Saturday, January 24, 2009

பொறுப்பை உணரும் நாள் எதுவோ?

ஒருவன் தான் செய்யும் பணியே தெய்வமாக மதித்து செயல்படவேண்டும் அதில் தான்அவனது சிறப்பு அடங்கியுள்ளது சில வங்கியில், வாடிக்கையாளர்கள் செக் புத்தகத்துடன் நிற்க ஊழியர்களில் ஒருவள் தன் செல்லில் சிரித்து பேசிக்கொண்டிருக்கிறாள் சரியென்று அடுத்த இடத்தில் போனால் அங்கு.மற்றொருவன் தான் குடிக்கும் டீயை ரசித்துக்கொண்டிருக்கிருந்து தன்அருகில் இருக்கும் ஒருவனிடன் போகும்படி கையைக்காட்டுகிறான் .அங்குச்சென்றால் அது தன் வேலை இல்லை அதைக்கவனிக்க வேறு ஒருவர் வரவேண்டும் என்றுகூறி வேலையில்லாமல் அமர்ந்திருக்கிறான் ,வேறு சிலர் தான் பார்த்தசினிமாவை விமர்சன்ம் செய்துகொண்டிருக்கிறார்கள் ,இவர்களது வேலை அரசுசமபந்தப்படிருப்பதால் பாதுகாப்பானது ஆகையால் ஒருவரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்து இருக்கிறது தவிர அப்படி யாரையாவது விலக்க நேர்ந்தால் யூனியன் சேர்ந்து வேலை நிறுத்தம் என்று ஆரம்பித்து விடுகிறார்கள்,தில்லியில் ஒரு பெயர் போன வங்கியில் குளிர்காலத்தில் ஆபீஸ் வந்துஅமருவதே 10 மணிக்கு மேல். அதுவும் தவிர குளிருக்காக சூடான டீ குடித்து முடிக்க ஒரு 30 நிமிடம்,பின் 1 மணி ஆவதுற்கு முன்பே லஞ்சுக்கு தயார் ஆகிவிடுகின்றனர்.சிலர் சாதாரண் மனிதனானாலும் தன்னைப் பிறர் முன்னால் ஒரு பெரிய மனிதனாய்க் காட்டிக்கொள்வார்கள் அவர்கள் நம்மை முட்டாள் ஆக்கியும் விடுவார்கள்;சிலர் ஒழுங்காக வேலைச்செய்பவனையும் மாற்றி " நாளை பார்த்துக்கொள்ளலாம் இப்போது கிளம்புபார்டிக்கு " என்று வலுக்கட்டாயமாக இழுத்தும் போய் விடுகிறார்கள் ,மாதா அம்ருதானந்தமயி மா ஒரு சொற்பொழிவில் சொன்ன கதை ஞாபகம் வருகிறதுசேனையில் ஒருவனுக்கு கர்னல் பதவி கிடைத்தது வேலைஉயர்வு தான் புதியபொறுப்பு எடுத்துக்கொண்ட அவனுக்குத் தலைகால்தெரியவில்லை அன்றே அந்தக்கர்னலைப் பார்க்க ஒருவன் வந்தான் அவன் உள்ளேநுழைந்ததும் கர்னல்போனை எடுத்து "ஹலோ யர்ர் பேசுவது? ஜனதிபதி கிளிண்டனா?குட் மார்னிங் ?எதாவது விசேஷம் உண்டா ?நான் இன்றுதான் சார்ஜ்எடுத்துள்ளேன் நிறைய பைல்கள் குவிந்து இருக்கின்றன நான்பின்னர் பேசுகிறேன் "இப்படிப்பேசி அந்தப்போனை வைத்தார் வந்தவன் அங்கேயே நின்றுக்கொண்டிருந்தான் ."ஏனப்பா என்ன வேண்டும்? இன்னும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய்?கர்வமான குரலில் கேட்டார்வந்தவன் " மன்னிக்க வேண்டும் நான் தொலைப்பேசி நிலயத்திலிருந்துவருகிறேன் உங்கள் போனுக்கு உடனேகனெக்சன் கொடுக்கும்படி உத்தரவு கிடைத்தது நேற்று வைத்த போன் இது,அதற்கு இன்னும் கனெக்சன் கொடுக்கவில்லை அதில்தான் நீங்கள் பேசினீர்கள் "இந்த இடத்தில் முட்டாள் ஆனது யார் ?இதுபோல் தினமும் பலமுறைகள் நாம் முட்டாள் ஆகிறோம்தற்பெருமை நம்மை எங்கு இழுத்துச்செல்கிறது ?முன்பு காபி ஆற்றிக்கொடுத்து இட்லி விற்ற ஒருவர் தனது உழைப்பினாலும்அந்தப் பணியைத் தெய்வத்திற்கு சம்ர்ப்பித்துவிட்டுமுயற்சியையே மூலதமாகக் கொண்டார் இன்று அவரது ஹோட்டல்பல வெளிநாடுகளிலும் வியாபித்து இருக்கிறது .

No comments: