் அளவுக்கு மீறி பெருக்கா? ஒரு வீட்டில் ஒரு பையன் செய்த குற்றத்திற்காக அவன் குடும்பதையே அழிப்பது என்ன நியாயம்? அத்துடன் சில ரோடு ஸைட் ரோமியோக்கள் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று பல பெண்களின் கற்பையும் அழித்தனர், பின் கொன்று விட்டனர். போலீஸின் கட்டுப்பாடு இருந்தும் அடக்க முடியாத நிலை வந்தது குடிசைகளில் இருக்கும்
சில சோம்பேறி கணவர்கள் தங்கள் மனைவியின் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு சீட்டு, குடி என்று காலத்தைக் கழிப்பவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் ஒரு லட்டு மாதிரி, அவர்களும் சர்தார்ர்ஜி" ஹாய் ஹாய் "என்று கத்திக் கொண்டு கிடைத்ததைச் சுருட்டி கொண்டனர். சர்தார்ஜி பள்ளிகள் கூட விடவில்லை, எல்லாம் தீயிற்கு இரையாயின,
இவர்கள் மனதில் இவ்வளவு வெறுப்பா இங்கு தான் அடங்காத வெறியைக் கண்டேன்.
நான் அவ்ர்கள்: மனதில் இவ்வளவு நெருப்பா? இவ்வளவு விஷமா கக்க?சின்ன சீக்கிய பாலர்கள் பாவம்,அவர்கள் என்ன செய்தார்கள்? அந்த பாலகர்களின் தாய் என்ன செய்தாள்? எத்தனைக் குழந்தைகள் அநாதை ஆனார்கள்? எத்தனைப் பேர் கணவனை இழந்தார்கள்? ஐயோ என் மனது வெடித்துப் போனது எத்தனை இந்து சீக்கியர்கள் சகோதரப் பாசத்துடன் பழகி வந்தனர், நட்புக்கே இலக்கணமாகவும் திகழ்ந்தனரே...
என்வீட்டு சர்தார்ஜி அப்பா குடும்பதை எப்ப்டி காப்பாற்றினோம் என்பதையும் சொல்கிறேன்

.....வளரும்

அன்புடன்...விசாலம்

No comments: