Saturday, January 24, 2009

தாய்க்கு நிகரேது ?

மரங்களில்லாத சாலையைக்கண்டேன்

,நாணயமில்லா வர்த்தகம் கண்டேன் ,

தன்நலமிக்க மக்களைக் கண்டேன்

,பண்பில்லாத கல்வியைக் கண்டேன் .

நேர்மையற்ற அரசியல் கண்டேன் .

குறுகிய மனத்துடன் கூட்டங்கள் கண்டேன்

.விரிந்த பார்வையில்லாத மதத்தினைக் கண்டேன்

ஒற்றுமையற்ற ஜன சமுதாயம் கண்டேன் ,.

அன்பில்லாத உறவினர்கள் கண்டேன்

உறவினரில்லா வீட்டைக்கண்டேன்

போலி சாமியார் வளர்வது கண்டேன் ,

இதயமில்லா விக்ஞானம் கண்டேன்

அர்த்தமற்ற கொச்சை பாடலகள் கண்டேன்

அனுபவமில்லாத உபதேசம் கண்டேன்

ஆடைக்குறைவின் பேஷன் கண்டேன்

.பிஞ்சிலே பழுக்கும் மழலைகள் கண்டேன்

தீவிரவாதம் வலுக்கக் கண்டேன்

பணத்திற்கு கொலையும் செய்யக் கண்டேன்

பாசம் ,அனபு குறையக் கண்டேன்

லஞ்சப்பேய் வளரக் கண்டேன்

முதியோர் இல்லத்தில் கூட்டம் கண்டேன்

.விவாகரத்தும் பெருகக் கண்டேன்

தேர்தலில் தில்லுமுல்லு நடக்கக் கண்டேன்

,எல்லாப்பொருளிலும் கலப்பைக்கண்டேன்

இத்த்னையும் கண்டேன் ,கண்டேன்

ஒன்று மட்டும் மாறாது இருக்கக் கண்டேன்.

அதுவே தாயின் உள்ளமெனெ

என் மனம் சொல்லக்கண்டேன்

அங்கு வற்றா பாசம் கண்டேன்

இதற்கு நிகரேது என புரிந்தும் கொண்டேன் .'

No comments: